Wednesday, December 13, 2017

2018 புத்தாண்டுப் பலன்கள்- சிம்மம்




2018 புத்தாண்டுப் பலன்கள்- சிம்மம் 

மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம்

திலும் தனித்து நின்று போராடி வெற்றி பெறும் ஆற்றல் கொண்ட சிம்ம ராசி நேயர்களே! உங்கள் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள். இந்த 2018-ஆம் ஆண்டு முழுவதும் சனி பகவான் உங்கள் ஜென்ம ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5-ஆம் வீட்டில் சஞ்சரிப்பது ஓரளவுக்கு அனுகூலமான அமைப்பாகும். கேது பகவான் 6-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் மறைமுக எதிர்ப்புகள் மறைந்து தொழில், வியாபாரத்திலிருந்த போட்டிகள் குறையும். பூர்வீக சொத்து விஷயங்களில் இருந்த வம்பு வழக்குகளில் சாதகமான பலன்கள் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகரித்தாலும் உங்களின் உழைப்பாற்றலாலும் எதையும் சகஜமாக எடுத்துக் கொள்ளும் மனப்பக்குவத்தாலும் எல்லாவற்றையும் சமாளித்து வெற்றி நடை போடுவீர்கள். குரு பகவான் தொடக்கத்தில் 3-ஆம் வீட்டிலும் வரும் 11.10.2018 முதல் 4-ஆம் வீட்டிலும் சஞ்சரிக்க இருப்பது அவ்வளவு சாதகமான அமைப்பு என்று கூற முடியாது என்பதால் பண வரவுகளில் நெருக்கடிகள் ஏற்படும். உடல் நிலையில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய கெடுதிகள் ஏற்படாது. குடும்பத்தில் திருமண சுபகாரியங்கள்  சில தடைகளுக்குப்பின் கை கூடும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அனுகூலமான பலன்களை அடைய முடியும். புத்திரர்களால் ஒரு சில மன சஞ்சலங்கள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதிகள் உண்டாகாது. பணம் கொடுக்கல்- வாங்கலில் வீண் பிரச்சினைகளும், விரயங்களும் ஏற்படும். பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பதைத் தவிர்க்கவும். பயணங்களால் அனுகூலப்பலனை அடைவீர்கள்.

உடல் ஆரோக்கியம்

தேவையற்ற அலைச்சல், டென்ஷன், மந்த நிலை, கை கால் வலி போன்றவை உண்டாகும். நேரத்திற்கு உணவு உண்ண முடியாத நிலையால் வயிறு சம்பந்தபட்ட பாதிப்புகளும் ஏற்படும். அன்றாடப் பணிகளைக் கூட மிகவும் நிதானமாகத்தான் செய்வீர்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் ஆதரவு மன அமைதியைத் தரும். மருத்துவ செலவுகள் கட்டுக்குள் இருக்கும். 

குடும்பம், பொருளாதார நிலை

குடும்ப ஒற்றுமையானது சுமாராகவே இருக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளை மேற்கொண்டால் தடைகளுக்குப் பின்பே அனுகூலப்பலனை அடைய முடியும். வண்டி வாகனங்கள் மற்றும் வீடு, மனையை புதுப்பிப்பதற்காக செலவுகளைச் செய்ய நேரிடும். பணவரவுகள் ஏற்ற இருக்கமாக இருப்பதால் ஆடம்பர செலவுகளைக் குறைப்பது நல்லது. உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அவர்களால் சில ஆதாயங்களைப் பெற முடியும். 

உத்தியோகம்

உத்தியோகஸ்தர்களுக்கு சிறுசிறு பிரச்சினைகளும் சங்கடங்களும் ஏற்படும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்களால் வீண் அலைச்சல், புதிய இடத்தில் உடன்பணிபுரிபவர்களிடம் ஒத்துப் போக முடியாத நிலை உண்டாகும் என்றாலும் எதிர்பார்க்கும் பதவி உயர்வுகளும் ஊதிய உயர்வுகளும் சில தடைகளுக்குப்பின் கிடைக்கும்.  உயரதிகாரிகளின்  ஆதரவு உங்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தும். 

தொழில், வியாபாரம்

தொழில், வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. கூட்டாளிகளும் தொழிலாளர்களும் உங்களுக்கு சற்று ஒத்துழைப்பாகச் செயல்படுவதால் ஓரளவுக்கு லாபம் கிட்டும். நவீன கருவிகள் பழுதடைந்து வீண் விரயத்தை ஏற்படுத்தும். எந்த வித போட்டிகளையும் சமாளிக்கும் ஆற்றலும் உண்டாகும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடையவற்றால் லாபங்கள் கிட்டும்.

பெண்களுக்கு

உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்த வேண்டியிருக்கும். பொருளாதார நிலை ஏற்ற இறக்கம் நிறைந்ததாக இருக்கும். வீண் செலவுகள் ஏற்படும் என்பதால் ஆடம்பர செலவுகளைக் குறைப்பது நல்லது. தேவையற்ற அலைச்சல், டென்ஷன், உறவினர்களிடையே கருத்து வேறுபாடு போன்றவை உண்டாகும். குடும்பத்தில் ஒற்றுமை சுமாராக அமையும். திருமண சுப காரியங்கள் தடைகளுக்குப் பின் கைகூடும். புத்திர வழியில் சிறுசிறு கவலைகள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதிகள் இல்லை. முடிந்தவரை பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்த்து விடுவது நல்லது. 

கொடுக்கல்- வாங்கல்

இந்த ஆண்டில் குரு சாதகமற்று சஞ்சரிப்பதால் பணம் கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனமுடன் செயல்படுவது உத்தமம். கொடுத்த கடன்களை வசூலிப்பதில் வீண் பிரச்சினைகள் ஏற்படும். எனவே பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பதைத் தவிர்க்கவும்.  கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற முடியாத சூழ்நிலை ஏற்படும். 

அரசியல்வாதிகளுக்கு

அரசியல்வாதிகள் எதிலும் சற்று கவனமுடன் செயல்பட்டால் மக்களின் ஆதரவைப் பெற முடியும். பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருக்கும். மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை எதிர்நீச்சல் போட்டாவது காப்பாற்றி விடுவீர்கள். கட்சிப் பணிகளுக்காக வீண் செலவுகளை செய்ய நேரிட்டாலும் பெரிய கெடுதிகள் இல்லை. எதிலும் சிந்தித்து நிதானமுடன் செயல்படுவதன் மூலம் பதவியைக் காப்பாற்றிக் கொள்ள முடியும்.

விவசாயிகளுக்கு

விவசாயிகளுக்கு மகசூல் சுமாராகத்தான் இருக்கும் என்றாலும் பட்டபாட்டிற்கான பலன்களைப் பெற்று விடுவீர்கள். வங்கிக் கடன்கள் எதிர்பார்த்த நேரத்தில் கிடைக்க தாமதம் ஆகும். கால் நடைகளால் ஓரளவுக்கு லாபம் கிட்டும். புதிய நவீன கருவிகள் வாங்கும் நோக்கங்களை சற்று தள்ளி வைப்பது நல்லது. புழு பூச்சிகளின் தொல்லைகளால் வீண் விரயங்களும் உண்டாகும். 

கலைஞர்களுக்கு

எதிர்பார்த்த வாய்ப்புகள் கை நழுவிப் போனாலும் நல்ல வாய்ப்புகள் தேடி வரும். இந்த ஆண்டு நிறைய தேவையற்ற அலைச்சல்களும், சுகவாழ்வு பாதிப்படையக் கூடிய சூழ்நிலைகளும் உண்டாகும். பண வரவுகள் ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். முடிந்த வரை தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து விடுவது நல்லது. பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்க்கவும்.

மாணவ- மாணவியருக்கு

கல்வியில் மந்தமான நிலை இருக்கும். எதையும் எளிதில் புரிந்து கொள்ள இயலாத அளவிற்கு ஞாபக மறதி, மனக் குழப்பங்கள் உண்டாகும். பெற்றோர்களின் ஆதரவு குறையும். விடாமுயற்சியுடன் செயல்பட்டால் மட்டுமே நல்ல மதிப்பெண்களைப் பெற முடியும். நண்பர்களின் ஆதரவும் உங்களுக்கு உற்சாகத்தை உண்டாக்கும். விளையாட்டுப் போட்டிகளில் கவனம் தேவை.

மாதப் பலன்கள்

ஜனவரி: இம்மாதம் ஜென்ம ராசிக்கு 3-ல் செவ்வாய், 6-ல் கேது சஞ்சரிப்பதும் மாதபிற்பாதி 6-ல் சூரியன் சஞ்சரிக்க இருப்பதும் ஓரளவுக்கு சாதகமான அமைப்பு என்பதால் கடந்த கால பிரச்சினைகள் படிப்படியாகக் குறையும். பண வரவுகளிலிருந்த தடைகள் விலகி குடும்பத்தில் சுபிட்சமான நிலை உண்டாகும். கணவன்-- மனைவி சற்று அனுசரித்து நடப்பது நற்பலனைத் தரும். திருமண சுபகாரியங்கள் தடைகளுக்குப்பின் கைகூடும். பொன், பொருள் சேரும். சிலருக்கு வீடு, வாகனம் போன்றவற்றை வாங்கும் வாய்ப்பு உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அனுகூலப்பலனைப் பெற முடியும். அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு தடைப்பட்ட பதவி உயர்வுகள் யாவும் கிடைக்கப் பெறும். முருகப்பெருமானை வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 22-01-2018 அதிகாலை 12.48 மணி முதல் 24-01-2018 காலை 08.39 மணி வரை. 

பிப்ரவரி: உங்கள் ராசிக்கு மாதமுற்பாதியில் 6-ல் சூரியன், புதன், சுக்கிரன் சஞ்சரிக்க இருப்பதும் ஜென்ம ராசிக்கு 6-ல் கேது  சஞ்சாரம் செய்வதும் ஓரளவுக்கு அனுகூலத்தை ஏற்படுத்தும் அமைப்பு என்பதால் எடுக்கும் காரியங்களில் சாதகமான பலன்களைப் பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய கெடுதிகள் ஏற்படாது. பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருந்தாலும் குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்து விட முடியும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வதால் எதிர்பாராத உதவிகளைப் பெறுவீர்கள். பணம் கொடுக்கல்- வாங்கலில் கவனமுடன் செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்த்த லாபத்தினைப் பெற்றுவிட முடியும். தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து விடுவது நல்லது. உத்தியோகஸ்தர்கள் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். துர்க்கையம்மனை வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 18-02-2018 காலை 06.33 மணி முதல் 20-02-2018 மதியம் 02.07 மணி வரை. 

மார்ச்: உங்கள் ராசிக்கு மாதக்கோளான சூரியன் சாதகமற்று சஞ்சரிப்பதும் 3-ல் குரு சஞ்சாரம் செய்வதும் எடுக்கும் முயற்சிகளில் இடையூறுகளை ஏற்படுத்தும் என்பதால் எதிர்பாராத திடீர் விரயங்களை எதிர்கொள்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி உஷ்ணம் சம்பந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகும். கணவன்- மனைவியிடையே உண்டாகக்கூடிய வீண் வாக்குவாதங்களால் குடும்பத்தில் நிம்மதி குறையும். திருமண சுபகாரியங்களில் தாமத நிலை உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை நிலவும். வரவேண்டிய வாய்ப்புகளும் கைநழுவிப் போகும். உத்தியோகஸ்தர்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்த்து தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதால் அலைச்சலை குறைத்துக் கொள்ள முடியும். தினமும் விநாயகரை வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 17-03-2018 மதியம் 01.36 மணி முதல் 19-03-2018 இரவு 08.13 மணி வரை.  

ஏப்ரல்: உங்கள் ராசியாதிபதி சூரியன் 8-ல் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் உஷ்ணம் சம்பந்தபட்ட பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றாலும் 3-ல் சஞ்சரிக்கும் குரு வக்ரகதியில் சஞ்சரிப்பதாலும், 6-ல் கேது சஞ்சரிப்பதாலும் எதையும் சமாளித்து ஏற்றம் பெறுவீர்கள். பணவரவுகளிலிருந்த தடைகள் விலகும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளிலும் அனுகூலம் கிட்டும். நல்ல வரன்கள் தேடி வரும். பொன் பொருள் சேரும். குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியும்.  தொழில் ரீதியாக இருந்த போட்டிகள் குறையும். வரவேண்டிய வாய்ப்புகள் தடையின்றி வந்து சேரும். வெளியூர், வெளிநாடுகளுக்கு பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பும் கிட்டும். கூட்டாளிகள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு விரும்பிய இடமாற்றங்கள் கிடைக்கும். சிவபெருமானை வழிபடுவது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 13-04-2018 இரவு 10.08 மணி முதல் 16-04-2018 அதிகாலை 04.10 மணி வரை. 

மே: உங்கள் ராசியாதிபதி சூரியன் சாதகமாக சஞ்சரிப்பதும், 10-ல் சுக்கிரன் சஞ்சாரம் செய்வதும் ஓரளவுக்கு நல்ல அமைப்பு என்பதால் பணவரவுகளில் இருந்த நெருக்கடிகள் குறையும். தடைப்பட்ட திருமண சுப காரியங்களில் தடைகளுக்குப்பின் வெற்றி கிட்டும். குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். அசையும், அசையா சொத்துகள் வாங்கும் முயற்சிகளில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. உற்றார் உறவினர்களால் ஓரளவுக்கு அனுகூலம் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு இருந்து வந்த போட்டி பொறாமைகள் விலகும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் செல்லும் வாய்ப்புகள் கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் கவனமுடனிருப்பது நல்லது. வெளியாட்களிடம் பேசும் போது பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்கவும். குருவுக்குரிய பரிகாரங்களைத் தொடர்ந்து செய்வது நல்லது. 

சந்திராஷ்டமம்: 11-05-2018 காலை 07.16 மணி முதல் 13-05-2018 மதியம் 01.36 மணி வரை. 

ஜூன்: உங்கள் ராசிக்கு இம்மாதம் 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பதும் மாதபிற்பாதியில் 11-ல் சூரியன் சஞ்சாரம் செய்ய இருப்பதும் ஏற்றத்தை ஏற்படுத்தும் அமைப்பாகும். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். திருமண சுபகாரியங்கள் தடைகளுக்குப்பின் கைகூடும். எடுக்கும் முயற்சிகளிலும் வெற்றி கிட்டும். குடும்பத்தில் சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். பொன், பொருள் சேரும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியளிக்கும். ஆன்மீக தெய்வீகப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். பெரிய மனிதர்களின் தொடர்பும் கிட்டும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்க்கும் லாபங்களை தடையின்றிப் பெற முடியும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது, எதிலும் சிந்தித்துச் செயல்படுவது மிகவும் நல்லது. சனிப்ரீதி ஆஞ்சநேயரை வழிபடவும்.

சந்திராஷ்டமம்: 07-06-2018 மதியம் 03.48 மணி முதல் 09-06-2018 இரவு 11.15 மணி வரை. 

ஜூலை: உங்கள் ராசிக்கு இம்மாதம் 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பதும் மாதமுற்பாதியில் 11-ல் சூரியன் சஞ்சாரம் செய்வதும் அனுகூலமான அமைப்பு என்பதால் சுகவாழ்வு, சொகுசு வாழ்வு யாவும் சிறப்பாக அமையும். திருமண சுபகாரியங்கள் சிறுசிறு தடைகளுக்குப் பின் கைகூடும். எடுக்கும் முயற்சிகளிலும் வெற்றி கிட்டும். குடும்பத்தில் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் உண்டாகக் கூடிய காலம் என்பதால் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு அனுகூலமாக அமைவார்கள். தொழில், வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்க்கும் லாபங்களை தடையின்றிப் பெற கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கும் எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் தாமதப்பட்டாலும், பணியில் நிம்மதியான நிலையிருக்கும். கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. குருவுக்குரிய பரிகாரங்களைத் தொடர்ந்து செய்யவும். 

சந்திராஷ்டமம்: 04-07-2018 இரவு 11.00 மணி முதல் 07-07-2018 காலை 07.44 மணி வரை.   

ஆகஸ்ட்: ஜென்ம ராசிக்கு 6-ல் செவ்வாய், கேது சஞ்சரிப்பது அனுகூலமான அமைப்பு என்றாலும் 12-ல் சூரியன் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகளை எதிர்கொள்ள நேரிடும். தொழில், வியாபார ரீதியாக ஓரளவுக்கு முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கும் உடன் பணிபுரிவர்களின் ஆதரவு கிட்டும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை குறையக்கூடிய சூழ்நிலைகள், வீண் வாக்குவாதங்கள் உண்டாகும் என்பதால் குடும்பத்தில் அனைவரையும் அனுசரித்துச் செல்வது நல்லது. ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபடக்கூடிய வாய்ப்புகளும் ஏற்படும். பூமி, மனை வாங்கும் விஷயங்களில் சற்று நிதானித்துச் செயல்படுவது ஆடம்பர செலவுகளைக் குறைப்பது நல்லது. பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். முருகப் பெருமானை வழிபடவும்.

சந்திராஷ்டமம்: 01-08-2018 அதிகாலை 05.00 மணி முதல் 03-08-2018 மதியம் 02.29 மணி வரை மற்றும் 28-08-2018 காலை 10.45 மணி முதல் 30-08-2018 இரவு 08.05 மணி வரை.  

செப்டம்பர்: ஜென்ம ராசியில் சூரியன் சஞ்சரிப்பதால் உடல்நிலையில் பாதிப்பு ஏற்படும் என்றாலும் 6-ல் செவ்வாய், கேது சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொள்ளும் வலிமை ஏற்படும். தேவையற்ற அலைச்சல், டென்ஷன், எடுக்கும் முயற்சிகளில் தடை போன்ற அனுகூலமற்றப் பலன்கள் உண்டாகும். பொருளாதார நிலை ஓரளவுக்கு சிறப்பாகவே இருக்கும். அசையும், அசையா சொத்துகளால் சிறு சிறு விரயங்களை சந்திப்பீர்கள். கணவன்- மனைவி விட்டுக் கொடுத்து நடந்து கொண்டால் குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து செல்வதன் மூலம் அபிவிருத்தியைப் பெருக்கிக்கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்துவதைத் தவிர்க்கவும். சிவ பெருமானை வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 24-09-2018 மாலை 05.21 மணி முதல் 27-09-2018 அதிகாலை 01.58 மணி வரை.  

அக்டோபர்: ஜென்ம ராசிக்கு 6-ல் செவ்வாய், கேது மாதபிற்பாதியில் 3-ல் சூரியன் சஞ்சாரம் செய்வதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். வரும் 11-ஆம் தேதி முதல் குரு 4-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் பணவரவுகள் தேவைக்கேற்றபடியிருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள். பல பெரிய மனிதர்களின் தொடர்புகள் கிடைக்கும். சிறு சிறு அலைச்சல், டென்ஷன்களை சந்திக்க நேர்ந்தாலும் பெரிய கெடுதியில்லை. உத்தியோகத்திலிருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளில் சற்று தாமத நிலை உண்டாகும். வெளியூர், வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பம் தடைகளுக்குப் பின் நிறைவேறும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதைத் தவிர்ப்பது நல்லது. தினமும் விநாயகப் பெருமானை வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 22-10-2018 அதிகாலை 01.18 மணி முதல் 24-10-2018 காலை 09.26 மணி வரை.  

நவம்பர்: இம்மாதம் 4-ல் புதன், 6-ல் செவ்வாய், மாதமுற்பாதியில் 3-ல் சூரியன் சஞ்சாரம் செய்வதால் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது உத்தமம். வீண் அலைச்சல்களை உண்டாக்கும் என்பதால் தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து விடுவது நல்லது. பண வரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். முடிந்த வரை குடும்பத்தில் உள்ளவர்களிடம் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது உத்தமம். திருமணம் போன்ற சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தாமத நிலை உண்டாகும். சிலருக்கு அசையும், அசையா சொத்துக்கள் மூலம் வீண் செலவுகள் ஏற்படும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு சற்று மந்த நிலையை சந்திக்க வேண்டியிருந்தாலும் பொருட் தேக்கம் ஏற்படாது. உத்தியோகஸ்தர்கள் பணியில் கவனமுடன் செயல்பட்டால் உயரதிகாரிகளின் ஆதரவினைப் பெற முடியும். சிவ பெருமானை வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 18-11-2018 காலை 10.09 மணி முதல் 20-11-2018 மாலை 06.37 மணி வரை. 

டிசம்பர்: இம்மாதம் 4-ல் சூரியன், 7-ல் செவ்வாய் சஞ்சாரம் செய்வதால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். குடும்பத்திலுள்ளவர்களாலும் மருத்துவச் செலவுகள் ஏற்படும். கணவன்- மனைவியிடையே உண்டாகக்கூடிய வீண் வாக்குவாதங்களால் குடும்பத்தில் நிம்மதி குறையும். திருமண சுபகாரியங்களில் தாமத நிலை உண்டாகும். பொருளாதாரநிலை ஏற்ற இறக்கமாக இருக்கும். கொடுக்கல்- வாங்கலில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை நிலவும். வரவேண்டிய வாய்ப்புகளும் கைநழுவிப் போகும். உத்தியோகஸ்தர்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்த்து தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிக்கும். எதிர்பாராத திடீர் விரயங்களை எதிர்கொள்வீர்கள். உறவினர்களால் வீண் பிரச்சினைகள் ஏற்படும். சிவபெருமானை வழிபாடு செய்வது உத்தமம். 

சந்திராஷ்டமம்: 15-12-2018 மாலை 06.45 மணி முதல் 18-12-2018 அதிகாலை 04.20 மணி வரை.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண்  - 1, 2, 3, 9, நிறம்  - வெள்ளை, சிவப்பு, கிழமை - ஞாயிறு, திங்கள்,     கல் - மாணிக்கம், திசை  - கிழக்கு, தெய்வம் - சிவன்

No comments: