Sunday, January 2, 2022

புத்தாண்டு பலன் - 2022 - மீனம்

 

புத்தாண்டு பலன் - 2022 -  மீனம்  பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி

அன்புள்ள மீன ராசி நேயர்களே, தன்னம்பிக்கை உடையவராகவும் விட்டு கொடுக்கும் மனப்பான்மை கொண்டவராகவும், நீதி நேர்மை தவறாதவராகவும் விளங்கும் உங்களுக்கு என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். வரும் 2022-ஆம் ஆண்டில் ஒரு ராசியில் நீண்ட நாட்கள் தங்கும் கிரகமான சனி பகவான் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ல் சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் லாபங்கள் கிட்டும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றியினைப் பெற்று விடுவீர்கள். பணவரவுகளுக்குப் பஞ்சம் ஏற்படாது. சிலருக்கு சொந்த வீடு, மனை, வண்டி வாகனங்கள் வாங்கும் யோகமும், பொன் பொருள் சேர்க்கையும், தொட்ட தெல்லாம் துலங்கும் யோகமும் உண்டு.

தொழில் வியாபாரத்திலுள்ள எதிர்ப்புகள் விலகி விடும். எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒற்றுமையான செயல்பாடுகளால் அபிவிருத்தி பெருகும். புதிய யுக்திகளை கையாண்டு லாபத்தை பெருக்கி கொள்ள முடியும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெற்று லாபத்தை அள்ளி தரும். பல பெரிய மனிதர்களின் தொடர்புகள் மகிழ்ச்சியை அளிக்கும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் சாதகப்பலன் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை நிலவும். உயரதிகாரிகளின் ஆதரவும், உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பும் மகிழ்ச்சி அளிக்கும். எதிர்பார்க்கும் உயர்பதவிகள் கிடைக்கும். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விருப்புபவர்களின் விருப்பம் நிறைவேறும்.

உங்கள் ராசியாதிபதி குரு பகவான் இவ்வாண்டு தொடக்கத்தில் உங்கள் ராசிக்கு 12-ல் சஞ்சரிப்பதும், வரும் 13-04-2022 முதல் ஜென்ம ராசியில் சஞ்சரிக்க இருப்பதும் அவ்வளவு சிறப்பான அமைப்பு என கூற முடியாது என்பதால் பண கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் மிகவும் கவனத்துடன் செயல்படுவது நல்லது. அதிக முதலீடு கொண்ட செயல்களில் சிந்தித்து செயல்பட்டால் அடைய வேண்டிய இலக்கை அடைய முடியும்.

திருமண வயதை அடைந்தவர்களுக்கு சில இடையூறுகள் ஏற்பட்டாலும் ஏப்ரல் மாதம் முதல் குரு ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதன் மூலம் குரு களத்திர ஸ்தானமான 7-ஆம் வீட்டை பார்ப்பதால் இருக்கும் தடைகள் விலகி குடும்பத்தில் திருமணம் போன்ற சுப காரியங்கள் கைகூடும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக் கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும்.

            உங்கள் ராசிக்கு 3, 9-ல் சஞ்சரிக்கும் ராகு, கேது வரும் 12-04-2022-ல் ஏற்படவுள்ள ராகு- கேது பெயர்ச்சி மூலம் ராகு ஜென்ம ராசிக்கு 2-லும், கேது 8-லும் சஞ்சாரம் செய்ய இருப்பது சாதகமற்ற அமைப்பு என்பதால் உடல் நலத்தில் கவனம் எடுத்து கொள்வது, நேரத்திற்கு உணவு உண்பது, தேவையற்ற அலைச்சல்களை குறைப்பது நல்லது. கணவன்- மனைவி இடையே ஒன்றும் இல்லாத விஷயத்திற்கு கூட வீண் கருத்து வேறுப்பாடுகள் ஏற்படலாம் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம். உற்றார், உறவினர்களை அனுசரித்து செல்லவும்.

 

தேக ஆரோக்கியம்

உங்களின் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். எந்தவொரு காரியத்திலும் சிந்தித்து செயல்பட்டால் அடைய வேண்டிய இலக்கை அடைய முடியும். உணவு விஷயத்தில் கட்டுபாட்டுடன் இருப்பது மூலம் ஏற்படும் வயிறு பாதிப்புகளை தவிர்க்க முடியும். குடும்பத்தில் உள்ளவர்களால் மருத்துவ செலவுகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் அவர்கள் ஆரோக்கியத்திற்கு சற்று முக்கியத்தும் தருவது நல்லது. தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது மூலம் அலைச்சலை குறைக்க முடியும்.

குடும்பம் பொருளாதார நிலை

கணவன்- மனைவியிடையே சிறுசிறு வாக்கு வாதங்கள் தோன்று காலம் என்பதால் பேச்சில் பொறுமையுடன் இருப்பது நல்லது. பண வரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைக்கவும். எதிர்பாராத உதவிகள் மூலம் குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு ஏப்ரலுக்கு பிறகு குரு 7-ம் வீட்டை பார்ப்பதால் நல்ல வரன்கள் தேடி வரும். உற்றார் உறவினர்களிடையே விட்டுக் கொடுத்து நடப்பதின் மூலம் பல நல்ல காரியங்களை சாதித்து கொள்ள முடியும்.

கொடுக்கல்--- வாங்கல்

பண வரவுகள் சற்று ஏற்ற இறக்கமாக இருக்கும் என்பதால் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. கொடுத்த கடன்களை வசூலிக்க முடியும் என்றாலும் சில நேரங்களில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். தேவையற்ற வம்பு வழக்குகளை சந்திக்க நேர்ந்தாலும் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக இருக்கும்.

தொழில் வியாபாரிகளுக்கு

நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் என்றாலும் போட்டி பொறாமைகளால் சில நேரங்களில் மன உளைச்சல் ஏற்படும். கூட்டாளிகளிடம் விட்டுக் கொடுத்து செல்வதும், தொழிலாளர்களை தட்டி கொடுத்து வேலை வாங்குவதும் நல்லது. தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் அலைச்சல்கள் அதிகரித்தாலும் ஒரளவுக்கு அனுகூலத்தைப் பெறுவீர்கள். எதிலும் எதிர்நீச்சல் போட்டால் மட்டுமே எதிர்பார்த்த லாபத்தை அடைய முடியும்.

உத்தியோகஸ்தர்களுக்கு

பணியில் சற்று கவனமுடன் செயல்பட வேண்டிய காலமாகும். பிறர் செய்யும் தவறுகளுக்கு நீங்கள் பொறுப்பேற்க வேண்டிய சூழ்நிலைகள் ஏற்பட்டாலும் உயரதிகாரிகளின் ஆதரவுகளால் எதையும் சமாளித்து விடுவீர்கள். புதிய வேலை தேடுபவர்களுக்கு எதிர்பார்த்த அளவிற்கு தகுதிக்கு ஏற்ற வேலை கிடைக்காவிட்டாலும், கிடைப்பதை பயன்படுத்திக் கொள்வது நல்லது. யாருடைய விஷயங்களிலும் தலையீடு செய்யாமல் இருந்தால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.

அரசியல்வாதிகளுக்கு

மேடை பேச்சுக்களில் கவனமுடன் செயல்படுவது, தேவையற்ற வாக்குறுதிகளை வழங்காது இருப்பது நல்லது. பத்திரிக்கை நண்பர்களின் ஆதரவுகள் ஓரளவுக்கு மகிழ்ச்சினை ஏற்படுத்தும். மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய சற்று கஷ்டப்பட வேண்டியிருந்தாலும் சொன்னதை செய்து முடிப்பீர்கள். கட்சி பணிகளுக்காக நிறைய செலவுகள் செய்ய வேண்டி வரும். அடிக்கடி பயணங்களையும் மேற்கொள்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனமுடன் இருப்பது நல்லது.

விவசாயிகளுக்கு

பயிர் விளைச்சல் சிறப்பாக அமைய நிறைய பாடுபட வேண்டியிருக்கும். புழு, பூச்சிகளின் தொல்லைகளும் அதிகரிக்கும். அரசு வழியில் எதிர் பார்க்கும் உதவிகள் தக்க நேரத்தில் கிடைத்து மன நிம்மதி ஏற்படும். பூமி, மனை வாங்கும் விஷயங்களில் அனுகூலப் பலன் உண்டாகும். வாய்க்கால் வரப்பு பிரச்சினைகளால் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். முடிந்த வரை தேவையற்ற பிரச்சினைகளில் தலையிடாது இருப்பது நல்லது.

பெண்களுக்கு

உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனமுடன் நடந்து கொண்டால் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல் முடியும். பண வரவுகள் சுமாராக இருந்தாலும் குடும்பத் தேவைகளை எளிதில் பூர்த்தி செய்ய முடியும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு வாக்கு வாதங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமை நிலவும். முடிந்த வரை குடும்ப பிரச்சினைகளை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளாது இருக்கவும். திருமண சுபகாரியங்கள் ஏப்ரலுக்கு பிறகு கைகூடும். உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும்.

படிப்பு

கல்வியில் சற்று கவனமுடன் செயல்பட்டால் மட்டுமே நல்ல மதிப்பெண்களைப் பெற முடியும். பயணங்களில் சற்று நிதானமுடன் செயல்படுவது, தேவையற்ற நண்பர்களின் சகவாசத்தை தவிர்ப்பது நல்லது. பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவு உங்களுக்கு எப்பொழுதும் இருக்கும். அரசு வழியில் ஒரளவுக்கு உதவிகள் கிட்டும்.

 

மாதப் பலன்கள்

ஜனவரி.

உங்கள் ராசிக்கு ராகு 3-ல், சனி 11-ல், சூரியன் 10, 11-ல் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். பொருளாதார ரீதியாக ஒரளவுக்கு மேன்மைகளை அடைய முடியும். கணவன்- மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அவர்களின் ஆதரவினைப் பெற முடியும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருந்து எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டால் கடன்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம். கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்து செயல்பட்டால் மட்டுமே லாபத்தை அடைய முடியும். பெரிய முதலீடுகளைக் கொண்டு தொழிலை விரிவுபடுத்தும் எண்ணங்கள் கைகூடும் வாய்ப்பு உண்டு. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். எதிலும் சிறப்பாக செயல்பட்டு மற்றவர்கள் மத்தியில் நற்பெயர் எடுப்பீர்கள். தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம் - 24-01-2022 இரவு 11.08 மணி முதல் 27-01-2022 அதிகாலை 03.12 மணி வரை.

பிப்ரவரி.

உங்கள் ராசிக்கு ராகு 3-ல், செவ்வாய் 10-ல், சனி 11-ல், மாத முற்பாதியில் சூரியன் 11-ல் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் வெற்றி பல்வேறு அனுகூலப் பலன்களை அடையும் யோகம் உண்டாகும். பண வரவுகளில் இருந்த நெருக்கடிகள் குறையும். தேவைகள் பூர்த்தியாவதுடன் கடன்களும் சற்று நிவர்த்தியாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின் அனுகூலப்பலன் உண்டாகும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியினை அளிக்கும். கொடுக்கல்- வாங்கலில் இருந்த தேக்க நிலை விலகி நல்ல லாபம் கிடைக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் புதிய வாய்ப்புகளை கிடைக்கப் பெறுவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களும் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். விஷ்ணு வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம் - 21-02-2022 அதிகாலை 04.31 மணி முதல் 23-02-2022 காலை 08.56 மணி வரை.

மார்ச்.

உங்கள் ராசிக்கு ராகு 3-ல், செவ்வாய் சனி சுக்கிரன் 11-ல் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருந்து குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகளைப் பெறுவீர்கள். பணம் பல வழிகளில் தேடி வந்து பாக்கெட்டை நிரப்பும். சிலருக்கு வண்டி வாகனங்கள் வாங்க கூடிய வாய்ப்பு உண்டாகும். உங்களுக்குள்ள போட்டி பொறாமைகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் சற்றே விலகுவதால் மனநிம்மதி ஏற்படும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை நிலவும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபங்கள் கிடைப்பதுடன் புதிய வாய்ப்புகளும் தேடி வரும். உத்தியோகஸ்தர்களுக்கு கௌரவமான பதவி உயர்வுகளும் எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவு மகிழ்ச்சி தரும். தூர பயணங்களை தவிப்பது நல்லது. வயதில் முத்தவர்களிடம் பேச்சை குறைப்பது நல்லது. சிவ வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம் - 20-03-2022 காலை 11.10 மணி முதல் 22-03-2022 பகல் 02.33 மணி வரை.

ஏப்ரல்.

உங்கள் ராசிக்கு 11-ல் சனி சஞ்சரிப்பது சிறப்பு என்றாலும், ஜென்ம ராசியில் சூரியன் சஞ்சரிப்பதால் எதிலும் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் உண்டாகும். பணம் பல வழிகளில் தேடி வரும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி பெறுவார்கள். அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். முன்கோபத்தை குறைத்து கொண்டு நெருங்கியவர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். வெளியூர் வெளிநாடுகளுக்குச் செல்லும் வாய்ப்பும் அமையும். சிலர் எதிர்பார்த்த இடமாற்றங்களைப் பெற முடியும். தொழில் வியாபாரத்திலும் எதிர்பார்த்த வகையில் லாபம் கிட்டும். தொழிலை விரிவு படுத்த வேண்டும் என்ற எண்ணங்கள் நிறைவேறும். முருகப் பெருமானை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் - 16-04-2022 இரவு 08.00 மணி முதல் 18-04-2022 இரவு 10.07 மணி வரை.

மே.

ஜென்ம ராசியில் சுக்கிரன், மாத பிற்பாதியில் 3-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் சில கிடைக்கும். உங்கள் பலமும் வலிமையும் கூடும். எந்தவித பிரச்சினைகளையும் சமாளிக்கக் கூடிய ஆற்றல் உண்டாகும். பேச்சில் சற்று நிதானத்தைக் கடைப்பிடித்தால் குடும்பத்தில் நிம்மதியை நிலை நாட்ட முடியும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும் என்றாலும் ஜென்ம ராசியில் குரு, 12-ல் சனி செவ்வாய் சஞ்சரிப்பதால் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. ஆடம்பரச் செலவுகளை குறைத்தால் வீண் விரயங்களை தவிர்க்கலாம். தொழில், வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு போட்டிகள் குறைந்து புதிய வாய்ப்பு கிடைக்கும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம் - 14-05-2022 காலை 06.12 மணி முதல் 16-05-2022 காலை 07.53 மணி வரை.

ஜுன்.

உங்கள் ராசிக்கு இம்மாத முற்பாதியில் 2-ல் சுக்கிரன், 3-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். பண வரவுகள் தேவைக் கேற்றபடி இருக்கும் என்றாலும் எதிலும் சிக்கனமாக இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றும். பேச்சில் கவனமாக இருந்தால் கணவன்- மனைவிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்கள் தேவையற்ற நெருக்கடிகளை ஏற்படுத்துவார்கள். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நெருக்கடிகள் இருந்தாலும் கூட்டாளிகளும் தொழிலாளர்களும் ஆதரவாக நடந்து கொள்வதால் எதையும் எதிர்கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு இருந்தாலும் எதிர்பார்க்கும் உயர்வுகளைப் பெற முடியும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு நன்றாக இருக்கும். முருகப் பெருமானை வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம் - 10-06-2022 மாலை 04.06 மணி முதல் 12-06-2022 மாலை 06.33 மணி வரை.

ஜுலை.

உங்கள் ராசிக்கு 2-ல் செவ்வாய், ராகு, 4, 5-ல் சூரியன் சஞ்சரிப்பதால் பேச்சில் பொறுமையுடன் இருப்பது நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகும் என்றாலும் எதையும் சமாளிக்கும் பலம் உங்களுக்கு உண்டு. பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது, முன்கோபத்தைக் குறைத்துக் கொள்வது சிறப்பு. பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை உண்டாகும் என்பதால் வீண் செலவுகளை குறைப்பது உத்தமம். கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. கொடுக்கல்- வாங்கலில் சற்று சிந்தித்து செயல்படுவது சிறப்பு. தொழில், வியாபார ரீதியாக எடுக்கும் புதிய முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டால் மட்டுமே வெற்றி அடைய முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருந்தாலும் அதிகாரிகளிடம் பேச்சை குறைப்பது நல்லது. தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம் - 07-07-2022 இரவு 12.20 மணி முதல் 10-07-2022 அதிகாலை 04.20 மணி வரை.

ஆகஸ்ட்.

உங்கள் ராசிக்கு சுக்கிரன் 4, 5-ல், மாத பிற்பாதியில் செவ்வாய் 3-ல், சூரியன் 6-ல் சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொண்டு சிறப்பான பலன்களை பெறுவீர்கள். உங்கள் பலமும் வலிமையும் கூடும். எந்தவித பிரச்சினைகளையும் சமாளிக்கக் கூடிய ஆற்றல் உண்டாக்கும். தொழில், வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு போட்டிகள் குறைந்து புதிய வாய்ப்பு கிடைக்கும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். பேச்சில் சற்று நிதானத்தைக் கடைப்பிடித்தால் குடும்பத்தில் நிம்மதியை நிலை நாட்ட முடியும். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். ஆடம்பரச் செலவுகளை குறைத்தால் வீண் விரயங்களை தவிர்க்கலாம். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிட்டும். துர்க்கையம்மனை வழிபடுவது உத்ததம்.

சந்திராஷ்டமம் - 04-08-2022 காலை 06.40 மணி முதல் 06-08-2022 பகல் 12.06 மணி வரை மற்றும் 31-08-2022 பகல் 12.03 மணி முதல் 02-09-2022 மாலை 05.55 மணி வரை.

செப்டம்பர்.

உங்கள் ராசிக்கு 3-ல் செவ்வாய், 7-ல் புதன், மாத முற்பாதியில் 6-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் அனுகூலமான பலன்களை அடைவீர்கள். பணவரவுகளில் சரளமான நிலையில் இருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் நல்ல செய்தி கிடைக்கும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் எதிர்பார்க்கும் கௌரவமான பதவி உயர்வுகளை பெற முடியும். முடிந்தவரை தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது மூலம் அலைச்சலை குறைத்துக் கொள்ளலாம். தொழில் வியாபாரத்தில் போட்டி பொறாமைகளை சமாளித்து ஏற்றம் பெறக்கூடிய அளவிற்கு ஆற்றல் உண்டாகும். பெரிய மனிதர்களின் ஆதரவு சிறப்பாக இருப்பதால் உங்களுக்கு உள்ள நெருக்கடிகள் விலகி குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். விஷ்ணு வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம் - 27-09-2022 மாலை 06.17 மணி முதல் 29-09-2022 இரவு 11.25 மணி வரை.

அக்டோபர்.

உங்கள் ராசிக்கு மாத முற்பாதியில் செவ்வாய் 3-ல் இருப்பது நல்ல அமைப்பு என்றாலும், சூரியன் இம்மாதத்தில் 7, 8-ல் சஞ்சரிப்பதால் எதிலும் சற்று கவனத்துடன் இருப்பது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்களிடம் வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அஜீரண கோளாறு, உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகள் ஏற்படும். பண வரவுகள் சுமாராக இருக்கும். எதிலும் சிந்தித்து செயல்படவும். சனி 11-ல் உள்ளதால் தொழில் வியாபாரத்தில் ஒரளவுக்கு முன்னேற்றம் இருக்கும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும் என்றாலும் பண விஷயத்தில் சிக்கனமாக இருப்பது நல்லது. கூட்டாளிகளை அனுசரித்து செல்வது உத்தமம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு இருந்தாலும் எடுத்த பணியை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். அசையும் அசையா சொத்துக்களால் வீண் விரயங்களை சந்திப்பீர்கள். சிவ பெருமானை வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம் - 25-10-2022 அதிகாலை 02.32 மணி முதல் 27-10-2022 காலை 06.30 மணி வரை.

நவம்பர்.

உங்கள் ராசிக்கு 11-ல் சனி சஞ்சரிப்பதால் பணவரவுகள் சாதகமாக இருக்கும் என்றாலும் மாத முற்பாதியில் 8-ல் சூரியன் சஞ்சரிப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது சிறப்பு. குடும்பத்தில் சிறுசிறு ஒற்றுமைக் குறைவுகள் உண்டாகும் என்றாலும் பெரிய பிரச்சினைகள் ஏற்படாது. தொழில், வியாபாரம் செய்பவர்கள் பேச்சில் நிதானத்தை கடைப்பிடித்து கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து சென்றால் அபிவிருத்தியை பெருக்கிக் கொள்ள முடியும். மாத பிற்பாதியில் 3-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எதிர்பாராத திடீர் தனச் சேர்க்கைகள் கிடைக்கப் பெற்று உங்களுக்கு உள்ள பிரச்சினைகள் குறைந்து மன மகிழ்ச்சி ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறம்பட செயல்பட்டு அனைவரின் பாராட்டுதல்களை பெறுவார்கள். அஷ்டலட்சுமி வழிபாடு செய்வதால் வாழ்வில் முன்னேற்றங்கள் உண்டாகும்.

சந்திராஷ்டமம் - 21-11-2022 பகல் 12.30 மணி முதல் 23-11-2022 மாலை 04.03 மணி வரை.

டிசம்பர்.

உங்கள் ராசிக்கு 3-ல் செவ்வாய், 11-ல் சனி, 9, 10-ல் சூரியன், புதன், சுக்கிரன் சஞ்சரிப்பதால் பல்வேறு வளமான பலன்களை பெறுவீர்கள். பொருளாதார நெருக்கடிகள் குறையும். சொந்த வீடு, மனை, வாகனங்கள் வாங்கக் கூடிய வாய்ப்பு உண்டாகும். குடும்பத்தில் இருந்த கடன் சுமைகள் சற்றே குறைவதால் மனமகிழ்ச்சி ஏற்படும். சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் வெற்றி கிட்டும். பொன், பொருள், சேரும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும். பல பெரிய மனிதர்களின் தொடர்புகள் நம்பிக்கை அளிப்பதாக அமையும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய கூட்டாளிகள் சேருவார்கள். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடைய வாய்ப்புகளும் தேடி வரும். உத்தியோகஸ்தர்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி மேல் வெற்றிகளைப் பெறுவார்கள். எதிர்பார்த்த ஊதிய உயர்வுகளும் கிட்டும். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் - 18-12-2022 இரவு 10.30 மணி முதல் 21-12-2022 அதிகாலை 02.57 மணி வரை.

 

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் - 1,2,3,9        கிழமை - வியாழன், ஞாயிறு           திசை - வடகிழக்கு

கல் - புஷ்ப ராகம் நிறம் - மஞ்சள், சிவப்பு    தெய்வம் -  தட்சிணாமூர்த்தி

No comments: