Sunday, January 2, 2022

புத்தாண்டு பலன் - 2022 - கும்பம்

 

புத்தாண்டு பலன் - 2022 - கும்பம்  அவிட்டம்3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்

அன்புள்ள கும்ப ராசி நேயர்களே, எந்த பிரச்சனைகளையும் அலசி ஆராய்ந்து நியாயமாக தீர்த்து வைக்கும் அறிவாற்றல் கொண்ட உங்களுக்கு என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

வரும் 2022-ஆம் ஆண்டில் உங்கள் ராசிக்கு 2, 11-க்கு அதிபதியான குரு பகவான் ஆண்டு தொடக்கத்தில் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் சிக்கனமாக இருப்பது, எந்த செயல் செய்வது என்றாலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. முதல் மூன்று மாதங்கள் உங்களுக்கு சற்று சோதனைகள் நிறைந்த நாட்களாக இருந்தாலும் வரும் 13-04-2022 முதல் ஆண்டு கோளான குரு பகவான் உங்கள் ராசிக்கு தன ஸ்தானமான 2-ல் சஞ்சாரம் செய்ய இருப்பதும் வரும் 12-04-2022-ல் ஏற்படவுள்ள சர்பகிரக மாற்றத்தின் மூலம் உங்கள் ராசிக்கு ராகு 3-ஆம் வீட்டிலும், கேது 9-ல் வீட்டிலும் சஞ்சாரம் செய்ய இருப்பதும் அற்புதமான அமைப்பு என்பதால் உங்களுக்கு கஷ்டங்கள் படிப்படியாக விலகி முன்னேற்றமான பலன்களை அடைய முடியும்.

உங்களுக்கு நிலவிய பொருளாதார நெருக்கடிகள் விலகி பண வரவுகள் திருப்திகரமாக இருக்கும். கொடுக்கல்- வாங்கலில் கவனமுடன் செயல்பட்டால் நல்ல லாபத்தினை அடையலாம். பணவிஷயத்தில் பிறரை நம்பி வாக்குறுதி கொடுப்பது, முன் ஜாமீன் கொடுப்பது போன்றவற்றில் சிந்தித்து செயல்படுவது நல்லது. ஆடம்பர செலவுகளை குறைத்தால் குடும்ப தேவைகளை பூர்த்தி செய்ய முடியும்.

குடும்பத்தில் திருமணம் போன்ற மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். குழந்தை வரம் வேண்டுபவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் ஏற்படும். பூர்வீக சொத்து விஷயங்களில் இருந்த கெடுபிடிகள், வம்பு, வழக்குகள் யாவும் விலகும். உற்றார்- உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும்.

தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் சற்றே குறையும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு தேவையற்ற இட மாற்றங்கள் ஏற்படும் என்றாலும் எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் கிட்டும். பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்த்து தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது உத்தமம். வெளியூர், வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புபவர்கள் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது.

உங்கள் ராசியாதிபதி சனி இவ்வாண்டு ஜென்ம ராசிக்கு 12-ல் சனி சஞ்சரித்து ஏழரை சனியில் விரயச்சனி நடைபெறுவதால் தேவையற்ற வீண் செலவுகளை சந்திப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவ செலவுகள் ஏற்படும். பயணங்களில் கவனமுடன் இருப்பது, உணவு விஷயத்தில் அக்கரை எடுத்த கொள்வது நல்லது. சனி உங்கள் ராசியாதிபதி என்பதால் பெரிய கெடுதல்களை செய்யமாட்டார் என்றாலும் எந்தவொரு விஷயங்களிலும் கவனமுடன் செயல்பட்டால் மட்டுமே எதையும் எதிர் கொண்டு வெற்றிப் பெறக்கூடிய வலிமையை பெறுவீர்கள்.

 

தேக ஆரோக்கியம்

உடல் நிலையில் சிறுசிறு பாதிப்புகள், சற்று மந்த நிலை, கைகால் அசதி போன்றவை ஏற்படும். அஜீரண கோளாறுகள் உண்டாகும் என்றாலும் பெரிய அளவில் எந்தவித மருத்துவ செலவுகளும் ஏற்படாது. அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது, வேலைபளுவை குறைத்து கொள்வது மூலம் ஏற்படும் சிறுசிறு பிரச்சினைகளை எதிர்கொள்ள முடியும்.

குடும்பம் பொருளாதார நிலை

இந்த ஆண்டின் தொடக்கத்தில் குடும்பத்தில் சிறுசிறு கருத்து வேறுபாடுகள், திருமணத் தடைகள் உண்டாகும் என்றாலும் ஏப்ரலில் ஏற்படும் குரு பெயர்ச்சிக்கு பின்பு சுபிட்சமான நிலை நிலவும். திருமண வயதை அடைந்தவர்களுக்கும் நல்ல வரன்கள் தேடி வரும். புத்திர வழியில் மகிழ்ச்சித் தரக் கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். பொன் பொருள் சேரும். சிலருக்கு பூமி மனை போன்றவற்றால் சிறுசிறு விரயங்கள் ஏற்பட்டாலும் கிடைக்க வேண்டிய சொத்துக்கள் கிடைக்கும். உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும்.

கொடுக்கல்- வாங்கல்

பண வரவுகளில் ஆண்டின் தொடக்கத்தில் ஏற்ற இறக்கமான நிலை இருந்தாலும், ஏப்ரலுக்கு பிறகு தாராள தன வரவுகள் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். கடந்த கால நெருக்கடிகள் விலகும். கொடுத்த கடன்களை வசூலிப்பதில் எந்த தடையும் ஏற்படாது. உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் சிறு தடைக்கு பின்பு வெற்றி கிட்டும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் விஷயத்தில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது.

தொழில் வியாபாரிகளுக்கு

இந்த ஆண்டின் தொடக்கத்தில் சிறுசிறு போட்டிகள், மறைமுக எதிர்ப்புகள் போன்றவற்றால் வரவேண்டிய வாய்ப்புகள் கைநழுவிப் போனாலும், ஏப்ரலுக்கு பிறகு எல்லா வகையிலும் மேன்மைகளை அடைய முடியும். எதிர்பார்க்கும் லாபங்கள் கிட்டும். வெளியூர் பயணங்களால் அனுகூலங்கள் ஏற்படும் என்றாலும் தேவையற்ற பணிகளை தவிர்த்து விடுவது நல்லது. கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் சற்று அனுசரித்து நடந்து கொண்டால் சிறப்பான பலன்களை பெற முடியும்.

உத்தியோகஸ்தர்களுக்கு

பணியில் சற்று வேலைபளு அதிகரிப்பதுடன், எதிர்பாராத இடமாற்றங்களால் அலைச்சலை சந்திக்க வேண்டியிருக்கும் என்றாலும் ஏப்ரலுக்கு பிறகு நல்ல மாற்றங்கள் உண்டாகும். எதிர்பார்க்கும் கௌரவமான பதவிகள் கிடைக்கும். திறமைக்கு ஏற்ற பாராட்டுதல்கள் கிடைக்கப் பெறுவதால் மனமகிழ்ச்சி உண்டாகும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைக்கும் பணியினை தற்போது பயன்படுத்தி கொள்வது நல்லது. வெளியூர் செல்ல விரும்புவோரின் விருப்பங்கள் நிறைவேறும்.

அரசியல்வாதிகளுக்கு

கட்சிப் பணிகளுக்காக நிறைய செலவுகள் செய்ய வேண்டியிருந்தாலும், பெயர், புகழ் பெற முடியும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி மக்களின் ஆதரவை பெறுவீர்கள். பண வரவுகள் திருப்திகரமாக இருக்கும்.  பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும் என்றாலும் அதன் மூலம் ஆதாயங்களும் உண்டாகும். பத்திரிக்கை நண்பர்களிடம் தேவையற்ற வாக்கு வாதங்களை தவிர்ப்பது உத்தமம்.

விவசாயிகளுக்கு

பயிர் விளைச்சல் ஒரளவுக்குச் சிறப்பாக இருக்கும் என்றாலும் புழு பூச்சிகளின் தொல்லைகளால் பயிரை காப்பாற்ற அதிக செலவுகளை செய்ய வேண்டியிருக்கும். அரசு வழியில் எதிர்பாராத மானிய உதவிகள் கிடைக்கப் பெற்று அனைத்தையும் சரி செய்ய முடியும். புதிய பூமி மனை வாங்கும் வாய்ப்பு ஏற்படும். தொழிலாளர்களின் உதவி கிடைக்கும். கால்நடைகளாலும், காய், கனி, பூ வகைகளாலும் ஓரளவுக்கு ஆதாயங்களைப் பெறுவீர்கள்.

பெண்களுக்கு

உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் மருத்துவ செலவுகள் அதிகரிக்காது. ஆண்டின் முற்பாதியில் பணவரவுகளில் சற்று நெருக்கடிகள் ஏற்பட்டாலும், ஏப்ரலுக்கு பிறகு தாராள தன வரவைப் பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் நிறைந்து இருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கும் நல்ல வரன்கள் தேடி வரும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை அதிகரிக்கும். உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். சிலருக்கு வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புகள் ஏற்படும் என்றாலும் எதிலும் சற்று நிதானமாக செயல்படுவது நல்லது.

படிப்பு

கல்வியில் சற்று ஈடுபாட்டுடன் செயல்பட்டால் அடைய நினைத்த மதிப்பெண்களை அடைந்து விட முடியும். கல்விக்காக பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பும் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். அரசு வழியில் ஆதரவுகள் கிடைக்கும். பெற்றோர் ஆசிரியர்களின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். தேவையற்ற நண்பர்களின் சகவாசத்தை தவிர்ப்பது உத்தமம்.

 

மாதப் பலன்கள்

ஜனவரி.

உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் சுக்கிரன், 10, 11-ல் செவ்வாய், மாத முற்பாதியில் 11-ல் சூரியன் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருந்து சகல விதத்திலும் அனுகூலமான பலன்களை அடைவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் அதிகரிக்கும். உங்களுக்கு இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் சற்றே குறையும். சனி 12-ல் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்து கொள்வதன் மூலம் தேவையற்ற மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். உற்றார் உறவினர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியினை உண்டாக்கும். பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த உயர்வுகளை பெற முடியும். தொழில் வியாபாரம் தடையின்றி நடைபெறுவதால் போட்ட முதலீட்டை எடுத்து விட முடியும். தினமும் விநாயகரை வழிபாடு செய்வது சிவனை வணங்குவது நல்லது.

சந்திராஷ்டமம் - 22-01-2022 மாலை 04.48 மணி முதல் 24-01-2022 இரவு 11.08 மணி வரை.

பிப்ரவரி.

உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ல் செவ்வாய், சுக்கிரன் சஞ்சரிப்பதால் பல்வேறு வகையில் அனுகூலமான பலன்களை அடைவீர்கள். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். குடும்ப தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்துவிட முடியும். குரு ஜென்ம ராசியில் இருப்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் கவனத்துடன் இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகள் தோன்றும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்களிடம் விட்டு கொடுத்து நடப்பது உத்தமம். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு ஓரளவுக்கு லாபம் கிட்டும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். உத்தியோகத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைத்தாலும் வேலைபளு சற்று கூடுதலாக இருக்கும். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் - 18-02-2022 இரவு 10.46 மணி முதல் 21-02-2022 அதிகாலை 04.31 மணி வரை.

மார்ச்.

ஜென்ம ராசியில் சூரியன், குரு, 12-ல் செவ்வாய், சுக்கிரன் சஞ்சரிப்பதால் தேவையற்ற நெருக்கடிகள் ஏற்படும். எதிலும் சற்று கவனத்துடன் இருப்பது நல்லது. பண வரவுகளில் ஏற்ற இறக்கமான நிலையில் இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் உண்டாக கூடிய பாதிப்புகளால் அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியாமல் போகும். உற்றார் உறவினர்களிடம் விட்டு கொடுத்து நடப்பது உத்தமம். தொழில் வியாபாரத்தில் உங்களுக்கு போட்டி பொறாமைகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் அதிகரிப்பதால் வர வேண்டிய வாய்ப்புகள் கை நழுவிப் போகும். கூட்டாளிகளும் வீண் பிரச்சனைகளை ஏற்படுத்துவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் தாமதப்படும். வேலைபளு அதிகரிக்கும் தேவையற்ற பயணங்களை தவிர்த்தால் அலைச்சல்களை குறைத்து கொள்ள முடியும். ஆஞ்சநேயர் வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம் - 18-03-2022 காலை 06.32 மணி முதல் 20-03-2022 காலை 11.10 மணி வரை.

ஏப்ரல்.

ஜென்ம ராசியில் சுக்கிரன், மாத பிற்பாதியில் 2-ல் குரு, 3-ல் சூரியன் சஞ்சரிப்பதால் உங்களுக்குள்ள நெருக்கடிகள் எல்லாம் குறைந்து ஏற்றமிகுந்த பலன்களை பெறுவீர்கள். பண வரவுகளில் இருந்த தேக்க நிலை விலகி தாராள பண வரவு ஏற்படும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவதுடன் கடன்களும் நிவர்த்தியாகும். சுப காரியங்களுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொண்டால் அனுகூலப்பலன் உண்டாகும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். வெளியூர் பயணங்களால் வாழ்க்கை தரம் உயர்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பால் அபிவிருத்தி பெருகி லாபம் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இருக்கும். உங்கள் திறமையை வளர்த்துக் கொள்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். சனிக்குரிய பரிகாரங்களை செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம் - 14-04-2022 மாலை 03.54 மணி முதல் 16-04-2022 இரவு 08.00 மணி வரை.

மே.

உங்கள் ராசிக்கு 2-ல் குரு, சுக்கிரன், 3-ல் சூரியன், ராகு சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் வெற்றி மேல் வெற்றி அடைவீர்கள். சுப காரியங்கள் கைகூடுவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். பணவரவுகள் ஓரளவுக்கு சிறப்பாக இருப்பதால் கடன் பிரச்சினைகள் சற்றே விலகும். உடல் நிலையில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். தொழில் வியாபாரத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் குறைவதால் எதிர்பார்த்த லாபம் கிட்டும். கணவன்- மனைவி சற்று விட்டு கொடுத்து நடப்பது, பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. கிடைக்கும் வாய்ப்புகளை நழுவவிடாமல் பாதுகாத்துக் கொள்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வுகள் தாமதப்பட்டாலும் ஊதிய உயர்வுகள் தடையின்றிக் கிடைக்கும். உங்கள் பணி கவனம் செலுத்தினால் மட்டுமே நினைத்தை சாதிக்க முடியும். முருக வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம் - 12-05-2022 அதிகாலை 01.32 மணி முதல் 14-05-2022 காலை 06.12 மணி வரை.

ஜுன்.

உங்கள் ராசிக்கு 2-ல் குரு, 3-ல் ராகு சஞ்சரிப்பதால் பணவரவுகள் மிகவும் சாதகமாக இருக்கும். இம்மாதத்தில் 2-ல் செவ்வாய், 4-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எதிலும் சிக்கனமாக இருப்பது நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. எதிலும் சிந்தித்து செயல்பட்டால் மட்டுமே அனுகூலப்பலனைப் பெற முடியும். பண வரவுகள் நன்றாக இருந்தாலும்  ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டால் கடன்கள் ஏற்படாது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் சிறப்பாக செயல்பட முடியும் என்றாலும் சக ஊழியர்களை சற்று அனுசரித்து செல்வது நல்லது. தேவையற்ற இடமாற்றங்கள் உண்டாகலாம். அசையும் அசையா சொத்துக்களால் வீண் விரயங்களை சந்திக்க நேரிடும். தொழில் வியாபாரத்தில் படிப்படியான முன்னேற்றம் ஏற்படும். உறவினர்களின் ஒத்துழைப்பும் ஆதரவும் மனதிற்கு நிம்மதியை தரும். ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம் - 08-06-2022 காலை 10.03 மணி முதல் 10-06-2022 மாலை 04.06 மணி வரை.

ஜுலை.

உங்கள் ராசிக்கு 2-ல் குரு, 3-ல் செவ்வாய், ராகு, மாத பிற்பாதியில் 6-ல் சூரியன் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்க கூடிய இனிய மாதமாக இம்மாதம் இருக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். செய்யும் தொழில் வியாபாரத்தில் சிறப்பான லாபம் கிடைக்கும். உங்களுக்குள்ள போட்டி பொறாமைகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகும். புதிய கூட்டாளிகளின் சேர்க்கையும் ஆதரவும் அபிவிருத்தியை பெருக்க உதவும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். வெளியூர் வெளிநாடுகளுக்குச் செல்லக் கூடிய வாய்ப்புகள் உண்டாகும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் லாபம் காண முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு கௌரவமான பதவி உயர்வுகள் கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வுகள் தேடி வரும். விநாயகரை வழிபடுவது நற்பலனை தரும்.

சந்திராஷ்டமம் - 05-07-2022 மாலை 04.50 மணி முதல் 07-07-2022 இரவு 12.20 மணி வரை.

ஆகஸ்ட்.

உங்கள் ராசிக்கு 3-ல் ராகு, இம்மாத முற்பாதியில் 3-ல் செவ்வாய், 6-ல் சூரியன் சஞ்சரிப்பதால் சகல விதத்திலும் அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது அடைய வேண்டிய இலக்கை  அடைவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை அதிகரிக்கும். பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடி இருக்கும். குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியத்திலும், உணவு விஷயத்திலும் சற்று அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சிறு தடைகளுக்குப்பின் அனுகூலப்பலனை அடைவீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு லாபம் பெருகும். உங்களுக்கு இருந்த வம்பு வழக்குகள் விலகி குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். விஷ்ணுயை வழிபடுவது சிறப்பு.

சந்திராஷ்டமம் - 01-08-2022 இரவு 10.30 மணி முதல் 04-08-2022 காலை 06.40 மணி வரை மற்றும் 29-08-2022 அதிகாலை 04.15 மணி முதல் 31-08-2022 பகல் 12.03 மணி வரை.

செப்டம்பர்.

உங்கள் ராசிக்கு 4-ல் செவ்வாய், 7, 8-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எதிலும் சற்று கவனத்துடன் இருப்பது நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். கணவன்- மனைவி பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, எந்தவொரு விஷயத்திலும் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது நல்லது. பொருளாதார நிலை தேவைக்கேற்றபடி இருப்பதால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டால் வீண் விரயங்களை தவிர்க்க முடியும். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெற்று விடுவீர்கள்.----------- தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு ஒரளவுக்கு முன்னேற்ற நிலையிருக்கும். வேலைக்கு செல்பவர்களுக்கு அதிகாரிகள் நெருக்கடிகளை ஏற்படுத்தினாலும் எதிலும் சிறப்பாக செயல்பட முடியும். சனிக்குரிய பரிகாரங்களை செய்வது நல்லது.

சந்திராஷ்டமம் - 25-09-2022 பகல் 11.20 மணி முதல் 27-09-2022 மாலை 06.17 மணி வரை.

அக்டோபர்.

உங்கள் ராசிக்கு 4-ல் செவ்வாய் 8-ல் சூரியன், புதன், சுக்கிரன் சஞ்சரிப்பதால் பண விஷயத்தில் சற்று சிக்கனமாக இருப்பது ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. கணவன்- மனைவி இடையே பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, எந்தவொரு விஷயத்திலும் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது நல்லது. பண வரவுகளில் ஏற்ற இறக்கமான நிலையே இருக்கும். வாகனங்களால் வீண் விரயம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் உண்டாக கூடிய பாதிப்புகளால் அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியாமல் போகும். தொழில் வியாபாரத்தில் உங்களுக்கு போட்டி பொறாமைகள் அதிகரிப்பதால் வர வேண்டிய வாய்ப்புகள் கை நழுவிப் போகும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் தாமதப்படும். சிவ வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம் - 22-10-2022 இரவு 08.05 மணி முதல் 25-10-2022 அதிகாலை 02.32 மணி வரை.

நவம்பர்.

உங்கள் ராசிக்கு 3-ல் ராகு 9, 10-ல் சூரியன், சுக்கிரன், புதன் சஞ்சரிப்பதால் பல்வேறு வளமான பலன்களை பெறுவீர்கள். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். ஏழரைச்சனி நடப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சோர்வு மந்தநிலை போன்ற பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியும். கணவன்- மனைவி தேவையற்ற வாக்கு வாதங்களை தவிர்ப்பது மூலம் குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். தொழில் வியாபாரத்தில் வரவேண்டிய வாய்ப்புகள் தடையின்றி வரும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புகள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்த்து தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. பெரிய மனிதர்களின் ஆதரவுகள் கிடைக்கும். சனிக்குரிய பரிகாரங்களை செய்வது நல்லது.

சந்திராஷ்டமம் - 19-11-2022 அதிகாலை 05.28 மணி முதல் 21-11-2022 பகல் 12.30 மணி வரை.

டிசம்பர்.

உங்கள் ராசிக்கு 2-ல் குரு, 3-ல் ராகு, 10, 11-ல் சூரியன், புதன், சுக்கிரன் சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். கணவன்- மனைவியிடையே இருந்து வந்த பிரச்சினைகள் மறையும். பொருளாதார மேம்பாடுகளால் கடன்களும் படிப்படியாகக் குறைந்து நிம்மதி நிலவும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகள் தோன்றி மறையும். உற்றார் உறவினர்களிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலங்கள் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சற்று நிம்மதியுடன் பணிபுரிய முடியும். வெளியூர் வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பங்கள் நிறைவேறும். முருகரை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் - 16-12-2022 பகல் 02.03 மணி முதல் 18-12-2022 இரவு 10.30 மணி வரை.

 

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் - 5,6,8           கிழமை - வெள்ளி, சனி                     திசை - மேற்கு

கல் - நீலக்கல்         நிறம் - வெள்ளை, நீலம்                தெய்வம் - ஐயப்பன்

No comments: