புத்தாண்டு பலன் - 2022 - விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை
அன்புள்ள விருச்சிக ராசி நேயர்களே குறும்பு
தனமும், விஷமத்தனமும் அதிகம் கொண்டவராக இருந்தாலும், பெரியவர்களிடம் மரியாதையுடன் நடந்து
கொள்ளும் பண்பு கொண்ட உங்களுக்கு என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். வரும் 2022-ஆம்
ஆண்டு உங்கள் ராசிக்கு 3-ஆம் வீட்டில் சனி வலுவாக சஞ்சரிப்பது மிகவும் அற்புதமான அமைப்பாகும்.
எடுக்கும் முயற்சிகளில் வெற்றியும், எதிலும் துணிந்து செயல்படக் கூடிய ஆற்றல் உண்டாகும்.
எல்லா வகையிலும் அனுகூலமான பலன்கள் ஏற்படுவதால் உங்களுக்கு பண வரவுகள் மிகவும் சிறப்பாக
இருந்து குடும்பத் தேவைகள் அனைத்தையும் தடையின்றி பூர்த்தி செய்ய முடியும்.
வரும் 2022-ல் ஆண்டு தொடக்கத்தில் ஆண்டு
கோள் என வர்ணிக்கப்படும் குரு பகவான் உள்ள ராசிக்கு 4-ல் சஞ்சரிப்பதும், ஜென்ம ராசியில்
கேது, 7-ல் ராகு சஞ்சரிப்பதும் சற்று சுமாரான அமைப்பு என்பதால் சிறுசிறு தடைகளை எதிர்
கொள்ள நேரிட்டாலும், வரும் 13-04-2022 முதல் குரு உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானமான
5-ல் சஞ்சாரம் செய்ய இருப்பதும், வரும் 12-04-2022-ல் ஏற்படவுள்ள சர்பகிரக மாற்றத்தின்
மூலம் உங்கள் ராசிக்கு ராகு 6-ஆம் வீட்டிலும், கேது 12-ல் வீட்டிலும் சஞ்சாரம் செய்ய
இருப்பதும் சிறப்பான அமைப்பு என்பதால் ஏப்ரலுக்கு பிறகு நீங்கள் நினைத்தது எல்லாம்
நடக்கும் காலமாக இருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு சுப காரியங்களுக்கான முயற்சிகள்
தடையின்றி கைகூடி தக்க சமயத்தில் நடைபெறும். சிலருக்கு புத்திர பாக்கியம் உண்டாகும்.
புத்திர வழியில் மகிழ்ச்சியளிக்கும் நிகழச்சிகள் நடைபெறும். தற்போது உள்ள குடும்ப பிரச்சினைகள்
படிப்படியாக விலகி கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும்.
தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய
வாய்ப்புகள் தேடி வரும். வெளியூர் வெளிநாட்டு மூலம் அனுகூலம் கிட்டும். கூட்டாளிகள்
மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். புதிய யுக்திகளை
கையாண்டு தொழிலை விரிவு செய்யும் நோக்கம் நிறைவேறும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும்
உயர்வுகள் அனைத்தும் கிடைக்கப் பெற்று முன்னேற்றம் அடைவீர்கள். உயரதிகாரிகளின் பாராட்டுதல்களும்
உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பும் மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். புதிய வேலை தேடுபவர்களுக்கும்
தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு கிடைக்கப் பெறுவதால் வாழ்க்கை தரம் உயர்வடையும்.
அசையும், அசையா சொத்துக்களை வாங்கி சேர்ப்பீர்கள்.
உற்றார், உறவினர்களின் ஆதரவு மகிழ்ச்சியினை அளிக்கும். புரிந்து கொள்ளாமல் பிரிந்து
சென்றவர்களும் தேடி வந்து நட்பு கரம் நீட்டுவார்கள். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை
இருக்கும். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்றி நல்ல பெயர் எடுப்பீர்கள். பெரிய தொகைகளை
எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும்.
திருக்கணிதப்படி உங்கள் ராசிக்கு 3-ல் சஞ்சரிக்கும்
சனி பகவான் அதிசாரமாக வரும் 29-04-2022 முதல் 12-07-2022 வரை சுக ஸ்தானமான 4-ஆம் வீட்டில்
சஞ்சாரம் செய்தாலும் குரு, ராகு சஞ்சாரம் சிறப்பாக இருப்பதால் எதையும் எதிர் கொண்டு
வலமான பலன்களை பெறுவீர்கள்.
தேக ஆரோக்கியம்
உடல் ஆரோக்கியம் மிகவும் சிறப்பாக இருக்கும்.
அன்றாடப் பணிகளில் திறம்பட செயல்பட முடியும். எடுக்கும் எல்லா காரியங்களில் வெற்றி
கிடைப்பதால் மன நிம்மதியும், மகிழ்ச்சியும் உண்டாகும். நீண்ட நாட்களாக மருத்துவ சிகிச்சைகளை
எடுத்துக் கொண்டு இருப்பவர்களுக்கு ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்பட்டு மருத்துவச்
செலவுகள் குறையும். குடும்பத்தில் உள்ளவர்களும் உடல் நலத்துடன் இருப்பதால் நிம்மதி
ஏற்படும்.
குடும்பம் பொருளாதார நிலை
கணவன்- மனைவியிடையே இருந்த கருத்து வேறுப்பாடுகள்
விலகி ஏப்ரலுக்கு பின்பு ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கும்
நல்ல வரன்கள் தேடி வரும். சிலருக்கு புத்திர பாக்கியம் உண்டாகும். பணவரவுகள் சிறப்பாக
இருப்பதால் குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். அதிநவீன பொருட்களின் சேர்க்கை
உண்டாகும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள். உற்றார் உறவினர்களின்
ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும்.
கொடுக்கல்- வாங்கல்
பணவரவுகள் தாராளமாக இருக்கும். கொடுத்த கடன்களும்
திருப்திகரமாக வசூலாகும். பெரிய முதலீடுகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும்.
பல பெரிய மனிதர்களின் நட்புகள் தேடி வரும். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் இருந்த நெருக்கடிகள்
எல்லாம் விலகி ஏப்ரலுக்கு பிறருக்கு சகல விதத்திலும் ஏற்றம் மிகுந்த பலன்களை அடைவீர்கள்.
வம்பு வழக்குகளில் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக அமையும்.
தொழில் வியாபாரிகளுக்கு
தொழில் வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றங்கள்
உண்டாகும். புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புகள் மூலம்
அனுகூலம் உண்டாகும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பும் தொழிலாளர்களின் ஆதரவும் அபிவிருத்தியை
பெருக்க உதவும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் நீங்கள்
எதிர்பார்த்த நற்பலன் கிடைக்கும்.
உத்தியோகஸ்தர்களுக்கு
பணியில் கௌரவமான நிலையிருக்கும். எதிர்பாராத
பதவி உயர்வுகள் கிட்டும். உயரதிகாரிகளின் ஆதரவுகளால் திறம்பட செயல்பட்டு பாராட்டுதல்களைப்
பெற முடியும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கு ஏற்ற வேலை வாய்ப்பு கிடைக்கும்.
உடன் பணிபுரிபவர்களை சற்று அனுசரித்து நடந்து கொண்டால் வேலை பளுவை குறைத்து கொள்ள முடியும்.
அரசியல்வாதிகளுக்கு
உங்களின் பெயர், புகழ் உயரக் கூடிய காலமாக
இருக்கும். மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும். எடுக்கும் முயற்சிகள்
அனைத்திலும் வெற்றி கிட்டும். மறைமுக வருவாய் பெருகும். கட்சிப் பணிகளுக்காக அடிக்கடி
பயணங்கள் மேற்கொள்ள நேரிடுவதால் சற்றே அலைச்சல் உண்டாகும். மேடை பேச்சுகளில் கவனமுடன்
இருப்பது மூலம் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்க முடியும். பொருளாதார நிலை சிறப்பாக
இருக்கும்.
விவசாயிகளுக்கு
பயிர் விளைச்சல் அமோகமாக இருக்கும். விளை
பொருளுக்கு ஏற்ற விலை சந்தையில் கிடைப்பதால் உழைப்பிற்கு ஏற்றப் பலனைப் பெறுவீர்கள்.
புதிய நவீன கருவிகள் வாங்கும் யோகம் உண்டாகும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும்.
சுப காரியங்கள் நடைபெறும். பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயங்களில் இருந்த நெருக்கடிகள்
குறைந்து சிறப்பான பலன்களை அடைவீர்கள். கால்நடைகளால் லாபம் கிட்டும்.
பெண்களுக்கு
உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். உறவினர்களிடையே
இருந்த பகைமை விலகும். பிறந்த இடத்திற்கும், புகுந்த இடத்திற்கும் பெருமை சேர்க்கும்
விதத்தில் நடந்து கொள்வீர்கள். வரும் ஏப்ரலுக்கு பிறகு திருமணமாகதவர்களுக்கு மணமாகும்.
அழகான புத்திர பாக்கியம் அமையும். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்பு உண்டாகும்.
பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வுகள் கிட்டும்.
படிப்பு
கல்வியில் சிறந்து விளங்கி பள்ளி, கல்லூரிகளுக்கு
பெருமை சேர்ப்பீர்கள். சிலருக்கு வெளியூர்களுக்கு சென்று கல்வி கற்க கூடிய வாய்ப்பு
ஏற்படும். நல்ல நண்பர்களின் தொடர்புகளால் மனதிற்கு இனிய நிகழ்ச்சிகள் நடைபெறும். பெற்றோர்
ஆசிரியர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை உண்டாக்கும்.
மாதப் பலன்கள்
ஜனவரி.
உங்கள் ராசிக்கு 3-ல் சனி, மாத பிற்பாதியில்
3-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் சாதகமான பலனை பெறுவீர்கள். பணம்
வரவுகள் சிறப்பாக இருந்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். நவீன பொருட்களை வாங்கும்
வாய்ப்பும் அமையும். கணவன்- மனைவியிடையே இருந்த வாக்குவாதங்கள் விலகி ஒற்றுமை உண்டாகும்.
உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள்.
திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் நல்ல செய்தி கிடைக்கும், கொடுக்கல்- வாங்கலில்
பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு கிடைக்க
வேண்டிய வாய்ப்புகள் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கும்.
உடன்பணிபுரிபவர்களின் ஒத்துழைப்புகள் மகிழ்ச்சி அளிக்கும். முருகப் பெருமானை வழிபாடு
செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் - 15-01-2022 காலை 09.51 மணி முதல் 17-01-2022
இரவு 10.02 மணி வரை.
பிப்ரவரி.
உங்கள் ராசிக்கு 2-ல் சுக்கிரன், 3-ல் சனி,
சூரியன் சஞ்சரிப்பதால் சகல விதத்திலும் மேன்மை மிகுந்த பலன்களை அடைவீர்கள். உடல் ஆரோக்கியத்தில்
சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியும். உறவினர்கள்
ஆதரவாக நடந்து கொள்வதால் உங்கள் பிரச்சினைகள் விலகும். அசையும், அசையா சொத்துக்கள்
வாங்கும் முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். தொழில் ரீதியாக புதிய யுக்திகளை பயன்படுத்தி
லாபங்களை பெற முடியும். கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கல்
போன்றவற்றில் சரளமான நிலையிருக்கும். உத்தியோகத்தில் வேலைபளு குறைந்து நிம்மதியுடன்
பணி புரிய முடியும். சிலருக்கு வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிவதற்கான வாய்ப்புகள்
அமையும்.துர்கையம்மனை வழிபாடு செய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம் - 11-02-2022 மாலை 05.05 மணி முதல் 14-02-2022
அதிகாலை 05.19 மணி வரை.
மார்ச்.
ராசியதிபதி செவ்வாய்- சனி சேர்க்கைப் பெற்று
3-ல் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கக்கூடிய இனிய மாதமாக இம்மாதம் இருக்கும்.
உங்கள் பலமும் வலிமையும் கூடும். மாத முற்பாதியில் சூரியன் 4-ல் இருப்பதால் தேவையற்ற
அலைச்சல்கள் இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்து கொள்வது நல்லது. பணம் வரவில்
எந்த வித இடையூறுகளும் இருக்காது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் குறைந்து
புதிய வாய்ப்பு கிடைக்கும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். கொடுக்கல்- வாங்கல் நல்ல
நிலையில் நடைபெறும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். உத்தியோகஸ்தர்களுக்கு
பணியில் நிம்மதியான நிலையிருக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு
கிட்டும். சிவ வழிபாடு மேற்கொள்வது நல்லது.
சந்திராஷ்டமம் - 11-03-2022 அதிகாலை 01.03 மணி முதல் 13-03-2022
பகல் 01.30 மணி வரை.
ஏப்ரல்.
உங்கள் ராசிக்கு 3-ல் சனி, மாத பிற்பாதியில்
6-ல் சூரியன், வரும் 13-ஆம் தேதி முதல் குரு பஞ்சம ஸ்தானமான 5-ல் சஞ்சரிப்பது அற்புதமான
அமைப்பாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். பண வரவுகள்
சிறப்பாக இருக்கும். புதிய நவீனகரமான பொருட்களை வாங்கும் வாய்ப்பு அமையும். கணவன்-
மனைவியிடையே இருந்த ஒற்றுமைக் குறைவுகள் விலகி அன்னேன்யம் அதிகரிக்கும். தொழில், வியாபாரம்
செய்பவர்கள் கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியை
பெருக்கிக் கொள்ள முடியும். புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவதால் லாபமும் அதிகரிக்கும்.
உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறம்பட செயல்பட்டு அனைவரின் பாராட்டுதல்களை பெறுவார்கள்.
எதிர்பார்க்கும் இடமாற்றங்கள் கிடைக்கும். விஷ்ணு வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் - 07-04-2022 காலை 09.09 மணி முதல் 09-04-2022
இரவு 09.51 மணி வரை.
மே.
உங்கள் ராசிக்கு 5-ல் குரு, சுக்கிரன்,
6-ல் சூரியன் ராகு சஞ்சரிப்பதால் தாராள தனவரவுகள் குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள்
கைகூடும் யோகம் உண்டு. பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக
இருந்து எதிலும் தெம்புடன் செயல்பட முடியும். எதிர்பார்க்கும் உதவிகள் தடையின்றி கிடைக்கப்
பெறுவதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை
சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியளிக்கும். கொடுக்கல்- வாங்கலில்
சரளமான நிலையிருக்கும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளை தடையின்றி பெற
முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். குடும்பத்தில்
தடைப்பட்ட சுப காரியங்கள் எளிதில் கைகூடி மகிழச்சி அளிக்கும். கால பைரவரை வழிபடவும்.
சந்திராஷ்டமம் - 04-05-2022 மாலை 04.45 மணி முதல் 07-05-2022
அதிகாலை 05.34 மணி வரை மற்றும் 31-05-2022 இரவு 11.30 மணி முதல் 03-06-2022 பகல்
12.20 மணி வரை.
ஜுன்.
உங்கள் ராசிக்கு 5-ல் குரு, 6-ல் ராகு சஞ்சரிப்பதால்
பொருளாதார ரீதியாக அனுகூலமான பலன்களை அடைவீர்கள். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும்.
குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில்
அனுகூலம் ஏற்படும். சூரியன் 7, 8-ல் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது
நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்து கொள்வது உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன்
இருப்பது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் குறைந்து புதிய வாய்ப்பு
கிடைக்கும். பயணங்களாலும் அனுகூலம் ஏற்படும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெற்றாலும்
கொடுத்த கடன்களை வசூலிப்பதில் இடையூறுகள் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில்
மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. சிவ வழிபாடு சூரிய நமஸ்காரம் செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் - 28-06-2022 அதிகாலை 05.32 மணி முதல் 30-06-2022
மாலை 06.23 மணி வரை.
ஜுலை.
உங்கள் ராசிக்கு 5-ல் குரு, 6-ல் செவ்வாய்
ராகு சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பாகும். தாராள தனவரவுகள் உண்டாகி குடும்பத்தில் சுபிட்சமான
நிலை ஏற்படும். சிலருக்கு புத்திர வழியில் மகிழ்ச்சி ஏற்படும். மாத முற்பாதியில் சூரியன்
8-ல் சஞ்சரிப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. கணவன்- மனைவியிடையே
சிறப்பான ஒற்றுமை நிலவும். எடுக்கும் முயற்சிகளில் சில தடைகளை சந்தித்தாலும் வெற்றியினை
பெற்று விட முடியும். கடன் பிரச்சினைகள் சற்றே குறையும். உற்றார் உறவினர்கள் சற்றே
ஆதரவாக இருப்பார்கள். தொழில் வியாபாரத்தில் இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் குறையும்.
உத்தியோகஸ்தர்கள் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள்
கிடைக்கும். உங்களுக்கு இருந்த மறைமுக எதிர்ப்புகள் மறையும். வெளியூர் மூலம் நல்ல செய்தி
கிடைக்கும். மகாலட்சுமியை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம் - 25-07-2022 பகல் 11.32 மணி முதல் 27-07-2022
இரவு 12.20 மணி வரை.
ஆகஸ்ட்.
உங்கள் ராசிக்கு 6-ல் ராகு 9, 10-ல் சூரியன்
சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைத்து அனுகூலங்கள் ஏற்படும். உங்களுக்குள்ள போட்டி பொறாமைகள், மறைமுக எதிர்ப்புகள்
யாவும் சற்றே விலகும். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றிகளைப்
பெற்று விட கூடிய ஆற்றல் உண்டாகும். குரு வக்ர கதியில் இருப்பதால் பண விஷயத்தில் சிக்கனமாக
இருப்பது நல்லது. கணவன்- மனைவி விட்டு கொடுத்து நடந்து கொண்டால் குடும்பத்தில் ஒற்றுமை
சிறப்பாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபங்கள் கிடைக்கும். வெளிவட்டாரத்
தொடர்புகள் யாவும் விரிவடையும். உத்தியோகஸ்தர்களுக்கு கௌரவமான பதவி உயர்வுகள் கிடைக்கும்.
உற்றார் உறவினர்களின் ஆதரவும் வருகையும் மகிழ்ச்சி தரும். வண்டி வாகனங்களில் செல்லும்
போது கவனமாக இருப்பது உத்தமம். விநாயகரை வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் - 21-08-2022 மாலை 06.10 மணி முதல் 24-08-2022
காலை 06.56 மணி வரை.
செப்டம்பர்.
உங்கள் ராசிக்கு 6-ல் ராகு, 10, 11-ல் சூரியன்
சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். பணவரவுகள் சரளமாக இருக்கும். குடும்பத்தில்
இருந்து வந்த பிரச்சனைகள் படிப்படியாக குறையும். கணவன்- மனைவி இடையே ஒற்றுமை நிலவும்.
கடன்களும் சற்றே குறையும். கொடுக்கல்- வாங்கலில் இருந்த தடைகளும் விலகும். உடல் ஆரோக்கியத்தில்
சற்று சோர்வு ஏற்பட்டாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்படும் திறன் உண்டாகும்.
உற்றார் உறவினர்கள் ஆதரவுடன் செயல்படுவார்கள். தடைப்பட்ட திருமண சுப காரியங்களுக்கான
முயற்சிகளில் சாதகப் பலன்கள் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
கூட்டாளிகளின் ஆதரவுகளால் அபிவிருத்தியைப் பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு
பணியில் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிட்டும். முருக வழிபாடு செய்யவும்.
சந்திராஷ்டமம் - 18-09-2022 அதிகாலை 01.43 மணி முதல் 20-09-2022
பகல் 02.23 மணி வரை.
அக்டோபர்.
உங்கள் ராசிக்கு 6-ல் ராகு சஞ்சரிப்பதும்,
மாத முற்பாதியில் லாப ஸ்தானமான 11-ல் சூரியன், சுக்கிரன், புதன் சஞ்சரிப்பதும் மிகவும்
சிறப்பான அமைப்பாகும். சிறுசிறு நெருக்கடிகள் இருந்தாலும் எதையும் எதிர்கொள்ளும் திறன்
உண்டாகும. செவ்வாய் 7, 8-ல் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே விட்டு
கொடுத்து செல்லவும். குரு வக்ர கதியில் சஞ்சரிப்பதால் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில்
சிந்தித்து செயல்படுவது நல்லது. பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் செயல்களில்
கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் ஓரளவுக்கு முன்னேற்றம் உண்டாகும். புதிய வாய்ப்புகளும்
கிடைக்கும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவற்றால் லாபங்கள் கிட்கும். உத்தியோகஸ்தர்கள்
தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது உத்தமம். விநாயகரை வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் - 15-10-2022 காலை 10.01 மணி முதல் 17-10-2022
இரவு 10.28 மணி வரை.
நவம்பர்.
உங்கள் ராசிக்கு 3-ல் சனி, 6-ல் ராகு சஞ்சரிப்பதாலும்,
சூரியன் 12-ல் சஞ்சரிப்பதும், செவ்வாய் 7,
8-ல் சஞ்சரிப்பதும் சாதகமற்ற அமைப்பு என்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது
நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும். கணவன்-
மனைவி இடையே தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம். உடல் ஆரோக்கியத்தில் அஜீரண
கோளாறு உண்டாகும். குரு வக்ரகதியில் சஞ்சரிப்பதால் கொடுத்த பணத்தை திரும்ப வெறுவதில்
சிக்கல்கள் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு அதிகமாக இருக்கும் என்றாலும்
உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்புகள் மகிழ்ச்சி அளிக்கும். சிலருக்கு தேவையற்ற இடமாற்றங்கள்
உண்டாகும். தொழில், வியாபாரத்தில் சற்று மந்தமான நிலை இருந்தாலும் கிடைக்க வேண்டிய
லாபம் கிட்டும். முருக வழிபாடு செய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம் - 11-11-2022 காலை 06.17 மணி முதல் 14-11-2022
காலை 06.30 மணி வரை.
டிசம்பர்.
உங்கள் ராசிக்கு 3-ல் சனி, 5-ல் குரு, 6-ல்
ராகு சஞ்சரிப்பதால் பல்வேறு வளமான பலன்களை பெறுவீர்கள். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும்
வெற்றி உண்டாகும். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். ஜென்ம ராசியில் சூரியன், 7-ல் செவ்வாய்
சஞ்சரிப்பதால் முன்கோபத்தைக் குறைத்துக் கொள்வது, நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது
நல்லது. திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல
வரன்கள் அமையும். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். அசையும், அசையா சொத்துக்கள்
வாங்கும் யோகம் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும். ஆரோக்கியத்தில்
மந்த நிலை உண்டானாலும் எடுக்கும் காரியத்தை திறம்பட செய்து முடித்து விடுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு
பணியில் நிம்மதியான நிலையிருக்கும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
சிவ வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் - 09-12-2022 அதிகாலை 01.43 மணி முதல் 11-12-2022
பகல் 01.51 மணி வரை.
அதிர்ஷ்டம் அளிப்பவை
எண் - 1,2,3,9 நிறம் - ஆழ்சிவப்பு, மஞ்சள், கிழமை - செவ்வாய், வியாழன்
கல் - பவளம், திசை - தெற்கு
தெய்வம் - முருகன்
No comments:
Post a Comment