Sunday, November 20, 2011

நன்மை செய்யும் நான்காம் எண்

                       நான்காம் எண்ணும் மற்ற எண்களைப் போலவே சிறப்பு வாய்ந்ததாகவே இருக்கும். நான்கு திசைகள், நான்கு வேதங்கள், நான்கு உபாயங்கள் என நான்காம் எண்ணுக்கு சிறப்புகளும் தனித்தன்மைகளும் உண்டு. 4, 13, 22, 31ம் தேதிகளில் பிறந்தவர்கள் நான்காம் எண்ணுக்குரியவர்களாகிறார்கள். நான்காம் எண்ணின் கிரகம் ராகுவாகும். நான்காம் எண்ணுக்குரிய ஆங்கில எழுத்துக்கள் ஈ, M, கூ  ஆகியவை. ராகு ஒரு சாயா கிரகமாகும்.பிடிவாத குணம்

           நான்காம் எண்ணில் பிறந்தவர்கள் ராகுவின் ஆதிக்கத்திற்குட்பட்டவர்கள் என்பதால் அதிக பிடிவாத குணம் இருக்கும். அடக்கமாகவோ, விட்டுக் கொடுக்கும் பண்பாகவோ பேசத் தெரியாது. எப்பொழுதும் வெட்டு ஒன்று துண்டு இரண்டாக பேசுவார்கள். அழுத்தம் திருத்தமாகவும் திட்டவட்டமாவும் இவர்களின் பேச்சு அமையும். பிறருடைய அந்தஸ்தையோ, வளத்தையோ, செல்வத்தையோ, பின்னால் இருக்கும் பலத்தையோ பற்றி சற்றும் தயக்கம் காட்டாமல் மனதில் பட்டதை தைரியமாக வெளிப்படையாகக் கூறக் கூடிய இயல்பு கொண்டவர்களாக இருப்பார்கள். எல்லா இடங்களிலும் தங்கள் கருத்துக்களையே நிலை நிறுத்த முயற்சிப்பார்களே தவிர பிறருடைய கருத்தை செவி கொடுத்தும் கேட்க மாட்டார்கள்.சண்டை போடுவது போல எப்பொழுதும் குரல் உச்ச ஸ்தாயியில் ஒலிக்கும். எவ்வளவுதான் நல்ல பயன்கள் இருந்தாலும் பிறர் சொல்வதை அப்படியே ஏற்றுக் கொள்ளாமல் மனதில் பட்டதற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பார்கள். ஒளிவு மறைவற்ற இவர்களின் அதிகாரமான பேச்சால் பல இன்னல்களைச் சந்திக்க நேரிடும். இவர்களை புரிந்து கொள்பவர்களால் மட்டுமே இவர்களை அனுசரித்துச் செல்ல முடியும். இந்த உலகத்தில் தனக்கு தெரியாத விஷயங்களே இல்லை என்ற ஆணவம் அதிகம் இருக்கும். புகழிலோ, பொருளிலோ அவ்வளவு ஆசை இருக்காது. எல்லோரும் தன் கருத்துக்களை புரிந்து கொண்டு பாராட்ட வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். பொதுவாகவே இவர்கள் எதிலும் சட்டென உணர்ச்சி வசப்படக் கூடியவர்கள். பொதுநல காரியங்களுக்காக தம் உயிரையும் தியாகம் செய்ய தயங்க மாட்டார்கள். காதல் விவகாரங்களில் ஈடுபடுவதும் உண்டு. அதில் முழு வெற்றி கிடைக்கும் என்று கூறி விட முடியாது. எந்தக் காரியத்தில் ஈடுபட்டாலும் ஒரு தீவிரவாதியாக செயல்படுவார்கள். திடீர் அதிர்ஷ்டங்களைக் காட்டிலும் உழைத்து முன்னேறுவதிலேயே அதிக விருப்பம் கொண்டவர்கள். சிலர் நடுத்தர வயதுக்கு மேல் ஞானிகள், துறவிகள் போல மாறி விடுவதும் உண்டு. எந்தக் காரியத்தையும் ஒருமுறைக்கு பலமுறை ஆராய்ந்த பிறகே முடிவெடுப்பார்கள்.

உடலமைப்பும் ஆரோக்கியமும்

நான்காம் எண்ணின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் சற்று தடித்த உடலமைப்பை பெற்றிருப்பார்கள். நடுத்தர உயரமும், வட்ட வடிவமான முகத் தோற்றமும் இருக்கும். இவர்களுக்கு எப்பொழுதும் ஏதாவது உடல் உபாதைகள் இருந்து கொண்டே இருக்கும். கறுப்பாகவோ அல்லது மாநிறமாகவோ இருப்பார்கள். இவர்களுடைய கால்கள் உடலுக்கேற்றபடி இல்லாமல் குறுகலாக இருக்கும். மற்றவர்கள் ஒருமுறை பார்த்தவுடன் மறுமுறை திரும்பிப் பார்க்க வைக்கக் கூடிய உருவ அமைப்பை பெற்றிருப்பார்கள். இவர்கள் நல்ல உழைப்பாளிகள் என்பதால் உடல் சோர்வு, முதுகு தண்டு வலி, மூட்டு வலிபோன்றவை ஏற்படும். மனஉளைச்சல் அதிகம் இருக்கும். தேவையற்றவைகளுக்கெல்லாம் குழப்பிக் கொள்வார்கள். கார சாரமான பொருட்களை அதிகம் சாப்பிடுவதால் வயிறு சம்மந்தமான வியாதிகளும், வாயுத் தொல்லைகளும் உண்டாகும். சிறு நீரகக் கோளாறு, வறட்டு இருமல், சளி, சுவாசக் கோளாறு போன்றவற்றால் அடிக்கடி பாதிப்பு உண்டாகும்.

குடும்ப வாழ்க்கை

நான்காம் எண்ணுக்குரியவர்கள் குடும்ப வாழ்க்கை ரீதியாக அதிர்ஷ்டசாலிகள் என்றே கூறலாம். ஏனெனில் இவர்களுக்கு இளம் வயதிலேயே திருமணம் நடைபெற்றுவிடக் கூடிய சூழ்நிலைகள் மிக அதிகம். இதனால் இவர்களுக்கு குடும்பத்தை நடத்தக் கூடிய பொறுப்பு வந்து விடுகிறது. அதற்கேற்றாற்போல இவர்களுக்கு அமையும் வாழ்க்கைத் துணையும் அமைதியுடனும், தெய்வ பக்தியுடனும் அமைந்து விடுவதால் கணவன் மனைவி இருவருக்கும் பிரச்சனைகள் வருவதென்பது மிகவும் அரிதாகும். கெட்ட பழக்க வழக்கங்களுக்கு எளிதில் அடிபணிபவராகவும் இருப்பார். எதிலும் கவனமுடன் நடந்து கொண்டால் இவர்களின் குடும்ப வாழ்க்கை மற்றவர்கள் பின்பற்றக் கூடியதாக இருக்கும்.

பொருளாதாரம் :

நான்காம் எண்ணில் பிறந்தவர்களுக்கு பணம் எப்போதுமே பற்றாக்குறையாகத்தான் இருக்கும். எவ்வளவு தான் சம்பாதித்தாலும் அதற்கேற்ற செலவுகளும் உண்டாகும் என்றாலும், இவர்கள் செய்யும் செலவு வீண் செலவாக இருக்காது. தாராள மனம் கொண்டவர்கள் என்பதால் யாராவது கஷ்டத்தைச் சொல்லி உதவி கேட்டால் கையில் இருப்பதை கொடுத்து விடுவார்கள். சொந்த செலவுக்காக திண்டாட வேண்டியிருக்கும். என்றாலும் எதையும் துணிவுடன் சமாளிக்கும் ஆற்றலும் இருக்கும்.

தொழில்

நான்காம் எண்ணில் பிறந்தவர்கள் எந்தத் தொழில் செய்தாலும் அதில் அதிக அக்கறையும் கவனமும் கொண்டிருப்பார்கள். நாம் நன்றாக இருக்கின்றோமோ, இல்லையோ மற்றவர்களுக்கு தொழில் செய்யும் நோக்கத்தோடு செயல்படுவார்கள். அரசாங்க உத்தியோகத்திலும் பெரிய அதிகாரிகளாகவும் இருக்க வாய்புண்டு. என்றாலும் பலர் அடிமைத் தொழில் செய்பவர்களாகவே இருப்பார்கள். ஹாஸ்டல், ஹோட்டல் நடத்துபவர்களாகவும் ஆல்கஹால் போன்றவை கலந்த மருந்துகளையும் விற்பனை செய்பவர்களாகவும் இருப்பார்கள். அச்சுத் தொழில், இயந்திரத் தொழில், இன்ஜினிர்ஸ், பௌதீக ஆராய்ச்சித் தொழில் போன்றவற்றிலும் முன்னேற்றம் உண்டாகும.

நண்பர்கள், பகைவர்கள்

நான்காம் எண்ணில் பிறந்தவர்கள் முரட்டு சுபாவம் உடையவர்கள் என்பதால் இவர்களுக்கு நண்பர்கள் அமைவது சற்றுக் கடினமான காரியமாக இருப்பதால் சில நண்பர்கள் அமைய வாய்புண்டு. 5, 8ம் எண்ணில் பிறந்தவர்கள் நண்பர்களாகவும், 1, 2, 9ம் எண்ணில் பிறந்தவர்கள் இவர்களிடம் ஒற்றுமையாக செயல்பட முடியாதவர்களாகவும் இருப்பார்கள்.

ராகுவுக்குரிய காலம்

ராகுவுக்கு என தனிப்பட்ட முறையில் நாள் கிடையாது. ஜோதிட சாஸ்திர ரீதியாக சனிக்கிழமையை ராகுவுக்கு உரியதாக கருதலாம். ஒவ்வொரு நாளும் ராகு காலம் என்று ஒன்றரை மணி நேரம் ராகுவுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் எந்த சுப காரியத்தையும் செய்யாதிருப்பது நல்லது.

ராகுவுக்குரிய திசை

தெற்கு திசை ராகுவுக்குரியது. பாலை வனங்கள், குகைகள், சுடுகாடு, புற்று, சுரங்கம், ஓட்டு வீடு, பாழடைந்த கட்டிடங்கள் உலர்ந்து போன நிலங்கள் போன்றவை ராகுவுக்கு சொந்தமான இடங்களாகும்.

ராகுவுக்குரிய அதிர்ஷ்ட கல்

நான்காம் எண் ராகுவின் ஆதிக்கத்தில் இருப்பதால் 4ம் எண் உடையவர்கள் கோமேதகத்தை அணிய வேண்டும். தேனின் நிறத்தைக் கொண்ட கோமேதகத்தை அணிவதால் உடல்நலம் சிறப்படையும். எடுக்கும் காரியங்களில் வெற்றி, செய்யும் தொழிலில் மேன்மை, செல்வம், செல்வாக்கு நற்பலன்களும் உண்டாகும்.

பரிகாரங்கள்

நான்காம் எண்ணில் பிறந்தவர்கள் ராகு பகவானுக்கு பரிகாரங்கள் செய்வது உத்தமம். ராகு காலங்களில் செவ்வாய், வெள்ளி, ஞாயிறு போன்ற நாட்களில் துர்கை அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மலர்களால் அலங்கரித்து அர்ச்சனை செய்வது உத்தமம். ராகு காலங்களில் சரபேஸ்வரரையும் வழிபடலாம்.
அர்த்த காயம் மஹாவீர்யம்
சந்த்ராதித்ய விமர்த நம்
ஹம்ஹிகா கர்ப்ப ஸம்பூதம்
தம் ராஸீம் ப்ரணமாம்யஹம்
இந்த ஸ்லோகத்தை தினமும் கூறி வருவது மிகவும் உத்தமம்.

அதிர்ஷ்டம் அளிப்பவை
அதிர்ஷ்ட தேதி : 1, 10, 19, 28,
 நிறம் : மஞ்சள்,
 திசை : கிழக்கு,
 கிழமை :ஞாயிறு,
 கல் : கோமேதகம்,
தெய்வம் : துர்கை.
cell - 0091-72001 63001/9383763001

நட்சத்திரப்படி எந்தெந்த வயதில் என்னென்ன நோய்?

                உடல் ஆரோக்கியம் என்பது ஒவ்வொருவரின் வாழ்விலும் உயிர் போன்றது. ஆனால், தற்போது உள்ள சூழ்நிலையில் சுத்தமான காற்றை சுவாசிக்க முடியவில்லை. சுத்தமான நீரை குடிக்கவும் முடியவில்லை. உடல் நிலையில் நான் மிகவும் ஆரோக்கியமாக இருக்கிறேன் என்று ஆயிரத்தில்ஒருவர் தான் சொல்ல முடியும். பிறக்கும் குழந்தைகள் கூட கருவிலேயே நோய்களை சுமக்க ஆரம்பித்து விடுகின்றனர். நோய் எதிர்ப்பு சக்தி என்பதும் குறைந்து கொண்டேதான் வருகிறது. தினமும் டயட் என்ற பெயரில் உண்ணும் உணவிற்கு கூட பட்டியலிட வேண்டியது இருக்கிறது. ஆனால், ஜோதிட ரீதியாக ஜெனன ஜாதகத்தில் ஒருவருக்கு கிரகங்கள் பலமாக அமைந்து விட்டால் நோய் வந்தாலும் அவை உடனே சரியாகி விடக் கூடிய அமைப்பு ஏற்படுகிறது. 
                பொதுவாக ஜெனன ஜாதகம் சிறப்பாக அமைந்து விட்டால் ஆரோக்கியமான வாழ்வு உண்டாகிறது. கிரக நிலைகள் மட்டும் இன்றி பிறந்த நட்சத்திர ரீதியாகவும் பாதிப்புகளை எதிர்கொள்ள நேரிடுகிறது. 27 நட்சத்திர காரர்களும் எந்த எந்த வயதில் என்னென்ன பாதிப்புகள் உண்டாகின்றன என்பதைப் பற்றி தெரிந்து கொள்வது அவசியமானதாகும்.

              அஸ்வினி நட்சத்திரம் கேதுவின் நட்சத்திரம் என்பதால் மனக்குழப்பவாதியாக இருப்பார்கள். 8, 16 வயதில் வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகளும் 10 வயதில் விரோதிகளால் கண்டமும், 13 வயதில் கண்களில் பாதிப்பும், 21 வயதில் உண்ணும் உணவே விஷமாகக் கூடிய சூழ்நிலையும், 37 வயதில் தேவையற்ற பெண்களின் சகவாசத்தால் கண்டமும், 40 வயதில் வண்டி வாகனங்களால் ஆபத்தும் 45 வயதில் அரசு வழியில் பிரச்சனைகளையும் எதிர்கொள்ள நேரும்.

                  பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு 7 வயதில் ஜுரமும், 15 வயதில் ரத்த சம்மந்தப்பட்ட பாதிப்பும், 22 வயதில் ரத்த சம்மந்தப்பட்ட பாதிப்பும், 22 வயதில் உணவே விஷமாகக் கூடிய சூழ்நிலையும், 25 வயதில் நாய்க்கடியால் பாதிப்பும் 27 வயதில் வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்பும் 30 வயதில் பால்வினை நோய்களும் 50 வயதில் சர்க்கரை நோயும் 53 வயதில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்பும், 59 வயதில் மூல வியாதியும் 64 வயதில் இருதய சம்மந்தப்பட்ட பாதிப்புண் உண்டாகும்.

                  கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு 5 வயதில் நீரால் கண்டமும், 7 வயதில் நெருப்பாலும் 10 வயதில் உயரமான இடத்திலிருந்து தவறி விழுவதால்கண்டமும் உண்டாகும். 11 வயதில் வண்டி வாகனங்களால் விபத்துக்களும் 21 வயதில் பால்வினை நோய்களும் 50, 55 வயதில் குடல் சம்மந்தப்பட்ட பாதிப்புகளும், 60 வயதில் மூல வியாதியால் பாதிப்பும் உண்டாகும்.

              ரோகிணி, நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு 3 வயதில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகளும் 5, 7 வயதில் ஜல சம்மந்தப்பட்ட பாதிப்பும், 9 வயதில் வண்டி வாகனங்களால் பாதிப்பும், 32 வயதில் உஷ்ண நோயும் 55 வயதில் திருடரால் கண்டமும், 57 வயதில் வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்பும் 65, 69 வயதுகளில் ஜல தொடர்புடைய பாதிப்பும் உண்டாகும்.

                           மிருக சீரிஷ நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு 3 வயதில் தண்ணீரால் கண்டமும் 8 வயதில் வண்டி வாகனங்களால் பாதிப்பும் 10 வயதில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்பும் 19 வயதில் ஆயுதங்களாலும் 21 வயதில் வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகளாலும் 33 வயதில் உண்ணும் உணவே விஷமாகக் கூடிய நிலையும் உண்டாகும்.

                    திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு 7 வயதில் அம்மையாலும் 12 வயதில் நாய்க்கடியாலும் 16 வயதில் விஷத்தாலும் 18 வயதில் மேலிருந்து தவறி விழுவதாலும் 33 வயதிலும் 47, 55, 60 வயதுகளில் மூலம் மற்றும் வயிற்று போக்காலும் கண்டம் உண்டாகும்.

                               புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு 3 வயதில் வலிப்பு, 5 வயதில் வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனை, 6 வயதில் ஆயுதங்களால் 15 வயதில் தேவையற்ற நண்பர்கள் சகவாசத்தால் 25 வயதில் அம்மை நோயால் 39 வயதில் வாத நோயால் 55, 68 வயதுகளில் நெருப்பு மற்றும் வயிற்று போக்கால் கண்டம் உண்டாகும்.

                       பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு 3 வயதில் ஆயுதங்களால் 7 வயதில் அம்மையால் 12, 16 வயதுகளில் ஜுரத்தால் கண்டம் உண்டாகும். 25 வயதில் தேவையற்ற நண்பர் சகவாசத்தால் 33 வயதில் திருடர்களால் 46 வயதில் நெருப்பு போன்றவற்றால் கண்டம் உண்டாகும்.

             ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு 3 வயதில் ஜுரமும் 5 வயதில் நரம்பு தளர்ச்சியும், 14 வயதில் அம்மை நோயும்,16 வயதில் நீராலும் 25 வயதில் விஷத்தாலும் கண்டம் உண்டாகும். 45 வயதில் வண்டி வாகனங்களால் 55 வயதில் வாதம் போன்றவற்றால் 64, 68 வயதுகளில் நீரிழிவு நோய் கண்டம் உண்டாகும்.

                   மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு 3 வயதில் ஜல சம்மந்தப்பட்ட பாதிப்புகளும் 7 வயதில் அம்மை நோயும், 9, 15 வயதில் விஷம் போன்றவற்றாலும் 20, 24 வயதுகளில் வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகளாலும் 40, 47 வயதில் நாய்க் கடி போன்றவற்றாலும் பாதிப்பு உண்டாகும். 50 வயதில் திருடர்களாலும் 56 வயதில் நெருப்பால் கண்டமும் உண்டாகும்.

            பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு 5 வயதில் விஷக் கடியாலும், 7 வயதில் அம்மையாலும் 8 வயதில் வயிற்று போக்காலும் 14 வயதில் ரத்த சம்மந்தப்பட்ட பாதிப்பாலும் கண்டம் உண்டாகும்.

              உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு 3 வயதில் நெருப்பாலும் 5 வயதில் அம்மையாலும் 7 வயதில் ஜல தொடர்புடைய பாதிப்புகளாலும் 14 வயதில் மிருகங்களாலும் 19 வயதில் விஷத்தாலும் 32 வயதில் ஆயுதங்களாலும் 45 வயதில் உயரத்திலிருந்து தவறி விழுவதாலும் 55 வயதில் வலிப்பு நோயாலும் கண்டம் ஏற்படும்.

         அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு 3 வயதில் ஜலத் தொடர்புடைய பாதிப்புகளும் 5 வயதில் மரம் முறிந்து மேலே விழுவதாலும் 25 வயதில் திருடர்களாலும் 33 வயதில் வண்டி வாகனங்களாலும் 50 வயதில் வாத நோயாலும், 57 வயதில் நம்பியவர்களே துரோகம் செய்வதாலும் 68 வயதில் தீராத வியாதிகளும் ஏற்பட்டு கண்டங்கள் உண்டாகும்.

          சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு 5 வயதில் வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகளும் 7 வயதில் அம்மை நோயும் 12 வயதில் விஷக் கடியாலும் 14 வயதில் உயரமான இடங்களில் இருந்து தவறி விழுவதாலும் 18 வயதில் ஜல சம்மந்தப்பட்ட பாதிப்புகளாலும் 25 வயதில் வாதத்தாலும் 48 வயதில் நெருப்பால் கண்டமும் உண்டாகும். 

                       சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு 3 வயதில் அஜீரண கோளாறு 4 வயதில் அம்மை நோய் 7 வயதில் வண்டி வாகனங்கள் கண்டம் 12 வயதில் உண்ணும் உணவே விஷமாகக் கூடிய நிலை 15 வயதில் ரத்த சம்மந்தப்பட்ட பாதிப்புகள் 25 வயதில் பால்வினை நோய்கள் 47, 54 வயதுகளில் வாதம் நீரிழிவு பிரச்சனைகள் 65 வயதில் வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் உண்டாகும்.

                       விசாக நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு 5 வயதில் தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனை 3 வயதில் வயிற்றுப் போக்கு 56 வயதில் ஆயுதங்களால் பாதிப்பு 68 வயதில் வாத நோய் உண்டாகும்.
                       
              அனுஷ நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு 5 வயதில் கை கால்களில் சிரங்கு 13  வயதில் நாய்க்கடி 22 வயதில் பால்வினை நோய் 28 வயதில் வண்டி வாகனங்களால் பாதிப்பு, 33 வயதில் எதிரிகளால் 40 வயதில் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளால் 44 வயதில் வாத நோய் 55 வயதில் தலை சம்மந்தப்பட்ட பிரச்சனைகளால் கண்டம் உண்டாகும்.

            கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு 4 வயதில் ரத்த சம்மந்தப்பட்ட பாதிப்பு கண்களால் பாதிப்பு, 7 வயதில் நாய்கடி, 13 வயதில் விஷத்தால் கண்டம் 21 வயதில் ஜலத்தால் கண்டம் 22 வயதில் பெண்களால் கண்டம் 30 வயதில் இருதய சம்மந்தப்பட்ட பாதிப்புகள் 50 வயதில் கண்களில் பாதிப்பு உண்டாகும்.
  
         மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு 12 வயதில் நாய்க் கடியாலும் 20 வயதில் உயரமான இடங்களில் இருந்து கீழே விழுவதாலும் 44 வயதில் நாய் கடியாலும் விரோதிகளாலும் 64 வயதில் வயிறுமற்றும் இருதய சம்மந்தப்பட்ட பாதிப்புகளாலும் 75 வயதில் தலை சம்மந்தப்பட்ட பிரச்சனைகளாலும் கண்டம் உண்டாகும்.

              பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு 4 வயதில் அஜீரணக் கோளாறும், 9 வயதில் மிருகங்களாலும் 11 வயதில் வயிற்று போக்காலும் 19, 22 வயதில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகளாலும் 30, 34 வயதுகளில் அரசாங்கத்தாலும் விரோதிகளாலும் 40, 45, 57 வயதுகளில் பக்கவாதம் போன்றவற்றாலும் பாதிப்பு உண்டாகும்.

               உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு 3 வயதில் அஜீரண கோளாறும், 5 வயதில் சிரங்கும், 7 வயதில் கண்களால் பாதிப்பும் 13 வயதில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்பும் 16 வயதில் நாய்க்கடியாலும் 27 வயதில் பால்வினை நோயாலும் 28 வயதில் ஆயுதங்களாலும் 35 வயதில் எதிரிகளாலும் 44 வயதில் நெருப்பால் 55 வயதில் வயிற்றுப் போக்கு மற்றும் மூல நோயால் பாதிப்பு உண்டாகும்.

           திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு 5 வயதில் ஜுரத்தாலும் 7 வயதில் ரத்த சம்மந்தப்பட்ட பாதிப்புகளாலும் 16 வயதில் விஷக் கடியாலும் 22 வயதில் பால்வினை நோயாலும் 36 வயதில் எதிரி மற்றும் திருடர்களாலும் 75 வயதில் உடல்நிலை பாதிப்பாலும் கண்டம் உண்டாகும்.

                     அவிட்ட நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு 3 வயதில் அஜீரண கோளாறு, 5 வயதில் ஜுரம், 7 வயதில் ரத்த சம்மந்தப்பட்ட பாதிப்பு 13 வயதில் உயரமான இடங்களில் இருந்து விழுவதால் 16 வயதில் நாய்க்கடியால் 22 வயதில் விஷத்தால் 28 வயதில் பெண்கள் தொடர்பால் 36 வயதில் ஜுரத்தால் கண்டம் உண்டாகும்.

            சதய நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு 3 வயதில் ஜுரத்தால் 5ல் வண்டி வாகனங்களால் 9 வயதில் ஜலத்தால் 23 வயதில் விஷத்தால் 57, 61 வயதில் வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகளால் கண்டம் உண்டாகும்.

                பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு 3 வயதில் அஜீரண கோளாறு 5 வயதில் ஜல சம்மந்தப்பட்ட பாதிப்பு, 7 வயதில் அம்மை, 22 வயதில் பெண்களால் 33 வயதில் திருடர் மற்றும் ஆயதத்தால் 42 வயதில் வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனையால் 50, 55 வயதில் வாத நோயால் கண்டம் உண்டாகும்.

             உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு 3 வயதில் அஜீரண கோளாறு, 15 வயதில் மிருகத்தால் 25 வயதில் பால்வினை நோயால் 30, 35 வயதில் நெருப்பால், 60 வயதில் வயிறுசம்மந்தப்பட்ட பாதிப்புகளால் கண்டம் உண்டாகும்.

              ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு 7 வயதில் உயரமான இடத்திலிருந்து விழுவதால் 12 வயதில் விஷத்தால் 20, 25 வயதுகளில் பெண்களால் 42 வயதில் திருடர்களால், 48, 51 வயது வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகளால் 52 வயதில் மூல வியாதிகளால் 55, 58 வயதுகளில் வாத நோய்களால் கண்டம் உண்டாகும்.

       ஒவ்வொரு நட்சத்திரதாரர்களும் மேற்கூறிய வயதுகளில் மிகவும் கவனமுடன் நடந்து கொள்வது நல்லது.


                                                            cell - 72001 63001



சூரியனும் அஸ்தங்க தோஷமும்


ஜோதிடமாமணி
முருகுபாலமுருகன் 0091 72001 63001
           நல்லதொரு வாழ்க்கை அமைய நவகிரகங்களின் அருள் மிகவும் அவசியம், நவகிரகங்கள் பலம் இழந்தால் நற்பலன் அடைய இடையூறுகள் ஏற்படும்.கிரக பலம் பலவினத்தை பெறுத்தவரை சில கிரக சேர்க்கை கூட பலவீனமான பலனை ஏற்படுத்துகிறது. அதில் கூறிப்பாக நவகிரகங்களில் தலையாய் கிரகமான சூரியன் சேர்க்கை பெறும் கிரகங்கள் அஸ்தங்க தோஷத்தால் பலம் இழக்கிறது. மிகவும் உஷ்ண கிரகமான சூரியன் தனது உஷ்ண தன்மையால் தன்னுடன் இணையும் கிரகங்களை சக்தி இழக்க வைக்கிறது அப்படி சூரியன் சேர்க்கை பெற்று ஜெனன ஜாதகத்தில் அமைய பெற்றால் ஏற்படும் பிரச்சனைகளை பற்றி பார்ப்போமா அதாவது
 சூரியனுக்கு 12 டிகிரிக்குள் சந்திரன் அமைய பெற்றால் மன குழப்பம்,ஜல தொடர்புள்ள நோய்கள் உண்டாகிறது. சூரியன் சந்திரன் இனைந்து இருந்தால் அமாவாசை  ஆகும்.
 சூரியனுக்கு 17 டிகிரிக்குள் செவ்வாய் அமைந்து அஸ்தங்கம் பெற்றிருந்தால் ரத்த தொடர்புள்ள  நோய், சகோதர தோஷம்,வெட்டு காயங்கள் ஏற்படும் அமைப்பு யாவும் உண்டாகும்.பெண் ஏன்றால் மாதவிடாய் கோளாறு ஏற்படும்.
  சூரியனுக்கு 14 டிகிரிக்குள் புதன் அமைந்து அஸ்தங்கம் பெற்றிருந்தால் தாய் மாமனுக்கு தோஷம்,நரம்பு பலவீனம் ஏற்படும்.புதன் சூரியன் சேர்க்கை புதாதித்திய யோகத்தை தரும் என்பதால் கல்வி சிறப்பாக இருக்கும்.பொதுவாக புதன் அஸ்தங்கம் அதிக கெடுதலை தருவதில்லை
 சூரியனுக்கு 11டிகிரிக்குள் குரு அமைந்து அஸ்தங்கம் பெற்றிருந்தால் புத்திர தோஷம், கொடுக்கல் & வாங்கலில் பிரச்சனை,பெரியோர்களிடம் கருத்துவேறுப்பாடு,முன்னோர் சாபத்தால் முன்னேற தடை போன்றவை உண்டாகும்
 சூரியனுக்கு 8 டிகிரிக்குள் சுக்கிரன் அமைந்து அஸ்தங்கம் பெற்றிருந்தால் சுக வாழ்வு செகுசு வாழ்வு பாதிப்பு , பால் வினை நோய்,இல்லற வாழ்வில் ஈடுபட முடியாத நிலை,பெண்களால் பிரச்சனைகள் யாவும் ஏற்படும்.
 சூரியனுக்கு 15 டிகிரிக்குள் சனி அமைந்து அஸ்தங்கம் பெற்றிருந்தால் ஆரோக்கிய பாதிப்பு, உடல் பலவீனம், வேலையாட்களால் பிரச்சனைகள்,கடன் பிரச்சனைகள் யாவும் ஏற்படும்.
 எல்லா கிரகங்களையும் செயல் இழக்க வைக்கும் சூரியன் ராகு சேர்க்கை பெறும் போது சூரியன் பலம் இழந்து விடுகிறார்.சூரியன் ராகு சேர்க்கை பெறும் போது கிரகண தோஷம் உண்டாகிறது,இதனால் தந்தைக்கு கெடுதி பெரியோர்களிடம் கருத்து வேறுப்பாடு சட்ட சிக்கல் யாவும் ஏற்படும்
  சூரியனுக்கு மிக அருகில் அதாவது 1 டிகிரிக்குள் அமையும்  கிரகங்கள் அதிக கெடுதலை தருகின்றனர்,  சூரியனுக்கு அருகில் கிரகங்கள் அமையும் போது பாவீனமான பலனை தரும் என்றாலும் அஸ்தங்கம் பெறும் கிரகம் பரிவர்த்தனை பெற்றால் கெடுதலை தராமல் நற்பலனை உண்டாகும்                 

Friday, October 14, 2011

வாழ்க்கைத் துணை அமைவது - கவர்ச்சியாகவா? முதிர்ச்சியாகவா?

7ம் வீட்டில் சுப கிரகங்கள் இருந்தால் நற்பலனும் பாவ கிரகங்கள் இருந்தால் கொடுபலனும் அடையநேரிடும். 7ம் வீட்டில் குரு சுக்கிரன், சந்திரன் போன்ற கிரகங்கள் வலுவாக அமையப் பெற்றால் அவர்களுக்கு அமையும் வாழ்க்கை துணையானது பொன் போன்ற நிறம் கொண்டவராக இருப்பார். 

புதன் அமையப் பெற்றால் வரக்கூடிய வாழ்க்கை துணையானது மாநிறமாக இருப்பார். அதுவே சனி ராகு அமையப் பெற்றால் கறுப்பு நிறமாக இருப்பார்கள். அதுபோல 7ம் வீட்டிலிருக்கும் கிரகங்களை கொண்டு வரக்கூடிய வாழ்க்கை துணையின் சுபாவத்தையும் வெளித் தோற்றத்தையும் அறியலாம்.

7ல் சூரியன் அமையப் பெற்றால் மணவாழ்வில் ஒற்றுமைக் குறைவு உண்டாகிறது. அதுமட்டுமின்றி மூன்றாவது நபரின் தொடர்பு உண்டாகிறது. 7ம் வீட்டில் சந்திரன் புதன் அமையப்பெற்றால் இளமையான வாழ்க்கைத் துணை உண்டாகும். 7ல் சுக்கிரன் அல்லது செவ்வாய் அமையப் பெற்றால் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் கூடிய இளவயது வாழ்க்கைத் துணை அமையும். 7ல் குரு அமையப் பெற்றால் நல்ல குண நலம், அறிவாற்றல், கவர்ச்சியான உடலமைப்பு கொண்டவர் வாழ்க்கை துணைவராக அமைவார். அதுவே சனி ராகு அமையப் பெற்றால் முதுமையான தோற்றம் கொண்டவர் வாழ்க்கை துணையாக அமைவார். அதுபோல 7ல் அமையக் கூடிய கிரகங்களைக் கொண்டு கூட ஒருவருக்கு அமையக் கூடிய வாழ்க்கை துணையில் இயல்பினைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.

7ம் வீட்டில் சூரியன் செவ்வாய், புதன், குரு போன்ற கிரகங்கள் அமையப்பெற்றால் நல்ல அழுகான நற்பண்புகளை கொண்ட வாழ்க்கைத் துணை அமையும். அதுபோல சுக்கிரன் சந்திரன் அமைந்தாலும் நல்ல பண்புள்ள வாழ்க்கை துணை அமையும். சனி ராகு அமையப் பெற்றால் மணவாழ்க்கை திருப்திகரமாக இருக்காது. குறை உள்ளவர் வாழ்க்கைத் துணையாக வரும் வாய்ப்புஉண்டாகும்.

சுக்கிரன் 7ம் வீட்டில் வலுவாக ஒரு ஆண் ஜாததகத்தில் அமையப் பெற்றால் பல பெண்களை அனுபவிக்கக் கூடிய யோகம் உண்டாகும். குரு பலமாக அமையப் பெற்றால் நல்ல மகிழ்ச்சிகரமான மணவாழ்க்கை ஏற்படும். சனி செவ்வாய் இணைந்து 7ம் வீட்டில் அமையப் பெற்றால் வரக்கூடிய மனைவிக்கு ஒரு நிலையான மனநிலை இருக்காது. அதுமட்டுமின்றி ஆரோக்கிய பாதிப்பு, வயிறு கோளாறு, உடலில் தழும்புகள் இருக்கும்.

7ல் சந்திரன் செவ்வாய் அமைந்து சனி பார்த்தால் மனைவிக்கு வயிறு கோளாறு ஏற்பட்டு கடுமையான பாதிப்பு உண்டாகும்.

பொதுவாக 7ல் அமையக் கூடிய கிரகங்களை பொருத்துதான் அவர்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுமா? கசப்பான சம்பவங்கள் நடைபெறுமா? என்பதைப் பற்றி அறியலாம்.

7ம் வீட்டில் சுப கிரகங்கள் அமையப் பெற்றால் அவர்களுடய ஆசைகள் அபிலாஷைகள் திருப்திகரமாக நிறைவேறும். பாவ கிரகங்கள் அமையப் பெற்றால் இல்லற வாழ்வில் எப்பொழுது எதை செய்ய வேண்டும் என்று தெரியாமல் சில செயல்களை செய்து சில கசப்பான அனுபவங்களை அடைவார்கள். 7ம் வீட்டில் புதன் போன்ற கிரகங்கள் பலஹீனமாக அமையப் பெற்றால் இல்லற வாழ்வில் திருப்திகரமான நிலை இருக்காது. 7ம் வீட்டில் ராகு பகவான் இருந்து சுபர்பார்வையின்றி இருந்தால் மண வாழ்க்கையே அமையாது. அப்படி அமைந்தாலும் குறுகிய காலத்தில் இழக்க நேரிடும்.

பொதுவாக 7ம் வீட்டில் சந்திரன் பாவிகள் சேர்க்கை பெற்றிருந்தாலும் 7ம் அதிபதி தேய்பிறை சந்திரன் சேர்க்கை பெற்றால் ஏதாவது ஒரு வகையில் பாதிக்கப்பட்ட ஒரு நபரை வாழ்க்கைத் துணையாக அடையும் வாய்ப்பு உண்டாகும்.

ஒருவர் ஜாதகத்தில் 1, 7, 12ல் பாவிகள் அமையப் பெற்று 5ல் தேய்பிறை சந்திரன் அமையப் பெற்றால் மணவாழ்க்கை அமைவது கேள்விக்குறியாகி விடும். அதுபோல சூரியன் 1, 6, 12ல் இருந்தால் ஏக தாரம்தான் செவ்வாய் சுக்கிரன் இணைந்து 5, 7, 9ல் இருந்தாலும் ஏகதாரம்தான்.

ஒருவர் ஜாதகத்தில் சனி செவ்வாய் ராகு இணைந்து 6, 7, 8ல் இருந்தால் எத்தனை திருமணம் நடந்தாலும் மண வாழ்க்கை நன்றாக இருக்காது.
-முருகு பாலமுருகன் 
Mobile:0091-7200163001

Sunday, October 2, 2011

சாதகம் செய்யுமா சனி சஞ்சாரம்?

நவகிரகங்களில் சனி பகவானை அறியாதவர்களே இருக்க முடியாது. பகவான் ஒரு சிலருக்கு கெடுதிகளை தந்தாலும் ஒரு சிலருக்கு நற்பலனையும் அளிக்கிறார். செல்வம், செல்வாக்கு பொருளாதார மேன்மை உண்டாக்குகிறார். சனி பகவான் கோட்சாரத்தில் ஜென்ம ராசிக்கு 12, 1, 2 ஆகிய ஸ்தானங்களில் சஞ்சாரம் செய்கின்ற காலம் ஏழரை சனி ஆகும். அஷ்டம ஸ்தானமான 8ல் சஞ்சரிக்கும்போது அஷ்டம சனியாகும். 4ல் சஞ்சரிப்பதை அர்த்தாஷ்டம சனி என்றும் 7ல் சஞ்சரிப்பதை கண்ட சனி என்றும் கூறுவார்கள்.

கோட்சார ரீதியாக சனி பகவான் சாதகமற்று சஞ்சரித்தால் கெடு பலன் மட்டும்தான் தருவார் என்பதில்லை. சனி ஜெனன ஜாதகத்தில் ஆட்சி உச்சம் பெற்று இருந்தால் கோட்சாரத்தில் கெடுதியான ஸ்தானங்கள் இருந்தாலும் அதிக கெடுதிகளைத் தர மாட்டார்.

2ம் வீட்டில் இருந்தால் குடும்பத்தில் பிரிவு, மந்தமான சூழ்நிலை, வீண் வாக்குவாதம், தந்தை சொத்து நாசம், பொருளாதார நெருக்கடிகள் உண்டாகும்.

3ல் இருந்தால் இளைய சகோதர தோஷம் என்றாலும் எடுக்கின்ற முயற்சிகளில் வெற்றி தைரியம் துணிவு தாராள பண வரவு உண்டாகும்.

4ல் இருந்தால் கல்வியில் இடையூறு தாய்க்கு தோஷம் அசையா சொத்து அமைய இடையூறுகள் சுக வாழ்வு பாதிப்பு உண்டாகும்.

5ல் இருந்தால் புத்திர தோஷம் பூர்வீக தோஷம் தத்து புத்திர யோகம் உறவினர்களிடம் கருத்து வேறுபாடு உண்டாகும்.

6ல் இருந்தால் எதிரிகளை பந்தாடும் பலம் வலிமையான வாழ்க்கை வாழும் அமைப்பு எதிர்பாராத பண வரவுகள், தைரியம், துணிவுடன் வாழும் அமைப்பு உண்டாகும்.

7ல் சனி இருந்தால் திருமணம் தாமதம், அமையும் வரன், வயதான தோற்றம், நெருங்கியவர்களிடம் கருத்து வேறுபாடு கூட்டாளிகளால் நஷ்டம் உண்டாகும்.

8ல் இருந்தால் நீண்ட ஆயுள் உண்டாகும் என்றாலும் பொருளாதார கஷ்டம், ஏழை குடும்பத்தில் திருமணம் எதிரிகளால் கண்டம் கண்களில் பாதிப்பு உண்டாகும்.

9ல் இருந்தால் பொதுப்பணியில் ஈடுபடும் அமைப்பு, தந்தை மற்றும் பூர்வீக வழியில் அனுகூலமற்ற அமைப்பு, பூர்வீக சொத்து இழப்பு உண்டாகும்.

10ல் சனி இருந்தால் எதிர் நீச்சல் போட்டு முன்னேறும் அமைப்பு, அடிமைத் தொழில், பொதுப் பணியில் ஈடுபடும் அமைப்பு, மற்றவர்களை வழி நடத்தும் வலிமை உண்டாகும். 10ல் சனி இருந்தால் பதவிகளில் திடீர் இழப்பு உண்டாகும். கோட்சாரத்தில் 10ல் சனி வந்தால் கூட ஜீவனத்தில் பிரச்சனைகள் உண்டாகும்.

11ல் இருந்தால் நோயற்ற வாழ்வு எதிர்பாராத லாபங்கள், அசையா சொத்து சேர்க்கை, தன சேர்க்கை உண்டாகும். மூத்த சகோதர தோஷம் உண்டு.

12ல் சனி அமையப் பெற்றால் கண்களில் பாதிப்பு, எதிரிகளால் தொல்லை, வீண் விரயங்கள், கட்டில் சுக வாழ்வு பாதிப்பு ஏற்படும்.

சனி பலமிழந்து இருந்தால் கெடு பலன்களை கொடுத்தாலும் சிலருக்கு ஏற்றமிகு வாழ்க்கையும் தருவார் என்பதே பொது விதி.
-முருகு பாலமுருகன் 
Mobile:0091-7200163001