Sunday, January 2, 2022

புத்தாண்டு பலன் - 2022 - கன்னி

 

புத்தாண்டு பலன் - 2022 - கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்

அன்புள்ள கன்னி ராசி நேயர்களே எவ்வளவு அவசரமாக வேலை இருந்தாலும் பரபரப்பு இல்லாமல் சூழ்நிலைக்கு தக்கவாறு நடந்து கொள்ளும் உங்களுக்கு என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். வரும் 2022-ஆம் ஆண்டில் உங்கள் ராசியாதிபதி புதனுக்கு நட்பு கிரகமான சனி பகவான் இவ்வாண்டு உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் உங்களின் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். எதிலும் சிறப்பாக செயல்பட்டு படிப்படியான முன்னேற்றங்களை அடைவீர்கள். தொழில் வியாபாரத்தில் பல புதிய யுக்திகளை கையாளுவீர்கள். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஆதரவுகளால் அபிவிருத்தி பெருகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருப்பதால் எல்லா பணிகளையும் சிறப்பாக செய்து முடிக்க முடியும். எதிர்பார்க்கும் உயர் பதவிகளும், இடமாற்றங்களும் கிடைக்கும்.

வரும் 13-04-2022 வரை குரு 6-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் இவ்வாண்டில் முதல் மூன்று மாதங்கள் மட்டும் நீங்கள் சற்று பொறுமையுடன் இருப்பது, பணவரவுகள் ஏற்ற இறக்கம் இருக்கும் என்பதால் எதிலும் சிக்கனமாக செயல்படுவது நல்லது. வரும் 13-04-2022 முதல் உங்கள் ராசிக்கு சமசப்தம ஸ்தானமான 7-ல் குரு சஞ்சரிப்பதால் உங்கள் வாழ்வில் மிக பெரிய முன்னேற்றம் ஏற்படும். உங்களின் பொருளாதார நிலை மிகவும் சிறப்பாக இருப்பது மட்டுமின்றி நீங்கள் நினைத்தது எல்லாம் நடக்கும் காலமாக இருக்கும். சிலருக்கு சொந்த வீடு, மனை, வண்டி வாகனங்கள் போன்றவற்றை வாங்கக் கூடிய யோகம் உண்டாகும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப காரியங்கள் கைகூடி மகிழ்ச்சியளிக்கும். மணவயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக் கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். பூர்வீக சொத்துக்களால் ஒரு சிலருக்கு ஓரளவுக்கு அனுகூலம் உண்டாகும். உற்றார், உறவினர்களின் ஆதரவுகளும் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக அமைவது மட்டுமின்றி பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி நல்ல லாபத்தை அடைய முடியும். பல பெரிய மனிதர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். ஆன்மீக தெய்வீக காரியங்களுக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள்.

உங்கள் ராசிக்கு 3, 9-ல் சஞ்சரிக்கும் கேது, ராகு வரும் 12-04-2022-ல் ஏற்படவுள்ள ராகு- கேது மாற்றத்தின் மூலம் கேது ஜென்ம ராசிக்கு 2-லும், ராகு 8-லும் சஞ்சாரம் செய்ய இருப்பது சாதகமற்ற அமைப்பு என்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் எடுத்து கொள்வது, நேரத்திற்கு உணவு உண்பது, தேவையற்ற அலைச்சல்களை குறைத்து கொள்வது நல்லது. கணவன்- மனைவி இடையே பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம். குடும்ப விவகாரங்களை பிறரிடம் பகிர்ந்து கொள்வதை தவிர்க்கவும்.

திருக்கணிதப்படி உங்கள் ராசிக்கு 5-ல் சஞ்சரிக்கும் சனி பகவான் அதிசாரமாக வரும் 29-04-2022 முதல் 12-07-2022 வரை ருண ரோக ஸ்தானமான 6-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் இக்காலங்களில் மிகவும் அனுகூலமான பலனை அடையும் யோகம் உண்டாகும்.

 

தேக ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்படக் கூடிய ஆற்றல் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களும் ஆரோக்கியத்துடன் இருப்பதால் கடந்த காலத்தில் ஏற்பட்ட மருத்துவ செலவுகள் மறையும். அனைவரும் உங்களிடம் அன்பாக நடத்தும் கொள்வதால் மனநிறைவும் மகிழ்ச்சியும் உண்டாகும். சுகவாழ்வு சொகுசு வாழ்வுக்கு பஞ்சம் ஏற்படாது. உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது.

குடும்ப பொருளாதார நிலை

திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். மணவாழ்க்கை சிறப்பாக அமையும். கணவன்- மனைவி இடையே தேவையற்ற கருத்து வேறுப்பாடுகள் ஏற்படும் காலம் என்பதால் விட்டு கொடுத்து செல்வது நல்லது.  உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் உங்களுக்கு மகிழ்ச்சியை உண்டாக்கும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். சொந்த பூமி மனை போன்றவற்றை வாங்கி சேர்ப்பீர்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த சுப செய்தி உங்களுக்கு வந்து சேரும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும்.

கொடுக்கல்- வாங்கல்

பண வரவுகள் மிகச் சிறப்பாக இருக்கும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி நல்ல லாபத்தை காண்பீர்கள். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். சிலருக்குள்ள கடன் பிரச்சினைகள் தீரும். இது வரை இருந்து வந்த வம்பு வழக்குகளில் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக அமையும். எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள். எதிர்பாராத தன வரவுகளால் பொருளாதார நிலை மேன்மையடையும். சேமிப்பும் பெருகும்.

தொழில் வியாபாரிகளுக்கு

பல பெரிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் அனுகூலம் கிட்டும். போட்டி பொறாமைகள் விலகும். வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புடைய வாய்ப்புகளும் கிட்டும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்புகளால் அபிவிருத்தியை பெருக்க முடியும். அரசு வழியில் அனுகூலம் கிட்டும். புதிய கிளைகளை நிறுவி மேன்மையினை அடைவீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு

பணியில் எதிர்பார்த்துக் காத்திருந்த பதவி உயர்வுகளும், ஊதிய உயர்வுகளும் தடையின்றி கிடைக்கும். சிலர் எதிர்பார்த்த இடமாற்றத்தைப் பெற்று குடும்பத்தோடு சேருவார்கள். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய கூடிய வாய்ப்புகள் உண்டாகும். பொருளாதார நிலை உயரும். புதிய வேலை தேடுபவர்களுக்கும் தகுதிக்கு ஏற்ற வேலை வாய்ப்பு கிட்டும். உடன் பணிபுரிபவர்களின் ஆதரவுகளால் வேலைபளு குறையும்.

அரசியல்வாதிகளுக்கு

பெயர் புகழ் உயரக் கூடிய காலமாகும். நினைத்ததை நிறைவேற்றக் கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். பொருளாதாரநிலை மிகச் சிறப்பாக இருக்கும். மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி அவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். உங்களின் பேச்சிற்கு மதிப்பும் மரியாதையும் இருக்கும். கட்சிப் பணிகளுக்காக சிறுசிறு வீண் செலவுகளை செய்ய வேண்டி இருந்தாலும் மறைமுக வருவாய்களும் பெருகும். பத்திரிக்கை நண்பர்களின் ஆதரவு மகிழ்ச்சி அளிக்கும்.

விவசாயிகளுக்கு

பயிர் விளைச்சல் மிகவும் சிறப்பாக இருக்கும். போட்ட முதலீட்டிற்கு மேல் லாபத்தினைப் பெற்று விடுவீர்கள். புதிய நவீன முறைகளை பயன்படுத்தி விளைச்சலைப் அதிகரிக்க முடியும். வேலையாட்களின் உதவி கிடைக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் கைகூடும். சொந்த பூமி மனை போன்றவற்றை வாங்குவீர்கள். பொருளாதார நிலை மிகவும் சிறப்பாக இருக்கும். அரசு வழியில் எதிர்பாராத உதவிகள் கிட்டும். கால்நடைகளால் அனுகூலம் உண்டாகும்.

பெண்களுக்கு

உடல் நிலை மிகவும் அற்புதமாக அமையும். அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்பாக செயல் பட முடியும். குடும்பத்தில் சுப காரியங்கள் கைகூடும். கணவன்- மனைவி இடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். ஆடை ஆபரணம், மற்றும் அதி நவீனப் பொருட்களை வாங்கும் வாய்ப்பு ஏற்படும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியினை உண்டாக்கும். சிலருக்கு புத்திர பாக்கியம் கிட்டும்.

படிப்பு

மாணவ- மாணவிகள் கல்வியில் சிறப்புடன் செயல்பட்டு பள்ளி கல்லூரிகளுக்கு பெருமை சேர்ப்பார்கள். கல்வி மட்டுமில்லாமல் மற்ற விஷயங்களிலும் பெறுப்புடன் செயல்பட்டு நல்ல பெயர் எடுக்க முடியும். சிலருக்கு உயர்கல்விக்காக வெளியூர், வெளிநாடுகளுக்கு செல்வதற்காக எடுக்கும் முயற்சியில் அனுகூலப்பலன் ஏற்படும். அரசு வழியில் ஆதரவுகள் கிட்டும்.

 

மாதப் பலன்கள்

ஜனவரி.

உங்கள் ராசிக்கு 3-ல் கேது மாத முற்பாதியில் 3-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். கணவன்- மனைவி தேவையற்ற வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. பணவரவுகள் சுமாராக இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. தேவையற்ற பயணங்களால் அலைச்சல் டென்ஷன்கள் அதிகரிக்க கூடும். உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. மாத முற்பாதியில் சூரியன் 4-ல் சஞ்சரிப்பதால் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு அதிகமாக இருக்கும். அசையா அசையா சொத்துக்களால் வீண் விரயங்களை சந்திப்பீர்கள். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். தொழில் வியாபாரத்தில் சற்று மந்தமான சூழ்நிலையே இருக்கும். சிவ வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம் - 10-01-2022 காலை 08.49 மணி முதல் 12-01-2022 இரவு 08.45 மணி வரை.

பிப்ரவரி.

உங்கள் ராசிக்கு 3-ல் கேது, மாத பிற்பாதியில் 6-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொள்ளும் பலம் உண்டாகும். குரு 6-ல் இருப்பதால் பணவிஷயத்தில் சிக்கனத்துடன் இருப்பது நல்லது. கணவன்- மனைவியிடையே சிறுசிறு வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். அசையும் அசையா சொத்துக்களால் சிறுசிறு விரயங்களை சந்திக்க நேரிடும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத இடமாற்றங்களால் சற்றே அலைச்சல்கள் ஏற்படும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் போட்டிகளை சமாளித்தே ஏற்றம் பெற முடியும். தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம் - 06-02-2022 மாலை 05.09 மணி முதல் 09-02-2022 அதிகாலை 04.09 மணி வரை.

மார்ச்.

உங்கள் ராசிக்கு 3-ல் கேது, 5-ல் சுக்கிரன், மாத முற்பாதியில் 6-ல் சூரியன் சஞ்சரிப்பதால் வளமான பலன்களை பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் நிறைந்திருக்கும். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். தடைப்பட்ட சுப காரியங்களுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொண்டால் அனுகூலப்பலன் உண்டாகும். நவீன பொருட்கள் வாங்கும் வாய்ப்பு அமையும். குடும்பத்தில் கணவன்- மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் நல்ல லாபம் கிட்டும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவதால் தொழில் அபிவிருத்தி ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். உயரதிகாரிகளின் ஆதரவுகள் கிட்டும். விநாயகர் வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம் - 06-03-2022 அதிகாலை 02.29 மணி முதல் 08-03-2022 பகல் 12.30 மணி வரை.

ஏப்ரல்.

உங்கள் ராசிக்கு வரும் 7-ஆம் தேதி முதல் 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வரும் 14-ஆம் தேதி முதல் குரு 7-ல் சஞ்சரிப்பதால் உங்களுக்கு இருந்த பொருளாதார தேக்கங்கள் எல்லாம் விலகி தாராள தனவரவு ஏற்படும். உடல் ரீதியாக மந்த நிலை நீங்கி சுறுசுறுப்புடனும் தெம்புடனும் செயல்பட முடியும். குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்து விட முடியும். கடன்களும் படிப்படியாக குறையும். பல பெரிய மனிதர்களின் தொடர்புகள் கிடைக்கும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் அடைவீர்கள். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த வாய்ப்புகளும் லாபமும் கிடைக்கும். கூட்டாளிகள் வழியில் அனுகூலங்கள் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உயரதிகாரிகளின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். சிவ வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம் - 02-04-2022 பகல் 11.21 மணி முதல் 04-04-2022 இரவு 09.01 மணி வரை மற்றும் 29-04-2022 மாலை 06.42 மணி முதல் 02-05-2022 அதிகாலை 04.43 மணி வரை.

மே.

உங்கள் ராசிக்கு 6-ல் சனி 7-ல் குரு சுக்கிரன் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும் இனிய மாதமாக இருக்கும். மாத முற்பாதியில் சூரியன் 8-ல் இருப்பதால் ஆரோக்கியத்தில அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. அசையும் அசையா சொத்துகளால் எதிர்பாராத அனுகூலங்களை பெற முடியும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் வெற்றி கிட்டும். கணவன்- மனைவி இடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் உடனே சரியாகி விடும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். தொழில் வியாபாரத்தில் இருந்த எதிர்ப்புகள் மறைந்து நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்புகள் அமையும். தேவையற்ற பயணங்களை தவிர்த்தால் அலைச்சல்கள் குறையும். கால பைரவரை வழிபடுவது உத்தமம்.

சந்திராஷ்டமம் - 27-05-2022 அதிகாலை 00.38 மணி முதல் 29-05-2022 பகல் 11.15 மணி வரை.

ஜுன்.

ஜென்ம ராசிக்கு 7-ல் குரு, 9, 10-ல் சூரியன் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சி ஏற்படும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியினை அளிக்கும். பெரிய தொகைகளை சிறப்பாக கையாண்டு லாபங்களை அடையும் யோகம் ஏற்படும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்புகளால் அபிவிருத்தி பெருகும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைத்து உங்களின் நீண்ட நாள் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். உத்தியோகத்தில் இருப்பவர்களும் பணியில் நிம்மதியுடன் செயல்படலாம். வேலை தேடுபவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வெளியூர் பயணங்கள் மூலம் அனுகூலப்பலனை அடைய முடியும். துர்க்கையம்மனை வழிபடுவது உத்தமம்.

சந்திராஷ்டமம் - 23-06-2022 காலை 06.15 மணி முதல் 25-06-2022 மாலை 05.02 மணி வரை.

ஜுலை.

உங்கள் ராசிக்கு 10, 11-ல் சூரியன், புதன் சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருக்கும். குரு 7-ல் இருப்பதால் பல்வேறு வகையில் அனுகூலங்கள் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிலவும். குடும்பத்தில் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். உடல் நலத்தில் கவனம் செலுத்துவது நல்லது. திருமண சுப காரிய முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். பணம் கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு சிறப்பான லாபம் கிட்டும். புதிய வாய்ப்புகள் தேடி வருவதால் அபிவிருத்தியும் பெருகும். கூட்டாளிகளும் ஆதரவுடன் செயல்படுவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கும் பணியில் கௌரவமான உயர்வுகள் உண்டாகும். புதிய வேலை தேடுபவர்கள் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். முருக வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம் - 20-07-2022 பகல் 12.50 மணி முதல் 22-07-2022 இரவு 11.01 மணி வரை.

ஆகஸ்ட்.

உங்கள் ராசிக்கு 10, 11-ல் சுக்கிரன், மாத முற்பாதியில் 11-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைத்து அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். பொருளாதார நிலை ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். உற்றார், உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது, உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. சுப காரிய முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறம்பட செயல்பட முடியும். பணம் கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்து செயல்பட்டால் லாபத்தை பெற முடியும். தொழில் வியாபாரம் நல்ல முறையில் நடைபெறும். போட்டிகளை சமாளித்து ஏற்றம் பெறுவீர்கள். அஷ்டலட்சுமி வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் - 16-08-2022 இரவு 09.05 மணி முதல் 19-08-2022 காலை 06.06 மணி வரை.

செப்டம்பர்.

குரு சனி வக்ர கதியில் சஞ்சரிப்பதாலும், 12-ல் சூரியன் சஞ்சரிப்பதாலும் நீங்கள் எதிலும் சற்று கவனத்துடன் இருப்பது நல்லது. தேவையற்ற அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் சோர்வு ஏற்படும். எதிலும் சிந்தித்து செயல்பட்டால் மட்டுமே எதையும் சமாளிக்க கூடிய ஆற்றல் உண்டாகும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சனைகள் வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. அசையும் அசையா சொத்துக்களால் வீண் விரயங்களை சந்திக்க நேரிடும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளிடம் கவனமாக பேசினால் நிம்மதியுடன் பணிபுரிய முடியும். தொழில் வியாபாத்தில் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடி இருக்கும் என்றாலும் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. உக்ர தெய்வங்களை வழிபடுவது உத்தமம்.

சந்திராஷ்டமம் - 13-09-2022 காலை 06.35 மணி முதல் 15-09-2022 பகல் 02.28 மணி வரை.

அக்டோபர்.

ஜென்ம ராசியில் சூரியன், குரு வக்ர கதியில் சஞ்சரிப்பதால் பணவிஷயத்தில் சிக்கனத்துடன் இருப்பது நல்லது. புதன், சுக்கிரன் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களின் உதவி சிறப்பாக இருக்கும். பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடி இருக்கும். ஆடம்பரச் செலவுகளை குறைத்துக் கொண்டால் கடன்களை தவிர்க்க முடியும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட வேண்டியிருக்கும். மற்றவர்களிடம் பேச்சில் நிதானமாக இருந்தால் வீண் விரோதங்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம். தொழில் வியாபாரம் செய்பவர்கள் எந்தவொரு காரியத்திலும் சிந்தித்துச் செயல்பட்டால் நற்பலனை அடைய முடியும். மறைமுக எதிர்ப்புகளை சமாளிக்கக் கூடிய ஆற்றல் உண்டாகும். வெளி வட்டார தொடர்புகளால் ஓரளவுக்கு நற்பலன்கள் அமையும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது வீண் பிரச்சினைகளில் தலையீடு செய்யாது இருப்பது நல்லது. விஷ்ணு வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம் - 10-10-2022 மாலை 04.01 மணி முதல் 12-10-2022 இரவு 11.30 மணி வரை.

நவம்பர்.

உங்கள் ராசிக்கு 9, 10-ல் செவ்வாய், மாத பிற்பாதியில் 3-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் அனுகூலங்கள் ஏற்படும். எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். கணவன்- மனைவி இடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். பொன், பொருள் சேரும். சொந்த பூமி, மனை வாங்கும் முயற்சிகளில் சாதகப் பலனை பெற முடியும். பண வரவுகளில் சரளமான நிலையிருக்கும். கடன்களும் சற்று நிவர்த்தியாகும். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளைப் பெற முடியும். வெளியூர், வெளிமாநிலங்களுக்கு சென்று பணிபுரிய கூடிய வாய்ப்பும் அமையும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். விநாயகரை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் - 06-11-2022 இரவு 12.03 மணி முதல் 09-11-2022 காலை 07.58 மணி வரை.

டிசம்பர்.

உங்கள் ராசிக்கு மாத முற்பாதியில் 3-ல் சூரியன், 7-ல் குரு சஞ்சரிப்பதால் சகல விதத்திலும் மேன்மை குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். ராகு 8-ல் சஞ்சரிப்பாதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது மூலம் தேவையற்ற மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். உற்றார், உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். பண வரவுகள் தாராளமாக அமையும். கணவன்- மனைவியிடையே விட்டு கொடுத்து செல்வது நல்லது. அசையும், அசையா சொத்துகள் மூலம் அனுகூலமான பலன்கள் ஏற்படும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபங்களை அடைய முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் வேலைபளுவை குறைத்து பொள்ள முடியும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமான நிலைகள் உண்டாகும். அம்மன் வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம் - 04-12-2022 காலை 06.16 மணி முதல் 06-12-2022 பகல் 03.02 மணி வரை மற்றும் 31-12-2022 பகல் 11.45 மணி முதல் 02-01-2023 இரவு 08.50 மணி வரை.

 

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் - 5,6,7,8             நிறம் - பச்சை, நீலம்         கிழமை - புதன், சனி

கல் -  மரகத பச்சை                      திசை - வடக்கு        தெய்வம் - ஸ்ரீவிஷ்ணு

No comments: