Wednesday, December 11, 2013

புத்தாண்டு பலன் & 2014 சிம்மம்



புத்தாண்டு பலன் & 2014 சிம்மம்  
சிம்மம் ; மகம், பூரம், உத்திரம் & 1ம் பாதம்

  உயர்ந்த எண்ணங்களுடன், பிறர் மெச்சும் படியாக வாழக்கூடிய ஆற்றல் கொண்ட சிம்ம ராசி நேயர்களே! உங்களுக்கு என் மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த 2014 & ஆம் ஆண்டு நீங்கள் தொட்டதெல்லாம் துலங்கும். ஜென்ம ராசிக்கு 3&ஆம் வீட்டில் சனியும் ராகுவும் சஞசாரம் செய்வதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றியும், எதிலும் துணிந்து செயல்படக் கூடிய ஆற்றலும் உண்டாகும். இந்த ஆண்டின் முற்பாதி வரை குருபகவான் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் லாபங்கள் பெருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு சுப காரியங்கள் கைகூடும். கணவன்&--மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். சிலருக்கு புத்திர பாக்கியமும் உண்டாகும். அசையும் அசையா சொத்துக்களையும் வாங்கி சேர்ப்பீர்கள். ஆடை ஆபரணமும் சேரும். உற்றார் உறவினர்களின் ஆதரவும் மகிழ்ச்சியினை அளிக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புடையவைகளால் அனுகூலம் கிட்டும். உத்தியோகஸ்தர்களும் உயர்வடைவார்கள். வரும் 13.06.2014 முதல் குருபகவான் 12&ஆம் வீட்டில் சஞ்சரிக்கவிருப்பதால் கொடுக்கல்&வாங்கலில் கவனமுடனிருப்பது நல்லது. 21.06.2014 இல் ஏற்படவுள்ள சர்ப கிரக மாற்றத்தால் ராகு 2&லும் கேது 8&லும் சஞ்சரிக்க விருப்பதால் கணவன்&மனைவி சற்று விட்டுக் கொடுத்து நடந்துக் கொள்வது நல்லது. உடல் ஆரோக்கியத்திலும் சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். உணவு விஷயத்தில் கவனமுடன் செயல்பட்டால் உடல் நிலை சிறப்பாக அமையும்.

தேக ஆரோக்கியம்;
    உடல் ஆரோக்கியத்தில் புதுத் தெம்பும் பொலிவும் உண்டாகும். நீண்ட நாட்களாக மருத்துவ சிகிச்சைகளை எடுத்து கொண்டிருப்பவர்களுக்கும் படிப்படியான முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்திலுள்ளவர்களும் சுபிட்சமான இருப்பதால் மருத்துவ செலவுகள் யாவும் குறையும். மன நிம்மதி உண்டாகும்.

குடும்பம் பொருளாதார நிலை;
  குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கை கூடும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். கணவன்&மனைவியிடையே ஒற்றுமை நிலவும். சிலருக்கு புத்திர வழியில் பூரிப்பு உண்டாகும். பொருளாதார மேம்பாடுகளால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பிரிந்து சென்ற உறவினர்களும் தேடி வந்து ஒற்றுமைப் பாராட்டுவார்கள். சொந்த பூமி மனை வாங்கக் கூடிய யோகங்களும் உண்டாகும். வெளி வட்டாரத் தொடர்புகள் விரிவடையும்.

கொடுக்கல் வாங்கல்
  ஆண்டின் தொடக்கத்தில் பணம் பல வழிகளில் தேடி வந்து பாக்கெட்டை நிரப்பும். கொடுக்கல்&வாங்கலில் சிறப்பான லாபம் அமையும். கடன்களும் குறையும். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளிலும் வெற்றிக் கிட்டும். ஆண்டின் பிற்பாதியில் கொடுக்கல்&வாங்கலில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. பிறரை நம்பி முன் ஜாமீன் கொடுப்பது வாக்குறுதிகள் கொடுப்பது போன்றவற்றை தவிர்க்கவும்.

தொழில் வியாபாரிகளுக்கு
  புதிய புதிய வாய்ப்புகள் தேடி வரும். புதிய நவீன யுக்திகளை கையாண்டு அபிவிருத்தியை பெருக்குவீர்கள். புதிய கூட்டாளிகளின் சேர்க்கையும் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புடையவைகளாலும் அனுகூலங்கள் உண்டாகும். போட்டி பொறாமைகளை சமாளிக்க கூடிய வாய்ப்பும், ஆற்றலும் உண்டாகும். நல்ல வேலையாட்களும் கிடைப்பார்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு
  பணியில் எதிர்பார்க்கும் ஊதிய உயர்வுகளும், உத்தியோக உயர்வுகளும் தடையின்றி கிடைக்கும். செய்யும் பணிக்கேற்ற பாராட்டுதல்களும் கிடைக்கப் பெறுவதால் மனநிம்மதியுடன் பணிபுரிய முடியும். உடன் பணி புரிபவர்களின் ஆதரவுகள் மூலம் வேலைபளுவைக் குறைத்துக் கொள்ள முடியும். வெளியூர் வெளிநாடுகளுக்குச் சென்று பணி புரிய விரும்புவோரின் விருப்பமும் தடையின்றி நிறைவேறும். எதிர்பாராத இடமாற்றமும் கிட்டும்.

அரசியல்வாதிகளுக்கு
  பெயர் புகழ் யாவும் உயரும். சமுதாயத்தில் நல்லதொரு இடத்தினைப் பிடிக்க முடியும். வரவேண்டிய வாய்ப்புகள், மாண்புமிகுப் பதவிகள் யாவும் கிட்டும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றியினைப் பெறுவீர்கள். மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்ற முடியும். கட்சிப் பணிகளுக்காக வெளியூர் வெளி நாடுகளுக்கும் சென்று வரக் கூடிய வாய்ப்புகள் உண்டாகும். வருமானம் பெருகும்.

விவசாயிகளுக்கு
  பயிர் விளைச்சல் மிகச் சிறப்பாக இருக்கும். அரசு வழியிலும் பல மானிய உதவிகள் கிடைக்கப் பெறும். உழைப்பிற்கேற்றப் பலன்களை அடைவதால் பரம திருப்தி உண்டாகும். எடுக்கும் முயற்சிகளிலும் நிறைவான திருப்தி கிடைக்கும். பொருளாதார மேம்பாடுகளால் புதிய யுக்திகளை கையாண்டு மேலும் அபிவிருத்தியைப் பெருக்குவீர்கள். புதிய பூமி மனை வாங்கும் யோகமும் உண்டாகும்.

பெண்களுக்கு
  உடல் நிலை அற்புதமாக இருக்கும். கணவன்&மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கும் நல்ல வரன்கள் தேடி வரும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் குடும்பத்தில் செலவுகளையும் தாராளமாக செய்ய முடியும். ஆடை ஆபரணம் சேரும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை உண்டாக்கும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும்.

படிப்பு
  மாணவ மாணவிகள் கல்வியில் நல்ல மதிப்பெண்களைப் பெற்று தேர்ச்சியடைய முடியும். விளையாட்டுப் போட்டிகளிலும் பரிசுகளை பெற்று பாராட்டுதல்களை அடைவீர்கள். கல்விக்காக பயணங்களை மேற்கொள்ளக் கூடிய வாய்ப்பும் உண்டாகும். வெளியூர் வெளிநாடுகளின் மூலம் அனுகூலம் கிட்டும்.

ஸ்பெகுலேஷன்
    லாட்டரி, ரேஸ், ஷேர் போன்றவற்றில் பெரிய முதலீடுகளை இந்த ஆண்டின் முற்பாதி வரை ஈடுபடுத்தலாம். பிற்பாதியில் சற்று கவனம் தேவை.

ஜனவரி
  அஞ்சா நெஞ்சமும், சிங்கம் போன்றத் துணிவும் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 3&இல் சனி ராகு சஞ்சரிப்பதாலும், மாத பற்பாதியில் சூரியன்  6&ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய விருப்பதாலும் நினைத்ததை நிறைவேற்றக் கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். பணவரவுகள் தடையின்றிருப்பதால் கடன்கள் குறைவதோடு எடுக்கும் முயற்சிகளிலும் வெற்றிக்களைப் பெறுவீர்கள். சிலருக்கு சொந்த பூமி மனை வண்டி வாகனம் போன்றவற்றை வாங்கக் கூடிய யோகம் உண்டாகும். திருமணம் போன்ற சுப காரியங்களும் தடையின்றிகை கூடும். தட்சிணா மூர்த்தியை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் 06.01.2014 இரவு 09.36 மணி முதல் 09.01.2014 அதிகாலை 02.38 மணி வரை.

பிப்ரவரி
  அன்பும், பண்பும், தெய்வீக பக்தியும் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 3&இல் சனி ராகுவும், மாத முற்பாதி வரை 6&இல் சூரியனும் சஞ்சாரம் செய்வதால் இம்மாதமும் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றியினை அடைவீர்கள். பொருளாதார நிலை தாராளமாக இருக்கும். பொன்னும் பொருளும் சேரும். உங்களுக்குள்ள வம்பு வழக்குப் பிரச்சனைகளில் சுமூகமான தீர்ப்பு உண்டாகும். கொடுக்கல்&வாங்கலிலும் நல்ல லாபம் கிட்டும். வெளி வட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொழில் வியாபாரத்திலும் நல்லதொரு லாபமும் அபிவிருத்தியும் உண்டாகும். சேமிப்பு பெருகும். சிவபெருமானை வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம் 03.02.2014 அதிகாலை 05.38 மணி முதல் 05.02.2014 காலை 10.26 மணி வரை.

மார்ச்
  சூது வாது, கள்ளம் கபடம் இல்லாத உள்ளம் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 3&இல் சனி ராகுவும், 11&இல் குருவும் சஞ்சாரம் செய்வதால் பணம் பல வழிகளில் தேடி வந்து பாக்கெட்டை நிரப்பும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும், உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை உண்டாக்கும். கணவன்&மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். உத்தியோகஸ்தர்கள் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். எதிர்பார்த்த உயர்வுகளும் கிட்டும். முருகப் பெருமானை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் 02.03.2014 பகல் 01.33 மணி முதல் 04.03.2014 மாலை 06.08 மணிவரை
மற்றும் 29.03.2014 இரவு 09.23 மணி முதல் 01.04.2014 அதிகாலை 01.47 மணி வரை

ஏப்ரல்
  விடா முயற்சியுடன் பல சாதனைகளை செய்யக் கூடிய ஆற்றல் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 3&இல் ராகுவும், 11&இல் குருவும் சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பு என்றாலும் 8&ஆம் வீட்டில் சூரியன் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தவும், உற்றார் உறவினர்களிடம் பேசும் போதும் நிதானத்தை கடைபிடிக்கவும். தொழில் வியாபாரம் சிறப்பாக நடைபெறும். முடிந்த வரை தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் சற்று கவனமுடன் செயல் படுவது நல்லது. கொடுக்கல்&வாங்கலில் எதிர்பார்த்த லாபத்தினை அடைய முடியும். ஆஞ்சநேயரை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் 26.04.2014 காலை 05.17 மணி முதல் 28.04.2014 காலை 09.30 மணி வரை.

மே
  பிறர் நலனில் அக்கரைக் கொள்ளும் நற்குணம் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 9&இல் சூரியன், 11&இல் குரு சஞ்சாரம் செய்வதால் தொட்டதெல்லாம் துலங்கும். குடும்பத்திலுள்ளவர்களிடம் பேசும் போது பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் சில தடைகளுக்குப் பின் வெற்றியினை அடைவீர்கள். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் எந்த பிரச்சனைகளையும் எதிர் கொள்ளக் கூடிய அளவிற்கு ஆற்றல் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் இன்றி லாபத்தினைப் பெற முடியும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். சனிக்குரிய பரிகாரங்களை செய்வது நல்லது.

சந்திராஷ்டமம் 23.05.2014 பகல் 01.21 மணி முதல் 25.05.2014 மாலை 05.26 மணி வரை

ஜீன்
  தாராள மனப்பான்மையும் பெருந்தன்மையும் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 10&இல் சூரியனும் 11&இல் குரு புதனும் சஞ்சாரம் செய்வது சாதகமான அமைப்பு என்பதால் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்குப் பணியில் நிம்மதியான நிலையிருக்கும். தொழில் வியாபாரமும் சிறப்பாக நடைபெறும். இம்மாதம் 13&ஆம் தேதி ஏற்படவுள்ள குரு மாற்றத்தால் குரு பகவான் விரய ஸ்தானமான 12&ஆம் வீட்டில் சஞ்சரிக்கவுள்ளார். இதனால் பணம் கொடுக்கல்&வாங்கலில் கவனமுடனிருப்பது நல்லது. வரும் 21&ஆம் தேதி ஏற்படவுள்ள சர்ப கிரக மாற்றத்தால் ராகு 2&லும் கேது 8&லும் சஞ்சரிக்கவிருப்பதால் குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து செல்லவும். துர்கை அம்மனை வழிபடவும்.

சந்திராஷ்டமம் 19.06.2014 இரவு 09.35 மணி முதல் 22.06.2014 அதிகாலை 01.27 மணி வரை

ஜீலை
    முன் கோபியாக இருந்தாலும் இரக்ககுணம் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 10&இல் சுக்கிரனும், 11&இல் சூரியனும் சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும் என்றாலும் குரு 12&இல் சஞ்சரிப்பதால் பணம் கொடுக்கல்&வாங்கலில் கவனமுடன் செயல்படுவது நல்லது. ஆடம்பர செலவுகளையும் குறைத்துக் கொள்ளவும். 2,8&இல் ராகு கேது சஞ்சரிப்பதால் கணவன்&மனைவி அனுசரித்து நடந்து கொள்வது. தேவையின்றி பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். முருகனை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் 17.07.2014 அதிகாலை 05.50 மணி முதல் 19.07.2014 அதிகாலை 03.31 மணி வரை

ஆகஸ்ட்
  நியாயம் தவறாதவராகவும், மனசாட்சிக்கு கட்டுப்பட்டவராகவும் விளங்கும் உங்களுக்கு, ஜென்ம ராசிக்கு 3&இல் செவ்வாயும் சனியும் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றியினைப் பெற முடியும். ராகு கேது 2,8&இல் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் தேவையற்ற குழப்பங்கள் தோன்றி மறையும். விரய ஸ்தானத்தில் குரு, சூரியன் சஞ்சரிப்பதால் எதிர்பாராத வீண் விரயங்கள் உண்டாகும். அசையும் அசையா சொத்துக்களை வாங்க முடியும் என்றாலும் சிந்தித்து செயல் படுவது நல்லது. தூக்கமின்மை, அலைச்சல் டென்ஷன் போன்றவற்றால் உடல் நிலையில் சோர்வு உண்டாகும். சிவ பெருமானை வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம் 13.08.2014 மதியம் 02.01 மணி முதல் 15.08.2014 மாலை 05.36 மணி வரை.

செப்டம்பர்
  பிறர் மெச்சும்படியாக நடந்து கொள்ளும் உயர்ந்த பண்பு கொண்ட உங்களுக்கு முயற்சி ஸ்தானமான 3இல் செவ்வாய் சனி சஞ்சரிப்பதால் எதிலும் துணிந்து செயல்பட்டு வெற்றியினைப் பெறுவீர்கள். கொடுக்கல்&வாங்கலில் நம்பியவர்களே துரோகம் செய்யக் கூடிய காலம் என்பதால் பண விஷயங்களில் கவனம் தேவை. உடல் ஆரோக்கியத்திலும், உணவு விஷயத்திலும் கவனமுடன் செயல்பட்டால்  அனுகூலம் பலனை அடைய முடியும். தேவையற்ற மருத்துவ செலவுகள் குறையும். தொழில் வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஆதரவுகளால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். சேமிப்பு குறையும். துர்கை அம்மனை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் 09.09.2014 இரவு 10.04 மணி முதல் 12.09 2014 அதிகாலை 01.29 மணி வரை.

அக்டோபர்
  எந்த காரியத்திலும் துணிந்து ஈடுபடக் கூடிய தைரியமும் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 3&இல் சனி ராகு சஞ்சரிப்பதும் மாத பிற்பாதியில் சூரியன் 3&ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்யவிருப்பதும் அனுகூலமான அமைப்பு என்பதால் எந்தவொரு காரியத்திலும் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெறுவீர்கள். கொடுக்கல்&வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். தொழில் வியாபாரத்தில் நிறைய போட்டி பொறாமைகளை எதிர்கொள்ள நேரிட்டாலும், அடைய வேண்டிய லாபத்தினை அடைவீர்கள். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதால் அலைச்சல்கள் குறையும். ஆடம்பர செலவுகளைக் குறைக்கவும். விநாயகரை தினமும் வழிபடவும்.

சந்திராஷ்டமம் 07.10.2014 காலை 06.04 மணி முதல் 09.10.2014 காலை 09.21 மணி வரை

நவம்பர்
  எந்த கஷ்டங்களையும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 2,8&இல் சர்ப கிரகங்கள் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் தேவையற்ற வீண் குழப்பங்கள் உண்டாகும். 3&இல் சூரியனும் சனியும் சஞ்சாரம் செய்வதால் நினைத்ததை நிறைவேற்றும் ஆற்றலைப் பெறுவீர்கள். பூர்வீக சொத்துக்களால் சிறு சிறு விரயங்களை எதிர் கொள்ளும் வேண்டி வரும். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். கொடுக்கல்&வாங்கலில் கவனம் தேவை. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. துர்கை அம்மனை வழிபடவும்.

சந்திராஷ்டமம் 03.11.2014 மதியம் 02.11 மணி முதல் 05.11.2014 மாலை 05.22 மணி வரை.

டிசம்பர்
  வாழ்க்கையில் பல முறை தோற்றாலும் தன் சொந்த முயற்சியால் முன்னுக்கு வரும் உங்களுக்கு மாத பிற்பாதி வரை குரு விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எதிர்பாராத விரயங்கள் உண்டாகும். 2,8&இல் ராகு கேதுவும் 4&இல் சூரியனும் சஞ்சரிப்பதால் அலைச்சல், டென்ஷன் குடும்பத்ல் தேவையற்ற பிரச்சனைகள் போன்றவை தோன்றும். தொழில் வியாபாரத்திலும் நிறைய போட்டிகள் நிலவும். இம்மாதம் 16ம் தேதி ஏற்படவுள்ள சனி மாற்றத்தால் சனி 4&ஆம் வீட்டிற்கு மாறுதலாக விருப்பதால் உங்களுக்கு அர்த்தாஷ்டம சனி தொடங்கவுள்ளது. இதனால் வீண் அலைச்சல் டென்ஷன்கள் அதிகரிக்கும். சிவ பெருமானை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் 30.11.2014இரவு 10.24 மணி முதல் 03.12.2014 அதிகாலை 01.26 மணி வரை மற்றும் 28.12.2014 காலை 06.38 மணி முதல் 30.12.2014 காலை 09.35 மணி வரை

மகம்
கேதுவின் நட்சத்திரத்தில் பிறந்த உங்களுக்கு வாழ்வில் எதையாவது சாதித்து விட வேண்டும் என்ற எண்ணம் மனதில் குடி கொண்டிருக்கும். இந்த வருடம் உங்களுக்கு ஒரு பொற்காலம் என்றே சொல்லாம். குடும்பத்தில் சுபிட்சமான நிலை, பொருளாதார மேன்மை, எடுக்கும் முயற்சிகளில் வெற்றி போன்ற யாவும் சிறப்பாக அமையும். சிலருக்கு சொந்த பூமி மனை, வாங்க வேண்டும் என்ற கனவுகளும் நினைவாகும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். பொன், பொருள் சேரும். தொழில் வியாபாரம் சிறப்பாக நடைபெறும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் உயர்வுகள் கிட்டும்.

பூரம்
  சுக்கிரனின் நட்சத்திரத்தில் பிறந்துள்ள நீங்கள் காண்பவர்களை கவர்ந்திழுக்கும் கட்டழகு கொண்டவராக இருப்பீர்கள். இந்த வருடம் பணம் பல வழிகளில் தேடி வரும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். கொடுக்கல்&வாங்கலில் சரளமான நிலையிருக்கும். கணவன்&மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் சிறப்பாக இருக்கும். உத்தியோகஸ்தர்கள் உயர்வடைவார்கள். தொழில் வியாபாரத்தில்  நல்ல லாபம் கிட்டும். வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புடையவைகளால் அனுகூலங்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மறையும்.

உத்திரம் & 1ம் பாதம்
  சூரியனின் நட்சத்திரத்தில் பிறந்த உங்களுக்கு நல்ல மன வலிமையும் உண்மை பேசும் குணமும் இருக்கும். இந்த வருடம் முழுவதும் நீங்கள் நினைத்ததை நிறைவேற்றக் கூடிய ஆற்றல் உண்டாகும். பொருளாதார நிலை மிகவும் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். எடுக்கும் சுப காரியங்களுக்கான முயற்சிகளில் வெற்றி கிட்டும். ஆடை ஆபரணம் சேரும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். தொழில் வியாபாரமும் சிறப்பாக நடைபெறும். புதிய கூட்டாளிகளின் சேர்க்கை அபிவிருத்தியை பெருக்க உதவும். கொடுக்கல்&வாங்கலில் கவனம் தேவை.

அதிர்ஷ்டம் அளிப்பவை 

எண் & 1,2,3,9,10,11,12,18
நிறம் & வெள்ளை, சிவப்பு
கிழமை & ஞாயிறு, திங்கள்
கல் & மாணிக்கம் 
திசை& கிழக்கு
தெய்வம் & சிவன்

பரிகாரம்
    சிம்ம ராசியில் பிறந்த உங்களுக்கு வரும் 13.06.2014 முதல் குரு விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்க விருப்பதால் குருவுக்குரிய பரிகாரங்களை செய்வது, குருப் ப்ரீதி தட்சிணா மூர்த்திக்கு கொண்டை கடலை மாலை சாற்றி நெய் தீபமேற்றி வழிபடுவது நல்லது. 21.06.2014 முதல் ராகு 2&லும் கேது 8&லும் சஞ்சரிக்க விருப்பதால் சர்ப சாந்தி செய்வது, துர்கை அம்மனை வழிபடுவது, தினமும் விநாயகர் வழிபாடு மேற்கொள்வது நற்பலனை உண்டாக்கும்.

Contact

For your consultation

Please sent  Rs 500 ,(  20 US DOLLAR (Rs 1000 INR) For Overseas Customer )  in favour of MURUGU BALAMURUGAN  with your birth details (date of birth,time,place) &  5 questions  to ( e-mail ) me for  horoscope reading

please contact my postal adress  

Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-117/33 Bhakthavachalam colony 1st street,  
(Near Valli Thirumanamandapam)  
Vadapalani,  
Chennai-600026  
 My Cell - 0091 - 7200163001,  9383763001
https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala


E-mail  murugu.astro@gmail.com murugu_astro@yahoo.co.in.
Web  www.muruguastrology.com

Bank account details are

Name ; Murughu Balamurugan
Bank name - Indianbank
Savings Account No - 437753695
Branch name - Saligramam,
Chennai - 600093.INDIA.
MICR no - 600019072
IFS code ; IDIB000S082
CBS CODE-01078

Name ; R.Balamurugan
Bank name  - Bank of Barado
Savings Account No - 29900100000322
Branch name - Vadapalani
Chennai - 600026.INDIA.
MICR Code - 600012034
IFSC code ; BARBOVADAPA
CBS CODE-01078

புத்தாண்டு பலன் 2014 கடகம்


புத்தாண்டு பலன்  2014  கடகம்

கடகம் ; புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்
     
உயர்ந்த லட்சியங்களை கொண்டவராகவும் விடா முயற்சியுடன் செயல்படுவராகவும் விளங்கும் கடக ராசி நேயர்களே! உங்களுக்கு என் மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த 2014 ஆம் ஆண்டு உங்களுக்கு சற்று ஏற்றத் தாழ்வுகள் நிறைந்த தாகவே இருக்கும். சனி பகவான் 4&இல் சஞ்சரித்து அர்த்தாஷ்டம சனி நடைபெறுவதால் தேவையற்ற அலைச்சல் டென்ஷன், அசையும் அசையா சொத்துக்களால் வீண் செலவுகள் உண்டாகும். தற்போது விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவும் வரும் 13.06.2014 முதல் ஜென்ம ராசியிலேயே சஞ்சரிக்கவிருப்பதால் பணவரவுகளில் நெருக்கடிகள் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் உண்டாகும். திருமணம் போன்ற சுப காரியங்களுக்கான முயற்சிகளிலும் தடை தாமதங்கள் ஏற்படும். தற்போது 4,10இல் சஞ்சரிக்கும் ராகு கேது வரும் 21.06.2014 முதல் மாறுதலாகி ராகு 3ஆம் வீட்டில் சஞ்சரிக்கவிருப்பதால் எந்த பிரச்சனைகளையும் சமாளிக்கும் அளவிற்கு துணிவும் தைரியமும் கொடுக்கும். பணம் கொடுக்கல்&வாங்கலில் பிறரை நம்பி வாக்குறுதி கொடுப்பது, முன் ஜாமீன் கொடுப்பது போன்றவற்றை தவிர்க்கவும். எதிர்பாராத சிறு சிறு உதவிகள் கிடைக்கப் பெறுவதால் எல்லா வித தேவைகளும் பூர்த்தியாகும். தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலை ஏற்பட்டாலும் பொருட் தேக்கம் ஏற்படாது. தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதால் அலைச்சலை குறைத்துக் கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்த்து தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவதன் மூலம் வீண் பிரச்சனைகளை தவிர்க்கலாம்.

தேக ஆரோக்கியம்
    உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்பட்டாலும் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். குடும்பத்திலுள்ளவர்களால் உண்டாகக் கூடிய மருத்துவ செலவுகளை சமாளிக்க கடன் வாங்கவேண்டியிருக்கும். தேவையற்ற அலைச்சல் டென்ஷன்கள் உண்டாவதால் மனநிம்மதி குறையும்.

குடும்பம் பொருளாதார நிலை
  கணவன்&மனைவி சற்று விட்டுக் கொடுத்து நடந்துக் கொண்டால் குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். பூமி நிலம் வண்டி வாகனம் போன்றவற்றால் சிறு சிறு விரயங்களை எதிர் கொள்ள வேண்டியிருக்கும். உற்றார் உறவினர்கள் தேவையற்றப் பிரச்சனைகளை ஏற்படுத்தினாலும் சில நேரங்களில் அனுகூலமாக செயல்படுவார்கள். எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெறுவதால் குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியும். ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது.

கொடுக்கல் வாங்கல்
  பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை ஏற்பட்டாலும் எதையும் சமாளிக்க கூடிய அளவிற்கு பலமும் வலிமையும் கூடும். கொடுக்கல்&வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது நிதானித்து செயல் படவும். பண விஷயத்தில் நம்பியவர்களே துரோகம் செய்யக் கூடும் என்பதால் பிறருக்கு வாக்குறுதி கொடுப்பது முன் ஜாமீன் கொடுப்பது போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது.

தொழில் வியாபாரிகளுக்கு
  தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலை ஏற்பட்டாலும் பொருட்த் தேக்கம் உண்டாகாது. புதிய ஒப்பந்தங்களில் கையழுத்திடும் போது கூட்டாளிகளை கலந்தாலோசித்து செய்யவும். வெளியூர் வெளி நாட்டு தொடர்புடையவைகளால் சிறு சிறு அனுகூலங்கள் ஏற்பட்டாலும் நிறைய அலைச்சல்கள் உண்டாகும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் சற்று தாமதப் படும். உடல் நிலை சோர்வடையும்.

உத்தியோகஸ்தர்களுக்கு
  பணியில் உடனிருப்பவர்களை அனுசரித்து நடந்துக் கொண்டால் வேலை பளுவைக் குறைத்துக் கொள்ள முடியும். எதிர் பார்க்கும் உயர்வுகள் தாமதப்பட்டாலும், உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சியினை உண்டாக்கும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் ஏற்பட்டு குடும்பத்தை விட்டுப் பிரியக் கூடிய சூழ்நிலைகளும் ஏற்படும். உடல் நிலையில் உண்டாக கூடிய பாதிப்புகளால் அடிக்கடி விடுப்பு எடுக்க நேரிடும்.

அரசியல்வாதிகளுக்கு
  பெயர் புகழ் மங்கக் கூடிய காலம் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது கட்சிப் பணிகளுக்காக நிறையப் பயணங்களை மேற்க் கொள்ள வேண்டியிருப்பதால் அலைச்சல்கள் அதிகரிக்கும். எடுக்கும் முயற்சிகளுக்கும் மற்ற கட்சிகளின் ஆதரவுக் கிடைக்காது. வீண் விரயங்களை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலைகளும் உண்டாகும்.

விவசாயிகளுக்கு
    பயிர் விளைச்சல்கள் சிறப்பாக இருந்தாலும் சந்தையில் விளைப் பொருளுக்கேற்ற விலையினைப் பெற இயலாது. பட்டபாட்டிற்குப் பலலின்றிப் போகும். அரசு வழியில் எதிர்பாராத சில மானிய உதவிகள் கிடைக்கப் பெறுவதால் எதையும் சமாளித்து விடுவீர்கள். பூர்வீக சொத்து விஷயங்களில் தேவையற்ற வம்பு வழக்குகள் ஏற்பட்டு மனநிம்மதி குறையும்.

பெண்களுக்கு
  உடல் நிலையில் பாதிப்புகள் உண்டாகி அடிக்கடி மருத்துவ செலவுகள் ஏற்படும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் அமைவதில் தடை உண்டாகும். பண வரவுகளில் நெருக்கடிகள் ஏற்பட்டாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். கணவன்&மனைவி விட்டு கொடுத்து நடந்து கொள்வது நல்லது. உறவினர்களிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்டும். சேமிக்க முடியாது.

படிப்பு
  கல்வியில் ஞாபக மறதி ஏற்பட்டு படித்ததெல்லாம் தக்க சமயத்தில் ஞாபகத்திற்கு வராமல் போகும். இதனால் எதிர்பார்த்த மதிப்பெண்களை எடுப்பதில் சிரமம் ஏற்படும். பெற்றோர் ஆசிரியர்களின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும். விளையாட்டுப் போட்டிகளின் போது கவனமுடன் செயல் படுவது நல்லது.

ஸ்பெகுலேஷன்
  லாட்டரி, ரேஸ், ஷேர் போன்றவற்றில் பெரிய தொகைகளை முதலீடு செய்யாமலிருப்பதன் மூலம் வீண் விரயங்களை தவிர்க்கலாம்.

ஜனவரி
    விடா முயற்சியுடன் செயல்பட்டு வெற்றி காணும் உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 3&இல் செவ்வாயும், 6&இல் சூரியனும் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றியினைக் காண்பீர்கள். பணவரவுகள் தேவைக்கேற்ற படியிருக்கும் என்றாலும் ஆடம்பரமாக செலவு செய்வதை தவிர்க்கவும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சிறு சிறு தடைகளுக்குப் பின் நற்ப்பலன் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் சற்றே தேக்க நிலை ஏற்பட்டாலும் லாபம் குறையாது. உத்தியோகஸ்தர்களுக்கு வேலை பளு அதிகரிக்கும். ஆஞ்சநேயரை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் 04.01.2014 மாலை 06.18 மணி முதல் 06.01.2014 இரவு 09.36 மணி வரை.

பிப்ரவரி
  சாந்தமும், சகிப்புத் தன்மையும், கொண்ட உங்களுக்கு ஜென்ம  ராசிக்கு 3&இல் செவ்வாயும், விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு வக்ர கதியிலும் சஞ்சரிப்பதால் பணவரவுகளில் நெருக்கடிகள் ஏற்படாது. கணவன்&மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படக் கூடும் என்பதால் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. குடும்பத்தில் சுப காரியங்கள் கைகூடி மகிழ்ச்சியளிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு உயர்வுகள் ஏற்பட்டாலும் தேவையற்ற அலைச்சல்களை சந்திக்க வேண்டி வரும். முடிந்த வரை பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. சிவபெருமானை வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம் 01.02.2014 அதிகாலை 02.28 மணி முதல் 03.02.2014 காலை 05.38 மணி வரை.
மற்றும் 28.02.2014 காலை 10.29 மணி முதல் 02.03.2014 பகல் 01.33 மணி வரை.

மார்ச்
  உயர்ந்த லட்சியங்களுக்காக பாடுபடும் குணம் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 4&இல் செவ்வாய், சனி ராகுவும், 8&ல் சூரியனும் சஞ்சரிப்பதால் வண்டி வாகனங்களில் பயணம் செய்யும் போது கவனமுடன் செயல் படுவது நல்லது. உடல் ஆரோக்கியத்திலும் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகள் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் அதிகரிப்பதால் போட்டி பொறாமைகள் அதிகரிப்பதால் வர வேண்டிய லாபம் குறையும். குடும்பத்தில் வீண் கருத்து வேறுபாடுகள் உண்டாகும். முருகனை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் 27.03.2014 மாலை 06.26 மணி முதல் 29.03.2014 இரவு 09.23 மணி வரை.

ஏப்ரல்
  அனைவரிடமும் சகஜமாகப் பழகக் கூடிய குணம் கொண்ட உங்களுக்கு, ஜென்ம ராசிக்கு 9&இல் சூரியனும், 10&இல் கேதுவும் சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரத்திலிருந்த நெருக்கடிகள் குறையும். 4&இல் சஞ்சரிக்கும் சனியும் வக்ர கதியில் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருந்தாலும் நிலைமையை சமாளித்து விட முடியும். உறவினர்களின் ஆதரவும் ஒரளவுக்கு மகிழ்ச்சியினை உண்டாக்கும். கொடுக்கல்&வாங்கலில் சற்று கவனமுடன் செயல் படுவது நல்லது. உடல் நிலையில் சிறு சிறு பாதிப்புகள் உண்டாகும். அம்மன் வழிபாடு மேற்கொள்வது நல்லது.

சந்திராஷ்டமம் 24.04.2014 அதிகாலை 02.26 மணி முதல் 26.04.2014 காலை 05.17 மணி வரை.

மே
  எதிலும் துணிந்து செயல்படும் ஆற்றல் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 3&இல் செவ்வாயும், 10இல் சூரியனும் சஞ்சாரம் செய்வதால் உத்தியோக ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். பண வரவுகளும் தாராளமாகவே இருக்கும். ஆடம்பர செலவுகள் செய்வதையும் கொடுக்கல்&வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபத்துவதையும் தவிர்ப்பது நல்லது. கணவன்&மனைவி விட்டுக் கொடுத்து நடந்து கொண்டால் குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பிள்ளைகளால் சிறு சிறு மன சஞ்சலங்கள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதிகள் உண்டாகாது. தட்சிணா மூர்த்தியை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் 21.05.2014 பகல் 10.35 மணி முதல் 23.05.2014 பகல் 01.21 மணி வரை.

ஜீன் 
  எந்த எதிர்ப்பையும் சமாளிக்கும் வலிமை கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 3இல் செவ்வாய் சஞ்சரிப்பதும், 4இல் சஞ்சரிக்கும் சனி வக்ர கதியிலிருப்பதும், 10இல் சுக்கிரன், கேதுவும், 11இல் சூரியனும் சஞ்சாரம் செய்வதும் அற்புதமான அமைப்பு என்பதால் நினைத்ததை நிறைவேற்றக் கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். இம்மாதம் 13ஆம் தேதி முதல் குரு பகவான் ஜென்ம ராசியில் சஞ்சரிக்கவிருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. 21ஆம் தேதி ஏற்படவுள்ள சர்ப கிரக மாற்றத்தால் ராகு 3&லும், கேது 9லும் சஞ்சரிக்க விருப்பது ஒரளவுக்கு அனுகூலத்தை உண்டாக்க கூடிய அமைப்பாகும். குருவுக்குரிய பரிகாரங்களை செய்யவும்.

ஜீலை
  எதையும் முன் கூட்டியே அறியும் திறன் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கும் 3இல் செவ்வாய் ராகுவும், 11இல் சுக்கிரனும் சஞ்சாரம் செய்வதால் ஒரளவுக்கு எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகளைப் பெறுவீர்கள். 12&ஆம் வீட்டில் சூரியன் சஞ்சாரம் செய்வதால் உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்து கொள்வது நல்லது. மாத பிற்பாதியில் எந்தவொரு காரியத்திலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரம் சற்று மந்த நிலையில் நடைப்பெற்றாலும் பொருட் தேக்கம் ஏற்படாது. பயணங்களின் போது கவனமுடன் நடந்து கொள்வது வேகத்தைக் குறைப்பது நல்லது. சிவ பெருமானை வழிபடுவது உத்தமம்.

சந்திராஷ்டமம் 15.07.2014 அதிகாலை 03.13 மணி முதல் 17.07.2014 அதிகாலை 05.50 மணி வரை

ஆகஸ்ட்
    மிகுந்த இரக்க குணம் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசியில் சூரியனும், குருவும், சஞ்சரிப்பதாலும் 4இல் செவ்வாய் சனியும் சஞ்சாரம் செய்வதாலும் குடும்பத்தில் நிம்மதி குறைவும், உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகளும் உண்டாகும். கணவன்&மனைவி சற்று விட்டுக் கொடுத்து நடந்துக் கொள்வது நல்லது. தேவையற்ற அலைச்சல் டென்ஷன்களும் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் வீண் பழிகளை சுமக்க வேண்டிய காலம் என்பதால் எதிலும் கவனம் தேவை. பணம் கொடுக்கல்&வாங்கலிலும் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். சுப காரியங்களில் தடைகள் உண்டாகும். முருகப் பெருமானை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் 11.08.2014 காலை 11.29 மணி முதல் 13.08.2014 மதியம் 02.01 மணி வரை.

செப்டம்பர்
  அறிவும், கற்பனை சக்தியும் அதிகம் கொண்ட உங்களுக்கு, ஜென்ம ராசிக்கு 3இல் ராகு சஞ்சரிப்பதன் மூலம் எடுக்கும் முயற்சிகளில் ஒரளவுக்கு அனுகூலங்களைப் பெற முடியும். மாத பிற்பாதியில் சூரியனும் 3ஆம் வீட்டில் சஞ்சரிக்க விருப்பதால் எதையும் சாதித்து விடுவீர்கள். பண வரவுகளில் ஏற்றத் தாழ்வான நிலையிருக்கும் என்பதால் ஆடம்பர செலவுகளை சற்று  குறைத்துக் கொள்வது நல்லது. உடல் நிலையிலும் சோர்வு மந்த நிலை போன்றவை ஏற்படும். தொழில் வியாபாரத்தில் போட்டி பொறாமைகளால் வர வேண்டிய வாய்ப்புகள் கை நழுவிப் போகும். சிவ பெருமானை வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம் 07.09.2014 இரவு 07.33 மணி முதல் 09.09.2014 இரவு 10.04 மணி வரை.

அக்டோபர்
  வேடிக்கையாகப் பேசக் கூடிய கலா ரசிகரான உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 3இல் சூரியனும் மாத பிற்பாதியில் 6இல் செவ்வாயும் சஞ்சாரம் செய்யவிருப்பதால் எந்த வித பிரச்சனைகளையும் எளிதில் சமாளித்து விட முடியும். தொழிலிலுள்ள மறைமுக எதிர்ப்புகளும் விலகும். பண வரவுகளில் சற்று மந்த நிலை ஏற்பட்டாலும், செலவுகள் கட்டுக்குள் இருப்பதாலும், எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெறுவதாலும் குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்து விட முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் கவனமுடன் செயல் பட்டால் வீண் பழிச் சொற்களிலிருந்து தப்பித்துக் கொள்ள இயலும். சனிக்குரிய பரிகாரங்களை செய்யவும்.

சந்திராஷ்டமம் 05.10.2014 காலை 03.39 மணி முதல் 07.10.2014 காலை 06.04 மணி வரை.

நவம்பர்
    தன்னம்பிக்கையும், தியாக மனப்பான்மையும் கொண்ட உங்களுக்கு, ஜென்ம ராசியில் குரு சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாக சிறு சிறு இடையூறுகளை சந்தித்தாலும் 6ஆம் வீட்டில் செவ்வாய் சஞ்சாரம் செய்வதால் எதையும் சமாளிப்பீர்கள். வெளி வட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தேவையற்ற வம்வு வழக்குகள் மறையும். 4இல் சூரியன் சனி சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது, குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழில் வியாபாரத்தில் போட்ட முதலீட்டினை எடுத்து விட முடியும். உத்தியோகத்தில் வேலை பளு கூடும். தட்சிணா மூர்த்தியை வழிபடவும்.

சந்திராஷ்டமம் 01.11.2014 பகல் 11.48 மணி முதல் 03.11.2014 மதியம் 02.11 மணி வரை
மற்றும் 28.11.2014 இரவு 07.59 மணி முதல் 30.11.2014 இரவு 10.24 மணி வரை

டிசம்பர்
  கொடுத்த வாக்கை நிறைவேற்றத் தவறாத உங்களுக்கு 3இல் ராகுவும், மாத பிற்பாதியில் 6இல் சூரியனும் சஞ்சரிப்பது, ஒரளவுக்கு சாதகமான அமைப்பு என்றாலும் 7இல் செவ்வாய் சஞ்சரிப்பதால் கணவன்&மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும். முடிந்த வரை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. வரும் 16ஆம் தேதி ஏற்படவுள்ள சனி மாற்றத்தால் சனி பகவான் விருச்சிக ராசிக்கு மாறுதலாக விருப்பதால் உங்களுக்கு நடைபெற்றுக் கொண்டிருந்த  அர்த்தாஷ்டம சனி முழுவதும் முடிவடைகிறது. இதனால் இது வரை இருந்த அலைச்சல் டென்ஷன்கள் குறையும். அசையா சொத்துக்களால் சிறு சிறு அனுகூலங்கள் உண்டாகும். முருகப் பெருமானை வழிபடுவது நல்லது-.

சந்திராஷ்டமம் 26.12.2014 அதிகாலை 04.18 மணி முதல் 28.12.2014 அதிகாலை 06.38 மணி வரை.

புனர்பூசம் 4&ம் பாதம்,
    குரு பகவானின் நட்சத்திரத்தில் பிறந்துள்ள உங்களுக்கு பொய் பேசாத குணமும், நல்ல வாக்கு வன்மையும் இருக்கும். இந்த வருடம் நீங்கள் எந்த வொரு காரியத்திலும் சற்று சிந்தித்து செயல் படுவது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட வேண்டியிருக்கும். பண வரவுகளிலும் ஏற்ற இறக்கமான நிலையே நிலவும். குடும்பத்தேவைகளை பூர்த்தி செய்ய எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெறும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வருவதில் தடைகள் உண்டாகும். தேவையற்றப் பயணங்களை தவிர்ப்பது நல்லது.

பூசம்
  சனி பகவானின் நட்சத்திரத்தில் பிறந்துள்ள உங்களுக்கு எந்த வொரு பிரச்சனையையும் அலசி ஆராயக் கூடிய குணமிருக்கும். இந்த வருடம் நீங்கள் இதையே கடைபிடிக்க வேண்டியிருக்கும். பணவரவுகளில்  திருப்திகரமான நிலையிருக்காது என்பதால் ஆடம்பரச் செலவுகளை குறைப்பது நல்லது. கணவன்&மனைவி விட்டுக் கொடுத்து நடந்தும் கொண்டால் ஒற்றுமையும் சிறப்பாக இருக்கும். உறவினர்களின் மூலம் ஒரளவுக்கு அனுகூலங்கள் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் நிறைய போட்டிகளை எதிர் கொள்ள நேரிட்டாலும் அடைய வேண்டிய லாபத்தை அடைந்து விட முடியும். கொடுக்கல்&வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. சேமிக்க முடியாது.

ஆயில்யம்
  புதனின் நட்சத்திரத்தில் பிறந்துள்ள உங்களுக்கு சகல வித வித்தைகளையும் கற்றறியக் கூடிய ஆற்றலும் இருக்கும். இந்த ஆண்டு உங்களுக்கு சற்று ஏற்றத் தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். பணவரவுகளில் சிறு சிறு நெருக்கடிகள் ஏற்பட்டாலும் எதையும் ஒரளவுக்கு சமாளித்து விட முடியும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளை மேற்கொள்வதை சற்று தள்ளி வைப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கும் சிறு சிறு அலைச்சல் டென்ஷன் ஏற்பட்டாலும் கிடைக்க வேண்டிய லாபம் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை உண்டாகும்.

அதிர்ஷ்டம் அளிப்பவை 

எண் & 1,2,3,9,10,11,12,18 
நிறம் & வெள்ளை, சிவப்பு
கிழமை & திங்கள் வியாழன்
கல் & முத்து
திசை & வடகிழக்கு 
தெய்வம் & வெங்கடாசலபதி

பரிகாரம்;
    இந்த வருடத்தின் முற்பாதி வரை குருபகவான் 12லும் பிற்பாதியில் ஜென்ம ராசியிலும் சஞ்சரிக்க விருப்பதால் குருப்ரீதி, தட்சிணா மூர்த்திக்கு பரிகாரங்கள் செய்வது நல்லது. இந்த ஆண்டு முழுவதும் அர்த்தாஷ்டம  சனி தொடருவதால் சனிக்கிழமை தோறும் சனிக்குரிய பரிகாரங்களை செய்வது நல்லது. எள் எண்ணெயில் தீபமேற்றுவது, ஊனமுற்ற ஏழை எளியவர்களுக்கு உதவிகள் செய்வது நல்லது.

Contact

For your consultation

Please sent  Rs 500 ,(  20 US DOLLAR (Rs 1000 INR) For Overseas Customer )  in favour of MURUGU BALAMURUGAN  with your birth details (date of birth,time,place) &  5 questions  to ( e-mail ) me for  horoscope reading

please contact my postal adress  

Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-117/33 Bhakthavachalam colony 1st street,  
(Near Valli Thirumanamandapam)  
Vadapalani,  
Chennai-600026  
 My Cell - 0091 - 7200163001,  9383763001
https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala


E-mail  murugu.astro@gmail.com murugu_astro@yahoo.co.in.
Web  www.muruguastrology.com

Bank account details are

Name ; Murughu Balamurugan
Bank name - Indianbank
Savings Account No - 437753695
Branch name - Saligramam,
Chennai - 600093.INDIA.
MICR no - 600019072
IFS code ; IDIB000S082
CBS CODE-01078

Name ; R.Balamurugan
Bank name  - Bank of Barado
Savings Account No - 29900100000322
Branch name - Vadapalani
Chennai - 600026.INDIA.
MICR Code - 600012034
IFSC code ; BARBOVADAPA
CBS CODE-01078

2014 புத்தாண்டு பலன் ரிஷபம்


புத்தாண்டு பலன்  2014 ரிஷபம்


ரிஷபம்   கிருத்திகை 1,2,3, ரோகிணி, மிருகசீரிஷம் 1,2ம் பாதங்கள்
     
தன்னம்பிக்கையும், அசட்டு தைரியமும் பிடிவாத குணமும் கொண்ட ரிஷப ராசி நேயர்களே! உங்களுக்கு என் மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த 2014 ஆம் ஆண்டு உங்களுக்கு ஒரு பொற்காலம் என்று கூறினால் அது மிகையாகாது. ஆண்டின் முற்பாதி வரை குரு தனஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பணவரவுகளுக்குப் பஞ்சம் ஏற்படாது. குடும்பத்தில் திருமணம் போன்ற சுப காரியங்கள் கை கூடி மகிழ்ச்சியளிக்கும். புத்திர வழியிலும் மகிழ்ச்சி தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். சனியும் ராகுவும் 6ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் தொட்ட தெல்லாம் துலங்கும். தொழில் வியாபாரத்திலுள்ள எதிர்ப்புகள் விலகி ஓடும். எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள். உறவினர்களின் ஆதரவுகளும் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். கொடுக்கல் வாங்கல் சரளமாக நடைபெற்று லாபத்தை அள்ளி தரும். சிலருக்கு சொந்த வீடு, மனை, வண்டி வாகனங்கள் போன்றவற்றை வாங்கக் கூடிய யோகமும் உண்டாகும். தொழில் வியாபாரத்திலும் புதிய யுக்திகளை கையாண்டு லாபத்தை பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையும், எதிர்பார்க்கும் உயர் பதவிகளும் கிடைக்கப் பெறும். 13.6.2014 முதல் குரு பகவான் 3ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்யவிருப்பதால் பணம் கொடுக்கல் வாங்கலில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. 21.06.2014இல் ஏற்படவுள்ள சர்ப கிரக மாற்றத்தால் கேது 11ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்யவிருப்பதால் எதிலும் வெற்றியையும் லாபத்தினையும் பெறுவீர்கள்.

தேக ஆரோக்கியம்
    உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். அன்றாடப் பணிகளில் சுறு சுறுப்புடன் செயல்படக் கூடிய ஆற்றலும் உண்டாகும். குடும்பத்திலுள்ளவர்களால் இருந்த மருத்துவ செலவுகள் மறையும். அனைவரும் உங்களிடம் அன்பாக நடத்தும் கொள்வதால் மனநிறைவும் மகிழ்ச்சியும் உண்டாகும். சுக வாழ்க்கை அமையும்.

குடும்ப பொருளாதார நிலை
  திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். மணவாழ்க்கை சிறப்பாக அமையும். கணவன்&மனைவியிடையே ஒற்றுமையும், அன்யோன்யமும் அதிகரிக்கும். புத்திர பாக்கியமும் உண்டாகும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் உங்களுக்கு மகிழ்ச்சியை உண்டாக்கும். சொந்த பூமி மனை போன்றவற்றையும் வாங்கி சேர்ப்பீர்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த சுப செய்தியும் உங்களுக்கு வந்து சேரும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும்.

கொடுக்கல் வாங்கல்
    பண வரவுகள் மிகச் சிறப்பாக இருக்கும். கொடுக்கல் வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி நல்ல லாபத்தை காண்பீர்கள். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். சிலருக்குள்ள கடன் பிரச்சனைகளும் தீர்வடையும். இது வரை இருந்து வந்த வம்பு வழக்குகளிலும் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக அமையும். எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள். எதிர்பாராத தன வரவுகளாலும் பொருளாதார நிலை மேன்மையடையும். சேமிப்பும் பெருகும்.

தொழில் வியாபாரிகளுக்கு
    பல பெரிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் அனுகூலம் கிட்டும். வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புடைய வாய்ப்புகளும் கிட்டும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்புகளால் அபிவிருத்தியை பெருக்க முடியும். புதிய கிளைகளையும் நிறுவி மேன்மையினை அடைவீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு
    பணியில் எதிர்பார்த்துக் காத்திருந்த பதவி உயர்வுகளும், ஊதிய உயர்வுகளும் தடையின்றி கிடைக்கும். சிலர் எதிர்பார்த்த இடமாற்றத்தைப் பெற்று குடும்பத்தோடு சேருவார்கள். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணி புரிய கூடிய வாய்ப்புகள் உண்டாகும். பொருளாதார நிலையும் உயரும். புதிய வேலை தேடுபவர்களுக்கும் தகுதிக் கேற்ற வேலை வாய்ப்பு கிட்டும். உடன் பணி புரிபவர்களின் ஆதரவுகளால் வேலை பளுவும் குறையும்.

அரசியல்வாதிகளுக்கு
    பெயர் புகழ் உயரக் கூடிய காலமாகும். நினைத்ததை நிறைவேற்றக் கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி அவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். உங்களின் பேச்சிற்கு மதிப்பும் மரியாதையும் இருக்கும். கட்சிப் பணிகளுக்காக சிறு சிறு வீண் செலவுகளை செய்ய வேண்டியிருந்தாலும் பொருளாதார நிலை உயர்வாகவே இருக்கும்.

விவசாயிகளுக்கு
  பயிர் விளைச்சல் மிகவும் சிறப்பாக இருக்கும். போட்ட முதலீட்டிற்கு மேல் லாபத்தினைப் பெற்று விடுவீர்கள். புதிய நவீன முறைகளை பயன்படுத்தி விசைச்சலைப் பெருக்குவீர்கள். வேலையாட்களின் உதவியும் கிடைக்கும். குடும்பத்தில் சுப காரியங்களும் கை கூடும். சொந்த பூமி மனை போன்றவற்றையும் வாங்குவீர்கள். பொருளாதார நிலை மிகவும் சிறப்பாக இருக்கும்.

பெண்களுக்கு
    உடல் நிலை மிகவும் அற்புதமாக அமையும். அன்றாடப் பணிகளில் சுறு சுறுப்பாக செயல் பட முடியும். கணவன்&மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். ஆடை ஆபரணம், குடும்பத்திற்கு தேவையான அதி நவீனப் பொருட்கள் போன்ற யாவும் சேரும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியினை உண்டாக்கும். சிலருக்கு புத்திர பாக்கியமும் கிட்டும். மகிழ்ச்சி நிலவும்.

படிப்பு
  மாணவ மாணவிகள் கல்வியில் சிறப்புடன் செயல்பட்டு பள்ளி கல்லூரிகளுக்கு பெருமை சேர்ப்பீர்கள். விளையாட்டுப் போட்டிகளிலும் வெற்றிப் பரிசுகளை தட்டிக் செல்வீர்கள். சிலருக்கு உயர்கல்விக்காக வெளியூர் வெளிநாடுகளுக்கு செல்லக் கூடிய வாய்ப்புகள் உண்டாகும். அரசு வழியில் ஆதரவுகள் கிட்டும்.

ஸ்பெகுலேஷன்
  லாட்டரி, ரேஸ், ஷேர் போன்றவற்றில் எளிதில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபங்களைப் பெற முடியும்.

ஜனவரி
  இனிமையான சுபாவம் கொண்ட உங்களுக்கு, 2இல் சஞ்சரிக்கும் குரு வக்ரகதியிலிருப்பதாலும், சூரியன் 8ஆம் வீட்டில் சஞ்சரிப்பதாலும் பணவிஷயத்தில் கவனமுடன் செயல்படுவதும், உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவம் நல்லது. 6ஆம் வீட்டில் சனியும் ராகுவும் சஞ்சாரம் செய்வதால் நினைத்ததை நிறைவேற்றுவீர்கள். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். போட்டி பொறாமைகளை சமாளித்து அபிவிருத்தியைப் பெறுக்குவீர்கள். உத்தியோகஸ்தர்கள் எதிர் பார்க்கும் உயர்வுகளும் தடையின்றி கிடைக்கும். சிவபெருமானை வழிபடுவதால் நற்பலன் உண்டாகும்.

சந்திராஷ்டமம் 31.12.2013 மதியம் 01.22 மணி முதல் 02.01.2014 மதியம் 03.50 மணி வரை மற்றும் 27.01.2014 இரவு 09.32 மணி முதல் 29.01.2014 இரவு 12.04 மணி வரை

பிப்ரவரி
  எல்லோரையும் வசியப்படுத்தக் கூடிய தோற்றம் கொண்ட உங்களுக்கு சனியும், ராகுவும் 6&ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் எதிரிகள் கூட நண்பர்களாக செயல்படுவார்கள். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். பண வரவுகள் சிறப்பாக இருக்கும் என்றாலும் கொடுக்கல்&வாங்கல் போன்றவற்றில் சற்று கவனமுடன் செயல் படுவது நல்லது. புதன் 10&ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரரீதியாக நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். எதிர் பார்க்கும் உயர்வுகளும் கிடைக்கும். பயணங்களால் அனுகூலங்கள் உண்டாகும். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் 24.02.2014 காலை 05.33 மணி முதல் 26.02.2014 காலை 08.08 மணி வரை.

மார்ச்
  எளிதில் உணர்ச்சி வசப்படாத ஆற்றல் கொண்ட உங்களுக்கு 6&ஆம் வீட்டில் சனியும் ராகுவும், 10&இல் சூரியனும் சஞ்சாரம் செய்வதால் நினைத்தது நிறைவேறும். தன ஸ்தானத்தில் குரு சஞ்சரிப்பதால் பண வரவுகள் மிகவும் சிறப்பாக இருக்கும். கொடுக்கல்&வாங்கலிலும் சரளமான நிலை உண்டாகும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பொன் பொருள் சேரும். சொந்த பூமி மனை வாங்க கூடிய யோகமும் உண்டாகும். தொழில் வியாபார ரீதியாக மேற்க் கொள்ளும் பயணங்களால் அனுகூலம் உண்டாகும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். இம்மாதம் முருகப் பெருமானை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் 23.03.2014 மதியம் 01.27 மணி முதல் 25.03.2014 மாலை 04.04 மணி வரை.

ஏப்ரல்
  சுய நலமில்லாமல், தியாக மனப்பான்மையுடன் செயல்படும் உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 2&இல் குருவும், 10&இல் சுக்கிரனும் 11&இல் சூரியனும் சஞ்சாரம் செய்வதால் எல்லா வகையிலும் மேன்மைகள் உண்டாகும். பொருளாதார நிலை மிகவும் சிறப்பாக அமைவதால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் தடையின்றி நடைபெறும். கொடுக்கல்&வாங்கலிலும் சரளமான நிலையிருக்கும். உடல் ஆரோக்கியமும் சிறப்பாக அமையும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமும் உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு உயர்வுகளும் உண்டாகும். தினமும் விநாயகரை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் 19.04.2014 இரவு 09.21 மணி முதல் 21.04.2014 இரவு 12.07 மணி வரை.

மே
  நேர்மையே குறிக்கோளாக கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 2&இல் குருவும், 6&இல் சனி ராகுவும், சஞ்சரிப்பதால் பணம் பல வழிகளில் தேடி வந்து பாக்கெட்டை நிரப்பும். குடும்பத்தில் திருமண சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். ஜென்ம ராசியில் சூரியன் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகும். கணவன்&மனைவியிடையே ஒற்றுமை நிலவும். உறவினர்களின் ஆதரவும் சிறப்பாக இருக்கும். பூர்வீக சொத்துக்களால் சிறு சிறு விரயங்கள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதியில்லை. தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிட்டும். முருகப் பெருமானை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் 17.05.2014 அதிகாலை 05.27 மணி முதல் 19.05.2014 காலை 08.18 மணி வரை.

ஜீன்
  சாந்தமும், சகிப்புத் தன்மையும் கொண்ட உங்களுக்கு குரு பகவான் 2லும் ராகு 6&லும் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். பொன் பொருள் சேரும். தொழில் வியாபாரத்திலும் சிறப்பான லாபம் கிட்டும். இம்மாதம் 13&ஆம் தேதி ஏற்படவுள்ள குரு மாற்றத்தால் குரு பகவான் 3&ஆம் வீட்டிற்கு மாறுதலாகவுள்ளார். இதனால் பணம் கொடுக்கல்&வாங்கல் போன்றவற்றில் கவனமுடன் செயல் படுவது நல்லது. 21&ஆம் தேதி ஏற்படவுள்ள சர்ப கிரக மாற்றத்தால் கேது பகவான் லாப ஸ்தானமான 11&ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் வாழ்வில் மேன்மையான பலன்களே உண்டாகும். சிவபெருமானை வழிபடுவதன் மூலம் நற்பலன் உண்டாகும்.

சந்திராஷ்டமம் 13.06.2014 மதியம் 01.35 மணி முதல் 15.06.2014 மாலை 04.21 மணி வரை.

ஜீலை
    தன்னம்பிக்கையும், அசட்டு தைரியமும் கொண்ட உங்களுக்கு ராசியாதிபதி சுக்கிரன் ஆட்சிப் பெற்று சஞ்சரிப்பதால் பணவரவுகளுக்குப் பஞ்சம் ஏற்படாது. இம்மாத பிற்பாதியில் சூரியன் 3&ஆம் வீட்டிலும், செவ்வாய் 6&ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்யவிருப்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றியும் நினைத்ததை நிறைவேற்றும் ஆற்றலும் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளை ஈடுபாடுத்தும் போது சிந்தித்து செயல் படுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்குப் பணியில் நிம்மதியான நிலையே இருக்கும். கடன்கள் குறையும். சனி ப்ரீதி ஆஞ்சநேயரை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் 10.07.2014 இரவு 09.47 மணி முதல் 12.07.2014 இரவு 12.52 மணிவரை.

ஆகஸ்ட்
    பிடிவாத குணமும், பிறருக்கு அடி பணியாத ஆற்றலும் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 3&இல் சூரியனும், 6&இல் செவ்வாயும் சனியும் சஞ்சாரம் செய்வதால் இம்மாதமும் நினைத்ததை சாதிப்பீர்கள். பொருளாதார மேம்பாடுகளால் குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவு மகிழ்ச்சி அளிக்கும், பூர்வீக சொத்துக்களாலும், புத்திர வழியிலும் சிறு சிறு நெருக்கடிகள் தோன்றினாலும் எதையும் சமாளிக்க கூடிய பலமும் வலிமையும் பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு உடன் பணி புரிபவர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். தொழில் வியாபாரமும் சிறப்பாக நடைபெறும். துர்கை அம்மனை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் 07.08.2014 காலை 05.58 மணி முதல் 09.08.2014 காலை 09.04 மணி வரை.

செப்டம்பர்
    விரோதிகளை கண்டு பயப்படாத அஞ்சா நெஞ்சம் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 6&இல் செவ்வாய் சனி சஞ்சரிப்பதும் 11&இல் கேது சஞ்சாரம் செய்வதும் சாதகமான அமைப்பாகும். திருமண முயற்சிகளில் தடைகள் ஏற்பட்டாலும் எடுக்கும் காரியங்களில் வெற்றியினைப் பெறுவீர்கள். குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். தொழில் வியாபாரத்திலிருந்த போட்டி பொறாமைகள் விலகும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதற்கான வாய்ப்புகள் தேடி வரும். உத்தியோகஸ்தர்களின் திறமைகளுக்கேற்றப் பாராட்டுதல்கள் கிட்டும். கடன்கள் குறையும். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் 03.09.2014 மதியம் 01.54 மணி முதல் 05.09.2014 இரவு 05.09 மணிவரை.

அக்டோபர்
  முன் கோபமும், முரட்டுத் தனமும் கொண்ட உங்களுக்கு, ஜென்ம ராசிக்கு 3&இல் குரு சஞ்சரிப்பதால் பண வரவுகளில் ஏற்ற இறக்கமானப் பலன்களை ஏற்படுத்தினாலும், 6&இல் சனியும், 11&இல் கேதுவும் சஞ்சரிப்பதால் எதையும் சமாளித்து விடுவீர்கள். இது மட்டுமின்றி மாத பிற்பாதியில் சூரியனும் 6&ஆம் வீட்டில் சஞ்சரிக்கவிருப்பதால் உங்கள் பலமும் வலிமையும் கூடும். குடும்பத்திலும் சுபிட்சமான நிலையிருக்கும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் இடமாற்றங்கள் கிடைக்கப் பெற்று குடும்பத்தோடு சேருவார்கள். உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் தேவை. முருகனை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம்  30.09.2014 இரவு 09.46 மணி முதல் 03.10.2014 அதிகாலை 01.10 மணி வரை.மற்றும் 28.10.2014 காலை 05.42 மணி முதல் 30.10.2014 காலை 09.15 மணி வரை.

நவம்பர்
    சாமர்த்தியமும், சாதுர்யமும் கொண்ட உங்களுக்கு, ஜென்ம ராசிக்கு 6&இல் சனி, சூரியனும் 11&இல் கேதுவும் சஞ்சாரம் செய்வதால் தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிட்டும். பணவரவுகளும் தேவைக்கேற்றபடியிருக்கும். கொடுக்கல்&வாங்கலில் பிறருக்கு முன் ஜாமீன் கொடுப்பதை தவிர்க்கவும். 8&இல் செவ்வாய் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. உற்றார் உறவினர்களிடம் பேச்சில் நிதானத்தை கடை பிடித்தால் குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். தேவையற்றப் பயணங்களைத்  தவிர்ப்பது நல்லது. முருகப் பெருமனை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் 24.11.2014 பகல் 01.41 மணி முதல் 26.11.2014 மதியம் 05.24 மணி வரை.

டிசம்பர்
    கஷ்ட நஷ்டங்களை தாங்கும் ஆற்றல் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 6&இல் சனியும், 9&இல் செவ்வாயும், 11&இல் கேதுவும் சஞ்சரிப்பதால் செல்வம் செல்வாக்குப் பெருகும். எடுக்கும் எல்லா காரியங்களிலும் வெற்றிகளைப் பெறுவீர்கள். பணவரவுகளும் தேவைக்கேற்றபடியிருப்பதால் குடும்பத் தேவைகளும் பூர்த்தியாகும். ஜென்ம ராசிக்கு 7&இல் சூரியன் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. இம்மாதம் 16&ஆம் தேதி ஏற்படவுள்ள சனி மாற்றத்தால் சனி ஜென்ம ராசிக்கு 7&இல் சஞ்சரிப்பதால் விருப்பது சாதகமற்ற அமைப்பு என்பதால் குடும்பத்தில் அடிக்கடி கருத்து வேறுபாடுகள் உண்டாகும். சனி ப்ரீதி ஆஞ்ச நேயரை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் 21.12.2014 இரவு 09.42 மணி முதல் 24.12.2014 அதிகாலை 01.35 மணி வரை

கிருத்திகை 2,3,4ம் பாதங்கள்
  கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்துள்ள உங்களின் நட்சத்திராதிபதி சூரிய பகவான். இது ரிஷப ராசிக்குரிய நட்சத்திர 2,3,4&ம் பாதங்களாகிறது. இந்த நட்சத்திரம் இரண்டு ராசிக்குரியதாகிறது. கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்திருப்பதால் சமுதாயத்தில் நல்ல மதிப்பும் மரியாதையும் இருக்கும். இந்த வருடம் உங்களுக்கு தொட்டதெல்லாம் துலங்கக் கூடியதொரு காலமாக இருக்கும். பொன்னும் பொருளும் சேரும். பொருளாதார நிலையும் மிகச் சிறப்பாக இருக்கும். கொடுக்கல் வாங்கல் சரளமாக இருக்கும் என்றாலும் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் போது கவனமுடனிருப்பது நல்லது.

ரோகிணி
    ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்துள்ள உங்களின் நட்சத்திராதிபதி  சந்திர பகவானாவார். இந்த நட்சத்திரத்தில் பிறந்திருப்பதால் எதையும் எளிதில் கற்றுக் கொள்ளக் கூடிய ஆற்றல் உடையவராக இருப்பீர்கள். இந்த வருடம் உங்களுக்கு தொட்டது துலங்கும் என்று சொன்னால் அது மிகையாகாது. தொழில் வியாபாரம் சிறப்பாக நடைபெற்று லாபத்தை அள்ளி தரும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். சொந்த பூமி மனை போன்றவற்றை வாங்குவீர்கள். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் கடன்கள் குறைவதோடு குடும்பத் தேவைகளும் பூர்த்தியாகும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும்.

மிருகசீரிஷம் 1,2ம் பாதங்கள்
  இந்த நட்சத்திராதிபதி செவ்வாய் பகவான் என்பதால் அசாத்திய துணிவும், யாருக்கும் பயப்படாத குணமும் இருக்கும். இந்த வருடம் முழுவதும் உங்களுக்கு சுபிட்சமான நிலையே இருக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் கை கூடுவதுடன் கணவன் மனைவியிடையே மகிழ்ச்சி நிலவும். உற்றார் உறவினர்களின் ஆதரவு மகிழ்ச்சியளிக்கும். பொன் பொருள் சேரும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். கொடுக்கல்&வாங்கலில் சற்று கவனமுடன் நடந்தும் கொள்ளவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு வேலை பளு குறையும்.

அதிர்ஷ்டம் அளிப்பை

எண்  5,6,8,14,15,17,
நிறம்  வெண்மை, நீலம்,
கிழமை  வெள்ளி,சனி
கல்  வைரம்,
திசை  தென்கிழக்கு,
தெய்வம்  விஷ்ணு, லட்சுமி

பரிகாரம்
  ரிஷப ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு 13.06.2014 முதல் குரு பகவான் 3ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய விருப்பதால் வியாழக்கிழமை தோறும் குருவுக்கு பரிகாரம் செய்வது, குருப்ரீதி தட்சிணா மூர்த்தியை வழிபாடு செய்வது நல்லது. 21.06.2014 முதல் சர்ப கிரகமான ராகு 5ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் ராகு காலங்களில் துர்கை அம்மனை வழிபடுவது, சரபேஸ்வரர் வழிபாடு மேற்கொள்வது நல்லது.

Contact

For your consultation

Please sent  Rs 500 ,(  20 US DOLLAR (Rs 1000 INR) For Overseas Customer )  in favour of MURUGU BALAMURUGAN  with your birth details (date of birth,time,place) &  5 questions  to ( e-mail ) me for  horoscope reading

please contact my postal adress  

Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-117/33 Bhakthavachalam colony 1st street,  
(Near Valli Thirumanamandapam)  
Vadapalani,  
Chennai-600026  
 My Cell - 0091 - 7200163001,  9383763001
https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala


E-mail  murugu.astro@gmail.com murugu_astro@yahoo.co.in.
Web  www.muruguastrology.com

Bank account details are

Name ; Murughu Balamurugan
Bank name - Indianbank
Savings Account No - 437753695
Branch name - Saligramam,
Chennai - 600093.INDIA.
MICR no - 600019072
IFS code ; IDIB000S082
CBS CODE-01078

Name ; R.Balamurugan
Bank name  - Bank of Barado
Savings Account No - 29900100000322
Branch name - Vadapalani
Chennai - 600026.INDIA.
MICR Code - 600012034
IFSC code ; BARBOVADAPA
CBS CODE-01078

புத்தாண்டு பலன் 2014மிதுனம்


புத்தாண்டு பலன்  2014மிதுனம்

மிதுனம்  மிருகசீரிஷம் 3,4 திருவாதிரை, புனர்பூசம் 1,2,3 பாதங்கள்
     
வசீகரமான கண்களும், சிறந்த பேச்சாற்றலும் எதிலும் சுறு சுறுப்பாக செயல்படக் கூடிய திறமையும் கொண்ட மிதுன ராசி நேயர்களே! உங்களுக்கு என் மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த 2014 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் குரு பகவான் ஜென்ம ராசியிலேயே சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாக நெருக்கடிகளும் உடல் நிலையில் வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகளும் உண்டாகும். இது மட்டுமின்றி சனியும் ராகுவும் 5&ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் பூர்வீக சொத்துக்களால் வீண் விரயங்கள், புத்திர வழியில் மனசஞ்சலங்கள் போன்றவற்றை எதிர் கொள்வீர்கள் என்றாலும் கேது லாபஸ்தானத்தில் இருப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெற்று எதையும் சமாளிப்பீர்கள். வரும் 13.06.2014 இல் ஏற்படவுள்ள குரு மாற்றத்தால் குரு பகவான் 2&ஆம் வீட்டிற்கு மாறுதலாக விருப்பது நல்ல அமைப்பாகும். இதனால் உங்களுக்குள்ள பிரச்சனைகள் படிப்படியாக குறைந்து பொருளாதார நிலை மேன்மையடையும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை ஏற்படும். கணவன்&மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். தடைப்பட்ட திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளிலும் அனுகூலமானப் பலன்கள் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் சிறப்பான லாபங்களைப் பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கும் எதிர் பார்க்கும் உயர்வுகள் கிடைக்கும். வரும் 21.06.2014&இல் ஏற்படவுள்ள சர்ப கிரக மாற்றத்தால் ராகு 4லும் கேது 10லும் சஞ்சாரம் செய்யவிருப்பது ஒரளவுக்கு  சுமாரான அமைப்பாகும். இந்த ஆண்டின் இறுதியில் 16.12.2014 ஏற்படவுள்ள சனி மாற்றத்தால் சனி பகவான் 6&ஆம் வீட்டிற்கு மாறுதலாகவிருப்பது அற்புதமான அமைப்பு- என்பதால் நினைத்தது நிறைவேறும்.

தேக ஆரோக்கியம்
  உடல் நிலையில் சிறு சிறு பாதிப்புகள், சற்று மந்த நிலை, கைகால் அசதி போன்றவை ஏற்படும். அஜீரண கோளாறுகளும் உண்டாகும் என்றாலும் பெரிய அளவில் எந்த வித மருத்துவ செலவுகளும் ஏற்படாது. உடனே சரியாக அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். குடும்பத்தில் நிம்மதி நிலவும்.

குடும்பம் பொருளாதார நிலை
  இந்த ஆண்டின் தொடக்கத்தில் குடும்பத்தில் சிறுசிறு கருத்து வேறுபாடுகள், திருமணத் தடைகள் உண்டாகும் என்றாலும், ஆண்டின் பிற்பாதியில் குடும்பத்தில் சுபிட்சமான நிலை நிலவும். திருமண வயதை அடைந்தவர்களுக்கும் நல்ல வரன்கள் தேடி வரும். புத்திர வழியில் மகிழ்ச்சித் தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். பொன் பொருள் சேரும். சிலருக்கு பூமி மனை போன்றவற்றால் சிறுசிறு விரயங்கள் ஏற்பட்டாலும் கிடைக்க வேண்டிய சொத்துக்கள் கிடைக்கும்.

கொடுக்கல் வாங்கல்
  பண வரவுகளில் ஆண்டின் தொடக்கத்தில் ஏற்ற இறக்கமான நிலையிருந்தாலும், பிற்பாதியில் தாராள தன வரவுகள் உண்டாகும். கொடுக்கல்&வாங்கலிலும் சரளமான நிலை ஏற்படும். நெருக்கடிகள் விலகும். கொடுத்த கடன்களை வசூலிப்பதில் எந்த தடையும் ஏற்படாது. உங்களுக்குள்ள வம்பு வழக்குகள் யாவற்றிலும் தடைகளுக்குப் பின்பே வெற்றி கிட்டும். பெரிய முதலீடுகளையும் ஈடுபடுத்தி லாபம் காண முடியும்.

தொழில் வியாபாரிகளுக்கு
    இந்த ஆண்டின் தொடக்கத்தில் சிறு சிறு போட்டிகள், மறைமுக எதிர்ப்புகள் போன்றவற்றால் வரவேண்டிய வாய்ப்புகள் கைநழுவிப் போனாலும், ஆண்டின் பிற்பாதியில் எல்லா வகையிலும் மேன்மைகளை அடைய முடியும். வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புடையவைகளாலும் அனுகூலங்கள் ஏற்படும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. கூட்டாளிகள் ஒற்றுமையுடனிருப்பார்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு
  பணியில் சற்று வேலை பளு அதிகரிப்பதுடன், எதிர்பாராத இடமாற்றங்களால் அலைச்சலை சந்திக்க வேண்டியிருக்கும் என்றாலும் ஆண்டின் பிற்பாதியில் பணியில் நல்ல மாற்றங்கள் உண்டாகும். எதிர்பார்க்கும் கௌரவமான பதவிகள் கிடைக்கும். திறமைக்கேற்ற பாராட்டுதல்களும் கிடைக்கப் பெறுவதல் மனமகிழ்ச்சி உண்டாகும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைக்கும் பணியினை தற்போது பயன்படுத்தி கொள்வது நல்லது.

அரசியல்வாதிகளுக்கு
  கட்சிப் பணிகளுக்காக நிறைய செலவுகள் செய்ய வேண்டியிருந்தாலும், கௌரவம் புகழ் யாவும் சிறப்பாக இருக்கும். மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி மக்களின் ஆதரவையும் பெறுவீர்கள். பண வரவுகள் திருப்திகரமாக இருக்கும். சிலருக்கு வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டிய வாய்ப்புகள் உண்டாகும். பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும்.

விவசாயிகளுக்கு
  பயிர் விளைச்சல் ஒரளவுக்குச் சிறப்பாக இருக்கும் என்றாலும் புழு பூச்சிகளின் தொல்லைகளால் பயிரை காப்பாற்ற அதிக செலவுகளை செய்ய வேண்டியிருக்கும். அரசு வழியில் எதிர்பாராத மானிய உதவிகள் கிடைக்கப் பெற்று அனைத்தையும் சரி செய்ய முடியும். புதிய பூமி மனை வாங்கும் வாய்ப்பும் ஏற்படும். தொழிலாளர்களின் உதவியும் கிடைக்கும்.

பெண்களுக்கு
  உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றினாலும் மருத்துவ செலவுகள் அதிகரிக்காது. ஆண்டின் முற்பாதிவரை பணவரவுகளில் சிறு சிறு நெருக்கடிகள் ஏற்பட்டாலும், பிற்பாதியில் தாராள தன வரவைப் பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் குடியேறும்.  திருமண வயதை அடைந்தவர்களுக்கும் நல்ல வரன்கள் தேடி வரும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை அதிகரிக்கும். உறவினர்களால் அனுகூலம் உண்டாகும்.

படிப்பு
  கல்வியில் சற்று ஈடுபாட்டுடன் செயல் பட்டால் அடைய நினைத்த மதிப்பெண்களை அடைந்து விட முடியும். கல்விக்காக பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பும் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். அரசு வழியில் ஆதரவுகளும் உண்டாகும். பெற்றோர் ஆசிரியர்களின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சியினை ஏற்படுத்தும்.

ஸ்பெகுலேஷன்
  இந்த ஆண்டின் முற்பாதி வரை லாட்டரி, ரேஸ்,ஷேர், போன்றவற்றில் பெரிய முதலீடுகளை தவிர்க்கவும். பிற்பாதியில் எதிலும் லாபத்தை அடையக் கூடிய அதிர்ஷ்டம் உண்டாகும்.

ஜனவரி
  கடினமான காரியத்தையும் எளிதில் செய்து முடிக்கும் உங்களுக்கு இம்மாதம் ஜென்ம ராசிக்கு 4&இல் செவ்வாயும் 7&இல் சூரியனும் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். லாபஸ்தானமான 11&இல் கேது சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது, தேவையற்றப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. 7&இல் சூரியன் சஞ்சரிப்பதால் கணவன்&மனைவி இடையே தேவையற்ற வாக்கு வாதங்களைத் தவிர்க்கவும். பொது நலக் காரியங்களில் ஈடுபடக் கூடிய வாய்ப்பு, பல பெரிய மனிதர்களின் தொடர்பு கிட்டும். இம் மாதம் முருகப் பெருமானை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் 02.01.2014 மதியம் 03.50 மணி முதல் 04.01.2014 மாலை 06.18 மணி வரை 
மற்றும் 29.01.2014 இரவு 12.04 மணி முதல் 01.02.2014 அதிகாலை 02.28 மணி வரை

பிப்ரவரி
    ஜென்ம ராசியில் குருவும், 4&இல் செவ்வாயும், 8&இல் சூரியனும் சஞ்சரிப்பதால் எதிலும் சற்று நிதானமுடன் செயல் படுவது நல்லது. தொழில் வியாபாரத்தில் வீண் அலைச்சல் டென்ஷன்களை சந்திப்பீர்கள். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்திலும் சிறு சிறு பாதிப்புகள் ஏற்படும். பணவரவுகளில் நெருக்கடிகள் உண்டானாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெற்று தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியும். கணவன்&மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகக் கூடிய காலம் என்பதால் விட்டுக் கொடுத்து நடந்துக் கொள்வது நல்லது. கொடுக்கல்&வாங்கலில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். இம்மாதம் சிவ பெருமானை வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம் 26.02.2014 காலை 08.08 மணி முதல் 28.02.2014 காலை 10.29 மணி வரை

மார்ச்
    தந்திரமாக எதையும் சாதிக்க கூடிய ஆற்றல் கொண்ட உங்களுக்கு இம்மாதம் பாக்கிய ஸ்தானத்தில் சூரியனும், லாப ஸ்தானத்தில் கேதுவும் சஞ்சரிப்பதால் கடந்த கால பிரச்சனைகளிலிருந்து ஒரளவுக்கு விடுபடுவீர்கள். பணவரவுகள் தேவைக் கேற்றபடி இருக்கும். அசையும் அசையா சொத்துக்களால் சிறு சிறு விரயங்களும், புத்திரர்களால் மனசஞ்சலங்களும் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. தொழில் வியாபாரத்தில் மந்த நிலை ஏற்பட்டாலும் பொருட் தேக்கம் உண்டாகாது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணியில் நிம்மதியுடன் செயல் பட முடியும். துர்க்கை அம்மனை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் 25.03.2014 மாலை 04.04 மணி முதல் 27.03.2014 இரவு 06.26 மணி வரை.

ஏப்ரல்
    உயரமான தேகமும், மெலிந்த உடலமைப்பும் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 10&இல் சூரியனும், 11&இல் கேதுவும் சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். பயணங்களாலும் அனுகூலம் ஏற்படும். பணவரவுகளில் சிறுசிறு நெருக்கடிகள் உண்டானாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெறும். உத்தியோகஸ்தர்கள் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். பணம் கொடுக்கல்&வாங்கலில் கவனமுடனிருப்பது நல்லது. திருமண சுப காரியங்களில் தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். எந்தவொரு காரியத்திலும் ஒரு முறைக்கு பல முறை சிந்தித்து செயல் பட்டால் வீண் விரயங்களை குறைக்கலாம். இம்மாதம் சனி ப்ரீதி ஆஞ்சநேயரை வழிபடவது நல்லது.

சந்திராஷ்டமம் 21.04.2014 இரவு 12.07 மணி முதல் 24.04.2014 அதிகாலை 02.26 மணி வரை.

மே
  பிறரை நையாண்டி செய்வதில் வல்லவரான உங்களுக்கு, ஜென்ம ராசிக்கு 10&இல் சுக்கிரனும், 11&இல் சூரியனும் புதனும் சஞ்சாரம் செய்வதால் தாராள தன வரவுகள் உண்டாகி குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். கடன்கள் படிப்படியாக குறையும். கொடுக்கல்&வாங்கலில் சற்று கவனமுடன் செயல் படுவது நல்லது. கணவன்&மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். புத்திர வழியில் சிறு சிறு மன சஞ்சலங்கள் தோன்றி மறையும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதால் அலைச்சல்கள் குறையும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத உயர்வுகள் கிட்டும். இம்மாதம் தட்சிணா மூர்த்தியை வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம் 19.05.2014 காலை 08.16 மணி முதல் 21.05.2014 காலை 10.35 மணி வரை

ஜீன்
  யாருக்கும் அடிபணியாத குணம் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 4&இல் செவ்வாயும் 12&இல் சூரியனும் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல் டென்ஷன், ஆரோக்கிய பாதிப்புகள் உண்டாகும் என்றாலும் வரும் 13&ஆம் தேதி ஏற்படவுள்ள குரு மாற்றத்தால் குரு பகவான் தனஸ்தானத்தில் சஞ்சரிக்கவிருப்பதால் பணவிஷயங்களிலிருந்த நெருக்கடிகள் யாவும் குறையும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். குடும்பத்தில் சுப காரியங்கள் கை கூடும். இம்மாதம் ஏற்படவுள்ள சர்ப கிரக மாற்றத்தால் இது வரை 5,11&இல் சஞ்சரித்த ராகு கேது, மாறுதலாகி 4&இல் ராகுவும் 10&இல் கேதுவுமாக சஞ்சரிக்க விருப்பதும் குறிப்பிடத் தக்கதாகும். ஆஞ்ச நேயரை வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம் 15.06.2014 மதியம் 04.21 மணி முதல் 17.06.2014 மாலை 06.51 மணி வரை.

ஜீலை
    நல்ல அறிவும் சாமர்த்தியமும் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசியில் சூரியன் சஞ்சரிப்பது உஷ்ண சம்மந்தப்பட்ட ஆரோக்கிய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றாலும், உங்கள் ராசியாதிபதி புதன் ஆட்சிப் பெற்று அமைந்திருப்பதாலும், குரு 2&ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதாலும் நினைத்ததெல்லாம் நிறைவேறும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். குடும்பத்தில் திருமண சுபகாரியங்கள் கை கூடும். கொடுக்கல்&வாங்கலிருந்தப் பிரச்சனைகள் விலகி கொடுத்த  கடன்களும் வசூலாகும். தொழில் வியாபாரத்திலும் லாபம் பெருகும். போட்டி பொறாமைகள் விலகும். உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வுகள் கிடைக்கும். வேலை பளு குறையும். சிவ பெருமானை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் 12.07.2014 இரவு 12.52 மணி முதல் 14.07.2014 இரவு 03.13 மணி வரை.

ஆகஸ்ட்
    வசீகரமான கண்களைக் கொண்ட உங்களுக்கு தன ஸ்தானத்தில் குரு சஞ்சரிப்பதால் பண வரவுகள் தாராளமாக இருக்கும். குடும்த்தில் சுபிட்சமான நிலை ஏற்படும். கணவன் &மனைவியிடையே ஒற்றுமை நிலவும். சொந்த பூமி மனை வாங்கும் யோகம் உண்டாகும் என்றாலும் சற்று சிந்தித்து செயல் படவும், பயணங்களின் போது கவனமுடனிருப்பது, வேகத்தை குறைப்பது நல்லது. மாத பிற்பாதியில் சூரியன் 3&ஆம் வீட்டில் சஞ்சரிக்கவிருப்பதால் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். உத்தியோகஸ்தர்களும் உயர்வடைவார்கள். சிலருக்கு வெளியூர் வெளிநாடுகளுக்கு செல்லும் யோகமும், பெரிய மனிதர்களின் தொடர்பும் கிட்டும். துர்கை அம்மனை வழிபடவும்.

சந்திராஷ்டமம் 09.08.2014 காலை 09.04 மணி முதல் 11.08.2014 காலை 11.29 மணி வரை.

செப்டம்பர்
  வெளி  வட்டாரங்களில் அனைவரிடமும் அன்பாக பழகக் கூடிய பண்பு கொண்ட உங்களுக்கு, ஜென்ம ராசிக்கு 2&இல் குருவும், 3&இல் சூரியனும், 6&இல் செவ்வாயும் சஞ்சரிப்பதால் தொட்ட தெல்லாம் துலங்கும். பணம் பல வழிகளில் தேடி வந்து பாக்கெட்டை நிரப்பும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் இனிமையானப் பலன்களைப் பெறுவீர்கள். தொழில் வியாபாரத்திலிருந்து வந்த போட்டி பொறாமைகள் குறையும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். வெளியூர் வெளிநாடுகளுக்குச் சென்று பணி புரிய விரும்புவோரின் விருப்பமும் நிறைவேறும். வேலை பளு குறையும். முருகப் பெருமானை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் 05.09.2014 இரவு 05.09 மணி முதல் 07.09.2014 இரவு 07.35 மணி வரை.

அக்டோபர்
  பிறரை எளிதில் வசப்படுத்தக் கூடிய ஆற்றல் கொண்ட உங்களுக்கு தனஸ்தானத்தில் குருவும் மாத முற்பாதி வரை செவ்வாய் 6&ஆம் வீட்டில் சஞ்சரிப்பதும் அனுகூலமான அமைப்பு என்பதால் எந்த வித பிரச்சனைகளையும் எதிர் கொள்ளக் கூடிய வலிமையும் வல்லமையும் கூடும். உடல் ஆரோக்கியமும் சிறப்பாக அமையும். பொருளாதார நிலையில் நல்ல மேம்பாடுகள் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் உண்டாகும். கொடுக்கல்&வாங்கலில் லாபம் கிட்டும். உத்தியோகஸ்தர்கள் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். உடன் பணி புரிபவர்களின் ஆதரவு மகிழ்ச்சியளிப்பதாக இருக்கும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். இம்மாதம் சனிக்குரிய பரிகாரங்களை செய்யவும். 

சந்திராஷ்டமம் 03.10.2014 அதிகாலை 01.10 மணி முதல் 05.10.2013 காலை 03.39 மணி வரை.

நவம்பர்
  தர்ம குணமும், தெய்வ பக்தியும் கொண்ட உங்களுக்கு 2&இல் குரு சஞ்சரிப்பதால் குடும்பத்தில் சுபிட்சமும், சுப காரியங்கள் கை கூடக் கூடிய அமைப்பும் உண்டாகும். மாத பிற்பாதியில் சூரியனும் 6&ஆம் வீட்டில் சஞ்சரிக்கவிருப்பதால் உங்களுக்குள்ள மறைமுக எதிர்ப்புகள் விலகும். பொன் பொருள் சேரும். கணவன்&மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். பிள்ளைகளிடம் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது நல்லது. தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதால் அலைச்சல்கள் குறையும். தொழில் வியாபாரம் சிறப்பாக அமையும். அசையும் அசையா சொத்துக்கள் சேரும். கடன்கள் யாவும் குறையும். முருகப் பெருமானை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் 30.10.2014 காலை 09.15 மணி முதல் 01.11.2014 பகல் 11.48 மணி வரை.மற்றும் 26.11.2014 மாலை 05.24 மணி முதல் 28.11.2014 இரவு 07.59 மணி வரை.

டிசம்பர்
    ஆடம்பரமாக செலவு செய்வதில் அலாதிப்பிரியம் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 2&இல் குரு, 6&இல் சூரியன், 10&இல் கேது சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரம் மேன்மையடையும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். கொடுக்கல்&வாங்கலில் லாபம் கிட்டும். மறைமுக எதிர்ப்புகள் விலகும். உற்றார் உறவினர்களிடையே தேவையற்ற வாக்கு வாதங்களை தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர் பார்க்கும் உயர்வுகளும், இடமாற்றங்களும் கிடைக்கும். இந்த மாதம் 16 ஆம் தேதி முதல் சனி 6&இல் சஞ்சரிக்கும் விருப்பதால் வெற்றி மேல் வெற்றி கிட்டும். துர்கை அம்மனை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் 23.12.2014 இரவு 01.35 மணி முதல் 26.12.2014 அதிகாலை 04.18 மணி வரை.

மிருகசீரிஷம் 3,4ம் பாதங்கள்
     ரத்த காரகனான செவ்வாயின் நட்சத்திரத்தில் பிறந்திருப்பதால் எப்பொழுதும் பரபரப்பாக செயல்படக் கூடிய ஆற்றல் இருக்கும். இந்த வருடத்தில் தொடக்கத்தில் சிறு சிறு பிரச்சனைகள், மறைமுக எதிர்ப்புகள் போன்றவற்றை சந்தித்தாலும், ஆண்டின் பிற்பாதியில் எல்லா வகையிலும் மேன்மைகள் உண்டாகும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். கணவன்&மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். பொன் பொருள் சேரும். கொடுக்கல்&வாங்கல் லாபமளிக்கும். தொழில் வியாபாரத்திலிருந்த மறைமுக எதிர்ப்புகள் விலகும். பணவரவுகளும் சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் உயர்வுகள் உண்டாகும்.

திருவாதிரை
     சர்ப கிரகமான ராகுவின் நட்சத்திரத்தில் பிறந்திருப்பதால் முன்கோபமும், முரட்டுத்தனமும் இயல்பிலேயே இருக்கும். இந்த ஆண்டின் முற்பாதி வரை சோதனைகளும் வேதனைகளும் ஏற்பட்டாலும், ஆண்டின் பிற்பாதியில் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிக் கிட்டும். ஆடை ஆபரணம் சேரும். சிலருக்கு சொந்த பூமி மனை வாங்க கூடிய யோகமும் உண்டாகும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். செய்யும் தொழில் வியாபாரத்தை விருத்தி செய்ய இயலும். பயணங்களின் போது சற்று கவனமுடன் செயல்பட்டால் நல்ல லாபத்தை அடைய முடியும். உத்தியோகஸ்தர்களின் பெயர் புகழ் உயரும். கடன்கள் குறையும்.

புனர்பூசம் 1,2,3 ம் பாதங்கள்
    குருவின் நட்சத்திரத்தில் பிறந்துள்ளதால் நல்ல வாக்கு வன்மையும் நன்றி மறவாத குணமும் இருக்கும். இந்த ஆண்டின் தொடக்கமானது ஏற்ற இறக்கமானப் பலன்களைக் கொடுக்கும். பணவரவுகளில் நெருக்கடிகள் உண்டாகும் என்றாலும் ஆண்டின் பிற்பாதியில் எதிர்பார்க்கும் உயர்வுகள், மேன்மைகள் யாவும் கிடைக்கும். பொருளாதார மேம்பாடுகளால் குடும்பத்தின் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். திருமண சுப காரியங்கள் யாவும் தடை விலகி கைகூடும். கொடுக்கல்&வாங்கல்  லாபமளிக்கும். தொழில் வியாபாரமும் சிறப்பாக நடைபெறும். பெரிய மனிதர்களின் நட்புக்களால் நற்பலன்கள் உண்டாகும்.

அதிர்ஷடம் அளிப்பை
எண்  5,6,8,14,15,17
நிறம்  பச்சை, வெள்ளை
கிழமை  புதன், வெள்ளி
கல்  மரகதம்
திசை  வடக்கு
தெய்வம் விஷ்ணு

பரிகாரம்
     மிதுன ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு 13.06.2014 வரை குரு ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் வியாழக்கிழமை தோறும் குருப் ப்ரீதி தட்சிணா மூர்த்தியை வழிபாடு செய்வது கொண்டக்கடலை மாலை சாற்றுவது நல்லது. சனி 5 இல் சஞ்சரிப்பதால் சனி ப்ரீதி ஆஞ்சநேயரை வழிபடவும். 21.6.2014 வரை ராகு 5இல் சஞ்சரிப்பதால் துர்கை அம்மனை ராகு காலங்களில் வழிபடுவது நல்லது.

Contact

For your consultation

Please sent  Rs 500 ,(  20 US DOLLAR (Rs 1000 INR) For Overseas Customer )  in favour of MURUGU BALAMURUGAN  with your birth details (date of birth,time,place) &  5 questions  to ( e-mail ) me for  horoscope reading

please contact my postal adress  

Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-117/33 Bhakthavachalam colony 1st street,  
(Near Valli Thirumanamandapam)  
Vadapalani,  
Chennai-600026  
 My Cell - 0091 - 7200163001,  9383763001
https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala


E-mail  murugu.astro@gmail.com murugu_astro@yahoo.co.in.
Web  www.muruguastrology.com

Bank account details are

Name ; Murughu Balamurugan
Bank name - Indianbank
Savings Account No - 437753695
Branch name - Saligramam,
Chennai - 600093.INDIA.
MICR no - 600019072
IFS code ; IDIB000S082
CBS CODE-01078


Name ; R.Balamurugan
Bank name  - Bank of Barado
Savings Account No - 29900100000322
Branch name - Vadapalani
Chennai - 600026.INDIA.
MICR Code - 600012034
IFSC code ; BARBOVADAPA
CBS CODE-01078