Friday, March 30, 2012

வயிற்றில் பிரச்சினை தரும் அமைப்பு

யாரையாவது நாம் எதிரில் பார்க்க நேர்ந்தால் முதலில் கேட்கும் கேள்வி எப்படி இருக்கிறீர்கள? என்றுதான். அந்த  எப்படி இருக்கிறீர்கள் என்பதற்கு அர்த்தம் சொந்த வீடு இருக்கிறதா, கார் இருக்கிறதா, சொத்து சுகம் இருக்கிறதா என்பது பற்றி அல்ல. உடல் நிலை நன்றாக இருக்கிறதா என்றுதான்.

இன்று விஞ்ஞான முன்னேற்றம் எந்த அளவிற்கு இருக்கிறதோ அந்த அளவிற்கு புதுப்புது நோய்களும் உண்டாகிக் கொண்டு இருக்கிறது என்று கூறினால் அது மிகையாகாது. அவற்றிற்கு நம் விஞ்ஞானிகள் புதுப்புது பெயர்களை சூட்டிக் கொண்டிருக்கிறார்கள். நாம் அனைவரும் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வதை விரும்பினாலும் இந்த அவசர யுகத்தில் அது இயலாத ஒன்றாகி விடுகிறது.

எல்லாமே ரெடிமேடாக கிடைப்பது போல உணவு வகைகளும் ரெடிமேடாகவே கிடைப்பதால் மக்களுககு உணவு பழக்க வழக்கங்களும் சரியாக அமைய வாய்ப்புகள் குறைந்து கொண்டே இருக்கிறது. பொதுவாகவே உண்ணும் உணவு சரியாக இல்லையென்றால் அஜீரணக் கோளாறு, வாயுத் தொல்லை உண்டாகும் என்றாலும், எல்லாவற்றிலும் பார்த்து பார்த்து உடல்நிலையைப் பேணிக்காப்பவர்களுக்குக் கூட வயிறு  சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் உண்டாகி அவதியுற வைக்கிறது. இதற்கு ஜோதிட ரீதியாக என்ன காரணம் என்று பார்த்தால் 5ம் பாவம் சரியாக அமையாதததுதான்.

ஜென்ம லக்னத்திற்கு 5ம் வீட்டைக் கொண்டு வயிறு, குடல், சிறுகுடல், குடலின் கீழ் பகுதி, உண்ணும் உணவு, ஜீரணிக்கும் உறுப்பு, அஜீரணக்கோளாறு, அல்சர் போன்ற பாதிப்புகள் ஏற்படுமா என்பதனைப் பற்றி தெளிவாக அறியலாம். 5ம் வீட்டில் சுப கிரகங்கள் அமையப் பெற்று 5ம் அதிபதி வலுவாக இருந்தால் நல்ல ஜீரண சக்தி, உண்ணும் உணவு செரிக்கும் அமைப்பு உண்டாகும்.

5ம் வீட்டில் பாவகிரகங்கள் அமையப் பெற்றாலும் வயிறு கோளாறு, அஜீரண சக்தி, உண்ணும் உணவு செரிக்கும் அமைப்பு உண்டாகும்.

5ம் வீட்டில் பாவ கிரகங்கள் அமையப் பெற்றாலும் வயிறு கோளாறு, அஜீரணக் கோளாறு உண்டாகும்.

5ம் வீட்டில் சூரியன் அமையப் பெற்றால் நல்ல ஜீரண சக்தியும், அதிகமான உணவு உண்ணுவதில் அதிக  விருப்பமும் உண்டாகும். சூரியனுடன் பாவிகள் சேர்க்கை பெற்றாலும் குறிப்பாக செவ்வாய் அமையப் பெற்றாலும் ஜீரணக்கோளாறு உண்டாகி குடலில் புண் ஏற்படும்.

5ம் வீட்டில் சந்திரன் பலமாக அமையப் பெற்றால் விதவிதமான உணவு உண்பதில் அதிக அக்கறை கொண்டவராக இருப்பார். அதுவும் வளர்பிறை சந்திரன் என்றால் கேட்கவே தேவையில்லை. பாவிகள் பார்வை சேர்க்கை இல்லாமலிருந்தால் உண்ணும் உணவு உடனடியாக செரிக்கும் நல்ல ஆரோக்கியம் யாவும் அமையும். அதுவே தேய்பிறை சந்திரனாகி பாவிகள் பார்வை சேர்க்கைப் பெற்றிருந்தால் அஜீரணக் கோளாறு, தேவையற்ற மனக் கவலைகளால் அல்சர் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும். குறிப்பாக கேதுவின் சம்மந்தம் சந்திரனுக்கு இருந்தால் குடலில் பாதிப்புகள் ஏற்பட்டு அதிக ஆபத்தை ஏற்படுத்தும்.

5ம் வீட்டில் செவ்வாய் பலமாக அமைந்து, சுபர் பார்வையோ, சுப்ர் சாரமோ பெற்றிருந்தால் சூடான உணவு உண்பதில் அதிக விருப்பம், காரமான உணவுகளை விரும்பி உண்ணக்கூடிய அமைப்பு உண்டாகும் என்றாலும், செவ்வாய் உஷ்ண கிரகம் என்பதால் பாவிகள் தொடர்பு இருந்தால் உண்ணும் உணவு செரிக்காத நிலை, குடல் புண், வாயு தொல்லை, அல்சர் போன்றவை உண்டாகும். குறிப்பாக நீசம் பெற்றிருந்தால் செவ்வாய் திசை, செவ்வாய் புத்தி காலங்களில் இன்னும் வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகளை அதிகமாக ஏற்படுத்தும். வயிற்றுப் போக்கு கூட உண்டாகி பெரிய பாதிப்புகளை ஏற்படுத்திவிடும். வயிற்றில் அறுவை சிகிச்சை செய்யக்கூடிய சூழ்நிலை கூட உண்டாகும்.

அதுவும் பெண்கள் என்றால், செவ்வாய் ரத்த காரகன் என்பதால், பெண்களுக்கு மாதவிடாய்க்கோளாறு, கர்ப்பப்பையில் கோளாறு, கருச்சிதைவு போன்றவை உண்டாகும். செவ்வாய், சனி, ராகு போன்ற பாவிகள் சேர்க்கைப் பெற்று அமைந்து விட்டால், கர்ப்பபையையே எடுக்க வேண்டிய சூழ்நிலைகளும் உண்டாகும்.

புதன் 5ம் வீட்டில் பலமாக அமைந்து சுபச் சேர்க்கை பார்வைப் பெற்றிருந்தால் உணவை ரசித்துஉண்பவராக இருப்பார். நல்ல ஜீரண சக்தி இருக்கும். உடல் நிலை ஆரோக்கியமாக அமையும். அதுவே புதன் பலஹீனமாக அமைந்து விட்டால் பசியின்மை, உணவு உட்கொள்ளாததால் மயக்கம், உடல்நிலையில் தளர்ச்சி உண்டாகும். வாயுத் தொல்லைகளால் கை, கால் மூட்டுகளில் வலி, வீக்கம் உண்டாகும். உண்ட உணவு சரியாக செரிக்காமல் வயிற்றுப் போக்கும் உண்டாகும்.

ஐந்தில் குரு அமையப் பெற்றால் நன்றாக பசி எடுத்து உண்ணக்கூடிய அமைப்பு, நல்ல ஜீரணத்தன்மை இருக்கும். குரு பகவான் செவ்வாய், ராகு, கேது சேர்க்கைப் பெற்றால் அல்லது பார்வை பெற்றால் அஜீரணக் கோளாறு, வயிற்றில் புண், வாயுத் தொல்லை உண்டாகும்.

ஐந்தில் சுக்கிரன் அமைந்தால், இனிப்பான உணவு வகைகளை விரும்பி உண்பார்கள். சுக்கிரன், சூரியன் சேர்க்கைப் பெற்றிருந்தால், எண்ணெயில் செய்த உணவுப் பண்டங்களை அதிகம் உட்கொள்வார்கள். சுக்கிரன் செவ்வாய் வீட்டிலோ அல்லது செவ்வாயின் பார்வை பெற்றால் சூடான உணவுவகைக¬ள் விரும்பி உண்பார்கள். சனி சேர்க்கைப் பெற்றிருந்தால் எல்லா உணவு வகைகளையும் விரும்பி உட்கொள்பவராக இருப்பார்கள்.

சனி 5ல் அமைந்திருந்தால், அதிக அளவில் உணவு உட்கொள்பவராகவும், எந்த நேரமும் அசை போட்டுக் கொண்டே இருப்பவராகவும் இருப்பார். இதனால் அஜீரணக் கோளாறு, குடலில் புண், போன்ற பாதிப்புகள் உண்டாகும்.

ராகு கேது 5ல் அமைந்தால் சரியான நேரத்தில் உணவு உட்கொள்ள  முடியாத காரணத்தால் குடலில் புண், வயிற்றுவலி போன்றவற்றால் குடும்பத்திலேயே மகிழ்ச்சி குறையும். குறிப்பாக  ராகு புத்தி காலங்களில் வயிறு பிரச்சினைகள் அதிகரிக்கும்.

5ம் வீட்டிற்கு குரு பார்வை அல்லது சுபக்கிரக பார்வை இருந்தால் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் இல்லாமல் நல்ல ஆரோக்கியம் அமையும். அதுவே சுபர் பார்வையின்றி 5ல் பாவிகள் அமையப் பெற்றால், வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளால் மருத்துவச் செலவுகளை எதிர்கொள்ள நேரிடும்.


ஜோதிடமாமணி முருகு பாலமுருகன்  கைபேசி எண் 0091 72001 63001


Jothida mamani  Murugu Balamurugan. Astro Ph.D.research scholar cell-00917200163001



Thursday, March 29, 2012

விளையாட்டுத்துறையில் சாதிப்பவர் யார்?

மனிதனாய்ப் பிறந்த ஒவ்வொருவருமே ஏதோ ஒருவிதத்தில் எதையாவது சாதிக்க வேண்டும் என்றே எண்ணுகிறோம். அதற்கேற்றவாறு இன்று பலவிதமான கலைகளும், துறைகளும் பெருகிக்கொண்டே வருகிறது. நம்மை ஊக்குவிக்கவும், உற்சாகப்படுத்தவும் பெற்றோர்களும், பெரியோர்களும் ஏன் அரசாங்கம் கூட பலவகையில் உதவிகரமாக அமைகின்றது. சிலருக்குப் படிப்பில், சிலருக்கு கலை, இசை துறைகளில் ஈடுபாடு கொடுக்கிறது. சிலருக்கு விளையாட்டுத்துறைகளில் ஈடுபாடு கொடுக்கிறது. 

நம்நாட்டில் பலவிதமான விளையாட்டுக்கள் உள்ளன. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விளையாட்டுக்களில் ஈடுபாடு உண்டாகும். அதன் மூலம் பரிசுகளும், பாராட்டுகளும் சமுதாயத்தில் ஓர் உயர்வான அந்தஸ்தும் கிடைக்கிறது. பொதுவாக எல்லோரின் விருப்பமும் எல்லா வகையிலும் பூர்த்தியாகி விடுவதில்லை. அதற்கு நம்முடைய ஜனன ஜாதகத்தில் கிரக நிலைகள் பலமாக அமைய வேண்டும். குறிப்பாக 5ம் பாவம் பலம் பெற்று, 5ம் வீட்டு அதிபதியும் சுபக்கிரகசேர்க்கைப் பார்வை பெற்றிருந்தால், விளையாட்டுத்துறைகளில் ஈடுபாடும் முன்னேற்றமும் கொடுக்கும். ஒருவருக்கு 5ம் வீட்டில் வலுவான கிரகங்கள் அமைகின்றபோது, விளையாட்டுத் துறைகளில் மேன்மையான பலன்களை உண்டாக்குகிறது.

ஜென்ம லக்னத்தைக் கொண்டு விளையாட்டு, கேளிக்கை, பொழுதுபோக்குகளைப் பற்றி விரிவாக அறியலாம். ஒருவருக்குத் தைரியம், துணிவு இருந்தால் மட்டுமே விளையாட்டுத் துறையில் சாதிக்க முடியும். நவக்கிரகங்களில் தைரியம், துணிவு போன்றவற்றிற்கு காரகனாக விளங்கக்கூடிய கிரகம் செவ்வாய் பகவானாவார். செவ்வாய் ஒருவர் ஜாதகத்தில் ஆட்சி உச்சஸ்தானங்கள் அமையப் பெற்றோ வலிமையாக இருந்தால்தான், எதிலும் தைரியத்துடன் செயல்பட்டு சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் உண்டாகும். 

ஒருவருக்கு ஆத்ம சக்தி உடல் வலிமை, நல்ல ஆரோக்கியம், சிறப்பான கண்பார்வை போன்றவைகள் அமைய சூரியன் பலம் பெற வேண்டும். அதுபோல எதையும் சாதிப்பதற்கு மனவலிமை வேண்டும். அதற்கு மனோகரகன் சந்திரன் பலம் பெற வேண்டும். விளையாட்டுத் துறையில் ஈடுபட்டு வெற்றிபெற நல்ல புத்திகூர்மை வேண்டும். அதற்குப் புத்திகாரகன் புதன் பலம் பெற வேண்டும். ஆக விளையாட்டுத் துறையில் சாதிக்க செவ்வாய், சூரியன், சந்திரன், புதன் போன்ற கிரகங்கள் பலமாக அமைவது சிறப்பான பலனைத் தரும்.

ஜென்ம லக்னத்திற்கு 5ம் பாவத்தைக் கொண்டு விளையாட்டைப் பற்றி அறிய முடியும் என்பதால், 5ம் அதிபதி ஆட்சி உச்சம் பெற்றிருப்பது, கேந்திரதிலோ, திரிகோணத்திலோ நட்பு வீட்டிலோ அமைவது சிறப்பு. 5ம் அதிபதி நீசம் பெற்றோ பலஹீனமாக இருப்பதோ நல்லதல்ல.
5ம் பாவத்தைக் கொண்டும், 5ல் அமையக்கூடிய கிரகங்களை வைத்தும் எந்த விளையாட்டில் ஈடுபாடு உண்டாகும் என்பதைப் பற்றி தெளிவாக  அறியலாம். விளையாட்டில் பலவிதம் உண்டு. கிரங்களின் தன்மைக்கேற்ப விளையாட்டுத்துறையில் ஈடுபாடு உண்டாகும். 

குறிப்பாக ஓட்டப்பந்தயம் போன்றவற்றில் ஈடுபாடு ஏற்பட கால்களில் செயல்பாடு கண்டிப்பாக தேவை. 12ம் வீடு கால்களைப் பற்றிக் குறிக்கும் ஸ்தானமாகும்.  சனி பகவான் எலும்பு மண்டலத்திற்கு அதிபதியாவார். சனி, செவ்வாய் பலம் பெற்று 5ம் பாவமும் பலம் பெறுவதுடன், 12ம் பாவமும் பலம் பெற்றிருந்தால் ஓட்டப்பந்தயம் போன்றவற்றில் ஈடுபாடு உண்டாகும். அதுமட்டுமின்றி 3ம் பாவமும் பலம் பெற்றிருந்தால் விடா முயற்சியுடன் எதிலும் செயல்படக்கூடிய ஆற்றலைத் தரும். 3, 12 பாவமும் சிறப்பாக அமையப் பெற்றால் கைப்பந்து, கல்பந்து, மட்டைப் பந்து போன்றவற்றில் சாதிக்க முடியும்.

புத்திகாரகன் புதன் பலம் பெற்று 5ம் பாவமும் பலம் பெற்றிருந்தால் செஸ், கேரம் போன்றவற்றில் ஈடுபாடு உண்டாகும். புதனுடன், சனி, ராகு போன்ற பாவகிரக சேர்க்கைப் பெற்றால் சூதாட்டத்தில் ஈடுபடக்கூடிய சூழ்நிலை உண்டாகும்.

நவகிரகங்களில் நீர்க் கிரகங்கள் சந்திரன், சுக்கிரன் ஆகும். குறிப்பாக 5ம் வீட்டில் சந்திரன், சுக்கிரன் வலிமையாக அமையப் பெற்றிருந்தால், நீச்சல் துறையில் சாதிக்கக்கூடிய யோகம் உண்டாகும். 

இது போல விளையாட்டுக்களில் பல துறைகள் நீண்டது. அவற்றைப் பற்றி குறிப்பிடுவதென்றால் இப்புத்தகமே போதாது. எனவே சிலவற்றைப் பற்றி மட்டுமே குறிப்பிட்டுள்ளேன்.


ஜோதிடமாமணி முருகு பாலமுருகன்  கைபேசி எண் 0091 72001 63001


Jothida mamani  Murugu Balamurugan. Astro Ph.D.research scholar cell-00917200163001


Tuesday, March 27, 2012

இறைபணியில் ஈடுபட வைக்கும் அமைப்பு

இறைவன் என்பவன் நீக்கமற எங்கும் நிறைந்திருக்கிறான். தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான் என்றாலும், மனிதனாய்ப் பிறந்த எல்லோருக்குமே இறைபக்தி என்பது இயற்கையிலேயே இருப்பதில்லை. நம் நாட்டில் ஆத்திக வாதிகளும் உண்டு. நாத்திக வாதிகளும் உண்டு. சிலர் இளம் வயதிலேயே ஆன்மிகத்தில் ஈடுபட்டு முற்றும் துறந்து விடுவார்கள். சிலருக்கு நடுத்தர வயதில் ஆன்மிகத்தில் ஈடுபடக்கூடிய சூழநிலைகள் உண்டாகும். சிலருக்குக் குடும்ப வாழ்வில் ஈடுபட்டுக் கொண்டே இறைபணி, ஆன்மிக பணிகளில் அதிக அக்கறை செலுத்துவார்கள்.

இறைபணி செய்வது என்பது ஒரு சிறந்த பாக்கியமாகும். இந்த பாக்கியம் என்பது எளிதில் எல்லோருக்கும் கிடைத்து விடாது. குறிப்பாக இறைபணி என்பது எல்லா மதத்திற்கும் பொதுவான ஒன்றாகும். அவரவர் மதத்திற்கு ஏற்றவாறு இறைபணிகளில் ஈடுபடுவார்கள். இறைபணியில் ஈடுபடுவதற்கு அவரவரின் ஜனன ஜாதகப்படி 5ம் பாவம் பலமாகவும், சுப கிரகங்கள் அமையப் பெற்றும், பார்வை பெற்றும் அமைந்திருக்க வேண்டும். அது மட்டுமின்றி 5ம் பாவத்திற்கு 5ம் பாவமான 9ம் பாவமும் பலமாக இருந்தால் இன்னும் மிகச் சிறப்பாக இருக்கும்.

நவக்கிரகங்களில் தேவர்களுக்கெல்லாம் தலைவனாக விளங்கக்கூடிய குரு பகவான், ஒருவர் ஜாதகத்தில் வலுப்பெற்றிருந்தால் தெய்வீக எண்ணம், ஆன்மிக எண்ணம், இறைபணியில்  ஈடுபடக்கூடிய சூழ்நிலை உண்டாகும். அது போல நவக்கிரகங்களில் நிழல் கிரகம், சாயாகிரகம் என வர்ணிக்கப்படக் கூடிய கேது பகவான் ஞான காரகன் என்பதால், ஒருவர் ஜாதகத்தில் கேது வலுப்பெற்றிருந்தாலும் ஆன்மிக, தெய்வீக எண்ணங்கள் உண்டாகும்.

அது போல கேதுவின் நட்சத்திரமான அஸ்வினி, மகம், மூலத்தில் பிறந்தாலும் குருவின் நட்சத்திரமான புனர்பூசம், விசாகம், பூரட்டாதியில் பிறந்திருந்தாலும் தெய்வீக எண்ணங்கள் உண்டாகும்.

குரு, கேது வலுப்பெற்றால் தெய்வீக எண்ணங்கள் ஏற்படும் என்றாலும், எங்கு வலுப்பெற்றால் சிறப்பு என்று பார்க்கும்போது, ஒருவர் ஜாதகத்தில் ஜென்ம லக்னத்திற்கு 5ம் வீட்டில் வலுப்பெற்றால் தான் தெய்வீக  எண்ணங்கள் ஏற்படும். 5ல்  குரு, கேது இருந்தாலும் 5ம் வீடு குரு வீடாக அமைவது, 5ம் வீட்டைக் குரு பார்வை செய்வதாலும் 5ம் அதிபதி குரு கேது சேர்க்கைப் பெற்றாலும், அந்த ஜாதகருக்கு தெய்வீக எண்ணம், இறை பணி பல்வேறு ஆன்மிக செயல்களில் ஈடுபடும் அமைப்பு கொடுக்கும்.

சந்திரனானவர் மனோகாரகன் என்பதால், அவர் குரு கேது சேர்க்கைப் பெற்று 5ல் அமையப்பெற்றாலும், சந்திரனுக்கு 5ல் அமையப் பெற்றாலும், சந்திரனுக்கு 5ல் குரு, கேது அமையப் பெற்றாலும் தெய்வீக நாட்டம் உண்டாகும். குரு கேது ஆகிய கிரக சேர்க்கைப் பெற்று 5ல் அமைந்தோ, 5க்கு 5ல் அமைந்தோ அதன் தசாபுக்தி நடைபெற்றால் கண்டிப்பாக ஆன்மிகம், தெய்வீகம் போன்றவற்றில் ஈடுபாடு கொடுக்கும்.

கேது பகவான் விருச்சிக ராசியில் உச்சம் பெறுவதால், ஒருவர் ஜாதகத்தில் கேது உச்சம் பெறுவதால், ஒருவர் ஜாதகத்தில் கேது உச்சம் பெற்று  லக்னத்திற்கோ, சந்திரனுக்கோ, அது 5ம் பாவமாக அமையப் பெற்றுவிட்டால் தெய்வீகப் பணிகளில் ஈடுபடக்கூடிய அமைப்பு உண்டாகும். 5ல் அமையப் பெற்று விட்டால் தெய்வீகப் பணிகளில் ஈடுபடக்கூடிய அமைப்பு உண்டாகும். 5ல் அமையும் குரு பகவான் சூரியன், சந்திரன், செவ்வாய், கேது ஆகியவற்றில் ஏதேனும் ஒரு  கிரகச் சேர்க்கைப் பெற்று, அதன் தசா அல்லது புக்தி நடைபெற்றால்  கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்யக்கூடிய வாய்ப்பு உண்டாகும். அதுவே குரு பலஹீனமாக இருந்தாலும், 5ம் வீட்டில் சனி, ராகு போன்ற பாவிகள் அமையப் பெற்றாலும் ஆன்மிக, தெய்வீக சிந்தனைகளால் ஈடுபாடு குறையும்.

ஜோதிடமாமணி முருகு பாலமுருகன்  கைபேசி எண் 0091 72001 63001


Jothida mamani  Murugu Balamurugan. Astro Ph.D.research scholar cell-00917200163001

Sunday, March 25, 2012

தாய்

தாய் என்ற வார்த்தைக்குத்தான் என்ன மதிப்பு. தாய் என்றாலே அன்பு, பாசம், பண்பு என்று எல்லாம் கலந்த கலவையாக அல்லவா இருக்கிறாள். ஆசைப்பட்டா, காசு இருந்தா எல்லாத்தையும் வாங்கலாம். அம்மாவ வாங்க முடியுமா, என்ன ஒரு கவிஞனின் வார்த்தைகள். அம்மாவை புகழாத கவிஞனோ, மகளோ, மகன்களோ இந்த பூமியில் இருக்கவே முடியாது. கருவறையில் பத்து மாதங்கள் நம்மை பத்திரமாக பாதுகாத்து உள்ளிருந்து நாம் தரும் துன்பங்களை எல்லாம் பொறுமையுடன் தாங்கி, தான் ஆசைபட்டவைகளை உண்ணாமல், உறங்காமல் அனைத்தையும் தியாகம் செய்து பூமியில் நாம் ஜனிக்க காரணமாக விளங்குபவள் தாய். நாம் பிறந்தவுடன் அள்ளி அணைத்து முத்தமிட்டுதான் பட்ட கஷ்டங்களை எல்லாம் மறந்து பாலூட்டி சீராட்டி வளர்ப்பவள் தாய். ஒரு தாய்க்கு ஒரு மகன் எழுதிய கவிதை வரிகள் 'அடுத்த ஜென்மத்தில் என் தாய்க்கு மிதி

அணிகளாய் பிறக்க ஆசைப்படுகிறேன். என்னை கருவறையில் சுமந்த என் தாயை நான் சுமக்க அது ஒன்றே வழி'  என்று எழுதியிருக்கிறான்.

இப்படி தாயின் பெருமைகளைப் பற்றி கூறிக்கொண்டே போகலாம். ஆனால் நாம் பிறந்த நேரம் தாய்க்கு நல்லது செய்யுமா? தாய் வழி உற்றார், உறவினர்களிடையே பந்தம் நீடிக்குமா? தாயின் உடல் ஆரோக்கியம் எப்படி இருக்கும்? நம்மால் அவளுக்கு அனுகூலம் உண்டா? அவளால் நமக்கு நற்பலன் விளையுமா? என்பதைப் பற்றியெல்லாம் ஜோதிடம் என்ற காலக கண்ணாடியின் மூலம் தெளிவாக அறியலாம்.

இதற்கு உறுதுணையாக இருப்பது அவரவரின் ஜனன காலத்தில் அமையும் 4 ம் பாவமே. நவக்கிரகங்களில் தாய் காரகனாக விளங்குபவர் சந்திரன். ஒருவரது ஜாதகத்தில் 4 ம் பாவமும், தாய் காரகன் சந்திரனும் பலமாக அமைவது ஜாதகரைப் பெற்ற தாய்க்கு நல்ல அனுகூலத்தை ஏற்படுத்தும். தாயால் ஜாதகருக்குக் கிடைக்க வேண்டிய அனைத்து நற்பலன்களையும் உண்டாக்கும்.

4ம் அதிபதி ஆட்சி உச்சம் பெற்றிருப்பதும், நட்பு கிரக வீட்டில் அமைந்திருப்பதும் சிறப்பு. நட்பு கிரகசேர்க்கைப் பெற்றிருப்பதும் குரு போன்ற சுப கிரக பார்வையுடன் 4ம் அதிபதியும் சந்திரனும் பலமாக அமையப் பெற்றிருப்பதும், தாய்க்கு நீண்ட ஆயுளை ஏற்படுத்தக்கூடிய அமைப்பாகும். தாய் காரகன் சந்திரன் ஆட்சி உச்சம் பெற்றோ, நட்பு வீட்டில் அமையப் பெற்றோ இரந்தால் தாய்க்கு ஆயுள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

4ம் அதிபதி பலம் பெற்று, திரிணோதிபதிகளாகிய 5,9 ம் அதிபதிகளின் சேர்க்கை பெற்று அந்த கிரகங்களுக்கு சந்திரனின் தொடர்பிருந்தால், ஜாதகருக்கு தாயால் ஏற்படக்கூடிய அனைத்து நற்பலன்களும், செல்வம் மற்றும் செல்வாக்குகளும் கிடைக்கப் பெறும். தாய் வழியில் அசையாச் சொத்து யோகம் உண்டாகும். தாய் வழி உற்றார் உறவினர்களின் அனுசரணையும், ஆதரவும் சிறப்பாக இருக்கும்.

குழந்தை பிறப்பு என்பது தாய்க்கு மறு ஜென்மம் என்றே கூறலாம். எல்லா பெண்களுக்கும் எளிதாக குழந்தை பிறந்து விடுவதில்லை. சிலருக்கு அறுவை சிகிச்சை மூலமோ, சிலருக்கு ஆயுதங்களை உபயோகப்படுத்தியோ, குழந்தையை வெளியே எடுக்கக்கூடிய சூழ்நிலைகளும் உண்டாகின்றது. அதற்கும் பிறக்கும் குழந்தையின் 4ம் பாவமானது பாதிக்கப்பட்டோ, சுபர் பார்வை இன்றி இருந்தாலோ, சனி பார்வை மற்றும் கிரகணங்களை ஏற்படுத்தக்கூடிய ராகு கேது,  சேர்க்கை பெற்றோ சந்திரன் இருந்தாலும் பிரசவத்தில் மிகவும் கஷ்டங்களை எதிர்கொள்ள நெரிடுகிறது.

கடந்த மாதம் அயல்நாட்டில் பிரசவத்தின் போது தாயும் மகளும் இறந்து விட்டதாக அறிவித்த மருத்துவர்கள் மீண்டும் அவர்கள் உயிர்த்தெழுந்த அதிசயத்திற்க விடை தெரியாமல் விழித்தார்கள். இதற்குக் காரணம் விஞ்ஞானத்தையும் தாண்டி அந்த குழந்தையின் 4ம் பாவ கிரக அமைப்பாக இருக்கலாமல்லவா?

சில குழந்தைகள் பிறக்கும்போதே தாயை இழக்கக்கூடிய சூழ்நிலைகள் உண்டாகிறது. இதற்கு என்ன காரணம் என ஜோதிடரீதியாக பார்க்கம் போது 4ம் அதிபதி நீசம் பெற்றிருந்தாலும், சந்திரன் பலஹீனமாக  இருந்து சனி, ராகு போன்ற பவ கிரகங்களின் சேர்க்கை பெற்று சந்திரனின் நட்சத்திரங்களான ரோகிணி, அஸ்தம், திருவோணம் போன்ற நட்சத்திரங்களில் பிறந்திருந்தால், முதலில் சந்திர திசை நடக்கும். அதுவே தாய்க்குக் கண்டத்தைக் கொடுக்கும்.
4 ம் பாவமும் சந்திரனும் பாதிக்கப்பட்ட ஒரு ஜாதகருக்கோ, ஜாதகிக்கோ பாதிக்கப்பட்ட கிரகங்களின் தசா புத்திகள் நடைபெறும் காலங்களில் தாய்க்குப் பாதிப்புகளை உண்டாக்கும். மேலே குறிப்பிட்ட காலத்தில் ஏழரை சனி, அஷ்டமச் சனி போன்றவைகள் நடைபெற்றாலும் தாய்க்கு மரணத்திற்கு ஒப்பான கண்டங்கள் ஏற்படும். தூய்மையானது தாய்மை. குழந்தையை இழிவுபடுத்தக்கூடிய சில பேய்களும் தாய் என்ற பெயரில் உலா வந்து கொண்டுதான் இருக்கின்றனர். இப்படி தாயாலேயே கொடுமைகளை அனுபவிக்கும் குழந்தைகளும் இந்த பூமியில் இருக்கத்தான் செய்கிறார்கள். பிறந்தவுடன் குப்பைத் தொட்டியில் போடுவது, கொடுமைப் படுத்துவது, மற்றவர்களுடன் சேர்ந்துக் கொண்டு பெற்ற பிள்ளைகளையே விரோதியாக நினைப்பது போன்ற துரூ குணங்களைக் கொண்ட தாய் அமையக் காரணம் என்னவென்று ஜோதிட ரீதியாக  ஆராயும்போது, 4ம் அதிபதிபதியும் சந்திரனும்  6ம் வீட்டிலோ, பாதக ஸ்தானத்திலோ அமையப் பெற்றிருந்தாலும், 4ம் அதிபதியும், 6ம் அதிபதியும் சேர்க்கை பெற்றிருந்தாலும்  தாயாலேயே பிள்ளைகளுக்கு துன்பம் உண்டாகும்.

காலபுருஷ தத்துவப்படி 4ம் பாவம் கடகராசியாகும். அதுவே சந்திரனின் சொந்த வீடாகும். கடகத்தில் சனி, ராகு போன்ற பாவ கிரகங்கள் அமையப் பெற்றிருந்தால் தாய்க்குப் பாதிப்பு, தாய் வழி உறவினர் வகையில் பகை உண்டாகம்.

ஜோதிடமாமணி முருகு பாலமுருகன்  கைபேசி எண் 0091 72001 63001


Jothida mamani  Murugu Balamurugan. Astro Ph.D.research scholar cell-00917200163001



Saturday, March 24, 2012

காதலை ஏற்படுத்தும் 5ம் பாவம்

காதல் இன்றைய தலைமுறையினருக்கு இன்றியமைதாகி விட்டது. பழங்காலங்களில் நம்முடைய மூதாதையர்கள் சொந்தத்திலேயோ அல்லது அசலிலேயோ பார்த்து நிச்சயம் செய்தவர்களையே திருமணம் செய்து கொள்வார்கள். நம்மைச் சார்ந்தவர்களுக்கோ எந்த விதமான பங்கமும் ஏற்படாமலிருக்கும். இந்த முறைகள் தலைமுறை தலைமுறையாக பின்பற்றி வரக்கூடிய ஒன்றாகும்.

சாதி, மதம், மொழி, இனம் மாறாமல் சந்ததிகள் தொடரும். ஆனால் ஒரு சிலர் இந்த எல்லாவிதமான சம்பிரதாயங்களையும் முறியடிப்பது போல காதல் என்னும் பெயரில் தாம் விரும்பியவர்களையே கைபிடித்து, அனைவருக்கும் பிரச்சினைகளை உண்டாக்கி விடுகிறார்கள். மனதில் ஏற்படக்கூடிய இனக்கவர்ச்சியையும் காதல் என்ற பெயரால் தம்முடைய வாழ்க்கையை நாசமாக்கிக் கொள்பவர்களும் உண்டு.

ஏன், இப்படி காதல் என்ற வட்டத்திற்குள் மாட்டிக்கொள்கிறார்கள் என்று பார்த்தால், அவரவரின் ஜனன ஜாதக ரீதியான 5ம் பாவத்தான் காரணமாக இருக்கிறது. ஒருவரைப் பார்த்தவுடன் மனதில் ஏற்படக்கூடிய ஈர்ப்புத் தன்மை, உணர்வுகள் அவற்றால் உண்டாகக்கூடிய பாசம், அவர்தான் தன் வாழ்க்கை என முடிவெடுக்கக்கூடிய மனோபாவம் அனைத்திற்கும் 5ம் பாவம் ஒரு முக்கிய காரணமாக அமைகிறது.

5ம் பாவமானது பாதிக்கப்படாமல் இருந்து உறவுகளைக் குறிக்கக்கூடிய கிரகங்களான சூரியன், செவ்வாய், சந்திரன் ஆகியவை 5ல் அமையப் பெற்று, பாவகிரக பார்வையின்றி குரு போன்ற சுபகிரக பார்வைப் பெற்றிருந்தால் பெற்றோர்களும், பெரியோர்களும் பார்த்து நிச்சயம் செய்யக்கூடியவரையே ஜாதி, மதத்திற்க எந்த பங்கமும் ஏற்படாமல் மணம் செய்து கொள்ளக்கூடிய அருமையான யோகம் உண்டாகிறது.

அதுவே 5,7,9, பாவங்களில் சனி, ராகு, கேது போன்ற பாவகிரகங்கள் அமையப்பெற்றாலோ 5,7,9ம் அதிபதிகள் பாவகிரகங்களின் பார்வையோ, சேர்க்கையோ பெற்றாலோ, தாம் விரும்பியவரை மணக்கும் அமைப்பு, கலப்புத் திருமணம் செய்யக்கூடிய சூழ்நிலை போன்றவை உண்டாகிறது. 5ல் பாவிகள் அமையப் பெற்று 7ம் அதிபதியின் சேர்க்கை பெற்றிருந்தாலும், 5,7 க்கு அதிபதிகள் இணைந்திருந்தாலும், ஜாதகருக்கு காதல் உணர்வு அதிகரித்து விரும்பியவரையே கைபிடிக்கும் நிலை உண்டாகும்.

பொதுவாக 5,7 க்கு அதிபதிகள் இணைந்திருந்தாலும், ஒருவருக்கொருவர் பார்த்துக்கொண்டு சனி, ராகு போன்ற கிரக சேர்க்கைப் பெற்றிருந்தாலும் 5,7 க்கு அதிபதிகள் பரிவர்த்தனை பெற்றிருந்தாலும் காதல் திருமணம், கலப்புத் திருமணம் உண்டாகிறது.

நவகிரகங்களில் சந்திரன் மனோகாரகன், அறிவு காரகனாவார். ஆண்களுக்குச் சுக்கிரன் களத்திர காரகனாவார். பெண்களுக்குச் செவ்வாய் களத்திர காரகனாவார். ஒருவரது ஜாதகத்தில் 5,7,9ல் செவ்வாய், சுக்கிரன், சந்திரன் ஆகிய கிரகங்கள் சனி, ராகு கேதுவால் பாதிக்கப்பட்டிருந்தாலும் சனி பார்வை 5,7 க்கு இருந்தாலும் சொந்தத்தில் திருமணம் செய்யாமல் அந்நியத்தில் ஓரளவுக்கு கலப்பில் திருமணம் செய்ய நேரிடும்.

ஒருவர் ஜாதகத்தில் 5ல் 1,7 க்கு அதிபதிகள் இருந்தாலும், 5 ம் அதிபதி பாவியாக இருந்து ஜென்ம லக்னத்தில் அமையப் பெற்று 7ம் வீட்டைப் பார்வைச் செய்தாலும், காதல் திருமணம், கல்ப்பு திருமணம் உண்டாகிறது. பொதுவாக 5,7,9 ல் சனி ராகு போன்ற பாவகிரகங்கள் அமையப் பெற்றால் கலப்புத் திருமணம் காதல் திருமணம் உண்டாகிறது. அதுபோல  5,7 க்கு அதிபதிகள் கேது சேர்க்கைப் பெற்றாலும், கேதுவின் நட்சத்திரத்தில் அமையப் பெற்றாலும் காதல் திருமணம் உண்டாகிறது.


ஜோதிடமாமணி முருகு பாலமுருகன்  கைபேசி எண் 0091 72001 63001

Jothida mamani  Murugu Balamurugan. Astro Ph.D.research scholar cell-00917200163001