Pages

Saturday, September 9, 2023

Today rasi palan - 10.09.2023

 


Today rasi palan - 10.09.2023

இன்றைய ராசிப்பலன் - 10.09.2023

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,

சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

இன்றைய  பஞ்சாங்கம்

10-09-2023, ஆவணி 24, ஞாயிற்றுக்கிழமை, ஏகாதசி திதி இரவு 09.29 வரை பின்பு தேய்பிறை துவாதசி. புனர்பூசம் நட்சத்திரம் மாலை 05.06 வரை பின்பு பூசம். நாள் முழுவதும் சித்தயோகம். ஏகாதசி விரதம். பெருமாள் வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.

இராகு காலம் - மாலை 04.30 - 06.00, எம கண்டம் - பகல் 12.00 - 01.30, குளிகன் -  பிற்பகல் 03.00 - 04.30, சுப ஹோரைகள் - காலை 7.00 - 9.00, பகல் 11.00 - 12.00 , மதியம் 02.00 - 04.00,  மாலை 06.00 - 07.00, இரவு 09.00 - 11.00.

 

 

ராகு குரு (வ)

 

சந்தி

  

சனி (வ)

 

10.09.2023

சுக்கி

 

சூரிய புதன் (வ)

 

 

  கேது

செவ்

 

இன்றைய ராசிப்பலன் -  10.09.2023

மேஷம்

இன்று உங்களுக்கு வரவிற்கு மீறிய செலவுகள் இருக்கும். நண்பர்களுடன் வீண் மனஸ்தாபங்கள் உண்டாகும். சொத்து சம்பந்தமான விஷயங்களில் அலைச்சலுக்குப் பின் அனுகூலப் பலன் கிடைக்கும். சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.

ரிஷபம்

இன்று குடும்பத்தில் பெரியோர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். சுபசெலவுகள் செய்ய நேரிடும். தொழில் விஷயமாக வெளி மாநிலத்தவர் நட்பு ஏற்படும். எதிர்பார்த்த இடத்திலிருந்து பண உதவிகள் கிடைக்கும். வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். சேமிப்பு உயரும்.

மிதுனம்

இன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சுபசெலவுகள் அதிகமாகும். பிள்ளைகளுக்கு ஆரோக்கியம் சற்று குறையும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். கடன் பிரச்சினைகள் குறையும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.

கடகம்

இன்று குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். உறவினர்கள் உங்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள். பெரிய மனிதர்களின் அறிமுகம் ஏற்படும். பழைய நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும். வியாபாரத்தில் புதிய மாற்றங்கள் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.

சிம்மம்

இன்று ஆடம்பர செலவுகளால் பணப்பிரச்சினை உண்டாகலாம். பொருளாதார நெருக்கடியால் கடன் வாங்கும் சூழ்நிலை உருவாகும். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்து சென்றால் முன்னேற்றம் காணலாம். நண்பர்களின் சந்திப்பு நன்மையை தரும். தெய்வ வழிபாட்டில் ஆர்வம் உண்டாகும்.

கன்னி

இன்று நீங்கள் எதிலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். பெரிய மனிதர்களின் சந்திப்பால் நல்லது நடைபெறும். பிள்ளைகள் படிப்பில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு உருவாகும். புதிய வண்டி வாகனம் வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள்.

துலாம்

இன்று புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். குடும்பத்தில் சந்தோஷம் உருவாகும். உடன் பிறந்தவர்களிடம் சுமூக உறவு ஏற்படும். பிள்ளைகளின் செயல்களில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். அனுபவமுள்ளவர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

விருச்சிகம்

இன்று நீங்கள் தொழில் வியாபாரத்தில் தேக்க நிலையை எதிர்கொள்ள நேரிடும். உங்கள் ராசிக்கு பகல் 10.25 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் பேச்சில் கவனமுடன் இருப்பது நல்லது. புதிய முயற்சிகளையும் சுபகாரியங்களையும் மதியத்திற்கு பின் தொடங்குவது உத்தமம்.

தனுசு

இன்று தொழில் ரீதியாக தேவையற்ற அலைச்சலும், வீண் விரயங்களும் ஏற்படும். பெரிய மனிதர்களுடன் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். உங்கள் ராசிக்கு பகல் 10.25 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் மனக்குழப்பம் அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.

மகரம்

இன்று இல்லத்தில் மனம் மகிழும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். உற்றார் உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும். பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். வெளியூர் பயணங்களால் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.

கும்பம்

இன்று வீட்டில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். பிள்ளைகளோடு இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் வளர்சிக்காக போட்ட புதிய திட்டங்கள் வெற்றியை தரும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். பழைய கடன்கள் வசூலாகும்.

மீனம்

இன்று தொழில் வியாபார ரீதியாக பொருளாதார நெருக்கடிகள் ஏற்படலாம். எளிதில் முடியக்கூடிய காரியம் கூட தாமதமாக முடியும். எதையும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. உற்றார் உறவினர்களிடம் விட்டு கொடுத்து சென்றால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.

No comments:

Post a Comment