Tuesday, August 29, 2017

குருப்பெயர்ச்சிப் பலன்கள் 2017 2018 மீனம்

குருப்பெயர்ச்சிப் பலன்கள் 2017 2018 மீனம்  


கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர் -  இந்த வார ஜோதிடம் ( மாத  இதழ் )
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடுஇந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,





குருப்பெயர்ச்சிப் பலன்கள் 2017 2018 மீனம்

மீனம்  

பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி 



எப்பொழுதும் கலகலப்பாகப்பேசி மற்றவர்களைக் கவரக்கூடிய ஆற்றல் கொண்ட மீன ராசி நேயர்களே! பொன்னவன் எனப்போற்றப்படக்கூடிய உங்கள் ராசியாதிபதி குரு பகவான் வாக்கியப்படி 2 -9-2017 முதல் 4-10-2018 வரை அஷ்டம ஸ்தானமான 8-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய உள்ளார். இது சாதமற்ற அமைப்பு என்பதால் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள், எடுக்கும் முயற்சிகளில் தடை தாமதங்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். வயிறு சம்பந்தப்பட்ட பாதிப்புகளால் மருத்துவச் செலவுகளை எதிர்கொள்ள நேரிடும். கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். முன்கோபத்தைக் குறைத்துக்கொண்டு பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. உற்றார்-உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் ஓரளவுக்கு சாதகமான பலனைப் பெறுவீர்கள். முடிந்தவரை பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்ப்பது நல்லது. 5-ல் ராகு சஞ்சாரம் செய்வதால் புத்திரவழியில் வீணான பிரச்சினைகளைச் சந்திப்பீர்கள். பூர்வீக சொத்துவகையிலும் வீண்விரயங்கள் ஏற்படும். சுபகாரிய பேச்சு வார்த்தைகளில் தாமதமான நிலையே நிலவும். நல்லவரன்கள் கிடைப்பதில் தடை ஏற்படும். வாக்கியப்படி 19-12-2017 முதல் சனி பகவான் ஜீவன ஸ்தானமான 10-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கும் மறைமுக எதிர்ப்புகளும் போட்டிகளும் அதிகரிப்பதால் வரவேண்டிய வாய்ப்புகள் கைநழுவிப் போகும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடையவற்றாலும் அலைச்சல்கள் அதிகரிக்கும். கூட்டாளிகளின் ஒற்றுமையற்ற செயல்பாடு களால் அபிவிருத்தி குறைவதோடு பொருட்தேக்கமும் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கும் பணியில் நிம்மதியற்ற நிலையே தொடரும். எதிர்பாராத இடமாற்றங்கள் ஏற்படுவதால் குடும்பத்தைவிட்டுப் பிரியக்கூடிய சூழ்நிலைகள் ஏற்படும். உயரதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரிக்கும். வேலைச் சுமையால் உடல்நிலை சோர்வடைந்து அடிக்கடி விடுப்பு எடுக்க நேரிடும். அரசியல்வாதிகள் தங்கள் பதவிகளை தக்கவைத்துக் கொள்ள அதிக சிரமங்களை எதிர்கொள்ள நேரிடும். நல்லதாக நினைத்துப் பேசும் வார்த்தைகளால் பத்திரிகையாளர்களின் அதிருப்திக்கு ஆளாவீர்கள். கலைஞர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த கதாபாத்திரங்களுக்கான வாய்ப்புகளை கண்ணெதிரேயே பிறர் தட்டிச்செல்வதால் மனநிம்மதி குறையும். மாணவர்கள் முயன்று படித்தால் மட்டுமே எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெறமுடியும். கேது 11-ல் சஞ்சரிப்பதால் ஓரளவுக்கு எதையும் எதிர்கொள்ளும் வலிமையைப் பெறுவீர்கள். குரு உங்கள் ராசியாதிபதி என்பதால் பெரிய கெடுதல்களைச் செய்யமாட்டார்.

உடல் ஆரோக்கியம்
உங்கள் ஆரோக்கியம் அடிக்கடி பாதிப்படையும். உடல் சோர்வு, மந்தநிலை ஏற்படும். குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகள் உண்டாவதால் மனஅமைதி குறையும். நம்பியவர்களே துரோகம் செய்வதால் உங்கள் பலமும், வலிமையும் குறையும். மனைவிக்கும் ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். தேவையற்ற பயணங்களாலும் அலைச்சல், டென்ஷன், வீண்விரயங்கள் உண்டாகும். பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்த்ததால் மனஉளைச்சலைத் தவிர்க்கலாம். 

குடும்பம், பொருளாதாரநிலை 
குடும்பத்தில் ஒற்றுமை குறையக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். கணவன்-மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். உற்றார்-உறவினர்களின் வருகையால் வீண் பிரச்சினைகளும், கருத்து வேறுபாடுகளும் அதிகரிக்கும். பணவரவுகளில் தடைகள் நிலவுவதால் குடும்பத்தேவைகளைப் பூர்த்தி செய்யவே கடன் வாங்க நேரிடும். திருமண சுபகாரிய பேச்சுவார்த்தைகளில் தடைகள் நிலவும். புத்திரவழியில் மனசஞ்சலங்கள் ஏற்படும். வண்டி வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படும்.  

கொடுக்கல்- வாங்கல்
கமிஷன் ஏஜென்ஸி, கான்டிராக்ட் போன்றவற்றில் வீண் விரயங்கள் ஏற்படும். எதிர்பார்க்கும் லாபங்கள் தடைப்படும். பணம் கொடுக்கல்-வாங்கல் விஷயங்களிலும் பிறருக்கு வாக்குறுதி கொடுப்பது, முன்ஜாமீன் கொடுப்பது போன்றவற்றைத் தவிர்க்கவும். பெரிய தொகையை ஈடுபடுத்தி நீங்கள் செய்யும் எந்தவொரு காரியத்திலும் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.

தொழில், வியாபாரம் 
தொழில், வியாபாரம் செய்பவர்கள் தேவையற்ற இடையூறுகளையும், சங்கடங்களையும் சந்திக்க நேரிடும். புதிய முயற்சிகளில் எந்தவொரு காரியங்களில் ஈடுபடும்போது மிகவும் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. அரசுவழியில் தேவையற்ற சங்கடங்களைச் சந்திப்பீர்கள். எதிர்பார்த்த கடனுதவிகள் தாமதப்படுவதால் அபிவிருத்தி குறையக்கூடும். தொழிலாளர்களும் அனுகூலமாக அமையமாட்டார்கள். கூட்டாளிகளாலும் வீண் பிரச்சினைகள் ஏற்படும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடையவற்றாலும் வீண் விரயங்களை எதிர்கொள்ள நேரிடும். எதிலும் ஒருமுறைக்குப் பலமுறை சிந்தித்துச் செயல்படுவது நல்லது.

உத்தியோகம் 
உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகரிப்பதால் உடல்நிலை சோர்வடையும். எவ்வளவுதான் பாடுபட்டாலும் மேலதிகாரிகளிடம் நல்லபெயரை எடுக்க முடியாது. எதிர்பார்க்கும் பதவி உயர்வுகளும், ஊதிய உயர்வுகளும் தாமதப்படும். நிலுவைத் தொகைகள் கைக்குக் கிடைக்காமல் இழுபறி நிலையில் இருக்கும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் ஏற்பட்டு குடும்பத்தைவிட்டுப் பிரிந்துசெல்லக்கூடிய சூழ்நிலைகளும் உண்டாகும்.

பெண்கள் 
குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படும். பிறந்த வீட்டிலும், புகுந்த வீட்டிலும் நிம்மதியற்ற நிலை ஏற்படும். எடுக்கும் காரியங்களிலும் தடைகள் உண்டாகும். கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். தாய்வழியில் எதிர்பார்த்த உதவிகள் தாமதப்படும். புத்திரவழியில் வீண் செலவுகளும், மனசஞ்சலங்களும் உண்டாகும். உடல்நிலையில் உஷ்ணம் சம்பந்தப்பட்ட பாதிப்புகள், மாதவிடாய்க் கோளாறுகள், வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் தோன்றும். பணிபுரியும் பெண்களுக்கு வேலைப்பளு அதிகரிப்பதால் உடல்நிலை சோர்வடையும். 

அரசியல் 
அரசியல்வாதிகள் மக்களின் தேவைகளை அறிந்து பூர்த்தி செய்தால் மட்டுமே மக்களின் ஆதரவைப் பெறுவீர்கள். பேச்சில் சற்று நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் தடைகள் நிலவும் என்பதாலும் எதையும் முழுமையாக முடிக்க முடியாத சூழ்நிலைகளும் உண்டாகும். 

விவசாயிகள்
விளைச்சல் சுமாராக இருக்கும். உழைப்பிற்கான பலனைப் பெறுவதில் இடையூறுகள் உண்டாகும். அரசுவழியில் எதிர்பார்க்கும் மானிய உதவிகள் தாமதப்படும். சந்தையிலும் விளைபொருளுக்கேற்ற விலை கிடைக்காது. பொருளாதாரரீதியாக நெருக்கடிகள் உண்டாகக்கூடிய காலம் என்பதால் தேவையற்ற செலவுகளைக் குறைக்கவும்.

கலைஞர்கள் 
கலைஞர்கள் கையிலிருக்கும் வாய்ப்புக்களை நழுவவிடாமல் பார்த்துக்கொள்வது நல்லது. தொழிலில் போட்டி பொறாமைகள் அதிகரிக்கும். வரவேண்டிய சம்பள பாக்கிகள் கிடைக்காமல் இழுபறி நிலையில் இருக்கும். பொருளாதாரநிலையிலும் தடைகள் உண்டாகும். தேவையற்ற இடமாற்றங்களால் உடல்நிலை பாதிப்படையும். சேமிப்புக் குறையும்.

மாணவ-மாணவியர்
மாணவர்கள் எவ்வளவு முயன்று படித்தாலும் அதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ள முடியாதபடி மனம் அலைபாயும். மதிப்பெண்கள் குறைவதால் பெற்றோர், ஆசிரியர்களின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும். எதிர்பார்க்கும் உதவிகள் கிடைப்பதிலும் தடைகள் உண்டாகும். தேவையற்ற நண்பர்களால் வீண் பிரச்சினைகளை சந்திப்பீர்கள். 

குரு பகவான் சித்திரை நட்சத்திரத்தில் 2-9-2017 முதல் 5-10-2017 வரை
ராசியாதிபதி குரு பகவான் தன, பாக்கியாதிபதியான செவ்வாயின் நட்சத்திரத்தில் அஷ்டம ஸ்தானமான 8-ஆம் வீட்டில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் நன்மை, தீமை கலந்த பலன்களையே அடைவீர்கள். உடல்நிலையில் சற்று சோர்வு, அசதி ஏற்பட்டாலும் எடுக்கும் காரியங்களை சுறுசுறுப்பாகச் செய்து முடித்துவிட முடியும். குடும்பத் திலிருந்த மருத்துவச்செலவுகள் படிப்படியாகக் குறையும். அடிக்கடி வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள் என்றாலும் அதன்மூலம் சாதகமான பலன்களையும் அடையமுடியும். திருமண சுபகாரிய முயற்சிகளில் தடைகளுக்குப்பின்பே வெற்றி கிட்டும். அசையா சொத்துகளால் வீண் விரயங்கள் ஏற்படும். கொடுக்கல்-வாங்கலில் சரளநிலை இருந்தாலும் பெரிய தொகை ஈடுபடுத்துவதைத் தவிர்ப்பது உத்தமம். சனி பாக்கிய ஸ்தானமான 9-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் உத்தியோகஸ்தர்களுக்குப் பணியில் திருப்தியான நிலையே நிலவும். சில நேரங்களில் வேலைப்பளு அதிகரித்தாலும் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்புக்கள் கிடைக்கப்பெறுவீர்கள். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு ஓரளவுக்கு சாதகமான பலன்கள் கிட்டும். கூட்டாளிகளும் உதவிகரமாக இருப்பார்கள். குருப்ரீதியாக ஆஞ்சநேயரை வழிபடுவது உத்தமம்.

குரு பகவான் சுவாதி நட்சத்திரத்தில் 6-10-2017 முதல் 7-12-2017 வரை
குரு பகவான் சுவாதி நட்சத்திரத்தில் அஷ்டம ஸ்தானமான 8-ஆம் வீட்டில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் உடல் ஆரோக்கியம் சுமாராக இருக்கும். வயிறு சம்பந்தப்பட்ட பாதிப்பு, செரிமானக்கோளாறுகள் உண்டாகும். பணவரவுகளும் அளவுக்கதிகமாக எதிர்பார்க்க முடியாது. செலவுகள் கட்டுக்கிடங்கி இருப்பதால் எதையும் சமாளிக்கக்கூடிய ஆற்றல் உண்டாகும். கணவன்-மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உற்றார்- உறவினர்களிடம் விட்டுக்கொடுத்து நடப்பதே நல்லது.  சுபகாரிய முயற்சிகளில் சில தடைகளுக்குப்பின் வெற்றி கிட்டும். பணவிஷயத்தில் பிறரை நம்பி வாக்குறுதி கொடுப்பதைத் தவிர்க்கவும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்திச் செய்ய நினைக்கும் காரியங்களில் கவனம் தேவை. எந்தவொரு புதிய முயற்சியிலும் எதிர்நீச்சல்போட்டே முன்னேற வேண்டியிருக்கும். உத்தியோகஸ் தர்களுக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் அலைச்சலை ஏற்படுத்தினாலும் கௌரவமான பதவிகள் கிடைக்கும். அரசியல்வாதிகள் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றினால் மட்டுமே மக்களின் ஆதரவைப் பெறமுடியும். சனிக்குரிய பரிகாரங்களைச் செய்வது உத்தமம்.

குரு பகவான் விசாக நட்சத்திரத்தில் 8-12-2017 முதல் 13-2-2018 வரை
ராசியாதிபதி குரு பகவான் தன் சொந்த நட்சத்திரத்தில் சஞ்சரித்தாலும் அஷ்டம ஸ்தானமான 8-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் இக்காலங்களில் உடல்நிலையில் உஷ்ணம் சம்பந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகி மருத்துவச்செலவுகளை எதிர்கொள்ள நேரிடும். உடல் பாதிப்புகள் மட்டுமின்றி அலைச்சல், டென்ஷன் ஏற்பட்டு மனஅமைதியும் குறையும். பொருளாதாரநிலையிலும் தடைகள் ஏற்படுவதால் குடும்பத்தேவை களைப் பூர்த்தி செய்ய திண்டாட வேண்டியிருக்கும். பணப் பற்றாக்குறை யினால் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலைகளும் உண்டாகும். சனி பகவான் வாக்கியப்படி 19-12-2017 முதல் ஜீவன ஸ்தானமான 10-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால்  தொழில், வியாபாரத்திலும் மந்தநிலை ஏற்பட்டு பொருள் தேக்கமடையும். கூட்டுத்தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளால் வீண்பிரச்சினைகளைச் சந்திக்க நேரிடும். நண்பர்களே விரோதிகளாக மாறுவார்கள். எந்தவொரு புதிய முயற்சிகளில் ஈடுபடும்போதும் ஒருமுறைக்குப் பல முறை சிந்தித்துச் செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் ஏற்பட்டு குடும்பத்தைவிட்டுப் பிரியநேரிடும். மாணவர்கள் நல்ல நட்புகளாக தேர்ந்தெடுத்துப் பழகுவது, கல்வியில் கவனம் செலுத்துவது உத்தமம். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது உத்தமம்.

குரு பகவான் அதிசாரமாக விருச்சிக ராசியில் 14-2-2018 முதல் 6-3-2018 வரை
குரு பகவான் அதிசாரமாக ஜென்ம ராசிக்கு 9-ல் விருச்சிக ராசியில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் பிரமாதமான அனுகூலங்களை அடைவீர்கள். கடந்தகால பிரச்சினைகள் குறையும். பொருளாதாரநிலை மிகச்சிறப்பாக அமைந்து தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் அதிகரிக்கும். தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடும். கடன்கள் குறையும். உடல்நிலை சிறப்பாக இருக்கும். வெளிவட்டாரத் தொடர்புகளால் உங்களின் பெயர், புகழ், அதிகரிக்கும். வீடு, மனை, வண்டி, வாகனங்கள் வாங்கக்கூடிய யோகம் உண்டாகும். கணவன்-மனைவியிடையே ஒற்றுமை சுமாராக இருக்கும். நினைத்த காரியத்தை நிறைவேற்றுவீர்கள். உற்றார்-உறவினர்கள் மற்றும் நண்பர்களின் ஆதரவுகள் மிகச்சிறப்பாக இருக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு ஆர்டர்கள் குவியும். மறைமுக எதிர்ப்புகள் விலகி முன்னேற்றமானநிலை ஏற்படும். அரசியலில் செல்வம், செல்வாக்கு அதிகரிக்கும். மாண்புமிகு பதவிகளும் தேடிவரும். உங்களின் வார்த்தைகளுக்கு மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றமுடியும். மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப்பெண்களைப் பெற்று பள்ளி, கல்லூரிகளுக்குப் பெருமை சேர்ப்பார்கள். தினமும் விநாயகரை வழிபாடு செய்வது நல்லது.

குரு பகவான் வக்ரகதியில் 7-3-2018 முதல் 3-7-2018 வரை
ராசியாதிபதி குரு பகவான் வக்ரகதியில் சஞ்சரிப்பதால் உடல் நிலையில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் எடுக்கும் காரியங்களைச் சிறப்புடன் செய்து முடிக்க முடியும். கணவன்-மனைவியிடையே அடிக்கடி கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. பணவரவுகளில் சுமாரான நிலை உண்டாகும். கடன்கள் படிப்படியாகக் குறையும். கொடுக்கல்-வாங்கல் ஓரளவுக்கு திருப்தியளிக்கும் என்றாலும் பெரிய தொகை ஈடுபடுத்துவதைத் தவிர்க்கவும். தொழில், வியாபாரம் சிறப்பாக நடைபெற்றாலும் கடன்களால் நெருக்கடிகள் அதிகரிக்கும். கூட்டுத்தொழிலில் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. புதிய வேலை தேடுபவர்கள் சில தடைகளைச் சந்திக்க நேர்ந்தாலும் சுமாரான வேலை வாய்ப்பினைப் பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்கள் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் பணியில் திருப்தியான நிலையினை அடையமுடியும். அரசியல்வாதிகள் மேடைப்பேச்சுகளில் சற்று நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. மாணவர்கள் எதிர்நீச்சல் போட்டாவது இலக்கினை அடைந்துவிடமுடியும். பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். தேவையற்ற பொழுதுபோக்குகளைத் தவிர்ப்பது உத்தமம். சனிப்ரீதியாக ஆஞ்சநேயரை வழிபடுவது நல்லது.

குரு பகவான் விசாக நட்சத்திரத்தில் 4-7-2018 முதல் 4-10-2018 வரை
குரு பகவான் சுவாதி நட்சத்திரத்தில் அஷ்டம ஸ்தானமான 8-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் தேவையற்ற சோதனைகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். ஜலத் தொடர்புடைய பாதிப்புக்களால் மருத்துவச்செலவுகள் உண்டாகும். குடும்பத்திலும் நிம்மதியற்ற நிலையே நிலவும். நீங்களே நல்லதாக நினைத்துச் செய்யும் காரியங்களும் உங்களுக்கே வீண்பிரச்சினைகளை உண்டாக்கும். நம்பியவர்களே துரோகம் செய்வதால் உடல்நிலையும், மனநிலையும் பாதிப்படையும். உத்தியோக ரீதியாக எதிர்பார்க்கும் உயர்வுகள் தாமதப்படும். உயரதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரிப்பதால் பிறர்செய்ய வேண்டிய பணிகளையும் நீங்களே செய்ய வேண்டியிருக்கும். பணவிவகாரங்களில் பிறரைநம்பி வாக்குறுதி கொடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. மாணவர்கள் கல்வியில் முழுஈடுபாட்டுடன் செயல்பட்டால் மட்டுமே மேன்மையை அடையமுடியும். தேவையற்ற நண்பர்களின் சேர்க்கை வீண்பிரச்சினை களை ஏற்படுத்தும் என்பதால் எதிலும் கவனம் தேவை. கலைஞர்கள் கையிலிருக்கும் வாய்ப்புகளை நழுவவிடாமல் காப்பாற்றிக்கொள்வது மிகவும் நல்லது. அசையும், அசையா சொத்துகள் வாங்கும் முயற்சிகளில் வீண்விரயங்களை சந்திப்பீர்கள். மாணவர்கள் கல்வியில் சற்று முழுமுயற்சியுடன் செயல்பட்டால் நற்பெயர் அடையமுடியும். வியாழக்கிழமை தோறும் தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது. 

பரிகாரம்
மீன ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு குரு பகவான் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் வியாழக்கிழமைதோறும் தட்சிணாமூர்த்தியை வழிபடவும். ராகு 5-ல் சஞ்சரிப்பதால் சர்ப்ப சாந்தி செய்வது நல்லது. துர்க்கையம்மனை வழிபடுவது உத்தமம். சனி 10-ல் சஞ்சரிப்பதால் சனிப்ரீதியாக ஆஞ்சனேயரை வழிபடுவது நல்லது.

அதிர்ஷ்டம் அளிப்பவை
எண்: 1,2,3,9.
கிழமை: வியாழன், ஞாயிறு.
திசை: வடகிழக்கு.
கல்: புஷ்ப ராகம்.
நிறம்: மஞ்சள், சிவப்பு     .
தெய்வம்:  தட்சிணாமூர்த்தி.

குருப்பெயர்ச்சிப் பலன்கள் 2017 2018 கும்பம்

குருப்பெயர்ச்சிப் பலன்கள் 2017 2018 கும்பம்  


கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர் -  இந்த வார ஜோதிடம் ( மாத  இதழ் )
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடுஇந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,




குருப்பெயர்ச்சிப் பலன்கள் 2017 2018 கும்பம்

கும்பம்  

அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்



உயர்ந்த பண்பும், நிறைந்த பொறுமையும், எல்லாரிடத்திலும் அன்பாகப் பழகக்கூடிய தன்மையும் கொண்ட கும்ப ராசி நேயர்களே! உங்கள் ஜென்ம ராசிக்கு 2, 11-க்கு அதிபதியான பொன்னவன் எனப்போற்றப்படக்கூடிய குரு பகவான்  வாக்கியப்படி 2-9-2017 முதல் 4-10-2018 வரை பாக்கிய ஸ்தானமான 9-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய உள்ளார். இது அற்புதமான அமைப்பாகும். இதனால் செல்வம், செல்வாக்கு உயரும். நினைத்த காரியங்கள் நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் நிறைந்திருக்கும். திருமணவயதை அடைந்தவர்களுக்கு நல்லவரன்கள் தேடிவரும். சிலருக்கு நினைத்தவரையே கைப்பிடிக்கும் யோகம் உண்டாகும். திருமண சுபகாரியங்கள் தடபுடலாக நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சிதரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். கொடுக்கல்-வாங்கல் சரளமான நிலையில் நடைபெறும். பணம் பலவழிகளில் தேடிவந்து பாக்கெட்டை நிரப்புவதால் பொன், பொருள், ஆடை, ஆபரணச் சேர்க்கைகளும் சிறப்பாக அமையும். வாக்கியப்படி 19-12-2017 முதல் ராசியாதிபதி சனிபகவான் 11-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் தொட்டதெல்லாம் துலங்கும். இதுமட்டுமின்றி ராகுவும் 6-ல் இருப்பது மேன்மேலும் உங்களுக்கு முன்னேற்றத்தை ஏற்படுத்தும். மறைமுக எதிர்ப்புகள் விலகும். உங்களின் பலமும், வலிமையும் கூடும். புத்திரவழியில் பூரிப்பும் மகிழ்ச்சியும் உண்டாகும். சொந்த வீடு, வாகனம் போன்றவற்றை வாங்கிச் சேர்ப்பீர்கள். பூர்வீக சொத்து விஷயங்களில் இருந்த வம்பு வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு இருந்து வந்த போட்டி பொறாமைகள் யாவும் விலகி புதிய வாய்ப்புகள் தேடிவரும். பல ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்திச்செய்ய நினைக்கும் புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றிபெறும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடைய வற்றாலும் லாபங்களைப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தடைப்பட்ட உயர்வுகளைப் பெற்று மகிழ்ச்சி அடைவார்கள். திறமைக் கேற்ற பாராட்டுதல்களால் மனநிம்மதி உண்டாகும். புதிய வேலை தேடுபவர்கள் தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு கிடைக்கப் பெறுவார்கள். அரசியல்வாதிகளின் நோக்கங்கள் யாவும் நிறைவேறும். உங்களின் பேச்சிற்கு மதிப்பும் மரியாதையும் உயரும். மக்களின் ஆதரவுகள் உற்சாகத்தை ஏற்படுத்தும். கலைஞர்களுக்கு திறமைக்கு தீனிபோட்டதுபோல் வாய்ப்புகள் அமையும். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்படுவார்கள். இந்த குருப்பெயர்ச்சி உங்களுக்கு வெற்றிமேல் வெற்றியினை ஏற்படுத்தும் என்று சொன்னால் அது மிகையாகாது. கடன்கள் அனைத்தும் பைசலாகும். கொடுத்த கடன்களும் திருப்திகரமாக வசூலாகும்.

உடல் ஆரோக்கியம்
உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். பலமும் வலிமையும்கூடி மகிழ்ச்சியை ஏற்படுத்தும். சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய பாதிப்புகள் இல்லாமல் உடனே சரியாகிவிடும். குடும்பத்தில் உள்ளவர்களும் சுபிட்சமாக இருப்பதால் மருத்துவச்செலவுகள் குறையும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் அதன்மூலம் அனுகூலப்பலன்களும் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிதரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். நீங்கள் நினைத்த காரியங்கள் நினைத்தபடி நிறைவேறும். உணவு விஷயத்தில் சற்று கவனமுடன் இருப்பது நல்லது. 

குடும்பம், பொருளாதார நிலை
குடும்ப வாழ்வில் குதூகலமும், பூரிப்பும் உண்டாகும். கணவன்-மனைவியிடையே அன்யோன்யமான உறவு இருக்கும். புத்திரர்களால் மகிழ்ச்சிதரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். தாராள தனவரவுகளால் இதுவரை தடைப்பட்ட காரியங்கள் அனைத்தும் சிறப்பாக நிறைவேறும். திருமண சுபகாரிய பேச்சு வார்த்தைகளில் சாதகமான பலனைப் பெறுவீர்கள். உடன்பிறப்புகள் தக்கசமயத்தில் உதவுவார்கள். வீடு, மனை, வண்டி, வாகன யோகங்கள் அமையும். உற்றார்-உறவினர்கள் பிரச்சினைகளை மறந்து ஒற்றுமை பாராட்டுவார்கள்.

கொடுக்கல்-வாங்கல்
கமிஷன் ஏஜென்சி, கான்டிராக்ட் போன்ற துறைகளில் நல்ல லாபம் அமைந்து பொருளாதாரநிலை உயரும். கொடுத்த வாக்குறுதிகளை சரியான நேரத்தில் காப்பாற்ற முடியும். பெரிய தொகைகளைக்கூட எளிதாக ஈடுபடுத்தி லாபம் காணமுடியும். பெரிய மனிதர்களின் ஆதரவைப் பெறமுடியும். நீண்ட நாட்களாக இழுபறி நிலையிலிருந்த வம்பு வழக்குகளும் ஒரு முடிவுக்கு வரும்.

தொழில், வியாபாரம் 
தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு சில போட்டிகள் அதிகரித்தாலும் எதிர்பார்த்த லாபத்தைப் பெறமுடியும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெற்று தொழிலை மேன்மையாக அபிவிருத்தி செய்யமுடியும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் லாபத்தையும், வெற்றியையும் பெறுவீர்கள். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்பும் நல்ல மேன்மையை ஏற்படுத்தும். கூட்டாளிகளின் ஒற்றுமையான செயல்பாடு உங்களுக்கு மேலும் உற்சாகத்தைத் தரும். தொழிலாளர்கள் அனுகூலமாக செயல்படுவதால் நினைத்த காரியங்களை நிறைவேற்றிக்கொள்வீர்கள். தொழில்ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் சாதகப்பலன்கள் ஏற்படும்.  

உத்தியோகம்
உத்தியோகஸ்தர்கள் அனுகூலமானபலனை அடைவார்கள். தடைப்பட்ட பதவிகளும் கிடைக்கப்பெற்று கௌரவமானநிலைகள் ஏற்படும். உங்களின் திறமைகளை வெளிப்படுத்தக்கூடிய வாய்ப்புகள் ஏற்பட்டு உயரதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். ஊதிய உயர்வுகளும் கிடைக்கப்பெறும். வெளியூர், வெளிநாடு சென்று பணிபுரிபவர்களின் விருப்பமும் நிறைவேறும். புதிய வேலை தேடுபவர்களும் தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பினைப் பெறமுடியும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றமும் உண்டாகும். 

பெண்கள்
குடும்ப வாழ்வில் இருந்த பிரச்சினைகள் விலகி கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். உடல் ஆரோக்கியமும் அற்புதமாக அமையும். திருமண வயதை அடைந்த மங்கையருக்கு திருமண சுபகாரியங்கள் தடபுடலாக நிறைவேறும். பொருளாதார நிலையும் சிறப்பாக இருப்பதால் கடந்தகால கடன்கள் யாவும் விலகி கண்ணியமிக்க வாழ்க்கை அமையும். செல்வம், செல்வாக்கு, உயரும். சிலர் அழகான புத்திரசெல்வத்தைப் பெற்றெடுப்பர். பணிபுரிபவர்களுக்கு தகுதிக்கேற்ற உயர்வுகள் உண்டாகும். தெய்வ வழிபாடுகளுக்காக பயணங்கள் அமையும்.

அரசியல்
உங்களின் செல்வம், செல்வாக்கு உயரக்கூடிய காலமாகும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் செல்லக்கூடிய வாய்ப்பு உண்டாகும். கௌரவமிக்க மாண்புமிகு பதவிகள் கிடைக்கும். மக்களின் ஆதரவுகள் அதிகரிப்பதால் நினைத்த காரியங்கள் நிறைவேறும். முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். கொடுத்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றமுடியும்.

விவசாயிகள்
விளைச்சல் எதிர்பார்த்தபடி இருக்கும்.முதலீட்டிற்குமேல் லாபத்தைப் பெற்றுவிட முடியும். வேலையாட்களும் ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள். அரசுவழியில் எதிர்பார்க்கும் உதவிகள் சற்று தாமதப்பட்டாலும் பணவரவுகள் சிறப்பாகவே இருக்கும். பூமி, மனை சேரும்.

கலைஞர்கள்
புதிய வாய்ப்புகள் தேடிவந்து கதவைத்தட்டும். தடைப்பட்ட பணவரவுகள் யாவும் தடையின்றிக் கிடைக்கும். தொழிலில் இருந்த போட்டி பொறாமைகள் விலகி உடனிருக்கும் கலைஞர்களின் ஒத்துழைப்புக் கிடைக்கும். நீங்கள் நடித்து வெளிவந்த படங்களும் வெற்றியடைவதால் ரசிகர்களின் ஆதரவு அமோகமாக இருக்கும். வெளிநாடுகளுக்குச் செல்லக்கூடிய வாய்ப்பு அமையும். 

மாணவ-மாணவியர் 
மாணவ- மாணவிகளுக்கு கல்வியில் இருந்துவந்த மந்தநிலைகள் விலகி முன்னேற்றம் உண்டாகும். நல்ல மதிப்பெண்களைப் பெற்று பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். நண்பர்களின் உதவியும் தக்கசமயத்தில் அமையும். அரசுவழியில் உதவிகள் கிடைக்கும். விளையாட்டுப்போட்டி, பேச்சுப்போட்டி போன்றவற்றிலும் பரிசுகளைத் தட்டிச்செல்வீர்கள். உங்களால் உங்கள் பள்ளி,கல்லூரிகளின் பெயர், புகழ் உயரும். 

குரு பகவான் சித்திரை நட்சத்திரத்தில் 2-9-2017 முதல் 5-10-2017 வரை
குரு பகவான் தனக்கு நட்பு கிரகமான செவ்வாயின் நட்சத்திரத்தில் 9-ஆம் வீட்டில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். மனைவி, பிள்ளைகளால் மனதில் மகிழ்ச்சியும், பூரிப்பும் உண்டாகும். சுகவாழ்வு, சொகுசு வாழ்வு சிறப்பாக அமையும். புதிய வீடுகட்டி குடிபுகும் யோகமும் வண்டி வாகனங்கள் வாங்கக்கூடிய யோகமும் உண்டாகும். வெளியூர் பயணங்களால் மறக்கமுடியாத சம்பவங்கள் நடைபெறும். தடைப்பட்ட சுபகாரியங்கள் யாவும் தடபுட லாக நடைபெற்று மகிழ்ச்சியை ஏற்படுத்தும். தொழில், வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். எதிர்பார்க்கும் கடனுதவிகள் கிடைக்கப்பெறும். கூட்டுத்தொழிலிலும் நல்ல லாபம் அமையும். கொடுக்கல்- வாங்கலிலும் சரளமான நிலை இருக்கும். தொழில், வியாபாரத்தில் இருந்த போட்டி, பொறாமைகள் மறைந்து எதிர்பார்த்த லாபம் உண்டாகும். அரசியல்வாதிகளின் பெயர், புகழ் உயரக்கூடிய காலமாக இருக்கும். மக்களின் ஆதரவுகள் பெருகும். மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தைப் பெறுவார்கள். கலைஞர்களுக்கு வாய்ப்புகள் தேடிவரும். நினைத்த காரியங்கள் நிறைவேறி மகிழ்ச்சி அளிக்கும். கடன்கள் மறையும். தினமும் விநாயகரை வழிபடுவது உத்தமம். 

குரு பகவான் சுவாதி நட்சத்திரத்தில் 6-10-2017 முதல் 7-12-2017 வரை
குரு பகவான் ராகுவின் நட்சத்திரத்தில் பாக்கிய ஸ்தானமான 9-ஆம் வீட்டில் சஞ்சரிக்கும் இக்காலங்களில்  தொழில், வியாபாரத்தில் சிறப்பாக லாபம் கிட்டும். கொடுக்கல்-வாங்கல் சரளமாக அமையும். உங்களுக்கு வரவேண்டிய பணபாக்கிகள் யாவும் தடையின்றிக் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். மணவயதை அடைந்தவர்களுக்கு நல்லவரன்கள் தேடிவரும். பூர்வீக சொத்துகளாலும் சாதகமான பலனைப் பெறமுடியும். பெரிய மனிதர்களின் ஆதரவும், நல்ல நண்பர்களின் நட்பும் மனமகிழ்ச்சியினை உண்டாக்கும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் செல்லக்கூடிய வாய்ப்பும் அதன் மூலம் அனுகூலமான பலன்களும் உண்டாகும். பொன் பொருளும், ஆடை ஆபரணமும் சேரும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றமுடியும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் அன்றாடப்பணிகளில் சுறுசுறுப்பாக செயல்படமுடியும். அரசியலில் எதிர்பாராத திருப்பங்கள் ஏற்பட்டு பதவி உயர்வுகளைப் பெறமுடியும். மாணவர்கள் கல்வியில் ஈடுபாட்டுடன் செயல்படுவார்கள். வம்பு வழக்குகளில் சாதகமான பலன்கள் உண்டாகும். கொடுத்த கடன் தொகை வசூலிப்பதில் எந்தத் தடையும் இருக்காது. தினமும் விநாயகரை வழிபடுவது உத்தமம்.

குரு பகவான் விசாக நட்சத்திரத்தில் 8-12-2017 முதல் 13-2-2018 வரை
குரு பகவான் தன் சொந்த நட்சத்திரத்தில் 9-ஆம் வீட்டில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் கடந்தகாலப் பிரச்சினைகள் அனைத்தும் விலகி குடும்பத்தில் சுபிட்சமான நிலைகள் உண்டாகும். வாக்கியப்படி 19-12-2017 முதல் சனி பகவான் லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் பணவரவுகள் சரளமாக இருக்கும். கடன் பிரச்சினைகள் குறையும். குடும்பத்திலிருந்த தேவையற்ற செலவுகள் மறையும். உடல் ஆரோக்கியமும் அற்புதமாக அமையும். சுபகாரிய முயற்சிகளில் சாதகப்பலன் உண்டாகி தடபுடலாக நிறைவேறும். பெண்கள் சிறப்பான குழந்தைபாக்கியம் பெறுவார்கள். சொந்த வீடு, மனை வாங்கக்கூடிய வாய்ப்புகள் அமையும். தொழில், வியாபாரமும் சிறப்பாக நடைபெறு வதால் லாபங்கள் பெருகும். போட்டி, பொறாமைகள் விலகி பொருட் தேக்கங்கள் குறையும். சிலருக்கு புதிய தொழில் தொடங்கக்கூடிய வாய்ப்பு களும் உண்டாகும். கொடுக்கல் -வாங்கலில் பிரமாதமான நற்பலன்களை அடையமுடியும். பல பொதுநலக் காரியங்களில் ஈடுபடும் வாய்ப்பும் அதன்மூலம் வெளிவட்டாரத் தொடர்புகளில் சாதகமான பலன்களும் உண்டாகும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணியில் சிறப்பாக செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெறுவார்கள். கேதுவுக்குப் பரிகாரம் செய்வது உத்தமம்.

குரு பகவான் அதிசாரமாக விருச்சிக ராசியில் 14-2-2018 முதல் 6-3-2018 வரை
குரு பகவான் அதிசாரமாக ஜென்ம ராசிக்கு தனஸ்தானமான 10-ல் சஞ்சரிக்கும் இக்காலங்களில் கொடுக்கல்-வாங்கலில் சற்று சிந்தித்துச் செயல்படுவது நல்லது. சனி லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் பொருளாதாரநிலை மிகச்சிறப்பாக இருக்கும். முயற்சிகள் அனைத்திலும் வெற்றிமேல் வெற்றிகளைப் பெறுவீர்கள். நினைத்த காரியங்கள் யாவும் தடையின்றி நிறைவேறும். உடல்நிலையில் புதுத்தெம்பும், உற்சாகமும் பிறக்கும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உற்றார்-உறவினர்களும் சாதகமாகவே இருப்பார்கள். தொழில், வியாபாரத்திலும் அமோகமான வெற்றிகள் கிடைக்கும். தொழில்ரீதியாக மேற்கொள்ளும் பயணங் களாலும் சாதகமான பலனை அடைவீர்கள். புதிய கூட்டாளிகளின் சேர்க்கையும் உண்டாகும். அரசியல்வாதிகளின் பெயர், புகழ் உயரக்கூடிய காலமாக இருக்கும். மாண்புமிகு பதவிகள் தேடிவரும். மக்களின் ஆதரவு பெருகும். உத்தியோகஸ்தர்களும் எதிர்பார்த்த உயர்வுகளைப் பெற்று மகிழ்வார்கள். பெரிய மனிதர்களின் தொடர்புகள் சாதகமான பலனை ஏற்படுத்தும். கொடுத்த கடன்களை வசூலிப்பதில் சிரமம் இருக்காது. மாணவர்கள் கல்வியில் சற்று முழுமுயற்சியுடன் செயல்பட்டால் நற்பெயர் அடையமுடியும். தினமும் விநாயகரை வழிபடுவது உத்தமம்.

குரு பகவான் வக்ரகதியில் 7-3-2018 முதல் 3-7-2018 வரை
குரு பகவான் இக்காலங்களில் வக்ரகதியில் சஞ்சரிப்பதால் நன்மை, தீமை கலந்த பலன்களை அடையமுடியும் என்றாலும் சனி லாப ஸ்தானமான 11-லும், ராகு 6-ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பதால் தொட்ட தெல்லாம் துலங்கும்.முயற்சிகளில் தடையின்றி வெற்றி பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டு சிறிது மருத்துவச் செலவுகளுக்குப்பின் குணமடைவீர்கள். பொருளாதாரநிலை சிறப்பாக அமைவதால் எதிலும் முன்னேற்றமான நிலையினை உண்டாக்கும். உற்றார்-உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும். சுபகாரியங் களுக்கான பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளலாம். குடும்பத்திலும் ஒற்றுமையும், சுபிட்சமும் உண்டாகும். புத்திரவழியில் இருந்த கவலைகள் மறையும். கொடுக்கல்-வாங்கல் சரளமானநிலையில் நடைபெறும். கொடுத்த கடன்களும் பிரச்சினைகளின்றி வசூலாகும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் போட்டி பொறாமைகளின்றி செயல்படமுடியும். உத்தியோகஸ்தர்களும் எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிடைக்கும். அரசியல்வாதிகள் மேடைப்பேச்சுக்களில் கவனமுடன் செயல்பட்டால் பதவிகளைக் காப்பாற்றிக் கொள்ளமுடியும். குருப்ரீதியாக தட்சிணாமூர்த்தியை வழிபடுவது உத்தமம்.

குரு பகவான் விசாக நட்சத்திரத்தில் 4-7-2018 முதல் 4-10-2018 வரை
குரு பகவான் தன் சொந்த நட்சத்திரத்தில் 9-ஆம் வீட்டில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் உங்களின் தேவைகளும் ஆசைகளும் திருப்திகரமாக நிறைவேறும். பெரிய காரியங்களையும் எளிதில் செய்துவிடக்கூடிய ஆற்றல் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்கள் சுபிட்சமாக இருப்பதால் மருத்துவச் செலவுகள் அனைத்தும் குறையும். நண்பர்கள் மற்றும் உறவி னர்கள் யாவரும் சாதகமாக இருப்பார்கள். வெளிவட்டாரப் பழக்க வழக்கங்களால் உங்களின் பெயர், புகழ் உயரும். கடன்கள் குறையும். எல்லாரின் நம்பிக்கைக்கு பாத்திரமாக விளங்கக்கூடிய உங்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் மறையும். எல்லாவகையிலும் வெற்றியும் முன்னேற்றமும் உண்டாகும். சிலருக்கு கடல்கடந்து செல்லக்கூடிய வாய்ப்பும் அதன்மூலம் தனலாபமும் உண்டாகும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். தொழில், வியாபரத்தில் அற்புதமான வளர்ச்சி ஏற்படும். கொடுக்கல்-வாங்கலில் சரளமானநிலை இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிதரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். வண்டி, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். பூர்வீக சொத்துவழியில் லாபம் கிட்டும். சேமிக்கமுடியும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெறமுடியும்.  விநாயகரை வழிபடுவது உத்தமம். 

பரிகாரம்
கும்ப ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு கேது 12-ல் சஞ்சரிப்பதால் சர்ப்ப சாந்தி செய்வது, விநாயகர் வழிபாடு மேற்கொள்வது உத்தமம்.

அதிர்ஷ்டம் அளிப்பவை
எண்: 5, 6, 8.
கிழமை: வெள்ளி, சனி     .
திசை: மேற்கு.
கல்: நீலக்கல்.
நிறம்: வெள்ளை, நீலம்.
தெய்வம்: ஐயப்பன்.

இன்று - 29.08.2017

இன்று -  29.08.2017
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் (மாத இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com








இன்றைய  பஞ்சாங்கம்
29-08-2017, ஆவணி- 13, செவ்வாய்கிழமை, அஷ்டமி திதி இரவு 02.53 வரை பின்பு வளர்பிறை நவமி. அனுஷம் நட்சத்திரம் இரவு 10.56 வரை பின்பு கேட்டை. சித்தயோகம் இரவு 10.56 வரை பின்பு மரணயோகம். நேத்திரம்- 1, ஜீவன்- 1/2. முருக வழிபாடு நல்லது. சுப முயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.






               
திருக்கணித கிரக நிலை
29.08.2017

ராகு
சுக்கி
கேது
சூரிய செவ்
புதன்(வ)

சனி  சந்தி

குரு 

இன்றைய ராசிப்பலன் -  29.08.2017
மேஷம்
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் செய்யும் செயல்களில் எல்லாம் தாமதம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்பு ஏற்படும். தொழில் சம்பந்தமாக புதிய முயற்சிகள் எதையும் செய்யாமல் இருப்பது நல்லது. வண்டி வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை.
ரிஷபம்
இன்று பொருளாதாரம் சிறப்பாக அமையும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் வெற்றியை தரும். குடும்பத்தில் பெண்கள் ஆடம்பர பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். வேலையில் உங்களுக்கு இருந்த போட்டி பொறாமைகள் விலகும். சுபகாரிய முயற்சிகள் நற்பலனை கொடுக்கும்.
மிதுனம்
இன்று உங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் நாளாக இந்த நாள் அமையும். குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். வேலையில் உடன் பணிபுரிபவர்களிடமிருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் சம்பந்தமான வழக்குகளில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். சேமிப்பு உயரும்.
கடகம்
இன்று பணவரவு சுமாராக இருக்கும். குடும்பத்தில் தேவையில்லாத டென்ஷன் ஏற்படக்கூடும். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் வீண் பிரச்சனைகளை தவிர்க்கலாம். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிட்டும். நண்பர்களின் ஆறுதல் வார்த்தைகள் புது தெம்பை தரும். கடன் குறையும்
சிம்மம்
இன்று எந்த காரியத்திலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். குடும்பத்தில் கணவன் மனைவியிடையே வீண் மனஸ்தாபங்கள் ஏற்படக்கூடும். வெளி வேலைகளால் அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வியாபாரத்தில் ஓரளவு லாபம் கிட்டும்.
கன்னி
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெறும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நண்பர்களின் ஆலோசனைகள் வியாபார வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். உத்தியோகத்தில் வேலைபளு குறையும். புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.
துலாம்
இன்று உத்தியோகத்தில் எதிர்பாராத வீண் பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் செலவுகள் அதிகமாகும். தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்தால் நல்ல லாபத்தை அடையலாம். தெய்வ தரிசனம் மனதிற்கு நிம்மதியை தரும். நண்பர்களின் ஆதரவு கிட்டும்.
விருச்சிகம்
இன்று நீங்கள் நினைத்த காரியம் நினைத்தபடி நிறைவேறும். பிள்ளைகள் பாசமுடன் இருப்பார்கள். உத்தியோகத்தில் உங்கள் திறமைகேற்ப பதவி உயர்வு கிடைக்ககூடிய வாய்ப்புகள் உருவாகும். பெரியவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி சுமூக உறவு ஏற்படும். வருமானம் பெருகும்.
தனுசு
இன்று பிள்ளைகளால் வீண் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். உறவினர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். உடல் ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் ஏற்படலாம். நண்பர்களின் ஆலோசனை தொழிலின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். உடன்பிறந்தவர்களால் அனுகூலம் கிட்டும்.
மகரம்
இன்று வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அமோகமாக இருக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் அன்பையும், ஆதரவையும் பெறுவீர்கள். குடும்பத்தில் புத்திர வழியில் சுபசெய்திகள் வந்து சேரும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.
கும்பம்
இன்று குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக அமையும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். பிள்ளைகள் வழியில் நல்ல செய்தி கிட்டும். தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் நல்ல அனுகூலமான பலன்கள் கிடைக்கும். சேமிப்பு உயரும்.
மீனம்

இன்று நீங்கள் செய்யும் காரியங்கள் மற்றவர்கள் தலையீட்டால் தடைப்படும். எதிர்பார்த்த இடத்தலிருந்து உதவிகள் கிடைக்க தாமத ஏற்படும். அலுவலகத்தில் மேலதிகாரிகளுடன் நிதானமாக செயல்பட்டால் வீண் பிரச்சனைகளை தவிர்க்கலாம். குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள்.