Monday, November 21, 2011
Sunday, November 20, 2011
ஜாதக ரீதியாக வாரிசு யோகம்
குழந்தை செல்வம் ஒவ்வொருவருடைய வாழ்க்கையை முழுமை பெற வைப்பதாகும். திருமணமான ஒவ்வொரு தம்பதியினரும் அடுத்து எதிர்பார்ப்பது ஓரு குழந்தை செல்வத்தைத்தான். ஏழை முதல் பணக்காரர் வரை தனக்கென ஒரு வாரிசு உருவாவதையே பெரிய பாக்கியமாகக் கருதுகிறார். அவரவர் சக்திக்கேற்ப குழந்தையை நல்லபடி வளர்க்க முடியும் என்ற நம்பிக்கையில் ஒரு குழந்தையாவது பெற்றுக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். யாருமே தங்களுக்கு குழந்தை செல்வம் வேண்டாம் என்று மனதளவில் கூட நினைப்பதில்லை. ஆனால், இல்லை ஒரு பிள்ளை என்று ஏங்குபவர்கள் நிறைய பேர் உண்டு.
ஜோதிட ரீதியாக நாம் ஆராய்கின்ற போது யாருக்கு சிறப்பாக குழந்தை பாக்கியம் அமையும். குழந்தை பாக்கியமே இல்லாதவர் யார் என்பதை கண்டுபிடித்து விடலாம். குறிப்பாக ஒருவரின் 5ம் பாவமானது பலமாக அமைந்திருந்தால் குழந்தை பாக்கியத்தை பெற முடியும்.
ஜோதிட ரீதியாக புத்திர பாக்கியம் சிறப்பாக அமைய பொன்னவன் என போற்றப்படும் குரு பகவான் புத்திர காரகன் என்பதால் அவர் பலமாக அமையப் பெறுவது முக்கியமானதாகும். அதுபோல 5ம் அதிபதி ஆட்சி உச்சம் பெற்றாலும், கேந்திர திரிகோண ஸ்தானங்களில் அமையப் பெற்றாலும் சிறப்பான புத்திர பாக்கியம் உண்டாகும்.
ஜென்ம லக்னத்திற்கு 5ம் பாவம் சிறப்பாக அமைய வேண்டும் என்பதை போலவே சந்திரனுக்கு 5ம் பாவமும் பலமாக அமைந்து விட்டால் குழந்தை பாக்கியம் அமைய எந்தத் தடையும் இருக்காது. அதுபோலவே 5ம் வீட்டையும், 5ம் வீட்டதிபதியையும் குரு பகவான் பார்வை செய்தால் குழந்தை செல்வம் சிறப்பாக அமைந்து மகிழ்ச்சியை உண்டாக்கும். 5ம் வீட்டில் சுப கிரகம் இருப்பதும், சுபர் பார்வை பெறுவதும் சிறப்பானது என்பது போல 5ம் அதிபதி பாவியாக இருந்தாலும் வலுப்பெற்று அமைந்து சுபர் பார்வை பெறுவது சிறப்பான புத்திர பாக்கியத்தை ஏற்படுத்தும்.
ஆண் வாரிசு
நவ கோள்களில் ஆண் கிரகங்கள் என வர்ணிக்கப்படக் கூடிய குரு, சூரியன்,செவ்வாய் வலுப்பெற்று 5ல் இருந்தாலும் 5ம் அதிபதியுடன் இருந்தாலும் ஆண் கிரகங்களின் வீடு என வர்ணிக்கப்படக் கூடிய மேஷம், விருச்சிகம், சிம்மம், தனுசு, மீனம் ஆகிய பாவங்களில் 5ம் அதிபதி பலமாக அமைந்திருந்தாலும் சிறப்பான ஆண் குழந்தை பாக்கியம் உண்டாகும். மேற்கூறிய பாவங்களில் குரு அமைந்திருந்தாலும் சிறப்பான ஆண் வாரிசு உண்டாகும்.
பெண் கிரகங்கள் என வர்ணிக்கப்படக் கூடிய சுக்கிரன் சந்திரன் 5ல் வலுவாக அமைந்தாலும் 5ம் அதிபதியாக சுக்கிரன், சந்திரன் சேர்க்கைப் பெற்றிருந்தாலும் சந்திரன் வீடான கடகத்தில் அமைந்திருந்தாலும் பெண் குழந்தை யோகம் உண்டாகும். அதுபோல இரட்டை படை ராசிகளான ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம் ஆகியவற்றில் 5ம் அதிபதி அமைந்திருந்தாலும் பெண் குழந்தை யோகத்தைக் கொடுக்கும்.
சர்புத்ரபாக்யம்
சர்புத்திர பாக்கியம் யாருக்கு அமையும் என்று பார்த்தால் 5ம் பாவத்தில் ஆண் கிரகங்களும் பெண் கிரகங்களும் இணைந்து அமைந்திருந்தால் சர்புத்திர பாக்கியமான ஒரு ஆண் ஒரு பெண் குழந்தைகள் உண்டாகும். 5ம் அதிபதி ஆண் கிரகமாக இருந்து பெண் கிரக சேர்க்கை பெற்றிருந்தாலும் பெண் கிரகமாக இருந்து ஆண் கிரக சேர்க்கை பெற்றிருந்தாலும் சர்புத்திர பாக்கியம் அமையும்.
புத்திர ஸ்தானமான 5ல் அமைந்துள்ள கிரகங்களின் தசா புக்தி
காலங்களிலும், 5ம் அதிபதி மற்றும் 5ம் அதிபதி சாரம் பெற்ற தசா புக்தி காலங்களிலும், குரு மற்றும் குரு சாரம் பெற்றுள்ள தசா புக்தி காலங்களிலும் குழந்தை பாக்கியம் உண்டாவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். பெண் கிரகங்களின் தசா புக்தி காலத்தில் பெண் குழந்தையும் ஆண் கிரகங்களின் தசா புக்தி காலத்தில் ஆண் குழந்தை யோகமும் கொடுக்கும். சனி, ராகு, கேது, புதன் போன்ற கிரகங்கள் 5 ஆம் வீட்டில் அமைந்திருந்தாலும், 5ம் அதிபதியாக இருந்தாலும் 5ம் அதிபதி நீசம் அஸ்தங்கம் பெற்றாலும் ராகு கேதுவின் சாரம் பெற்றிருந்தாலும் புத்திர பாக்கியம் உண்டாவதில் தடை ஏற்படுகிறது. அதுபோல சந்திரனுக்கு 5ல் பாவிகள் இருப்பதும் 5ம் அதிபதி பலவீனம் அடைவதும் புத்திர தோஷமாகும். 5ம் வீட்டிற்கு இருபுறமோ, குருவுக்கு இருபுறமோ பாவ கிரகங்கள் அமையப் பெற்றாலும் புத்திர தோஷம் உண்டாகிறது.
அதுபோல ஜென்ம லக்னத்திற்கு 5ம் அதிபதி 6, 8, 12ல் மறைந்திருந்தாலும் 5ம் அதிபதியையும், 5ம் வீட்டையும், குரு பகவானையும், சனி பார்வை செய்தாலும் திருமணம் நடைபெறும் காலங்களில் சர்ப கிரகங்களின் தசா புக்திகள் நடைபெற்றாலும், புத்திர பாக்கியம் அமைவதில் தாமதம் உண்டாகும். கருச்சிதைவு, கருத்தறிக்கத் தடை ஏற்படும்.
ஜெனன காலத்தில் 5ம் இடம் புதனின் வீடான மிதுனம், கன்னியாகவோ, சனி வீடான மகரம் கும்பமாகவோ இருந்து அதில் சனி மாந்தி அமையப் பெற்று, புத்திர காரகன் குருவும் பலவீனமாக இருந்தால் தத்து புத்திர யோகம் அதாவது பிறருடைய குழந்தையை தத்து எடுத்து வளர்க்கக் கூடிய வாய்ப்பு உண்டாகும்.
ஒருவர் ஜாதகத்தில் புத்திர ஸ்தானமான 5ம் இடம் சுப கிரகங்களால் சூழப்பட்டு குரு பகவான் வலுவாக அமையப் பெற்றாலும், 5ம் அதிபதி கேந்திர திரிகோணாதிபதிகளுடன் சேர்க்கை மற்றும் பரிவர்த்தனை பெற்றிருந்தாலும் உடன் அமையும் கிரகங்கள் நட்பு கிரகங்களாக இருந்தாலும் பெருமையையும், உயர்வையும் அடைய முடியும்.
அதுவே 5ம் அதிபதி பகை பெற்றோ 6, 8, 12களில் மறைந்தோ, பாதக அமையப் பெற்றோ, ராகு சனி சாரம் பெற்றோ, பாதகாதிபதி சாரம் பெற்றோ குரு பாதக ஸ்தானத்தில் அமையப் பெற்றோ இருந்தால் புத்திரர் அனுகூலம் இருக்காது. தேவையற்ற பிரச்சனைகளையும் வீண் விரயங்களையும் எதிர்கொள்ள நேரிடும்.
நன்மை செய்யும் நான்காம் எண்
நான்காம் எண்ணும் மற்ற எண்களைப் போலவே சிறப்பு வாய்ந்ததாகவே இருக்கும். நான்கு திசைகள், நான்கு வேதங்கள், நான்கு உபாயங்கள் என நான்காம் எண்ணுக்கு சிறப்புகளும் தனித்தன்மைகளும் உண்டு. 4, 13, 22, 31ம் தேதிகளில் பிறந்தவர்கள் நான்காம் எண்ணுக்குரியவர்களாகிறார்கள். நான்காம் எண்ணின் கிரகம் ராகுவாகும். நான்காம் எண்ணுக்குரிய ஆங்கில எழுத்துக்கள் ஈ, M, கூ ஆகியவை. ராகு ஒரு சாயா கிரகமாகும்.பிடிவாத குணம்
நான்காம் எண்ணில் பிறந்தவர்கள் ராகுவின் ஆதிக்கத்திற்குட்பட்டவர்கள் என்பதால் அதிக பிடிவாத குணம் இருக்கும். அடக்கமாகவோ, விட்டுக் கொடுக்கும் பண்பாகவோ பேசத் தெரியாது. எப்பொழுதும் வெட்டு ஒன்று துண்டு இரண்டாக பேசுவார்கள். அழுத்தம் திருத்தமாகவும் திட்டவட்டமாவும் இவர்களின் பேச்சு அமையும். பிறருடைய அந்தஸ்தையோ, வளத்தையோ, செல்வத்தையோ, பின்னால் இருக்கும் பலத்தையோ பற்றி சற்றும் தயக்கம் காட்டாமல் மனதில் பட்டதை தைரியமாக வெளிப்படையாகக் கூறக் கூடிய இயல்பு கொண்டவர்களாக இருப்பார்கள். எல்லா இடங்களிலும் தங்கள் கருத்துக்களையே நிலை நிறுத்த முயற்சிப்பார்களே தவிர பிறருடைய கருத்தை செவி கொடுத்தும் கேட்க மாட்டார்கள்.சண்டை போடுவது போல எப்பொழுதும் குரல் உச்ச ஸ்தாயியில் ஒலிக்கும். எவ்வளவுதான் நல்ல பயன்கள் இருந்தாலும் பிறர் சொல்வதை அப்படியே ஏற்றுக் கொள்ளாமல் மனதில் பட்டதற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பார்கள். ஒளிவு மறைவற்ற இவர்களின் அதிகாரமான பேச்சால் பல இன்னல்களைச் சந்திக்க நேரிடும். இவர்களை புரிந்து கொள்பவர்களால் மட்டுமே இவர்களை அனுசரித்துச் செல்ல முடியும். இந்த உலகத்தில் தனக்கு தெரியாத விஷயங்களே இல்லை என்ற ஆணவம் அதிகம் இருக்கும். புகழிலோ, பொருளிலோ அவ்வளவு ஆசை இருக்காது. எல்லோரும் தன் கருத்துக்களை புரிந்து கொண்டு பாராட்ட வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். பொதுவாகவே இவர்கள் எதிலும் சட்டென உணர்ச்சி வசப்படக் கூடியவர்கள். பொதுநல காரியங்களுக்காக தம் உயிரையும் தியாகம் செய்ய தயங்க மாட்டார்கள். காதல் விவகாரங்களில் ஈடுபடுவதும் உண்டு. அதில் முழு வெற்றி கிடைக்கும் என்று கூறி விட முடியாது. எந்தக் காரியத்தில் ஈடுபட்டாலும் ஒரு தீவிரவாதியாக செயல்படுவார்கள். திடீர் அதிர்ஷ்டங்களைக் காட்டிலும் உழைத்து முன்னேறுவதிலேயே அதிக விருப்பம் கொண்டவர்கள். சிலர் நடுத்தர வயதுக்கு மேல் ஞானிகள், துறவிகள் போல மாறி விடுவதும் உண்டு. எந்தக் காரியத்தையும் ஒருமுறைக்கு பலமுறை ஆராய்ந்த பிறகே முடிவெடுப்பார்கள்.
உடலமைப்பும் ஆரோக்கியமும்
நான்காம் எண்ணின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் சற்று தடித்த உடலமைப்பை பெற்றிருப்பார்கள். நடுத்தர உயரமும், வட்ட வடிவமான முகத் தோற்றமும் இருக்கும். இவர்களுக்கு எப்பொழுதும் ஏதாவது உடல் உபாதைகள் இருந்து கொண்டே இருக்கும். கறுப்பாகவோ அல்லது மாநிறமாகவோ இருப்பார்கள். இவர்களுடைய கால்கள் உடலுக்கேற்றபடி இல்லாமல் குறுகலாக இருக்கும். மற்றவர்கள் ஒருமுறை பார்த்தவுடன் மறுமுறை திரும்பிப் பார்க்க வைக்கக் கூடிய உருவ அமைப்பை பெற்றிருப்பார்கள். இவர்கள் நல்ல உழைப்பாளிகள் என்பதால் உடல் சோர்வு, முதுகு தண்டு வலி, மூட்டு வலிபோன்றவை ஏற்படும். மனஉளைச்சல் அதிகம் இருக்கும். தேவையற்றவைகளுக்கெல்லாம் குழப்பிக் கொள்வார்கள். கார சாரமான பொருட்களை அதிகம் சாப்பிடுவதால் வயிறு சம்மந்தமான வியாதிகளும், வாயுத் தொல்லைகளும் உண்டாகும். சிறு நீரகக் கோளாறு, வறட்டு இருமல், சளி, சுவாசக் கோளாறு போன்றவற்றால் அடிக்கடி பாதிப்பு உண்டாகும்.
நான்காம் எண்ணின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் சற்று தடித்த உடலமைப்பை பெற்றிருப்பார்கள். நடுத்தர உயரமும், வட்ட வடிவமான முகத் தோற்றமும் இருக்கும். இவர்களுக்கு எப்பொழுதும் ஏதாவது உடல் உபாதைகள் இருந்து கொண்டே இருக்கும். கறுப்பாகவோ அல்லது மாநிறமாகவோ இருப்பார்கள். இவர்களுடைய கால்கள் உடலுக்கேற்றபடி இல்லாமல் குறுகலாக இருக்கும். மற்றவர்கள் ஒருமுறை பார்த்தவுடன் மறுமுறை திரும்பிப் பார்க்க வைக்கக் கூடிய உருவ அமைப்பை பெற்றிருப்பார்கள். இவர்கள் நல்ல உழைப்பாளிகள் என்பதால் உடல் சோர்வு, முதுகு தண்டு வலி, மூட்டு வலிபோன்றவை ஏற்படும். மனஉளைச்சல் அதிகம் இருக்கும். தேவையற்றவைகளுக்கெல்லாம் குழப்பிக் கொள்வார்கள். கார சாரமான பொருட்களை அதிகம் சாப்பிடுவதால் வயிறு சம்மந்தமான வியாதிகளும், வாயுத் தொல்லைகளும் உண்டாகும். சிறு நீரகக் கோளாறு, வறட்டு இருமல், சளி, சுவாசக் கோளாறு போன்றவற்றால் அடிக்கடி பாதிப்பு உண்டாகும்.
குடும்ப வாழ்க்கை
நான்காம் எண்ணுக்குரியவர்கள் குடும்ப வாழ்க்கை ரீதியாக அதிர்ஷ்டசாலிகள் என்றே கூறலாம். ஏனெனில் இவர்களுக்கு இளம் வயதிலேயே திருமணம் நடைபெற்றுவிடக் கூடிய சூழ்நிலைகள் மிக அதிகம். இதனால் இவர்களுக்கு குடும்பத்தை நடத்தக் கூடிய பொறுப்பு வந்து விடுகிறது. அதற்கேற்றாற்போல இவர்களுக்கு அமையும் வாழ்க்கைத் துணையும் அமைதியுடனும், தெய்வ பக்தியுடனும் அமைந்து விடுவதால் கணவன் மனைவி இருவருக்கும் பிரச்சனைகள் வருவதென்பது மிகவும் அரிதாகும். கெட்ட பழக்க வழக்கங்களுக்கு எளிதில் அடிபணிபவராகவும் இருப்பார். எதிலும் கவனமுடன் நடந்து கொண்டால் இவர்களின் குடும்ப வாழ்க்கை மற்றவர்கள் பின்பற்றக் கூடியதாக இருக்கும்.
நான்காம் எண்ணுக்குரியவர்கள் குடும்ப வாழ்க்கை ரீதியாக அதிர்ஷ்டசாலிகள் என்றே கூறலாம். ஏனெனில் இவர்களுக்கு இளம் வயதிலேயே திருமணம் நடைபெற்றுவிடக் கூடிய சூழ்நிலைகள் மிக அதிகம். இதனால் இவர்களுக்கு குடும்பத்தை நடத்தக் கூடிய பொறுப்பு வந்து விடுகிறது. அதற்கேற்றாற்போல இவர்களுக்கு அமையும் வாழ்க்கைத் துணையும் அமைதியுடனும், தெய்வ பக்தியுடனும் அமைந்து விடுவதால் கணவன் மனைவி இருவருக்கும் பிரச்சனைகள் வருவதென்பது மிகவும் அரிதாகும். கெட்ட பழக்க வழக்கங்களுக்கு எளிதில் அடிபணிபவராகவும் இருப்பார். எதிலும் கவனமுடன் நடந்து கொண்டால் இவர்களின் குடும்ப வாழ்க்கை மற்றவர்கள் பின்பற்றக் கூடியதாக இருக்கும்.
பொருளாதாரம் :
நான்காம் எண்ணில் பிறந்தவர்களுக்கு பணம் எப்போதுமே பற்றாக்குறையாகத்தான் இருக்கும். எவ்வளவு தான் சம்பாதித்தாலும் அதற்கேற்ற செலவுகளும் உண்டாகும் என்றாலும், இவர்கள் செய்யும் செலவு வீண் செலவாக இருக்காது. தாராள மனம் கொண்டவர்கள் என்பதால் யாராவது கஷ்டத்தைச் சொல்லி உதவி கேட்டால் கையில் இருப்பதை கொடுத்து விடுவார்கள். சொந்த செலவுக்காக திண்டாட வேண்டியிருக்கும். என்றாலும் எதையும் துணிவுடன் சமாளிக்கும் ஆற்றலும் இருக்கும்.
தொழில்
நான்காம் எண்ணில் பிறந்தவர்கள் எந்தத் தொழில் செய்தாலும் அதில் அதிக அக்கறையும் கவனமும் கொண்டிருப்பார்கள். நாம் நன்றாக இருக்கின்றோமோ, இல்லையோ மற்றவர்களுக்கு தொழில் செய்யும் நோக்கத்தோடு செயல்படுவார்கள். அரசாங்க உத்தியோகத்திலும் பெரிய அதிகாரிகளாகவும் இருக்க வாய்புண்டு. என்றாலும் பலர் அடிமைத் தொழில் செய்பவர்களாகவே இருப்பார்கள். ஹாஸ்டல், ஹோட்டல் நடத்துபவர்களாகவும் ஆல்கஹால் போன்றவை கலந்த மருந்துகளையும் விற்பனை செய்பவர்களாகவும் இருப்பார்கள். அச்சுத் தொழில், இயந்திரத் தொழில், இன்ஜினிர்ஸ், பௌதீக ஆராய்ச்சித் தொழில் போன்றவற்றிலும் முன்னேற்றம் உண்டாகும.
நண்பர்கள், பகைவர்கள்
நான்காம் எண்ணில் பிறந்தவர்கள் முரட்டு சுபாவம் உடையவர்கள் என்பதால் இவர்களுக்கு நண்பர்கள் அமைவது சற்றுக் கடினமான காரியமாக இருப்பதால் சில நண்பர்கள் அமைய வாய்புண்டு. 5, 8ம் எண்ணில் பிறந்தவர்கள் நண்பர்களாகவும், 1, 2, 9ம் எண்ணில் பிறந்தவர்கள் இவர்களிடம் ஒற்றுமையாக செயல்பட முடியாதவர்களாகவும் இருப்பார்கள்.
ராகுவுக்குரிய காலம்
ராகுவுக்கு என தனிப்பட்ட முறையில் நாள் கிடையாது. ஜோதிட சாஸ்திர ரீதியாக சனிக்கிழமையை ராகுவுக்கு உரியதாக கருதலாம். ஒவ்வொரு நாளும் ராகு காலம் என்று ஒன்றரை மணி நேரம் ராகுவுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் எந்த சுப காரியத்தையும் செய்யாதிருப்பது நல்லது.
ராகுவுக்குரிய திசை
தெற்கு திசை ராகுவுக்குரியது. பாலை வனங்கள், குகைகள், சுடுகாடு, புற்று, சுரங்கம், ஓட்டு வீடு, பாழடைந்த கட்டிடங்கள் உலர்ந்து போன நிலங்கள் போன்றவை ராகுவுக்கு சொந்தமான இடங்களாகும்.
ராகுவுக்குரிய அதிர்ஷ்ட கல்
நான்காம் எண் ராகுவின் ஆதிக்கத்தில் இருப்பதால் 4ம் எண் உடையவர்கள் கோமேதகத்தை அணிய வேண்டும். தேனின் நிறத்தைக் கொண்ட கோமேதகத்தை அணிவதால் உடல்நலம் சிறப்படையும். எடுக்கும் காரியங்களில் வெற்றி, செய்யும் தொழிலில் மேன்மை, செல்வம், செல்வாக்கு நற்பலன்களும் உண்டாகும்.
பரிகாரங்கள்
நான்காம் எண்ணில் பிறந்தவர்கள் ராகு பகவானுக்கு பரிகாரங்கள் செய்வது உத்தமம். ராகு காலங்களில் செவ்வாய், வெள்ளி, ஞாயிறு போன்ற நாட்களில் துர்கை அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மலர்களால் அலங்கரித்து அர்ச்சனை செய்வது உத்தமம். ராகு காலங்களில் சரபேஸ்வரரையும் வழிபடலாம்.
அர்த்த காயம் மஹாவீர்யம்
சந்த்ராதித்ய விமர்த நம்
ஹம்ஹிகா கர்ப்ப ஸம்பூதம்
தம் ராஸீம் ப்ரணமாம்யஹம்
இந்த ஸ்லோகத்தை தினமும் கூறி வருவது மிகவும் உத்தமம்.
அதிர்ஷ்டம் அளிப்பவை
அதிர்ஷ்ட தேதி : 1, 10, 19, 28,
நிறம் : மஞ்சள்,
திசை : கிழக்கு,
கிழமை :ஞாயிறு,
கல் : கோமேதகம்,
தெய்வம் : துர்கை.
cell - 0091-72001 63001/9383763001
நிறம் : மஞ்சள்,
திசை : கிழக்கு,
கிழமை :ஞாயிறு,
கல் : கோமேதகம்,
தெய்வம் : துர்கை.
cell - 0091-72001 63001/9383763001
நட்சத்திரப்படி எந்தெந்த வயதில் என்னென்ன நோய்?
உடல் ஆரோக்கியம் என்பது ஒவ்வொருவரின் வாழ்விலும் உயிர் போன்றது. ஆனால், தற்போது உள்ள சூழ்நிலையில் சுத்தமான காற்றை சுவாசிக்க முடியவில்லை. சுத்தமான நீரை குடிக்கவும் முடியவில்லை. உடல் நிலையில் நான் மிகவும் ஆரோக்கியமாக இருக்கிறேன் என்று ஆயிரத்தில்ஒருவர் தான் சொல்ல முடியும். பிறக்கும் குழந்தைகள் கூட கருவிலேயே நோய்களை சுமக்க ஆரம்பித்து விடுகின்றனர். நோய் எதிர்ப்பு சக்தி என்பதும் குறைந்து கொண்டேதான் வருகிறது. தினமும் டயட் என்ற பெயரில் உண்ணும் உணவிற்கு கூட பட்டியலிட வேண்டியது இருக்கிறது. ஆனால், ஜோதிட ரீதியாக ஜெனன ஜாதகத்தில் ஒருவருக்கு கிரகங்கள் பலமாக அமைந்து விட்டால் நோய் வந்தாலும் அவை உடனே சரியாகி விடக் கூடிய அமைப்பு ஏற்படுகிறது.
பொதுவாக ஜெனன ஜாதகம் சிறப்பாக அமைந்து விட்டால் ஆரோக்கியமான வாழ்வு உண்டாகிறது. கிரக நிலைகள் மட்டும் இன்றி பிறந்த நட்சத்திர ரீதியாகவும் பாதிப்புகளை எதிர்கொள்ள நேரிடுகிறது. 27 நட்சத்திர காரர்களும் எந்த எந்த வயதில் என்னென்ன பாதிப்புகள் உண்டாகின்றன என்பதைப் பற்றி தெரிந்து கொள்வது அவசியமானதாகும்.
அஸ்வினி நட்சத்திரம் கேதுவின் நட்சத்திரம் என்பதால் மனக்குழப்பவாதியாக இருப்பார்கள். 8, 16 வயதில் வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகளும் 10 வயதில் விரோதிகளால் கண்டமும், 13 வயதில் கண்களில் பாதிப்பும், 21 வயதில் உண்ணும் உணவே விஷமாகக் கூடிய சூழ்நிலையும், 37 வயதில் தேவையற்ற பெண்களின் சகவாசத்தால் கண்டமும், 40 வயதில் வண்டி வாகனங்களால் ஆபத்தும் 45 வயதில் அரசு வழியில் பிரச்சனைகளையும் எதிர்கொள்ள நேரும்.
பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு 7 வயதில் ஜுரமும், 15 வயதில் ரத்த சம்மந்தப்பட்ட பாதிப்பும், 22 வயதில் ரத்த சம்மந்தப்பட்ட பாதிப்பும், 22 வயதில் உணவே விஷமாகக் கூடிய சூழ்நிலையும், 25 வயதில் நாய்க்கடியால் பாதிப்பும் 27 வயதில் வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்பும் 30 வயதில் பால்வினை நோய்களும் 50 வயதில் சர்க்கரை நோயும் 53 வயதில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்பும், 59 வயதில் மூல வியாதியும் 64 வயதில் இருதய சம்மந்தப்பட்ட பாதிப்புண் உண்டாகும்.
கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு 5 வயதில் நீரால் கண்டமும், 7 வயதில் நெருப்பாலும் 10 வயதில் உயரமான இடத்திலிருந்து தவறி விழுவதால்கண்டமும் உண்டாகும். 11 வயதில் வண்டி வாகனங்களால் விபத்துக்களும் 21 வயதில் பால்வினை நோய்களும் 50, 55 வயதில் குடல் சம்மந்தப்பட்ட பாதிப்புகளும், 60 வயதில் மூல வியாதியால் பாதிப்பும் உண்டாகும்.
ரோகிணி, நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு 3 வயதில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகளும் 5, 7 வயதில் ஜல சம்மந்தப்பட்ட பாதிப்பும், 9 வயதில் வண்டி வாகனங்களால் பாதிப்பும், 32 வயதில் உஷ்ண நோயும் 55 வயதில் திருடரால் கண்டமும், 57 வயதில் வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்பும் 65, 69 வயதுகளில் ஜல தொடர்புடைய பாதிப்பும் உண்டாகும்.
மிருக சீரிஷ நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு 3 வயதில் தண்ணீரால் கண்டமும் 8 வயதில் வண்டி வாகனங்களால் பாதிப்பும் 10 வயதில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்பும் 19 வயதில் ஆயுதங்களாலும் 21 வயதில் வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகளாலும் 33 வயதில் உண்ணும் உணவே விஷமாகக் கூடிய நிலையும் உண்டாகும்.
திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு 7 வயதில் அம்மையாலும் 12 வயதில் நாய்க்கடியாலும் 16 வயதில் விஷத்தாலும் 18 வயதில் மேலிருந்து தவறி விழுவதாலும் 33 வயதிலும் 47, 55, 60 வயதுகளில் மூலம் மற்றும் வயிற்று போக்காலும் கண்டம் உண்டாகும்.
புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு 3 வயதில் வலிப்பு, 5 வயதில் வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனை, 6 வயதில் ஆயுதங்களால் 15 வயதில் தேவையற்ற நண்பர்கள் சகவாசத்தால் 25 வயதில் அம்மை நோயால் 39 வயதில் வாத நோயால் 55, 68 வயதுகளில் நெருப்பு மற்றும் வயிற்று போக்கால் கண்டம் உண்டாகும்.
பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு 3 வயதில் ஆயுதங்களால் 7 வயதில் அம்மையால் 12, 16 வயதுகளில் ஜுரத்தால் கண்டம் உண்டாகும். 25 வயதில் தேவையற்ற நண்பர் சகவாசத்தால் 33 வயதில் திருடர்களால் 46 வயதில் நெருப்பு போன்றவற்றால் கண்டம் உண்டாகும்.
ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு 3 வயதில் ஜுரமும் 5 வயதில் நரம்பு தளர்ச்சியும், 14 வயதில் அம்மை நோயும்,16 வயதில் நீராலும் 25 வயதில் விஷத்தாலும் கண்டம் உண்டாகும். 45 வயதில் வண்டி வாகனங்களால் 55 வயதில் வாதம் போன்றவற்றால் 64, 68 வயதுகளில் நீரிழிவு நோய் கண்டம் உண்டாகும்.
மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு 3 வயதில் ஜல சம்மந்தப்பட்ட பாதிப்புகளும் 7 வயதில் அம்மை நோயும், 9, 15 வயதில் விஷம் போன்றவற்றாலும் 20, 24 வயதுகளில் வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகளாலும் 40, 47 வயதில் நாய்க் கடி போன்றவற்றாலும் பாதிப்பு உண்டாகும். 50 வயதில் திருடர்களாலும் 56 வயதில் நெருப்பால் கண்டமும் உண்டாகும்.
பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு 5 வயதில் விஷக் கடியாலும், 7 வயதில் அம்மையாலும் 8 வயதில் வயிற்று போக்காலும் 14 வயதில் ரத்த சம்மந்தப்பட்ட பாதிப்பாலும் கண்டம் உண்டாகும்.
உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு 3 வயதில் நெருப்பாலும் 5 வயதில் அம்மையாலும் 7 வயதில் ஜல தொடர்புடைய பாதிப்புகளாலும் 14 வயதில் மிருகங்களாலும் 19 வயதில் விஷத்தாலும் 32 வயதில் ஆயுதங்களாலும் 45 வயதில் உயரத்திலிருந்து தவறி விழுவதாலும் 55 வயதில் வலிப்பு நோயாலும் கண்டம் ஏற்படும்.
அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு 3 வயதில் ஜலத் தொடர்புடைய பாதிப்புகளும் 5 வயதில் மரம் முறிந்து மேலே விழுவதாலும் 25 வயதில் திருடர்களாலும் 33 வயதில் வண்டி வாகனங்களாலும் 50 வயதில் வாத நோயாலும், 57 வயதில் நம்பியவர்களே துரோகம் செய்வதாலும் 68 வயதில் தீராத வியாதிகளும் ஏற்பட்டு கண்டங்கள் உண்டாகும்.
சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு 5 வயதில் வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகளும் 7 வயதில் அம்மை நோயும் 12 வயதில் விஷக் கடியாலும் 14 வயதில் உயரமான இடங்களில் இருந்து தவறி விழுவதாலும் 18 வயதில் ஜல சம்மந்தப்பட்ட பாதிப்புகளாலும் 25 வயதில் வாதத்தாலும் 48 வயதில் நெருப்பால் கண்டமும் உண்டாகும்.
சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு 3 வயதில் அஜீரண கோளாறு 4 வயதில் அம்மை நோய் 7 வயதில் வண்டி வாகனங்கள் கண்டம் 12 வயதில் உண்ணும் உணவே விஷமாகக் கூடிய நிலை 15 வயதில் ரத்த சம்மந்தப்பட்ட பாதிப்புகள் 25 வயதில் பால்வினை நோய்கள் 47, 54 வயதுகளில் வாதம் நீரிழிவு பிரச்சனைகள் 65 வயதில் வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் உண்டாகும்.
விசாக நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு 5 வயதில் தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனை 3 வயதில் வயிற்றுப் போக்கு 56 வயதில் ஆயுதங்களால் பாதிப்பு 68 வயதில் வாத நோய் உண்டாகும்.
அனுஷ நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு 5 வயதில் கை கால்களில் சிரங்கு 13 வயதில் நாய்க்கடி 22 வயதில் பால்வினை நோய் 28 வயதில் வண்டி வாகனங்களால் பாதிப்பு, 33 வயதில் எதிரிகளால் 40 வயதில் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளால் 44 வயதில் வாத நோய் 55 வயதில் தலை சம்மந்தப்பட்ட பிரச்சனைகளால் கண்டம் உண்டாகும்.
கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு 4 வயதில் ரத்த சம்மந்தப்பட்ட பாதிப்பு கண்களால் பாதிப்பு, 7 வயதில் நாய்கடி, 13 வயதில் விஷத்தால் கண்டம் 21 வயதில் ஜலத்தால் கண்டம் 22 வயதில் பெண்களால் கண்டம் 30 வயதில் இருதய சம்மந்தப்பட்ட பாதிப்புகள் 50 வயதில் கண்களில் பாதிப்பு உண்டாகும்.
மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு 12 வயதில் நாய்க் கடியாலும் 20 வயதில் உயரமான இடங்களில் இருந்து கீழே விழுவதாலும் 44 வயதில் நாய் கடியாலும் விரோதிகளாலும் 64 வயதில் வயிறுமற்றும் இருதய சம்மந்தப்பட்ட பாதிப்புகளாலும் 75 வயதில் தலை சம்மந்தப்பட்ட பிரச்சனைகளாலும் கண்டம் உண்டாகும்.
பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு 4 வயதில் அஜீரணக் கோளாறும், 9 வயதில் மிருகங்களாலும் 11 வயதில் வயிற்று போக்காலும் 19, 22 வயதில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகளாலும் 30, 34 வயதுகளில் அரசாங்கத்தாலும் விரோதிகளாலும் 40, 45, 57 வயதுகளில் பக்கவாதம் போன்றவற்றாலும் பாதிப்பு உண்டாகும்.
உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு 3 வயதில் அஜீரண கோளாறும், 5 வயதில் சிரங்கும், 7 வயதில் கண்களால் பாதிப்பும் 13 வயதில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்பும் 16 வயதில் நாய்க்கடியாலும் 27 வயதில் பால்வினை நோயாலும் 28 வயதில் ஆயுதங்களாலும் 35 வயதில் எதிரிகளாலும் 44 வயதில் நெருப்பால் 55 வயதில் வயிற்றுப் போக்கு மற்றும் மூல நோயால் பாதிப்பு உண்டாகும்.
திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு 5 வயதில் ஜுரத்தாலும் 7 வயதில் ரத்த சம்மந்தப்பட்ட பாதிப்புகளாலும் 16 வயதில் விஷக் கடியாலும் 22 வயதில் பால்வினை நோயாலும் 36 வயதில் எதிரி மற்றும் திருடர்களாலும் 75 வயதில் உடல்நிலை பாதிப்பாலும் கண்டம் உண்டாகும்.
அவிட்ட நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு 3 வயதில் அஜீரண கோளாறு, 5 வயதில் ஜுரம், 7 வயதில் ரத்த சம்மந்தப்பட்ட பாதிப்பு 13 வயதில் உயரமான இடங்களில் இருந்து விழுவதால் 16 வயதில் நாய்க்கடியால் 22 வயதில் விஷத்தால் 28 வயதில் பெண்கள் தொடர்பால் 36 வயதில் ஜுரத்தால் கண்டம் உண்டாகும்.
சதய நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு 3 வயதில் ஜுரத்தால் 5ல் வண்டி வாகனங்களால் 9 வயதில் ஜலத்தால் 23 வயதில் விஷத்தால் 57, 61 வயதில் வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகளால் கண்டம் உண்டாகும்.
பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு 3 வயதில் அஜீரண கோளாறு 5 வயதில் ஜல சம்மந்தப்பட்ட பாதிப்பு, 7 வயதில் அம்மை, 22 வயதில் பெண்களால் 33 வயதில் திருடர் மற்றும் ஆயதத்தால் 42 வயதில் வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனையால் 50, 55 வயதில் வாத நோயால் கண்டம் உண்டாகும்.
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு 3 வயதில் அஜீரண கோளாறு, 15 வயதில் மிருகத்தால் 25 வயதில் பால்வினை நோயால் 30, 35 வயதில் நெருப்பால், 60 வயதில் வயிறுசம்மந்தப்பட்ட பாதிப்புகளால் கண்டம் உண்டாகும்.
ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு 7 வயதில் உயரமான இடத்திலிருந்து விழுவதால் 12 வயதில் விஷத்தால் 20, 25 வயதுகளில் பெண்களால் 42 வயதில் திருடர்களால், 48, 51 வயது வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகளால் 52 வயதில் மூல வியாதிகளால் 55, 58 வயதுகளில் வாத நோய்களால் கண்டம் உண்டாகும்.
ஒவ்வொரு நட்சத்திரதாரர்களும் மேற்கூறிய வயதுகளில் மிகவும் கவனமுடன் நடந்து கொள்வது நல்லது.
cell - 72001 63001
சூரியனும் அஸ்தங்க தோஷமும்
ஜோதிடமாமணி
முருகுபாலமுருகன் 0091 72001 63001
நல்லதொரு வாழ்க்கை அமைய நவகிரகங்களின் அருள் மிகவும் அவசியம், நவகிரகங்கள் பலம் இழந்தால் நற்பலன் அடைய இடையூறுகள் ஏற்படும்.கிரக பலம் பலவினத்தை பெறுத்தவரை சில கிரக சேர்க்கை கூட பலவீனமான பலனை ஏற்படுத்துகிறது. அதில் கூறிப்பாக நவகிரகங்களில் தலையாய் கிரகமான சூரியன் சேர்க்கை பெறும் கிரகங்கள் அஸ்தங்க தோஷத்தால் பலம் இழக்கிறது. மிகவும் உஷ்ண கிரகமான சூரியன் தனது உஷ்ண தன்மையால் தன்னுடன் இணையும் கிரகங்களை சக்தி இழக்க வைக்கிறது அப்படி சூரியன் சேர்க்கை பெற்று ஜெனன ஜாதகத்தில் அமைய பெற்றால் ஏற்படும் பிரச்சனைகளை பற்றி பார்ப்போமா அதாவது
சூரியனுக்கு 12 டிகிரிக்குள் சந்திரன் அமைய பெற்றால் மன குழப்பம்,ஜல தொடர்புள்ள நோய்கள் உண்டாகிறது. சூரியன் சந்திரன் இனைந்து இருந்தால் அமாவாசை ஆகும்.
சூரியனுக்கு 17 டிகிரிக்குள் செவ்வாய் அமைந்து அஸ்தங்கம் பெற்றிருந்தால் ரத்த தொடர்புள்ள நோய், சகோதர தோஷம்,வெட்டு காயங்கள் ஏற்படும் அமைப்பு யாவும் உண்டாகும்.பெண் ஏன்றால் மாதவிடாய் கோளாறு ஏற்படும்.
சூரியனுக்கு 14 டிகிரிக்குள் புதன் அமைந்து அஸ்தங்கம் பெற்றிருந்தால் தாய் மாமனுக்கு தோஷம்,நரம்பு பலவீனம் ஏற்படும்.புதன் சூரியன் சேர்க்கை புதாதித்திய யோகத்தை தரும் என்பதால் கல்வி சிறப்பாக இருக்கும்.பொதுவாக புதன் அஸ்தங்கம் அதிக கெடுதலை தருவதில்லை
சூரியனுக்கு 11டிகிரிக்குள் குரு அமைந்து அஸ்தங்கம் பெற்றிருந்தால் புத்திர தோஷம், கொடுக்கல் & வாங்கலில் பிரச்சனை,பெரியோர்களிடம் கருத்துவேறுப்பாடு,முன்னோர் சாபத்தால் முன்னேற தடை போன்றவை உண்டாகும்
சூரியனுக்கு 8 டிகிரிக்குள் சுக்கிரன் அமைந்து அஸ்தங்கம் பெற்றிருந்தால் சுக வாழ்வு செகுசு வாழ்வு பாதிப்பு , பால் வினை நோய்,இல்லற வாழ்வில் ஈடுபட முடியாத நிலை,பெண்களால் பிரச்சனைகள் யாவும் ஏற்படும்.
சூரியனுக்கு 15 டிகிரிக்குள் சனி அமைந்து அஸ்தங்கம் பெற்றிருந்தால் ஆரோக்கிய பாதிப்பு, உடல் பலவீனம், வேலையாட்களால் பிரச்சனைகள்,கடன் பிரச்சனைகள் யாவும் ஏற்படும்.
எல்லா கிரகங்களையும் செயல் இழக்க வைக்கும் சூரியன் ராகு சேர்க்கை பெறும் போது சூரியன் பலம் இழந்து விடுகிறார்.சூரியன் ராகு சேர்க்கை பெறும் போது கிரகண தோஷம் உண்டாகிறது,இதனால் தந்தைக்கு கெடுதி பெரியோர்களிடம் கருத்து வேறுப்பாடு சட்ட சிக்கல் யாவும் ஏற்படும்
சூரியனுக்கு மிக அருகில் அதாவது 1 டிகிரிக்குள் அமையும் கிரகங்கள் அதிக கெடுதலை தருகின்றனர், சூரியனுக்கு அருகில் கிரகங்கள் அமையும் போது பாவீனமான பலனை தரும் என்றாலும் அஸ்தங்கம் பெறும் கிரகம் பரிவர்த்தனை பெற்றால் கெடுதலை தராமல் நற்பலனை உண்டாகும்
சூரியனுக்கு 12 டிகிரிக்குள் சந்திரன் அமைய பெற்றால் மன குழப்பம்,ஜல தொடர்புள்ள நோய்கள் உண்டாகிறது. சூரியன் சந்திரன் இனைந்து இருந்தால் அமாவாசை ஆகும்.
சூரியனுக்கு 17 டிகிரிக்குள் செவ்வாய் அமைந்து அஸ்தங்கம் பெற்றிருந்தால் ரத்த தொடர்புள்ள நோய், சகோதர தோஷம்,வெட்டு காயங்கள் ஏற்படும் அமைப்பு யாவும் உண்டாகும்.பெண் ஏன்றால் மாதவிடாய் கோளாறு ஏற்படும்.
சூரியனுக்கு 14 டிகிரிக்குள் புதன் அமைந்து அஸ்தங்கம் பெற்றிருந்தால் தாய் மாமனுக்கு தோஷம்,நரம்பு பலவீனம் ஏற்படும்.புதன் சூரியன் சேர்க்கை புதாதித்திய யோகத்தை தரும் என்பதால் கல்வி சிறப்பாக இருக்கும்.பொதுவாக புதன் அஸ்தங்கம் அதிக கெடுதலை தருவதில்லை
சூரியனுக்கு 11டிகிரிக்குள் குரு அமைந்து அஸ்தங்கம் பெற்றிருந்தால் புத்திர தோஷம், கொடுக்கல் & வாங்கலில் பிரச்சனை,பெரியோர்களிடம் கருத்துவேறுப்பாடு,முன்னோர் சாபத்தால் முன்னேற தடை போன்றவை உண்டாகும்
சூரியனுக்கு 8 டிகிரிக்குள் சுக்கிரன் அமைந்து அஸ்தங்கம் பெற்றிருந்தால் சுக வாழ்வு செகுசு வாழ்வு பாதிப்பு , பால் வினை நோய்,இல்லற வாழ்வில் ஈடுபட முடியாத நிலை,பெண்களால் பிரச்சனைகள் யாவும் ஏற்படும்.
சூரியனுக்கு 15 டிகிரிக்குள் சனி அமைந்து அஸ்தங்கம் பெற்றிருந்தால் ஆரோக்கிய பாதிப்பு, உடல் பலவீனம், வேலையாட்களால் பிரச்சனைகள்,கடன் பிரச்சனைகள் யாவும் ஏற்படும்.
எல்லா கிரகங்களையும் செயல் இழக்க வைக்கும் சூரியன் ராகு சேர்க்கை பெறும் போது சூரியன் பலம் இழந்து விடுகிறார்.சூரியன் ராகு சேர்க்கை பெறும் போது கிரகண தோஷம் உண்டாகிறது,இதனால் தந்தைக்கு கெடுதி பெரியோர்களிடம் கருத்து வேறுப்பாடு சட்ட சிக்கல் யாவும் ஏற்படும்
சூரியனுக்கு மிக அருகில் அதாவது 1 டிகிரிக்குள் அமையும் கிரகங்கள் அதிக கெடுதலை தருகின்றனர், சூரியனுக்கு அருகில் கிரகங்கள் அமையும் போது பாவீனமான பலனை தரும் என்றாலும் அஸ்தங்கம் பெறும் கிரகம் பரிவர்த்தனை பெற்றால் கெடுதலை தராமல் நற்பலனை உண்டாகும்
Subscribe to:
Posts (Atom)
