Sunday, January 15, 2023

தனுசு - சனி பெயர்ச்சி பலன்கள் 2023 - -2025

 



தனுசு - சனி பெயர்ச்சி பலன்கள் 2023 - -2025

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

ஆசிரியர் - பால ஜோதிடம் (வார இதழ்)

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

வடபழனி, சென்னை - 600 026 இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

தனுசு ( மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)

குரு பகவானின் ராசியில் பிறந்த உங்களுக்கு இதுநாள் வரை ஏழரைச் சனி நடைபெற்று வந்ததால் பல்வேறு இன்னல்களை சந்தித்து வந்தீர்கள். தற்போது ஏற்படக்கூடிய சனிப்பெயர்ச்சியால் திருக்கணிதப்படி வரும் 17-01-2023 முதல் 29-03-2025 வரை (வாக்கியப்படி 29-03-2023 முதல் 06-03-2026 வரை) சனி உங்கள் ராசிக்கு 3-ல் சஞ்சரிக்க உள்ளதால் ஏழரைச் சனி முழுவதுமாக முடிவடைவதால் உங்கள் வாழ்வில் மிகப்பெரிய ஒரு மறுமலர்ச்சி ஏற்படும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பது மட்டுமில்லாமல் கடந்த கால மருத்துவ செலவுகள் குறையும். பொருளாதார ரீதியாக மிகவும் அனுகூலமான பலன்களை பெற்று உங்களுக்கு இருந்த கடன்கள் எல்லாம் படிப்படியாக குறையும். திருமண வயது அடைந்தவர்களுக்கு நல்ல வரன் அமையும் அமைப்பும், சிறப்பான குழந்தை பாக்கியமும் ஏற்படும்.

கடந்த காலங்களில் உங்களுக்கு இருந்த வம்பு வழக்குகள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் வரும் நாட்களில் மறையும். நீங்கள் கடந்த காலங்களில் சந்தித்த அவமானங்கள் எல்லாம் மாறி ஒரு கௌரவமான நிலையினை வரும் நாட்களில் அடைவீர்கள். சிலருக்கு வீடு, வாசல், பூமி, மனை வாங்க கூடிய யோகம் உண்டாகும்.

தொழில், உத்தியோக ரீதியாக கடந்த கால பொருள் தேக்கங்கள் விலகி உங்களது பொருட்களுக்கு நல்ல வேலை கிடைப்பது மட்டுமில்லாமல் நல்ல லாபத்தை அடைய முடியும். சந்தை சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக மாறுவதால் உங்களின் கனவுகள் எல்லாம் வரும் நாட்களில் நிறைவேறும். தொழில் அபிவிருத்திக்காக நீங்கள் மேற்கொள்ளக்கூடிய முயற்சிகள் வெற்றி பெறும். கொடுத்த வாக்குறுதிகளை குறித்த நேரத்தில் நிறைவேற்றுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்களுக்கு இருந்த வேலைப்பளு எல்லாம் குறைந்து பதவி உயர்வினை அடையும் யோகம், உங்கள் திறமைகளை வெளிக்காட்ட ஒரு நல்ல வாய்ப்புகள் ஏற்படும். நீண்ட நாட்களாக வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு வரும் நாட்களில் ஒரு உயர்வான இடத்தில் இருந்து அழைப்பு வரும். கடந்த காலங்களில் நீங்கள் பட்ட கஷ்டம் எல்லாம் தற்போது விலகி மகிழ்ச்சியும் மனநிம்மதியும் ஏற்படும். சக ஊழியர்களும், அதிகாரிகளும் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.

சனி 3-ல் சஞ்சரிக்கும் இந்த தருணத்தில் ஆண்டுகோள் என வர்ணிக்கப்படக்கூடிய குருபகவான் வரும் 22-04-2023 முதல் 01-05-2024 வரை பஞ்சம ஸ்தானமான 5-ல் சஞ்சரிக்க இருப்பது மிகவும் அனுகூலமான அமைப்பு என்பதால் இக்காலங்களில் மேலும் மகிழ்ச்சிகரமான நிகழ்வுகள் நடக்கக் கூடிய யோகம், பொருளாதார ரீதியாக ஒரு உயர்வான நிலையினை எட்டும் வாய்ப்பு ஏற்படும். வரும் 30-10-2023 வரை சர்ப கிரகமான கேது 11-ல் சஞ்சரிக்க இருப்பது உங்களுக்கு சாதகமான அமைப்பு ஆகும். ராகு 5-ல் சஞ்சரித்தாலும் சனியின் சாதக சஞ்சாரத்தால் நீங்கள் வாழ்வில் ஒரு உயர்வான நிலையை வரும் நாட்களில் எட்ட முடியும்.

 

உடல் ஆரோக்கியம்

உங்களது ஆரோக்கியம் மிகவும் நன்றாக இருக்கும். கடந்த கால உடம்பு பாதிப்புகள் எல்லாம் விலகி எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். நீண்ட நாட்களாக மருத்துவ சிகிச்சை மேற்கொண்டவர்களுக்கு தற்போது ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு மன அமைதி ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்களும் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருப்பார்கள்.

குடும்பம் பொருளாதார நிலை

கடந்த கால பண பற்றாக்குறை எல்லாம் விலகி தாராள தன வரவுகள் உண்டாகி உங்களுக்குள்ள கடன் பிரச்சினைகள் எல்லாம் படிப்படியாக குறையும். பண வரவுகள் சிறப்பாக இருப்பதால் சேமிக்கும் அளவிற்கு பணப்புழக்கம் அமைவது மட்டுமில்லாமல் அசையா சொத்துக்கள் வாங்கக்கூடிய வாய்ப்பு உண்டாகும். குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். நீண்ட நாட்களாக தீர்க்க முடியாத வம்பு, வழக்குகளுக்கெல்லாம் தற்போது ஒரு நல்ல முடிவு கிடைக்கும். பங்காளியிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் எல்லாம் தற்போது விலகும்.

கொடுக்கல்- வாங்கல்

உங்களுக்கு இருந்த பொருளாதார பிரச்சினைகள் விலகுவது மட்டுமில்லாமல் கொடுக்கல்- வாங்கல் ரீதியாக நல்ல லாபத்தை ஈட்டக்கூடிய வாய்ப்பு உண்டாகும். கடந்த காலங்களில் நீங்கள் எதில் ஈடுபட்டாலும் அதில் ஒரு தேக்க நிலை இருந்திருக்கும். தற்போது அந்த தேக்க நிலை எல்லாம் விலகி எதிலும் தைரியத்தோடு அதிக முதலீடுகள் செய்து அதில் லாபம் காண முடியும். மற்றவர்களுக்கு கொடுத்த பணம் எல்லாம் கூட தற்போது திரும்பி வந்து உங்கள் பாக்கெட்டை நிரப்பும்.

தொழில் வியாபாரம்

தொழில், வியாபாரத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். சமுதாயத்தில் ஒரு கௌரவமான நிலையினை அடைவீர்கள். உங்களது பொருட்களுக்கு அதிகப்படியான விலை கிடைப்பதால் நல்ல லாபத்தை அடைய முடியும். தொழில் ரீதியாக கடந்த காலங்களில் இருந்த பிரச்சினைகள் எல்லாம் தற்போது விலகி சந்தை சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக மாறும். அரசு வழியில் நீங்கள் எதிர்பார்த்த உத்தரவுகளை தற்போது பெற்று எதிலும் துணிவோடு செயல்பட முடியும்.

உத்தியோகம்

கடந்த காலங்களில் நீங்கள் பட்ட அவமானங்கள் எல்லாம் விலகி பணிபுரியும் இடத்தில் கௌரவமான நிலையினை அடைவீர்கள். உங்கள் உழைப்புக்கான ஊதியத்தை தற்போது பெறுவது மட்டுமில்லாமல் உங்களுக்கு இருந்த கடன் தொல்லைகள் எல்லாம் தற்போது குறையும். எதிர்பார்த்த பதவி உயர்வுகளை அடையும் யோகம், விரும்பிய இடம் மாற்றங்கள் கிடைக்கக்கூடிய அமைப்பு வரும் நாட்களில் உண்டு. உங்கள் மீது இருந்த பழிச்சொற்கள் விலகக் கூடிய ஒரு சூழலும், உயர் அதிகாரியிடம் சுமூகமான நிலையும் ஏற்படும்.

அரசியல்

கடந்த கால சோதனைகள் எல்லாம் மறைந்து நல்ல நிலையினை நீங்கள் அடைவீர்கள். கௌரவ பதவிகள் உங்களைத் தேடி வரும். மக்கள் மத்தியில் உங்களது மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். மறைமுக எதிர்ப்புகள் எல்லாம் விலகி மன நிம்மதி ஏற்படும். பெருந் தலைவருடைய ஆதரவு கிடைப்பதால் உங்கள் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படும்.

விவசாயிகள்

பயிர் விளைச்சல் சிறப்பாக இருப்பது மட்டுமில்லாமல் சந்தையில் நல்ல விலை கிடைத்து அதிகப்படியான லாபங்களை பெறுவீர்கள். கடந்த காலங்களில் நீங்கள் மேற்கொண்ட நவீன யுக்திகளுக்கு தற்போது நற்பலன் கிடைக்கும். பங்காளியிகள் மற்றும் அயல் நில உரிமையாளர்களிடம் இருந்து வந்த வாய்க்கால் வரப்பு பிரச்சினைகள் எல்லாம் தற்போது முடிவுக்கு வந்து சுமூகமான சூழ்நிலை உண்டாகும். புதிய விலை நிலங்களை வாங்கக்கூடிய யோகம் உண்டு.

பெண்கள்

தேக ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். ஆடை, அணிகலன்களை வாங்கக்கூடிய யோகம் உண்டாகும். கடந்த கால பொருளாதார நெருக்கடிகள் விலகுவதால் மனதில் மகிழ்ச்சியும், நிம்மதியும் உண்டாகும். கணவன்- மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். பணிபுரியும் பெண்களுக்கு பதவி உயர்வும், உங்களுடைய திறமைகளை வெளிக்காட்ட ஒரு நல்ல சந்தர்ப்பங்களும் கிடைக்கும்.

கலைஞர்கள்

உங்கள் திறமைகளை வெளிக்காட்ட நல்ல வாய்ப்புகள் ஏற்படும். நல்ல கதாபாத்திரம் கிடைத்து உங்களின் நீண்ட நாளைய கனவுகள் எல்லாம் நிறைவேறும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பு உண்டாகும். ரசிகர்களின் ஆதரவு அதிகரிக்கும். வெளியூர் செல்லும் யோகம் ஏற்படும்.

மாணவ மாணவியர்

படிப்பில் மிகச் சிறப்பாக செயல்பட்டு நல்ல மதிப்பெண்களை பெறுவீர்கள். போட்டித் தேர்வுகளில் ஈடுபட்டு பரிசுகளை வெல்லக்கூடிய வாய்ப்பு உண்டாகும். மேற்படிப்புக்காக நீங்கள் மேற்கொள்ளக்கூடிய முயற்சிகள் வெற்றி தரும். கடந்த கால உடல் சோர்வுகள் விலகி எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள்.

 

சனிபகவான் அவிட்ட நட்சத்திரத்தில் 17-01-2023 முதல் 14-03-2023 வரை

உங்கள் ராசிக்கு 3--ல் சனி செவ்வாய் நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் உங்கள் வாழ்வில் மிகப்பெரிய ஒரு மறுமலர்ச்சி ஏற்படும். கேது 11-ல் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருந்து அனைத்து தேவையும் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருந்து எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். பெரிய மனிதரின் ஆதரவுடன் உங்களுக்கு நீண்ட நாட்களாக உள்ள பிரச்சினைகள் எல்லாம் முடிவுக்கு வரும். கடன் பிரச்சினைகள் குறையும். தொழில், வியாபாரத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல் உங்களுடைய மன கவலைகள் விலகி மகிழ்ச்சி உண்டாகும். வேலையாட்கள் ஆதரவு சிறப்பாக இருக்கும். நவீன யுக்திகளை பயன்படுத்தி தொழிலை விரிவு படுத்த முடியும். வேலைக்கு செல்பவர்கள் சிறப்பான நிலையினை அடையும் வாய்ப்பு, பதவி உயர்வை அடையும் யோகமும் வரும் நாட்களில் உண்டு. துர்க்கையம்மனுக்கு நெய் தீபம் ஏற்றுவது நன்மை தரும்.

சனிபகவான் சதயம் நட்சத்திரத்தில்   15-03-2023 முதல் 17-06-2023 வரை

ஜென்ம ராசிக்கு 3-ல் சனி ராகு நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதும் 11-ல் கேது சஞ்சரிப்பதும் அற்புதமான அமைப்பு என்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். வரும் 22-04-2023 முதல் குரு பஞ்சம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பொன், பொருள் சேர்க்கை, சிலருக்கு வீடு, மனை போன்றவற்றினை வாங்கும் யோகம் உண்டாகும். திருமண சுப காரியங்கள் எளிதில் கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். பிள்ளைகள் வழியில் பூரிப்பு ஏற்படும். தொழிலில் பார்க்கின்ற பொழுது உங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் அளவிற்கு ஒரு பெரிய வாய்ப்பு கிடைக்கும். அரசு வழியில் எதிர்பார்த்த உத்தரவுகளை பெற முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வுகள் கிடைப்பது மட்டுமில்லாமல் கடந்த காலங்களில் நீங்கள் பட்ட கஷ்டத்துக்கு எல்லாம் தற்போது விடிவு காலம் பிறக்கப் போகிறது. வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். நவீன பொருட்களை வாங்கும் வாய்ப்பு ஏற்படும். பிரித்தியங்கரா தேவி வழிபாடு நன்மை தரும்.

சனிபகவான் வக்ர கதியில்        18-06-2023 முதல் 04-11-2023 வரை

சனி வக்ர கதியில் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படும் என்றாலும் உங்கள் ராசிக்கு 5-ல் ராசியாதிபதி குரு சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருந்து சகல விதத்திலும் அனுகூலமான பலன்களை அடைவீர்கள். ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்துக் கொள்வது, உணவு விஷயத்தில் சற்று கட்டுப்பாடோடு இருப்பது நல்லது. பங்காளியிடம் பேசுகின்ற பொழுது பொறுமையாகவும், பக்குவமாகவும் செயல்படுவது உத்தமம். தொழில், வியாபாரத்தில் எதையும் எதிர்கொண்டு அடைய வேண்டிய லாபத்தை அடைவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைப்பதுடன் உங்களுடைய திறமையை வெளிக்காட்டுவதற்கான சந்தர்ப்பங்கள் ஏற்படும். சக ஊழியர்களால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்பட்டாலும் உங்கள் பணியில் மட்டும் நீங்கள் சற்று கவனத்தோடு செயல்பட்டால் யாரும் உங்களை அசைக்க முடியாது. உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவி செய்வது, அம்மன் வழிபாடு மேற்கொள்வது நன்று.

சனிபகவான் அவிட்ட நட்சத்திரத்தில் 05-11-2023 முதல் 23-11-2023 வரை

சனி அவிட்ட நட்சத்திரத்தில் உங்கள் ராசிக்கு 3-ல் சஞ்சரிப்பதால் உங்களின் நீண்ட நாளைய கனவுகள் எல்லாம் நிறைவேறும். எடுக்கும் முயற்சியில் வெற்றி மேல் வெற்றி கிட்டும். பணவரவுகள் தாராளமாக இருந்து அனைத்து தேவைகளும் நிறைவேறுவது மட்டுமில்லாமல் அசையா சொத்துகளில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கைகூடி மகிழ்ச்சியும் பூரிப்பும் ஏற்படும். கணவன்- மனைவியிடையே அன்னோன்யம் சிறப்பாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் சந்தை சூழ்நிலை சாதகமாக இருப்பதால் நல்ல லாபத்தை அடைவது மட்டுமில்லாமல் தொழிலுக்காக நவீன கருவிகளை வாங்கக் கூடிய வாய்ப்பு ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அதிகாரிகள் ஆதரவு சிறப்பாக இருப்பதால் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். பிறருக்கு கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் காப்பாற்ற முடியும். தட்சிணாமூர்த்தி வழிபாடு மேற்கொள்வது, பாம்பு புற்றுக்கு பால் விடுவது நன்று.

சனிபகவான் சதயம் நட்சத்திரத்தில்   24-11-2023 முதல் 06-04-2024 வரை

சனி சதய நட்சத்திரத்தில் 3-ல் சஞ்சரிப்பதாலும் பஞ்சம ஸ்தானத்தில் ராசியாதிபதி குரு சஞ்சரிப்பதாலும் உங்கள் வாழ்வில் மறக்க முடியாத இனிய நிகழ்வுகள் நடக்கும். திருமண சுப காரியங்கள் எளிதில் கைகூடி மகிழ்ச்சி உண்டாகும். பங்காளிகள் வகையில் அனுகூலமான பலன்கள், பூர்வீக சொத்து வகையில் ஆதாயங்கள் கிடைக்கும். உங்களுக்கிருந்த சட்ட சிக்கல்கள் எல்லாம் தற்போது முடிவுக்கு வந்து மன நிம்மதி ஏற்படும். நீண்ட நாட்களாக மருத்துவ சிகிச்சைகள் மேற்கொண்டவர்களுக்கு தற்போது ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தொழில் ரீதியாக சமுதாயத்தில் உயர்வான நிலையினை எட்டுவீர்கள். உங்கள் எண்ணங்கள் நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் அமையும். தகுதி வாய்ந்த வேலை ஆட்கள் உங்கள் தொழிலில் இணைவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வும், விரும்பிய வாய்ப்புகளும் தேடி வரும். உங்களுக்கிருந்த நெருக்கடிகள் எல்லாம் குறைந்து மன நிம்மதியுடன் பணியாற்ற முடியும். சர்பேஸ்வரர் வழிபாடு அனுகூலத்தை தரும்.

சனிபகவான் பூரட்டாதி நட்சத்திரத்தில்         07-04-2024 முதல் 29-06-2024 வரை

சனி ராசியாதிபதி குரு நட்சத்திரத்தில் 3-ல் சஞ்சரிப்பதால் பல்வேறு வளமான பலன்களை அடைவீர்கள். எந்த முயற்சியில் ஈடுபட்டாலும் அதற்கு நல்ல ஆதரவு கிடைக்கும். தேக ஆரோக்கியம் சிறப்பாக இருந்து எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். ராகு 4-ல் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படும் என்றாலும் எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். பண பரிமாற்ற விஷயங்களில் சாதகமான பலன்கள் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் இருந்தாலும் ஆடம்பர செலவுகளை சற்று குறைத்துக் கொள்வது நல்லது. தொழிலில் போட்டிகள் இருந்தாலும் உங்களுக்கு கிடைக்க வேண்டிய லாபத்திற்கு எந்த விதத்திலும் இடையூறுகள் இருக்காது. வேலைக்கு செல்பவர்களுக்கு கௌரவமான நிலை ஏற்படுவது மட்டுமில்லாமல் சக ஊழியர்களால் இருந்த இடையூறுகள் எல்லாம் முழுமையாக விலகும். துர்க்கை அம்மனுக்கு அர்ச்சனை செய்வது, தட்சிணாமூர்த்தி வழிபாடு மேற்கொள்வது நன்று.

சனிபகவான் வக்ர கதியில்        30-06-2024 முதல் 15-11-2024 வரை

சனி வக்ர கதியில் 3-ல் சஞ்சரிப்பதால் எதிலும் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. உங்கள் ராசிக்கு 4-ல் ராகு, 6-ல் குரு சஞ்சரிப்பதால் அலைச்சல், எளிதில் முடிய வேண்டிய காரியங்கள் தாமதமாக கூடிய ஒரு நிலை, மன அமைதி குறைவு உண்டாகும். பண பரிமாற்ற விஷயத்தில் மிகவும் சிக்கனத்தோடு இருக்க வேண்டும். கொடுக்கல்- வாங்கல் மூலமாக வீண் நெருக்கடிகள் ஏற்படலாம். பிறர் விஷயத்தில் தலையிடாமல் பொறுமை கடைப்பிடிப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் ஒவ்வொரு செயலிலும் கவனத்தோடு இருந்தால் மட்டுமே அடைய வேண்டிய லாபத்தை அடைய முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு இருந்தாலும் அதற்கான ஆதாயங்கள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது, நேரத்துக்கு சாப்பிடுவது நல்லது. நெருங்கியவர்களை அனுசரித்து செல்வதன் மூலமாக வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். தட்சிணாமூர்த்தி வழிபாடு மேற்கொள்வது, சனி பகவானுக்கு அர்ச்சனை செய்வது நன்று.

சனிபகவான் சதயம் நட்சத்திரத்தில்   16-11-2024 முதல் 27-12-2024 வரை

சனி உங்கள் ராசிக்கு 3-ல் ராகு நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருந்து குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். சகல சௌபாக்கியங்களையும் அடையும் வாய்ப்பு உண்டு. தேக ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். வம்பு, வழக்குகளில் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக அமையும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைப்பதுடன் தொழில் வளர்ச்சிக்காக நீங்கள் மேற்கொள்ளக்கூடிய முயற்சிகள் வெற்றி தரும். வேலையாட்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல் மற்றவர்களால் முடிக்க முடியாத பணிகளை கூட நீங்கள் சிறப்பாக செய்து முடித்து நல்ல பெயர் எடுப்பீர்கள். அதிகாரிகள் ஆதரவு சிறப்பாக இருக்கும். வெளியூர், வெளிநாடுகளுக்கு செல்லக்கூடிய வாய்ப்பு உண்டாகும். உக்கிர தெய்வங்களை வழிபடுவது, தட்சிணாமூர்த்திக்கு தீபம் ஏற்றுவது நன்மை தரும்.

சனிபகவான் பூரட்டாதி நட்சத்திரத்தில்         28-12-2024 முதல் 29-03-2025 வரை

சனி பகவான் 3-ல் உங்கள் ராசியாதிபதி நட்சத்திரமான பூரட்டாதியில் சஞ்சரிப்பதால் வெற்றி மேல் வெற்றி அடையக்கூடிய ஒரு உன்னதமான காலமாகும். பொருளாதார நிலை சிறப்பாக இருந்து குடும்பத்துக்கு தேவையான நவீனகரமான பொருட்களை வாங்குவீர்கள். உற்றார் உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் காப்பாற்ற முடியும். தொழில் ரீதியாக நீங்கள் மேற்கொள்ளும் அனைத்துவிதமான செயல்களுக்கும் லாபகரமான பலன் கிடைக்கும். எந்தப் போட்டியும் எதிர்கொண்டு உயர்வான நிலையினை அடைவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு உங்கள் எண்ணங்கள் நிறைவேறும். புதிய வாய்ப்பு எதிர்பார்த்தவர்களுக்கு பெரிய நிறுவனத்தில் இருந்து அழைப்பு வரும். உடல்நிலை சிறப்பாக இருப்பதால் வீண் மருத்துவ செலவுகள் குறையும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொண்டால் எதையும் சமாளிக்கலாம். தட்சிணாமூர்த்தி வழிபாடு மேற்கொள்வது, அம்மன் ஸ்தலங்களுக்கு சென்று வருவது நன்று.

 

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் - 1,2,3,9         நிறம் - மஞ்சள், பச்சை            கிழமை - வியாழன், திங்கள்

கல் - புஷ்ப ராகம்    திசை - வடகிழக்கு                     தெய்வம் - தட்சிணா

 

No comments: