Sunday, January 15, 2023

மீனம் - சனி பெயர்ச்சி பலன்கள் 2023 - -2025

 



மீனம் - சனி பெயர்ச்சி பலன்கள் 2023 - -2025

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

ஆசிரியர் - பால ஜோதிடம் (வார இதழ்)

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

வடபழனி, சென்னை - 600 026 இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

மீனம் ( பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி )

நவகிரகங்களில் பொன்னவன் என போற்றப்படக்கூடிய குருவீன் ஆதிக்கத்தில் பிறந்த உங்களுக்கு ஒரு ராசியில் நீண்ட காலம் தங்கும் கிரகமான சனி பகவான் இதுநாள் வரை உங்கள் ராசிக்கு 11-ல் சஞ்சரித்தார். தற்போது ஏற்படும் சனி மாற்றத்தின் மூலம் திருக்கணிதப்படி வரும் 17-01-2023 முதல் 29-03-2025 வரை (வாக்கியப்படி 29-03-2023 முதல் 06-03-2026 வரை) விரய ஸ்தானமான 12-ல் சஞ்சாரம் செய்ய உள்ளார். சனி 12-ல் சஞ்சரிக்க இருப்பதால் உங்களுக்கு ஏழரைச்சனியில் விரையச்சனி தொடங்குவதால் நீங்கள் எதிலும் சற்று பொறுமையோடு செயல்பட வேண்டிய நேரமாகும். கடினமாக உழைத்தால் மட்டுமே அடைய வேண்டிய இலக்கை அடைய முடியும். எதிலும் எதிர்நீச்சல் போட்டால் மட்டுமே அனைத்தையும் சமாளிக்க முடியும்.

வரவுக்கு மீறிய வீண் செலவுகள் காரணமாக உங்கள் கையிருப்பு குறையும். பண விஷயத்தில் மிக மிக சிக்கனமாக இருக்க வேண்டிய நேரமாகும். அதிக முதலீடுகள் கொண்ட செயல்களை தற்காலிகமாக தள்ளி வைப்பது நல்லது. உடல் ஆரோக்கிய ரீதியாக மந்த நிலை, அலைச்சல் காரணமாக உடல் அசதி, அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாக செயல்பட இடையூறுகள் உண்டாகும். கடினமான வேலைபளு காரணமாக உங்களது ஓய்வு நேரம் குறையும். கணவன்- மனைவியிடையே விட்டுக் கொடுத்து செல்வது, நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது நல்லது.

தொழில், வியாபாரத்தில் தேவையற்ற நெருக்கடிகள் இருந்தாலும் உங்களின் தனித்திறமையால் எதையும் சமாளிக்க கூடிய ஒரு ஆற்றல் உண்டாகும். பராமரிப்பு செலவுகள் அதிகரிப்பதாலும் வேலையாட்களுடைய தொந்தரவுகள் காரணமாகவும் உங்களுக்கு லாபங்கள் குறையும். தொழிலை அபிவிருத்தி செய்யும் விஷயங்களில் கவனத்தோடு கையாள்வது நல்லது. முடிந்தவரை அதிக முதலீடுகளை தவிர்க்க வேண்டும். அப்படி அவசியம் என்றால் அதாவது முதலீடு செய்ய வேண்டிய ஒரு அவசரம் என்றால் அதனை உங்கள் பெயரில் செய்யாமல் குடும்ப உறுப்பினர்கள் பெயரில் செய்வது நல்லது. பொதுவாக பொறுப்புகளை பகிர்ந்து அளித்தால் வீண் பிரச்சினைகளில் இருந்து தப்பிக்க முடியும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்கள் பணியில் நீங்கள் கவனத்தோடு இருப்பது நல்லது. உடனிருப்பவர்கள் உறுதுணையாக இருக்க மாட்டார்கள் என்பதால் அவர்களுடைய பணியையும் சேர்த்து நீங்கள் செய்ய வேண்டிய ஒரு நெருக்கடியான நிலை ஏற்படும். உங்களுடைய பணியில் நீங்கள் கண்ணும் கருத்துமாக செயல்பட்டால் யார் என்ன செய்தாலும் உங்களை யாராலும் அசைக்க முடியாது. வெளியாட்கள் பேச்சைக் கேட்காமல் அதிகாரிகளுடைய சொல்படி நடந்து கொண்டால் நல்ல வாய்ப்புகளை பெற முடியும். உங்களுக்கு கிடைக்க வேண்டிய சன்மானங்கள் தக்க நேரத்தில் கிடைக்காவிட்டாலும் உழைப்புக்கான ஊதியத்தை கண்டிப்பாக அடைவீர்கள்.

சனி 12-ல் சஞ்சரிக்க கூடிய இக்காலத்தில் ராசியாதிபதி குரு பகவான் வரும் 22-04-2023 முதல் 01-05-2024 வரை தன ஸ்தானமான 2-ஆம் வீட்டில் வலுவாக சஞ்சரிக்க உள்ள காலத்தில் உங்களின் பொருளாதார நிலையானது மிக மிக நன்றாக இருந்து அனைத்து விதமான நெருக்கடிகளும் குறையும். மங்களகரமான சுப காரியங்கள் எளிதில் கைகூடும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி, தொழில், உத்தியோக ரீதியாக அனுகூலமான பலன்களை அடையும் வாய்ப்பு உண்டாகும். வரும் அக்டோபர் 2023 முடிய 2-ல் ராகு, 8-ல் கேது சஞ்சரிப்பதும் அதன் பிறகு ஜென்ம ராசியில் ராகு, 7-ல் கேது சஞ்சாரம் செய்ய இருப்பதும் குடும்பத்தில் ஒற்றுமை குறைவை ஏற்படுத்தக்கூடிய அமைப்பு ஆகும். பேச்சில் பொறுமையோடு இருப்பது, நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது, வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.

 

உடல் ஆரோக்கியம்

உங்களுக்கு தேவையில்லாத அலைச்சல்கள் ஏற்பட்டு உடல் அசதி, இருப்பதை அனுபவிக்க இடையூறுகள், அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாக செயல்பட முடியாத அளவுக்கு இடைஞ்சல்கள் ஏற்படும். தேவையற்ற வகையில் வீண் மருத்துவ செலவுகள் ஏற்படக்கூடிய நேரம் என்பதால் உடல் நலத்திற்கு முக்கியத்துவம் தருவது, உணவு விஷயத்தில் கட்டுப்பாடோடு இருப்பது நல்லது. முன்கோபத்தை குறைத்துக் கொண்டால் பிரச்சினைகளை சமாளிக்கலாம்.

குடும்பம் பொருளாதார நிலை

பேச்சில் பொறுமையோடு இருப்பது, உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. பண பரிமாற்ற விஷயங்களில் பண வரவுகள் நன்றாக இருந்தாலும் வீண் செலவுகளால் மன நிம்மதி குறைவு ஏற்படும். எதிர்பாராத சுபச்செலவுகள் காரணமாக உங்களுக்கு கடன்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. முடிந்தவரை ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. குடும்ப விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளாமல் இருக்கவும்.

கொடுக்கல்- வாங்கல்

பொருளாதார ரீதியாக தேவையற்ற நெருக்கடிகள் ஏற்படக்கூடிய நேரம் என்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று சிக்கனத்தோடு இருப்பது நல்லது. ஒரு விஷயத்தில் முதலீடு செய்கின்ற பொழுது ஒரு முறைக்கு பலமுறை யோசித்து செயல்பட வேண்டும். நம்பிக்கை கூறிய நபர்களே தக்க நேரத்தில் பணத்தை தராமல் தாமதப்படுத்துவார்கள். எதையும் தைரியத்தோடு எதிர்கொள்ளக்கூடிய பலம் உங்களுக்கு இருக்கும் என்றாலும் வீண் வம்பு, வழக்குகளால் மன நிம்மதி குறைவு உண்டாகும்.

தொழில் வியாபாரம்

தொழில் வியாபாரத்தில் நீங்கள் சிறப்பாக செயல்பட்டு அடைய வேண்டிய இலக்கை அடைவீர்கள் என்றாலும் பராமரிப்பு செலவுகள் அதிகரிப்பதால் உங்களுக்கு கிடைக்க வேண்டிய லாபங்கள் குறையும். எந்திரங்கள் பழுதாவதால் எதிர்பாராத வகையில் செலவுகளை எதிர்கொள்வீர்கள். அதிக முதலீடுகள் கொண்ட செயல்களில் ஈடுபடுகின்ற பொழுது சிந்தித்து செயல்படுவது, குடும்ப உறுப்பினர்கள் பெயரில் செய்வது நல்லது. கூட்டாளிகள் ஆதரவால் ஒரு சில அனுகூலங்களை அடைவீர்கள்.

உத்தியோகம்

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு திறன்பட செயல்பட்டு நல்ல பெயரை எடுக்கக் கூடிய வாய்ப்புகள் இருந்தாலும் வேலைபளு சற்று கூடுதலாக இருக்கும். ஆரோக்கிய குறைபாட்டால் பணியில் கவனம் செலுத்த முடியாத அளவுக்கு தடங்கல்கள் உண்டாகும். சில நேரங்களில் மற்றவர்கள் செய்யும் தவறுகளுக்கு நீங்கள் பொறுப்பேற்க வேண்டிய நிலை இருக்கும். புதிய வேலை தேடுபவர்கள் சிறு வாய்ப்பையும் தவற விடாமல், கிடைக்கும் வாய்ப்புகளை தக்க முறையில் பயன்படுத்தி கொள்வது நல்லது.

அரசியல்

உங்களுக்கு சமுதாயத்தில் ஒரு கௌரவமான நிலை உண்டாகக்கூடிய நேரமாகும். மக்கள் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு நீங்கள் அதிகப்படியாக செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்படும். பேச்சால் வீண் பிரச்சினைகள் ஏற்படக்கூடிய நேரம் என்பதால் எதிலும் யோசித்து செயல்படுவது, வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. அரசு அதிகாரிகளுடைய ஒத்துழைப்பானது அவ்வளவு சிறப்பாக இருக்காது. வெளியூர் பயணங்களால் வீண் செலவுகளை எதிர்கொள்வீர்கள்.

விவசாயிகள்

பயிர் விளைச்சல் சிறப்பாக இருக்கக்கூடிய அமைப்பு இருந்தாலும் அதற்கான விலை சந்தையில் கிடைக்காது. கூலி ஆட்களுடைய ஒத்துழைப்பு சரியில்லாத காரணத்தால் சில நேரங்களில் நீங்கள் நேரடியாக சில பணிகளை செய்ய வேண்டிய நெருக்கடியான நிலை உண்டாகும். நவீன கருவிகளை வாங்குவதற்காக கடன் வாங்க நேரிடும். பங்காளிகள் மற்றும் அயல் நில உரிமையாளர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம் என்பதால் கவனத்தோடு செயல்படுவது நல்லது.

பெண்கள்

பொருளாதார நிலை சிறப்பாக இருந்தாலும் எதிர்பாராத செலவுகளால் மன அமைதி குறையும். கணவன்- மனைவியிடையே பேச்சில் சற்று கவனத்தோடு இருப்பது, வயது மூத்தவர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது, நேரத்திற்கு சாப்பிடுவது உத்தமம். மங்களகரமான சுப காரியங்கள் கைகூடக்கூடிய யோகமும் அதன் மூலம் சுபச்செலவுகள் ஏற்படக்கூடிய நேரமாகும்.

கலைஞர்கள்

உங்கள் திறமைக்கேற்ற சிறப்பான வாய்ப்புகள் கிடைக்கும். உழைப்புக்கான பலனை அடைவதில் தேவையற்ற தடங்கல்கள் இருக்கும். போட்டிகள் காரணமாக உங்களுக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் தாமதப்படும். வெளியூர், வெளிநாடுகள் செல்லக்கூடிய யோகம் உண்டு. வீண் செலவுகளால் உங்கள் கையிருப்பு குறையும். சிக்கனத்தோடு இருப்பது, மற்றவர்களுக்கு வாக்குறுதி கொடுப்பதை தவிர்ப்பது நல்லது.

மாணவ மாணவியர்

படிப்பில் சிறப்பாக செயல்பட்டு நல்ல பெயர் எடுப்பீர்கள். ஒரு சிலருக்கு உடல் உபாதைகள் ஏற்படலாம் என்பதால் ஆரோக்கியத்தில் முக்கியத்துவம் தருவது, நேரத்திற்கு சாப்பிடுவது நல்லது. போட்டி தேர்வுகளில் பங்கு பெறுகின்ற பொழுது சற்று கவனத்தோடு இருக்கவும். தேவையற்ற நட்புகளை தவிர்ப்பது உத்தமம்.

 

சனிபகவான் அவிட்ட நட்சத்திரத்தில் 17-01-2023 முதல் 14-03-2023 வரை

சனி பகவான் உங்கள் ராசிக்கு 12--ல் செவ்வாய் நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் சக்திக்கு மீறிய வீண் செலவுகள் ஏற்படும். பண விஷயத்தில் சிக்கனத்தோடு இருந்தால்தான் வீண் பிரச்சினைகளை தவிர்க்க முடியும். ஜென்ம ராசியில் சஞ்சரிக்கும் குரு 5, 7, 9-ஆகிய ஸ்தானங்களை பார்ப்பதால் குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கைகூடக்கூடிய வாய்ப்பு, பிள்ளைகளால் அனுகூலங்கள், பூர்வீக சொத்து வகையில் ஒரு சில ஆதாயங்கள் கிடைக்கும். உங்கள் ராசிக்கு 2-ல் ராகு, 8-ல் கேது சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் தற்போதைக்கு கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வது உத்தமம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீங்கள் கடுமையாக உழைத்தால் தான் உங்களுடைய பணிகளை தக்க நேரத்தில் முடிக்க முடியும். உடன் வேலை செய்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. துர்க்கை அம்மன் வழிபாடு, சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றுவது நன்மையை தரும்.

சனிபகவான் சதயம் நட்சத்திரத்தில்   15-03-2023 முதல் 17-06-2023 வரை

சனி பகவான் உங்கள் ராசிக்கு 12-ல் ராகு நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல், வீண் குழப்பங்கள் ஏற்பட்டு மன நிம்மதி குறையும். தேக ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது, தூரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. 2-ல் ராகு, 8-ல் கேது சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் உண்டாகும். ஜென்ம ராசியில் சஞ்சரிக்கும் குரு வரும் 22-04-2023 முதல் 2--ம் வீட்டில் சஞ்சரிக்க உள்ளதால் பொருளாதார நிலை மிக திருப்திகரமாக இருந்து அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். மங்களகரமான சுபகாரியங்கள் கைக்கூடும். தொழில், வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இல்லாவிட்டாலும் நீங்கள் முனைப்புடன் செயல்பட்டால் போட்ட முதலீட்டை எளிதில் எடுக்க முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு அதிகாரியுடைய அழுத்தங்கள் பணியில் இருந்தாலும் நீங்கள் சிறப்பாக செயல்பட்டு நல்ல பெயர் எடுப்பீர்கள். துர்க்கை வழிபாடு மேற்கொள்வது நன்று.

சனிபகவான் வக்ர கதியில்        18-06-2023 முதல் 04-11-2023 வரை

ஜென்ம ராசிக்கு 12-ல் சனி வக்ர கதியில் சஞ்சரிப்பதாலும், 2-ல் குரு சஞ்சரிப்பதாலும் உங்களுக்குள்ள நெருக்கடிகள் எல்லாம் சற்று குறைந்து மன நிம்மதி உண்டாகும். எதிர்பாராத பண வரவுகள் ஏற்பட்டு குடும்பத்தில் இருந்த நிம்மதியற்ற நிலை விலகி மகிழ்ச்சி, பூரிப்பு ஏற்படும். பிறருக்கு கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றுவீர்கள். நவீனகரமான பொருட்களை வாங்கக் கூடிய யோகம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் உங்கள் பொருட்களுக்கு நல்ல விலை கிடைத்து தொழிலுக்காக செய்த முதலீடுகளை எடுக்க முடியும். வேலையாட்கள் வைத்த கோரிக்கைகளை நிறைவேற்ற முடியும். உத்தியோக ரீதியாக பணி சுமை குறைந்து பணியில் நிம்மதியுடன் செயல்படுவது மட்டுமில்லாமல் பதவி உயர்வுகள் கிடைக்கும். ராகு 2-ல் சஞ்சரிப்பதால் பேச்சில் மட்டும் சற்று பொறுமையோடு இருப்பது நல்லது. துர்க்கையம்மன் வழிபாடு நன்று.

சனிபகவான் அவிட்ட நட்சத்திரத்தில் 05-11-2023 முதல் 23-11-2023 வரை

சனி பகவான் அவிட்ட நட்சத்திரத்தில் 12----ல் சஞ்சரிப்பதால் எதிலும் சிக்கனத்தோடு செயல்பட்டால் அன்றாட பணிகளில் நிம்மதியுடன் செயல்பட முடியும். ஜென்ம ராசியில் ராகு, 7-ல் கேது சஞ்சரிப்பதால் முன்கோபத்தை குறைத்துக் கொண்டு நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கணவன்- மனைவியிடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். உங்கள் ராசிக்கு 2-ல் சஞ்சரிக்கும் குரு இக்காலத்தில் வக்ர கதியில் இருப்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று கவனத்தோடு செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் உங்கள் உழைப்புக்கான பலன்கள் கிடைக்கும். சிலர் செய்யும் செயல்களால் வீண் விரயங்களை எதிர்கொள்வீர்கள். தொழில் முன்னேற்றத்திற்காக கடன் வாங்க நேரிடும். வேலைக்கு செல்பவர்களுக்கு உங்கள் திறமைகளை வெளிக்காட்ட நல்ல சந்தர்ப்பங்கள் கிடைக்கும். அதிகாரிகள் ஆதரவு சிறப்பாக இருப்பதால் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். பிரித்தியங்கரா தேவி வழிபாடு, ஆஞ்சநேயர் வழிபாடு நன்று.

சனிபகவான் சதயம் நட்சத்திரத்தில் 24-11-2023 முதல் 06-04-2024 வரை

சனி சதய நட்சத்திரத்தில் 12--ல் சஞ்சரிப்பதாலும் ஜென்ம ராசியில் ராகு சஞ்சரிப்பதாலும் எதிலும் சற்று பொறுமையோடு செயல்படுவது, உடல் நலத்தில் கவனம் செலுத்துவது மிகவும் நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்க முடியும். குரு 2-ல் சஞ்சரிப்பதால் பணவரவுகள் மிக மிக நன்றாக இருந்து அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். கொடுக்கல்- வாங்கல் ரீதியாக நல்ல லாபத்தை அடைவீர்கள். அசையா சொத்துகளில் முதலீடு செய்யக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபங்கள் கிடைத்து நீங்கள் வாங்கிய கடன்களைப் பைசல் செய்ய முடியும். கூட்டாளிகள் ஆதரவு சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல் பதவி உயர்வுகளை அடையக்கூடிய அனுகூலங்களும், சிலருக்கு விரும்பிய இடம் மாற்றங்கள் கிடைக்கக்கூடிய வாய்ப்புகளும் ஏற்படும். வெங்கடேச பெருமாள் வழிபாடு மேற்கொள்வது, துர்க்கைக்கு தீபம் ஏற்றுவது நன்று.

சனிபகவான் பூரட்டாதி நட்சத்திரத்தில் 07-04-2024 முதல் 29-06-2024 வரை

சனி ராசியாதிபதி நட்சத்திரமான பூரட்டாதியில் சஞ்சரிப்பதால் நீங்கள் சற்று பொறுமையோடு செயல்பட்டால் ஒரு சில அனுகூலங்களை அடைய முடியும். குறித்த நேரத்தில் சாப்பிடுவதன் மூலம் ஏற்படும் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை சமாளிக்கலாம். ஜென்ம ராசியில் ராகு சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே ஒருவரையொருவர் புரிந்து கொண்டு நடந்து கொள்வது நல்லது. உங்கள் ராசிக்கு 01-05-2024 வரை குரு 2-ல் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சற்று சாதகமாக இருந்து உங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியும். தொழில், வியாபாரத்தில் ஒவ்வொரு செயலிலும் நீங்கள் நேரடியாக செயல்பட்டால் வீண் செலவுகளை குறைத்துக் கொண்டு போட்ட முதலீட்டை எடுக்க முடியும். வேலையாட்களையும், கூட்டாளிகளையும் அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்கள் உங்கள் பணியில் மட்டும் கவனத்தோடு செயல்பட்டால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். பைரவர் வழிபாடு மேற்கொள்வது நன்று.

சனிபகவான் வக்ர கதியில்        30-06-2024 முதல் 15-11-2024 வரை

சனி பகவான் வக்ர கதியில் சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைத்து அனுகூல பலன்களை அடைய முடியும். ஜென்ம ராசியில் ராகு, 3-ல் குரு சஞ்சரிப்பதால் முன்கோபத்தை குறைத்துக் கொள்வது, கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் மிகவும் சிக்கனத்தோடு செயல்படுவது நல்லது. குரு பார்வை 7-ஆம் இடத்திற்கு இருப்பதால் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சினைகள் பெரிதாகாமல் சுமூகமாக முடியும். தொழில், வியாபாரத்தில் ஒவ்வொரு செயலிலும் கவனத்தோடு செயல்பட்டால் தான் வீண் இழப்புகளை தவிர்த்து விட்டு நல்ல லாபத்தை அடைய முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் என்றாலும் உடன் வேலை செய்பவர்களுடைய வேலையையும் நீங்கள் சேர்த்து செய்ய வேண்டிய நெருக்கடியான நிலை உண்டாகும். பணி நிமித்தமாக தேவையற்ற பயணங்களை எதிர்கொள்ள நேரிடும். தட்சிணாமூர்த்தி வழிபாடு மேற்கொள்வது, சனிக்கு எள் தீபம் ஏற்றுவது நன்று.

சனிபகவான் சதயம் நட்சத்திரத்தில்   16-11-2024 முதல் 27-12-2024 வரை

சனி உங்கள் ராசிக்கு 12-ல் சதய நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் எதிலும் எதிர்நீச்சல் போட வேண்டிய நேரமாகும். ஜென்ம ராசியில் ராகு சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. குரு பகவான் வக்ர கதியில் சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைத்து உங்களது தேவைகள் பூர்த்தியாகும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது, பிறர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது உத்தமம். தொழில், வியாபாரத்தில் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வதும், அதிக முதலீடு கொண்ட செயல்களை தவிர்ப்பதும் நல்லது. தொழிலாளிகளையும், கூட்டாளிகளையும் அனுசரித்து சென்றால் பெரிய பிரச்சினைகளை கூட எளிதில் சமாளிக்க முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு இருந்தாலும் உங்கள் பணியில் மட்டும் கவனத்தோடு இருந்தால் அனுகூலமான பலன்களை அடைய முடியும். அதிகாரியிடம் வீண் வாக்குவாதங்கள் செய்யாமல் இருப்பது நன்று. துர்க்கை வழிபாடு மேற்கொள்வது உத்தமம்.

சனிபகவான் பூரட்டாதி நட்சத்திரத்தில்         28-12-2024 முதல் 29-03-2025 வரை

சனி குரு நட்சத்திரத்தில் 12-ல் சஞ்சரிப்பதாலும், ஜென்ம ராசியில் ராகு சஞ்சரிப்பதாலும் நீங்கள் எதிலும் சற்று பொறுமையோடு செயல்படுவது நல்லது. உடல் நலத்தில் கவனம் செலுத்துவது, நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது உத்தமம். எடுக்கும் முயற்சிகளில் தேவையற்ற இடையூறுகளை சந்தித்தாலும் உங்களின் திறமையால் எதையும் சமாளிப்பீர்கள். தொழில் வியாபார ரீதியாக அதிக முதலீடுகள் கொண்ட செயல்களில் சற்று பொறுமையோடு இருப்பது நல்லது. வேலையாட்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் கடினமான பணிகளை கூட சிறப்பாக செய்து முடிப்பீர்கள். வேலைக்கு செல்பவர்கள் பிறர் சொல்வதைக் கேட்டுக் கொண்டு அதிகாரியிடம் வாக்குவாதங்கள் செய்யாமல் நிதானத்தோடு செயல்படுவது நல்லது. உங்கள் பணியில் மட்டும் கவனத்தோடு செயல்பட்டால் விரைவில் ஒரு நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். இரவு நேரங்களில் பயணங்கள் மேற்கொள்வதை தவிர்ப்பது நல்லது. ஆஞ்சநேயர் வழிபாடு, விநாயகர் வழிபாடு மேற்கொள்வது உத்தமம்.

 

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் - 1,2,3,9              கிழமை - வியாழன், ஞாயிறு   திசை - வடகிழக்கு

கல் - புஷ்பராகம்     நிறம் - மஞ்சள், சிவப்பு       தெய்வம் -  தட்சிணாமூர்த்தி

No comments: